• The opinions expressed within the content are solely the author’s and do not reflect the opinions and beliefs of the website or its affiliates.

OVOV-6

Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள், mspublications1@gmail.com என்ற மின்னஞ்சலிலோ சைட் அட்மினின் (smteam) தனி செய்தியிலோ தொடர்பு கொள்ளவும்.தளத்தில் கதைகளை பதிவது எப்படி- விளக்கம்

anitha1984

SM Exclusive
SM Exclusive
Joined
Aug 17, 2018
Messages
2,366
Reaction score
13,837
Location
chennai
57350504_886738488346387_8970382681727663074_n.jpg

"அதை பிறகு சொல்றேன் .சோனு,மோனு,சின்னு காணோம்.கூட்டத்தில் பாவம் பசங்க பயந்துட போறாங்க.இல்லை எவனாவது களவாணி குழந்தையை கடத்திட்டனோ.?" என்றார் அமர்நாத் பதட்டத்துடன்.

அர்ஜுன் கியான்தீப்பை கேள்வியுடன் ஒரு பார்வை பார்க்க ,"கொஞ்சம் வேலையா இருந்தேன் வீர்ஜி.எப்படி காணாம போச்சுங்கனே தெரியலை.தேடிட்டு இருக்கேன்.கிடைக்கலை."என்றான் தலை குனிந்தவாறு

(அப்போ நைட் கோடௌனில் இருந்து நீங்க தூக்கிட்டு வந்தது குழந்தைகளையா ?அவங்களை எதுக்கு டா மரபெட்டியில், கூண்டில வைத்து எடுத்து வந்தீங்க ?)

"இங்கே தான் எங்கேயாவது ஒளிஞ்சி விளையாடிட்டு இருப்பாங்க பாரு."என்றவன் தன் அருகே அமர்நாத் அமர வைத்து,"உங்களுக்கு பிடிச்ச போஹா,பட்டர் சிக்கன் கரி சாப்பிடுங்க. "என்றான் அர்ஜுன்.

அமர்நாத் சாப்பிட அமர,அர்ஜுன் கவனம் மைதானத்தில் நடந்து கொண்டு இருந்த மல்யுத்த போட்டியின் மேல் இருந்தது.

"ஹே விடாதே...அமுக்கி பிடி...பிடி.....வந்தேன் போலி போட்டுடுவேன்......விடாதே...."என்று இங்கு இருந்து வெறி பிடித்து கத்தி கொண்டு இருந்தான்.

(குழந்தைகளை காணோம் .கொஞ்சம் கூட அதை பற்றி கண்டுக்காம மல்யுத்தம் தான் இப்போ ரொம்ப முக்கியம் பாரு ...நாலு அப்பு அப்பலாம் போல் இருக்கு .)

பட்டர் சிக்கன் வாசனையே நாவில் எச்சில் ஊற வைக்க,ஒரு சிக்கன் லெக் பீஸ் எடுத்த வாய் அருகே கொண்டு போன அமர்நாத் ,சாப்பிடாமல் அப்படியே பிடித்து அமர்ந்து இருந்தார்.கூட்டத்தில் குழந்தையை காணாமல் அந்த தாய் என்ன அவதிபடுகிறாரோ என்ற எண்ணமே அவரை சாப்பிட விடவில்லை.

"படிஜா/மருமகனே!...நாம போய் பார்க்கலாமா?பாவம் பசங்க.வயத்தை பிசையுது.கூட்டம் வேற இந்த வருஷம் ரொம்ப அதிகம்." என்றார் அமர்நாத்

அமர்நாத் பக்கம் திரும்பாத அர்ஜுன்," கியான்தீப் போய் இருக்கான்.தேடட்டும்.கிடைக்கலை என்றால் நாம போவோம்.நம்ம கிராமத்தில் நுழைந்து இதை எல்லாம் செய்யும் தைரியம் எவனுக்கும் இல்லை.எங்கேயாவது வெயிலுக்கு ஒளிஞ்சி இருப்பாங்க."என்றவன் விசில் அடித்து மல்யுத்தம் செய்பவர்களை ஊக்க படுத்தினான்.

பெருமூச்சு விட்ட அமர்நாத்,லெக் பீஸ் வாய் அருகே கொண்டு செல்ல, கையில் லெக் பீஸ் இல்லை....ஒரு கணம் குழம்பி விட்டார் அமர்நாத்.

article_full@1x.jpg

'ஒருவேளை நாம தான் எடுக்காம பேச போய்ட்டோம் போல் இருக்கு....'என்று தனக்கு தானே சொல்லி
கொண்டவர் அடுத்த பீஸ் எடுக்க,அதே சமயம் அவர் மொபைல் ஒலித்தது.

மேட்ரிமோனியல் பத்தி விவரம் கேட்டு இருந்தார்கள்.வாய் பேசி கொண்டு இருக்க,கண்கள் மைதானத்தின் மேல் இருக்க,பேசி விட்டு கையை வாய் அருகே கொண்டு போனவர் மீண்டும் திகைத்தார்.இந்த முறையும் அவர் கையில் லெக் பீஸ் இல்லை....போயிந்தே..இட்ஸ் கான்......காணவில்லை.
 




anitha1984

SM Exclusive
SM Exclusive
Joined
Aug 17, 2018
Messages
2,366
Reaction score
13,837
Location
chennai
'என்னடா எனக்கு வந்த சோதனை.....இந்த பாடிஜா விளையாடுறானா .....சோத்தை போட்டு வச்சிட்டு,இவனே காலி செய்து விளையாடுறானா?செய்தாலும் செய்வான்........'என்று பெருமூச்சு விட்டவன்," அர்ஜுன் ! இது சரி இல்லை....." என்றார் அமர்நாத் கடுப்புடன்.

"எது மாமா?பட்டர் சிக்கன்னா?என்னைக்கும் இல்லாமல் இன்று டேஸ்ட் செமையா இருக்கே...."என்றான் அர்ஜுன்.

"டேஸ்ட் செய்ய...நீ பீஸ் விட்டு வச்சா தானே!.....நீ தனியா போட்டு சாப்பிட வேண்டியது தானே....." என்றவர் மூச்சு விட முடியாமல் திணறினார் .

" மாமா!....என்ன சொல்றே புரியலை...."என்றான் அர்ஜுன்.

"ஹ்ம்ம்.....என் சிக்கன் நீ எதுக்கு எடுத்தே அர்ஜுன் ??" என்றார் அமர்நாத்

"நான் எங்கே எடுத்தேன் ?'என்றான் அர்ஜுன்.


“இதோ பாரு....இது பட்டர் சிக்கன் லெக் பீஸ்...இதை இப்படி எடுக்கறேனா ?" என்றார் அமர்நாத்

"எடுத்துடீங்க "

"வாய் அருகே கொண்டு போறேனா ?"

"கொண்டு போயிட்டீங்க ."

"இப்போ இதை நீங்க என் கிட்டே இருந்து பிடிங்கி சாப்பிடுறே ..." என்றார் அமர்நாத் கடுப்பாக.

"இல்லையே.....நான் இங்கே தானே இருக்கேன்...எழுந்து வராம எப்படி உங்க கையில் இருந்து எடுக்க முடியும் ?"என்றான் அர்ஜுன்.

"அதானே..."என்று குழம்பிய அமர்நாத் தன் கையை பார்க்க மீண்டும் சிக்கன் பீஸ் காணாமல் போனது.

(இது என்னடா சிக்கனுக்கு வந்த சோதனை -சிக்கனுக்கு ஒரு அக்கப்போரா!!!:oops::oops::oops: ))

"அடாடா.....சோனு...உன் வேலை தானா இது...பாரு நீ செய்த வேலைக்கு மாமா என்னை திட்டறார் ..."என்ற அர்ஜுன் அமர்நாத் பின் செல்ல,சோனுவை பார்க்க திரும்பிய அமர்நாத் முகம் வெளுத்து போனார்.

அங்கே இவர் கையில் இருந்து சிக்கன் சாப்பிட்டு கொண்டு இருந்தது குழந்தை இல்லை.....ஒரு மலை பாம்பு....அதற்கு தான் அர்ஜுன் “சோனு” என்று பெயர் வைத்து இருக்கிறான்.அந்த சோனு அமர்நாத் மேல் டேபிள்ளுக்கு அடியில் இருந்து ஏறி இருந்தது.அதனால் தான் அமர்நாத் மூச்சு விட முடியாமல் சிரம பட்டு இருக்கிறார்.

(பின்னே உங்க மூஞ்சிக்கு எல்லாம் கத்ரீனா கைப்பா வந்து அணைப்பாங்க ?.....)

அர்ஜுன் அந்த சோனுவை லாவகமாய் பிரித்து எடுத்து தன் தொழில் போட்டு கொண்டு,"என்ன செல்லம்...அவ்வளவூ பசியாமா உனக்கு?....."என்று கொஞ்ச, அமர்நாத் உறைந்த நிலையில் இருந்து மீளவே இல்லை.

cee0897b19ac3d2cfd54194a3e99e362.jpg
 




anitha1984

SM Exclusive
SM Exclusive
Joined
Aug 17, 2018
Messages
2,366
Reaction score
13,837
Location
chennai
(எப்படி தெளியும் ?மலைப்பாம்புக்கு பட்டர் சிக்கன் ஊட்டி விட்டால்?... அமர் மாமாவுக்கு நம்ம ஊராய் இருந்தால் வேப்பிலை அடிக்கலாம்....இங்கே எங்கே போய் வேப்பிலை அடிப்பது ?)

" மாமா!...எழுந்துக்கோ......மோனு பாவம்......உன் கால் அருகே இருக்கான்..பாரு.....நகரு....நகரு....."என்றவன் நகராமல் அந்த பாம்பினையே பார்த்து கொண்டு இருந்த அவரையும் நாற்காலி சேர்த்து தள்ளி விட்டான் அர்ஜுன்.

"ஐயோ...அம்மா...."என்ற அலறலுடன் கீழே சற்று தள்ளி விழுந்த அமர்நாத் அந்த டேபிள் விட்டு வெளியே வந்த மோனுவை பார்த்து,இதயத்தை பிடித்து கொண்டார்.

டேபிள் அடியில் இருந்து மெல்ல பல்லை காட்டி கொண்டு வெளியே வந்தது ஒரு முதலை. 'இத்தனை நேரம் இவர் கால் வைத்து,ஆடி கொண்டு இருந்தது நாற்காலி இல்லை...ஒரு முதலை உடல் என்றால் இவர் நிலை

download.png

"ஏய் மோனு இங்கே தான் இருக்கியா ?'என்று வந்த கியான்தீப்பை கொன்று விடும் வெறியோடு பார்த்தார் அமர்நாத்.

('பயபுள்ள இவனாவது காணாம போனது விலங்குங்க என்று சொல்லி இருக்கணும் ...என்னை வச்சி செய்வதில் இவனுக்கும் இவன் அண்ணனுக்கும் அப்படி ஒரு சந்தோசம் ...இதுங்களை மீட்க தான் 10 லட்சம் அறிவிப்பு என்று சொன்னோமா ?'---அமர்நாத் மைண்ட் வாய்ஸ்- எங்களுடையதும் தான் .)

அர்ஜுன் !....இவங்க தான் சோனு,மோனுவா ?......இதுங்க தான் தொலைந்து போன பிள்ளைங்களா?.........." என்றார் கடுப்பாக.

"ஆமா பாரு பச்சை புள்ளைங்க மாமா.....குட்டிங்க பா.....எப்படி எல்லாம் ஒளிஞ்சி விளையாடுறானுங்க பாரு...."என்ற அர்ஜுன் மலை பாம்பிற்கு ஒரு உம்மா கொடுத்துட்டு,முதலையை தடவி கொடுத்தான்.

"விளங்கிடும்...." என்றார் அமர்நாத்.

(ஆரம்பமே இப்படி அலப்பறை செய்யறானே......)

"ஆமா....சின்னு யாரு.....சிம்பனிஸியா.....பிடிசீங்களா...இல்லை மரத்தில் ஏறணுமா ?" என்றார் அமர்நாத்

(இந்த வயசுக்கு மேல அவரை மரத்தில் ஏத்தி விட்டுடுவானுகளோ என்ற அவர் கவலை அவருக்கு )

"இல்லை...இல்லை அவன் சமத்தா கிச்சன்னில் தான் இருந்தான்.....வெயில் அதிகமா இருக்குன்னு அந்த டென்ட் உள்ளே தூங்கிட்டு இருக்கான்...."என்றான் கியான்தீப்.

அவன் பேச்சை கேட்டு கடுப்போடு உள்ளே எட்டி பார்த்த அமர்நாத்,சினிமாவில் ஹீரோயின் "வீல் "என்று கத்துவதை போல் கத்தி கொண்டு அர்ஜுன் பின் வந்து நின்றார்.கை,கால் எல்லாம் உதறி கொண்டு இருந்தது.

"நீங்க கத்தி சின்னுவை பயமுறுத்தாதே.....குழந்தை அவன்."என்றவன் சொன்ன குழந்தை அவன் உயரத்திற்கு வளர்ந்து இருந்த உண்மையான சிங்கம்.

ddb36cbac1250bf8accd8f9625893bf6.jpg

அதை என்னவோ போமரியன் நாய் குட்டியை கொஞ்சுவது போலே தடவி கொடுத்து,முகத்தை உரசி கொண்டு இருந்தான் அர்ஜுன்.

(ஏண்டா மலைப்பாம்பு ,முதலை ,சிங்கம் --இதுக்கு தான் உங்க ஊருல சோனு ,மோனு ,சின்னுன்னு பெயர் வைப்பாங்களா ?இந்தியன் பட மனிஷா கொய்ராலாவை விட உன் லொள்ளு அதிகமாய் இருக்கே !)
 




Last edited:

banumathi jayaraman

முடியிளவரசர்
Joined
Jan 17, 2018
Messages
28,178
Reaction score
67,725
:ROFLMAO::ROFLMAO::mad::mad::LOL::LOL::sick::sick::rolleyes::rolleyes::love::love::devilish::devilish::cry::cry::poop::poop::geek::geek::alien::alien::D:D:eek::eek::censored::censored:
ஹா... ஹா... ஹா...........
ஹய்யோ அம்மா சிரிச்சு சிரிச்சு
வயிறு வலிக்குதே
அமர்நாத் மாமா ரொம்பவும்
பாவம்ப்பா, அனிதா டியர்
இத்தனை அதிர்ச்சிகளைத்
தாங்கிக்கிட்டு மர்கயா ஆகாம
இன்னுமா அமர் மாமா உயிரோடு
இருக்காரு, அனிதா டியரு?
 




Last edited:

anitha1984

SM Exclusive
SM Exclusive
Joined
Aug 17, 2018
Messages
2,366
Reaction score
13,837
Location
chennai
இவர்கள் அமர்நாத்தை கீழ்ப்பாக்கத்தில் சேர்க்க ஆவண செய்து கொண்டு இருக்க ,அர்ஜுனை புத்தூருக்கு அனுப்பும் வெறியோடு ஒருவன் வந்து இறங்கியதை கண்ட கியான்தீப் மெல்ல பின் வாங்கி ,”வீர்ஜி.....பார்ட்டி வந்தாச்சு...."என்றான் கியான்தீப் கைகளை ஹோட்டல் புறம் காட்டி.

அவன் சொன்ன “பார்ட்டி” 6 அடி 2 அங்குல உயரத்தில்,80kg எடையில் ,44-34-17 என்ற கட்டுமஸ்தான உடல் அமைப்புடன் , ரைடர்ஸ் ஜாக்கெட் எனப்படும் ஓவர்கோட் அணிந்து காதில் கடுக்கண் போட்டு, கண்களில் கூலர்ஸ் அணிந்து அசுர வேகத்தில்காரினை ஒட்டி கொண்டு வந்து நின்றது.

MAIN552248.jpg

அவன் வந்த வேகமே சொல்லியது அவனின் கோபத்தை . காரில் இருந்து இறங்கி,போலீஸ் புடை சூழ ஒரு இளவரசனின் தோரணையுடன் வந்து கொண்டு இருந்தான் அமன்ஜீத் ரப்தர் Bhatia. அந்த கோடௌனுக்கு சொந்தக்காரன் .அர்ஜுன்னின் எத்தனை விட்ட சகோதரன் என்பது எல்லாம் தெரியாது .

(அவங்களுக்கு தெரிந்தால் சரி....ஒரு டவுட் ஹனி அட்டெண்டென்ஸ் மைண்டைன் செய்வார்களோ! )

உள்ளே வந்த அமன்ஜீத் –“சோனு சூட்/sonu sood” -அதான் பா "குங்குபூ யோகா" படத்தில் என்ற ஜாக்கி சான் னுக்கு வில்லனாய் வருவானே அவன் போல் இருந்தான்.

அர்ஜுன்,அமன் --அக்னி நட்சத்திரம் பிரபு –கார்த்திக், மகேந்திர பாஹுபாலியும் ,பல்வால் தேவனும் முறைப்பதை போல் முறைத்து கொண்டு நின்றனர்.clash of the titans.விட்டால் விழுந்து புரண்டு அங்கேயே மல்யுத்தம் செய்து இருப்பார்கள் போல் இருக்கு.ரெண்டு பேருக்கும் ஆகவே ஆகாது.இதற்கும் ஒன்று விட்ட அண்ணன் தம்பி முறை. ஆனா என்ன ஒன்று அமன்ஜீத் நல்லவனா கெட்டவனா என்பது மிக பெரிய புதிரே .

அர்ஜுன் அப்பா யதுவீர் பாட்டியாவின் சகோதரி ரேஷ்மாவை தான் தான் அமன்ஜீத் அப்பா குருதேவ் கர்ஜான் காதலித்து மணந்து இருந்தார் .குருதேவுக்கு மகாராஷ்டிரம் மாநிலம் தான் பூர்வீகம் .ரெண்டு தலைமுறைக்கு முன்பே பஞ்சாபில் குடியேறி இருந்தார்கள் அவர் குடும்பத்தினர் .ரேஷ்மாவிற்கும் ,குருவிற்கும் கல்லுரியில் கண்ட நொடி முதல் காதல்.

Kasme_Vaade_(1978)a.jpg GURUDEV AND RESHMA

ரெண்டு குடும்பமே பூர்வீகம் ,பாரம்பரியம் மிக்க குடும்பம் தான் .பிள்ளைகளின் நல்வாழ்விற்காக தங்கள் வேறுபாடுகளை எல்லாம் ரெண்டு குடும்பமும் மறக்க தயங்கவே இல்லை .காதல் இரு குடும்பத்தின் வாழ்த்துக்களுடன் திருமணத்தில் முடிந்தது .

இல்லறம் மிக சிறப்பாக ஆரம்பமானது இருவருக்கும் .காதலித்து மணந்தவர்கள் கேட்கவும் வேண்டுமோ.ஆனால் அந்த காதல் நிஜ வாழ்க்கையின் முன் ஆட்டம் காண ஆரம்பித்தது . காதலிக்கும் போது இருந்த காதல் பலருக்கு திருமணத்தின் பின் எப்படிகாணாமல் போய் விடுமோ,அது போலே ஆனது இவர்கள் வாழ்வூ.

ரேஷ்மா வருஷத்தில் 8 மாதம் அர்ஜுன் வீட்டிலேயே தான் இருப்பாங்க.புருஷன் கூட ஏதாவது ஒரு சண்டை போட்டு கொண்டு பதிண்டா வந்து விடுவார்.ஊரே சேர்ந்து சமாதானம் செய்து அனுப்பி வைக்கும்...மீண்டும்..மீண்டும் சண்டை போட்டு வந்து விடுவார்.
 




Geethaselvam

அமைச்சர்
Joined
Jul 28, 2018
Messages
1,082
Reaction score
2,230
Location
chennai
(எப்படி தெளியும் ?மலைப்பாம்புக்கு பட்டர் சிக்கன் ஊட்டி விட்டால்?... அமர் மாமாவுக்கு நம்ம ஊராய் இருந்தால் வேப்பிலை அடிக்கலாம்....இங்கே எங்கே போய் வேப்பிலை அடிப்பது ?)

" மாமா!...எழுந்துக்கோ......மோனு பாவம்......உன் கால் அருகே இருக்கான்..பாரு.....நகரு....நகரு....."என்றவன் நகராமல் அந்த பாம்பினையே பார்த்து கொண்டு இருந்த அவரையும் நாற்காலி சேர்த்து தள்ளி விட்டான் அர்ஜுன்.

"ஐயோ...அம்மா...."என்ற அலறலுடன் கீழே சற்று தள்ளி விழுந்த அமர்நாத் அந்த டேபிள் விட்டு வெளியே வந்த மோனுவை பார்த்து,இதயத்தை பிடித்து கொண்டார்.

டேபிள் அடியில் இருந்து மெல்ல பல்லை காட்டி கொண்டு வெளியே வந்தது ஒரு முதலை. 'இத்தனை நேரம் இவர் கால் வைத்து,ஆடி கொண்டு இருந்தது நாற்காலி இல்லை...ஒரு முதலை உடல் என்றால் இவர் நிலை

"ஏய் மோனு இங்கே தான் இருக்கியா ?'என்று வந்த கியான்தீப்பை கொன்று விடும் வெறியோடு பார்த்தார் அமர்நாத்.

('பயபுள்ள இவனாவது காணாம போனது விலங்குங்க என்று சொல்லி இருக்கணும் ...என்னை வச்சி செய்வதில் இவனுக்கும் இவன் அண்ணனுக்கும் அப்படி ஒரு சந்தோசம் ...இதுங்களை மீட்க தான் 10 லட்சம் அறிவிப்பு என்று சொன்னோமா ?'---அமர்நாத் மைண்ட் வாய்ஸ்- எங்களுடையதும் தான் .)

அர்ஜுன் !....இவங்க தான் சோனு,மோனுவா ?......இதுங்க தான் தொலைந்து போன பிள்ளைங்களா?.........." என்றார் கடுப்பாக.

"ஆமா பாரு பச்சை புள்ளைங்க மாமா.....குட்டிங்க பா.....எப்படி எல்லாம் ஒளிஞ்சி விளையாடுறானுங்க பாரு...."என்ற அர்ஜுன் மலை பாம்பிற்கு ஒரு உம்மா கொடுத்துட்டு,முதலையை தடவி கொடுத்தான்.

"விளங்கிடும்...." என்றார் அமர்நாத்.

(ஆரம்பமே இப்படி அலப்பறை செய்யறானே......)

"ஆமா....சின்னு யாரு.....சிம்பனிஸியா.....பிடிசீங்களா...இல்லை மரத்தில் ஏறணுமா ?" என்றார் அமர்நாத்

(இந்த வயசுக்கு மேல அவரை மரத்தில் ஏத்தி விட்டுடுவானுகளோ என்ற அவர் கவலை அவருக்கு )

"இல்லை...இல்லை அவன் சமத்தா கிச்சன்னில் தான் இருந்தான்.....வெயில் அதிகமா இருக்குன்னு அந்த டென்ட் உள்ளே தூங்கிட்டு இருக்கான்...."என்றான் கியான்தீப்.

அவன் பேச்சை கேட்டு கடுப்போடு உள்ளே எட்டி பார்த்த அமர்நாத்,சினிமாவில் ஹீரோயின் "வீல் "என்று கத்துவதை போல் கத்தி கொண்டு அர்ஜுன் பின் வந்து நின்றார்.கை,கால் எல்லாம் உதறி கொண்டு இருந்தது.

"நீங்க கத்தி சின்னுவை பயமுறுத்தாதே.....குழந்தை அவன்."என்றவன் சொன்ன குழந்தை அவன் உயரத்திற்கு வளர்ந்து இருந்த உண்மையான சிங்கம்.

View attachment 13154

அதை என்னவோ போமரியன் நாய் குட்டியை கொஞ்சுவது போலே தடவி கொடுத்து,முகத்தை உரசி கொண்டு இருந்தான் அர்ஜுன்.

(ஏண்டா மலைப்பாம்பு ,முதலை ,சிங்கம் --இதுக்கு தான் உங்க ஊருல சோனு ,மோனு ,சின்னுன்னு பெயர் வைப்பாங்களா ?இந்தியன் பட மனிஷா கொய்ராலாவை விட உன் லொள்ளு அதிகமாய் இருக்கே !)

Correct name select pani irukanga paru anioda velai than idhallam
 




Advertisements

Latest updates

Latest Episodes

Advertisements

Top