சொல்லிட்டாளே அவ காதல
சொல்லும் போதே சுகம் தாளல
இது போல் ஒரு வார்த்தையே
யாரிடமும் நெஞ்சு கேக்கல
இனி வேறொரு வார்த்தையே
கேட்டிடவும் எண்ணி பார்க்கல
அவ சொன்ன சொல்லே போதும்
அதுக்கு ஈடே இல்லை
யேதும்... யேதும்...
சொல்லிட்டேனே இவ காதல
சொல்லும் போதே சுகம் தாளல................
அம்மையவ சொன்ன சொல் கேக்கல
அப்பனவன் சொன்ன சொல் கேக்கல
உன்னுடைய சொல்ல கேட்டேன்
ரெண்டு பேர ஒண்ணா பாத்தேன்
மனசயே தொறந்து சொன்னா
எல்லாமே கிடைக்குது உலகத்துல
வருவத எடுத்து சொன்னா
சந்தேஷம் முளைக்குது இதயத்துல
அட சொன்ன சொல்லே போதும்
அதுக்கு ஈடே இல்லை
யேதும்... யேதும்...
சொல்லிட்டேனே இவ காதல
சொல்லிட்டாளே அவ காதல
எத்தனையே சொல்லு சொல்லாமலே
உள்ளத்திலே உண்டு என்பார்களே
சொல்லுறதில் பாதி இன்பம்
சொன்ன பின்னே யேது துன்பம்
உதட்டுல இருந்து சொன்னா
தன்னாலே மறந்திடும் நிமிசத்துல
இதயத்தில் இருந்து சொன்னா
போகாம நிலச்சிடும் உதிரத்துல
அவ சொன்ன சொல்லே போதும்
அதுக்கு ஈடே இல்லை
யேதும்... யேதும்...
சொல்லிட்டேனே இவ காதல
சொல்லும் போதே சுகம் தாளல
இது போல ஒரு வார்த்தையே
யாரிடமும் சொல்ல தோனல
இனி வேறொரு வார்த்தையே
பேசிடவும் எண்ணம் கூடல
உனதன்பே ஒன்றே போதும்
அதுக்கு ஈடே இல்லை
யேதும்... யேதும்...