• The opinions expressed within the content are solely the author’s and do not reflect the opinions and beliefs of the website or its affiliates.

operation red-3

Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள், mspublications1@gmail.com என்ற மின்னஞ்சலிலோ சைட் அட்மினின் (smteam) தனி செய்தியிலோ தொடர்பு கொள்ளவும்.தளத்தில் கதைகளை பதிவது எப்படி- விளக்கம்

snehasree

SM Exclusive
Joined
Mar 31, 2018
Messages
3,416
Reaction score
7,755
Location
comibatore
"மஞ்சுளா... நீ சொல்லு உனக்கு அக்கா என்றால் அவ்வளவு பிரியமா" என்றாள் வீரலட்சுமி.

"எனக்கு அருணா அக்காவை ரொம்ப பிடிக்கும். அவளுக்கும் என்னை ரொம்ப பிடிக்கும். அவள்தான் என்னை அங்கே வேலைக்கு சேர்த்து கொண்டு அவளுடன் என்னை தங்க வைத்து கொண்டு நன்றாக பார்த்து கொண்டாள்."

"அக்கா அங்கே எத்தனை வருசமாக வேலை பார்க்கிறாள்"

"அக்கா ஒரு வருசமாக வேலை பார்க்கிறாள்" என்றாள் மஞ்சுளா.

"சரி அம்மு" என்று சியாமளா சொல்லிவிட்டு சிரித்தாள்.

"அக்கா... நீங்கள் போலீசா?" என்றாள் மஞ்சுளா.

"ஏன் அப்படி கேட்கிறாய்?" என்றாள் வீரலட்சுமி.

"நீங்கள் ரெண்டுபேரும் நல்லா சண்டை போட்டீர்கள். நீங்கள் துப்பாக்கி எல்லாம் வைத்து உள்ளீர்கள்"

"நாங்கள் போலீஸ்தான் ஆனால் நாங்கள் கிரைம் பிராஞ்சை சேர்ந்தவர்கள் அம்மு. நாங்கள் ரகசியமாக குற்றவாளிகளை கண்காணித்து ஆதாரத்துடன் கண்டுபிடித்து தண்டணை வாங்கி தருவோம்" என்றாள் சியாமளா

"அக்கா... இந்த விஷயத்தில் நீங்கள் கேஸ் எதுவும் பதிவு செய்ய வேண்டாம். நீங்கள் ஏதாவது செய்தால் என் பெயர் கெடுவதுடன் எங்கள் ஹோம் பெயரும் கெட்டு விடும். வீணாக கோர்ட் கேஸ் என்று அலைய வேண்டும். வக்கீல்கள் தப்பு தப்பாக கேள்வி கேட்பார்கள். என்னை கோர்ட்டில் வைத்து கண்டபடி கேள்வி கேட்டால் எனக்கு அவமானமாகி விடும்" என்று பயந்தபடி கூறினாள் மஞ்சுளா.

"அம்மு... நீ கவலைபடாதே. நாங்கள் இந்த விஷயத்தில் கேஸ் பதிவு செய்ய மாட்டோம். நீ பயபடாமல் இருக்கலாம்" என்றாள் சியாமளா.

"உன்னை நன்றாக வாட்ச் பன்னி நீ தனியாக வரும்வேளையில் கடத்தி இருக்கிறார்கள். உன் அருணா அக்காவை பற்றியும் அவர்கள் அறிந்து வைத்து இருக்கிறார்கள். உன்னை கடத்தி வந்தது கற்பழிக்க மட்டும்தானா இல்லை வேறு ஏதாவது காரணம் இருக்கிறதா என்று தெரியவில்லை அதனால் அம்மு நீ கொஞ்ச நாட்கள் எங்கள் பாதுகாப்பில் இருடா" என்றாள் வீரலட்சுமி.

"ஹோமுக்கு சென்று உனக்கு வேண்டிய துணியை எடுத்து கொண்டு வந்து விடுவோம்" என்றாள் சியாமளா.

சரி என்று மஞ்சுளா சம்மதிக்க அவளுடன் ஹோமுக்கு சென்ற வீரலட்சுமி தன்னை அறிமுகம் செய்து கொண்டு நடந்த எல்லா விஷயத்தை மதரிடம் விளக்கி சொன்னாள் வீரலட்சுமி.

மஞ்சுளாவுக்கு நடந்தது குறித்து ரகசியமாக வைக்க சொல்லி மதரிடம் கேட்டு கொண்டு அவள் இருக்கும் முகவரியை யாருக்கு தரவேண்டாம் என்று சொல்லி அவர்கள் அனுமதி பெற்று தன் வீட்டுக்கு அழைத்து வந்து விட்டாள் வீரலட்சுமி.
*****
ராபர்ட்டின் முகத்தில் உச்சகட்ட கோபத்தில் இருந்தது. அவனின் எதிரில் தலை குனிந்தபடி நின்று கொண்டிருந்தான் அசோக்.

"என்ன அசோக்... இப்படி நாலு பேராக போயி ஒரு சின்ன பெண்ணை கொல்லாமல் தப்ப விட்டு விட்டு வந்திருக்கீங்க. உங்களுக்கு வெட்கமாயில்லை" என்றான் ராபர்ட்.

"இல்லை பாஸ்... நாங்கள் அந்த பெண்ணை கரெக்டாக கடத்தி கொண்டு போய் விட்டோம். ECR வந்ததும்தான் அந்த குட்டி எங்களை ஏமாத்திட்டு தப்பித்து ஒடி போயிருச்சு. அவளை காபாற்ற ரெண்டு ஆம்பள, ரெண்டு பொண்ணுக என்று நாலு பேரு வந்துட்டாங்க. அவங்க கண்டிப்பாக போலீசாகத்தான் இருக்க வேண்டும். அந்த ஆளுக கன் எல்லாம் வைச்சிருந்தாங்க. அவனுக சுட்டதில் நம்ம கார் கண்ணாடியை தாண்டி வந்து சீட்ல குண்டு பாய்ந்தது. கொஞ்சத்தில் நாங்க எஸ்கேப் ஆயிட்டோம் இல்லைன்னா நானும் பசங்களும் காலிதான்" என்றான் அசோக்.

"நான் பார்த்துட்டேன். அது போலீஸ் பிஸ்டல் தோட்டா இல்லை. அது கள்ள துப்பாக்கி தோட்டா. ஆளுகதான் யாரு என்று தெரியலை. ரெண்டு பொண்ணுக வேற பைட் பன்னதாக சொல்கிறாய். அவர்கள் எல்லாம் யாரு என்று விசாரிக்கனும். அந்த பெண் பாடியை பார்த்தால்தான் மீதி பேமண்ட் தருவாங்க பார்ட்டி. நீ அந்த பெண்ணை பாலோ செய்" என்றான் ராபர்ட்.

"சரிங்க பாஸ்..." என்று அசோக் சொல்லிவிட்டு சென்றான்.

ராபர்ட்டுக்கு போன் வர காலை எடுத்து பேசினான்.

"ராபர்ட்... என்னப்பா... அந்த பொண்ணு சாகாமல் எஸ்கேப் ஆகிவிட்டது. எவ்வளவு சீக்கீரம் முடியுமோ அவ்வளவு சீக்கீரம் அவள் கதையை முடி. என் ரகசியம் தெரிந்த அந்த பெண் உயிருடன் இருக்க கூடாது" என்று போனை கட் செய்தார் நாகநாதன்.

Message…
 




snehasree

SM Exclusive
Joined
Mar 31, 2018
Messages
3,416
Reaction score
7,755
Location
comibatore
வீரலட்சுமி வீட்டில் சமையல் உட்பட வீட்டை கவனித்து கொள்ளும் முழு பொறுப்பையும் மஞ்சுளா பார்த்து கொண்டாள்.

வீட்டுக்கு வெளியில் மட்டும் அவளை அனுமதிக்கவில்லை.

அந்த பங்களா முழுவதையும் பார்த்து கொண்ட மஞ்சுளாவை தங்கை போல் பார்த்து வந்தாள் வீரலட்சுமி.

ஆசிரமத்தில் வந்து மஞ்சுளாவை பற்றி விசாரிக்க அவள் பெரிய இடத்தில் வேலைக்கு சேர்ந்து விட்டதாக மதர் கூறினார்.

மஞ்சுளா எங்கிருந்தாலும் சரி நன்றாக இருந்தால் போதும் என்று நினைத்தவளாய் சென்று விட்டாள் அருணா.

மதரை சந்தித்த அருணா உடனே மஞ்சுளாவுக்கு கால் செய்தாள்.

வீரலட்சுமியுடன் பேசி கொண்டு டிவி பார்த்து கொண்டிருக்க அருணாவின் போன் செய்வதை பார்த்ததும் குழப்பமானாள்.

மஞ்சுளா நடவடிக்கையை கவனித்த வீரலட்சுமி,
"அம்மு... எடுத்து பேசு ஆனால் நீ எங்கிருக்கிறாய் என்று அக்கா கேட்டால் கோயமுத்தூரில் இருப்பதாக சொல்" என்றாள்.

சரிக்கா என்று போனை எடுத்து "ஹலோ அக்கா" என்றாள் மஞ்சுளா.

அருணா அவள் நலம் விசாரித்த பின்னர் எங்கே இருக்கிறாய் என்று கேட்க மஞ்சுளா உடனே வீரலட்சுமியை பார்த்தாள்.

அவள் ஒரு முகவரியை எழுதி காட்ட அதை அப்படியே அருணாவிடம் சொல்லி விட்டாள் மஞ்சுளா.



போன் பேசி முடித்த பின்னர்,
"அக்கா... அங்கே போய் அக்கா விசாரித்தால் நான் இல்லை என்று தெரிந்துவிடாதா?" என்றாள் மஞ்சுளா.

"அம்மு... உன் அக்கா அங்கே செல்ல மாட்டாள். அவள் ஒரு வேளை சென்றால் நீ சென்னை வந்துவிட்டதாக சமாளித்து விடுவார்கள். நீ கவலைபடாமல் இரு" என்றாள் வீரலட்சுமி.

சரிக்கா என்ற மஞ்சுளா அதன் பின்னர் தன் கவலையை மறந்து வேலைகளில் கவனம் செலுத்த ஆரம்பித்து விட்டாள்.
***

ஆடி கார் ஒன்று நிதானமாக வந்து பீச் ரிசார்ட்டின் காரிடரில் நின்றது.

டீசர்ட் மற்றும் ஜீன்ஸ் அணிந்த இளைஞன் ஒருவன் இறங்கி கொண்டான்.

ரிசார்ட்டின் கதவை திறந்து கொண்டு உள்ளை நுழைந்த இளைஞன் நேராக பெட்ரும் சென்று விட்டான்.

பெட்ரும் சென்று அங்கிருந்த பிரிட்ஜில் வைக்கபட்டிருந்த மது வகைகளில் உயர்ரக பிராண்டை கிளாசில் ஊற்றி பருகினான்.

பெட்டில் படுத்து கொண்டவன் மனதில் அந்த இளம் பெண் முகம் தோன்றி மறைந்தது.

தன் செல்போனை எடுத்து தேட ஆரம்பித்தான். அதில் பதிவாகி இருந்த கண்களை மூடிய நிலையில் இருந்த மஞ்சுளா போட்டோவை பார்த்தான்.

"ஏஞ்சல்" என்று அவன் வாய் வார்த்தைகளை உதிர்த்தது. Write your reply...
 




Advertisements

Latest updates

Latest Episodes

Advertisements

Top