"அதை பிறகு சொல்றேன் .சோனு,மோனு,சின்னு காணோம்.கூட்டத்தில் பாவம் பசங்க பயந்துட போறாங்க.இல்லை எவனாவது களவாணி குழந்தையை கடத்திட்டனோ.?" என்றார் அமர்நாத் பதட்டத்துடன்.
அர்ஜுன் கியான்தீப்பை கேள்வியுடன் ஒரு பார்வை பார்க்க ,"கொஞ்சம் வேலையா இருந்தேன் வீர்ஜி.எப்படி காணாம போச்சுங்கனே தெரியலை.தேடிட்டு இருக்கேன்.கிடைக்கலை."என்றான் தலை குனிந்தவாறு
(அப்போ நைட் கோடௌனில் இருந்து நீங்க தூக்கிட்டு வந்தது குழந்தைகளையா ?அவங்களை எதுக்கு டா மரபெட்டியில், கூண்டில வைத்து எடுத்து வந்தீங்க ?)
"இங்கே தான் எங்கேயாவது ஒளிஞ்சி விளையாடிட்டு இருப்பாங்க பாரு."என்றவன் தன் அருகே அமர்நாத் அமர வைத்து,"உங்களுக்கு பிடிச்ச போஹா,பட்டர் சிக்கன் கரி சாப்பிடுங்க. "என்றான் அர்ஜுன்.
அமர்நாத் சாப்பிட அமர,அர்ஜுன் கவனம் மைதானத்தில் நடந்து கொண்டு இருந்த மல்யுத்த போட்டியின் மேல் இருந்தது.
"ஹே விடாதே...அமுக்கி பிடி...பிடி.....வந்தேன் போலி போட்டுடுவேன்......விடாதே...."என்று இங்கு இருந்து வெறி பிடித்து கத்தி கொண்டு இருந்தான்.
(குழந்தைகளை காணோம் .கொஞ்சம் கூட அதை பற்றி கண்டுக்காம மல்யுத்தம் தான் இப்போ ரொம்ப முக்கியம் பாரு ...நாலு அப்பு அப்பலாம் போல் இருக்கு .)
பட்டர் சிக்கன் வாசனையே நாவில் எச்சில் ஊற வைக்க,ஒரு சிக்கன் லெக் பீஸ் எடுத்த வாய் அருகே கொண்டு போன அமர்நாத் ,சாப்பிடாமல் அப்படியே பிடித்து அமர்ந்து இருந்தார்.கூட்டத்தில் குழந்தையை காணாமல் அந்த தாய் என்ன அவதிபடுகிறாரோ என்ற எண்ணமே அவரை சாப்பிட விடவில்லை.
"படிஜா/மருமகனே!...நாம போய் பார்க்கலாமா?பாவம் பசங்க.வயத்தை பிசையுது.கூட்டம் வேற இந்த வருஷம் ரொம்ப அதிகம்." என்றார் அமர்நாத்
அமர்நாத் பக்கம் திரும்பாத அர்ஜுன்," கியான்தீப் போய் இருக்கான்.தேடட்டும்.கிடைக்கலை என்றால் நாம போவோம்.நம்ம கிராமத்தில் நுழைந்து இதை எல்லாம் செய்யும் தைரியம் எவனுக்கும் இல்லை.எங்கேயாவது வெயிலுக்கு ஒளிஞ்சி இருப்பாங்க."என்றவன் விசில் அடித்து மல்யுத்தம் செய்பவர்களை ஊக்க படுத்தினான்.
பெருமூச்சு விட்ட அமர்நாத்,லெக் பீஸ் வாய் அருகே கொண்டு செல்ல, கையில் லெக் பீஸ் இல்லை....ஒரு கணம் குழம்பி விட்டார் அமர்நாத்.
'ஒருவேளை நாம தான் எடுக்காம பேச போய்ட்டோம் போல் இருக்கு....'என்று தனக்கு தானே சொல்லி
கொண்டவர் அடுத்த பீஸ் எடுக்க,அதே சமயம் அவர் மொபைல் ஒலித்தது.
மேட்ரிமோனியல் பத்தி விவரம் கேட்டு இருந்தார்கள்.வாய் பேசி கொண்டு இருக்க,கண்கள் மைதானத்தின் மேல் இருக்க,பேசி விட்டு கையை வாய் அருகே கொண்டு போனவர் மீண்டும் திகைத்தார்.இந்த முறையும் அவர் கையில் லெக் பீஸ் இல்லை....போயிந்தே..இட்ஸ் கான்......காணவில்லை.