• The opinions expressed within the content are solely the author’s and do not reflect the opinions and beliefs of the website or its affiliates.

OVOV-6

Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள், mspublications1@gmail.com என்ற மின்னஞ்சலிலோ சைட் அட்மினின் (smteam) தனி செய்தியிலோ தொடர்பு கொள்ளவும்.தளத்தில் கதைகளை பதிவது எப்படி- விளக்கம்

anitha1984

SM Exclusive
SM Exclusive
Joined
Aug 17, 2018
Messages
2,366
Reaction score
13,837
Location
chennai
அமன்ஜீத் அப்பா குருதேவ் கடின உழைப்பாளி .சிறிய நிலத்தில் விவசாயம் செய்து வந்தார்.தவிர கடன் பெற்று அக்கம் பக்கம் நிலங்களையும் குத்தகைக்கு எடுத்து அதை பயிர் இட்டு வந்தார் . .படத்தில் காட்டுவது போல் ,கதைகளில் வருவது போல் அத்தனை சுலபமான தொழில் இல்லையே விவசாயம் .நடு இரவிலும் கூட தண்ணீர் விட ,களத்துமேட்டுக்கு காவல் என்று நேரம் ,காலம் பார்க்காமல் உழைக்க வேண்டிய தொழில் ஆயிற்றே .

மூத்த மகன் அவர் உழைத்தால் தான் அவர் குடும்பம் வயிறு வாடாமல் இருக்கும் என்ற நிலை.அர்ஜுன் bhua/அப்பாவின் சகோதரி ரேஷ்மாவிற்கு . 24 மணி நேரம் புருஷன் தன் உடனேயே இருக்க வேண்டும் என்ற எண்ணம்.இவரோடு இருந்தால் சாப்பாட்டுக்கு வழி என்பது குருதேவ்வின் கேள்வி. திருமணம் ஆனா புதிதில் வரும் தேன் நிலவு போன்ற தனிமை ,நெருக்கம் ,வருடம் முழுக்க வேண்டும் என்பது ரேஷ்மாவின் எண்ணம் .

சினிமா நிறைய பார்த்து ,கதைகளை நிறைய படித்து இருப்பார் போல் இருக்கிறது .எது நிழல் ,எது நிஜம் என்ற உண்மை அந்த பெண்மணிக்கு புரியாமல் போனது விதியின் சதி தான் .

வயசு வந்த புள்ளை ஒண்ணு பாடம் படிக்குது .

அன்பு என்ற ஒன்றே வாழ்க்கை என்ற அர்த்தம் விளங்குது

கட்டிலுக்கு ஆசை பட்டு புத்தி அலைஞ்சது

கணவன் இங்கே பிள்ளை என்று கண்டு கொண்டது

தன்னடக்கம் வேண்டும் அம்மா ,பெண்மைக்கு அது நல்லதம்மா

காமத்துக்கும் ,மோகத்திற்கும் கால நேரம் உள்ளதம்மா

இல்லறத்தில் இன்ப துன்பம் ரெண்டும் உள்ளது பொன்னம்மா

“சம்சாரம் அது மின்சாரம்” என்ற விசு படத்தில் வரும் வாழ்வியல், இல்லற தத்துவங்களை அந்த பெண்மணி அறியாமல் போக ,வாழ்க்கையை இழந்து நின்றார் .

எடுத்துக்காட்டாய் இருந்து இருக்க வேண்டிய மணவாழ்வூ, சந்தேகம் என்ற அரக்கன் உள்ளே நுழைந்ந்து விட புயலில் சிக்கிய பூவனமாய் ஆகி போனது. குருதேவ் உழைப்பிற்காக இரவூ பகல் பாராமல் ஓடியாடி உழைத்து கொண்டு இருக்க,அவர் மனைவியோ அவருக்கும் இன்னொரு பெண்ணிற்கும் "affair " என்று சண்டை போட்டு அர்ஜுன் வீட்டுக்கு வந்து விட்டார்.

அதோடு அவர் திரும்பி போகவேயில்லை.மாடி படியில் இருந்து கால் தடுக்கி விழுந்து இறந்து போனார். குருதேவ் செய்த பெருங்குற்றம் ரேஷ்மா இறந்த எட்டே மாதத்தில் மாதத்தில், தன்னிடம் வேலை பார்த்த ஜெசிகாவை மணந்தது.ஜெசிகா குருதேவ் கூட படித்தவர் ரேஷ்மாவை போல்.

f1ee62bb9802ac2b6af3de2586ab1058.jpg gurudev and jessica

குடும்ப தகராறில் மெக்ஸிகோ விட்டு வந்த இந்திய குடும்பம் ஜெசிகாவுடையது .அவருக்கு கொடுக்க பட்ட விசா டைம் முடியும் நிலை.அதனால் அவசர அவசரமாய் தோழியை காப்பாற்ற குருதேவ் மணந்து கொண்டார்.ஆனால் அது அவருக்கு வினையாய் மாறி போனது.

ரேஷ்மா சந்தேகபட்டது உண்மை என்று ஒட்டுமொத்த ஊரும் பொங்கி எழுந்து, குருதேவ் குடும்பத்தை விளக்கி வைத்தார்கள்.அவர் குற்றம் அற்றவர்.ஆனால் ஜெசிகாவிற்கு அமன்ஜீத் குறைபிரசவத்தில் ஏழாம் மாதத்தில் பிறந்து விட,முதல் மனைவி உயிரோடு இருந்த போதே உருவானவன் என்ற பெயர் அமன்ஜீத் பெற்றான்.

அன்று முதல் இன்று வரை அர்ஜுன் -அமன்ஜீத் மோதல் நின்றபாடு இல்லை.தன் bhua இறக்க காரணம் இவர்கள் தான் என்பது அர்ஜுன் வாதம்.தங்கள் பக்க நியாயத்தை கூட கேட்காமல் தண்டனை கொடுக்க இவர்கள் யார் என்பது அமன் வாதம்.

குருதேவ் ,அமன்ஜீத் பக்கம் தான் நியாயம் அதிகமாய் இருக்கிறது என்றாலும் ,பேசி புரிய வைத்து இருக்க வேண்டும் என்பது அர்ஜுன் ,யதுவீர் தரப்பு .ரேஷ்மா இறந்த ஒரு வருடம் கழித்தாவது ஜெசிக்காவை மணந்து இருந்தார் என்றால் இந்த அவ பெயர் வந்து இருக்காது தான் .ஆனால் விதி

Sonu-Sood-and-Akshay-Kumar-Phootrs.jpg

வீம்புக்கு “அனகோண்டா வளர்த்தே ஆவேன்” என்று ரெண்டு பேரும் முட்டி கொண்டு நின்றார்கள் எல்லா விஷயத்திலும்.

பயணம் தொடரும் ....

(திங்கள்கிழமை கொடுக்க வேண்டிய அப்டேட் இன்றே கொடுத்துட்டேன் மக்கா .என்ஜோய் .கொஞ்சம் சிரமம் பாராமல் உங்க கமெண்ட் அண்ட் ரெவியூ போட்டுடுங்க )
 




Last edited:

anitha1984

SM Exclusive
SM Exclusive
Joined
Aug 17, 2018
Messages
2,366
Reaction score
13,837
Location
chennai
:ROFLMAO::ROFLMAO::mad::mad::LOL::LOL::sick::sick::rolleyes::rolleyes::love::love::devilish::devilish::cry::cry::poop::poop::geek::geek::alien::alien::D:D:eek::eek::censored::censored:
ஹா... ஹா... ஹா...........
ஹய்யோ அம்மா சிரிச்சு சிரிச்சு வயிறு வலிக்குதே
அமர்நாத் மாமா ரொம்பவும் பாவம்ப்பா, அனிதா டியர்
இத்தனை அதிர்ச்சிகளைத் தாங்கிக்கிட்டு மர்கயா ஆகாம
இன்னுமா அமர் மாமா உயிரோடு இருக்காரு, அனிதா டியரு?

அர்ஜுன் -அமன் வாழ்க்கையில் இன்னும் கபடி ,கில்லி ,கோலி எல்லாம் இவர் இன்னும் ஆடவே இல்லையே .அதற்குள் இவருக்கு டிக்கெட் கொடுக்க முடியும் மேல் உலகத்திற்கு ?
 




banumathi jayaraman

முடியிளவரசர்
Joined
Jan 17, 2018
Messages
28,178
Reaction score
67,725
அர்ஜுன் -அமன் வாழ்க்கையில் இன்னும் கபடி ,கில்லி ,கோலி எல்லாம் இவர் இன்னும் ஆடவே இல்லையே .அதற்குள் இவருக்கு டிக்கெட் கொடுக்க முடியும் மேல் உலகத்திற்கு ?
அப்படீன்னா செரி
ஆனால் அமர் மாமா அம்சடங்க
இருக்க மாட்டார் போலவே,
அனிதா டியர்?
 




Advertisements

Latest updates

Latest Episodes

Advertisements

Top