அழகான தலைப்பு. அருமையான கதை. வாழ்வின் யதார்த்த நிலையை தத்துருவமாக விளங்கியுள்ளீர்கள். குடும்பங்களில் கணவனை விட்டு பிரிந்திருக்கும் பெண் எதிர் நோக்கும் இன்னல்களையும், கணவனால் படும் அவலங்களையும் , பிரச்சனைகள் அனைத்தையும் தகர்த்தி விட்டு தன் காலில் சுயமாக செயல்படும் ஜானு கதாபாத்திரத்தை அழகாக படைத்துள்ளீர்கள். செழியன் உண்மையில் மனிதனுள் மாணிக்கம் போன்றவன். பிரச்சனைகளை கையாளும் விதம், தனது குழந்தைகளுக்கு சரி எது தவறு எது என புரிய வைக்கும் விதம், இறந்த பின்பும் மனைவி மேல் கொண்ட காதல் இழக்காமல் தனது மனதில் அதை அழகாக பதிய வைப்பதாகட்டும் தனது சம்பளத்தில் அனாதை பிள்ளைகளுக்கு உதவும் உயரிய குணத்திலாகட்டும் ஒரு சிறந்த மனிதனாக மிளிர்கின்றான். ஜானு திருமணம் புரிய கேட்கும் போது முதலில் மறுப்பதும் பின் மீனாவை பிரிய முடியாமல் திருமணத்திற்கு உடன்படுவதும் அதன் பின் ஜானுவை ரஞ்சனியாக நினைத்து உணர்ச்சி வசபட்ட தன் நிலையை நினைத்து வருந்துவதும் ஜானுவை நேர் கொண்டு பார்க்க முடியாமல் தடுமாறுவதும் அவளின் மனதில் தான் இருப்பதை அறிந்து பின் மகிழ்வுடன் காதல் மனைவியாக ஏற்று அவளின் துயரங்களையும் எல்லாம் களைந்து தன்னால் அவள் குடும்பம் அவளிற்கு ஏற்படுத்திய களங்கத்தை தகர்தெறிந்து அவளின் குடும்பத்தில் அவளை தலை நிமிர்ந்து நிற்க வைக்கின்றான் இப்படி ஒவ்வொன்றாக பல விடயங்களை சொல்லி கொண்டே போகலாம் மொத்தத்தில் அன்பு ஒரு சிறந்த மகனாகவும் , நல்ல கணவனாகவும் மற்றும் ஒரு நல்ல தந்தையாகவும் மிளிர்கின்றான். ஜானு , செழியன் இருவர்களுக்கிடையிலான காதல் மற்றும் புரிதலுடன் கூடிய இல்லற வாழ்க்கை மிக அழகு. குழந்தைகள் இருவரின் தோழமை அதில் ஏற்படும் சின்ன பிரச்சனைகள் அதை மறந்து மன்னித்து பின் ஒன்றாக் இணைவது என பிள்ளைகளுக்கு ஏற்புடைய குண இயல்புடன் படைத்திருக்கும் பாங்கு அழகு. ராஜன் போன்ற ஆண்கள் ஆண் இனத்திற்கே அவமானம் இப்படி பட்ட மனிதர்களை நினைக்கையில் மனம் குமுறுகின்றது. ஜானுவின் பெற்றோர் சராசரி மனிதர்கள் போல தனது பிள்ளையின் நிலையறியாது அவளை அவமான படுத்துவதும் பின் உண்மை தெரிந்து வருத்தமடைவது என படைத்திருப்பது உண்மை நிலமை. அருமையான எழுத்து நடை. வாழ்த்துக்கள் சகி???????????