• The opinions expressed within the content are solely the author’s and do not reflect the opinions and beliefs of the website or its affiliates.

Palagi Parkkalam - Chapter 10 Part 2

Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள், mspublications1@gmail.com என்ற மின்னஞ்சலிலோ சைட் அட்மினின் (smteam) தனி செய்தியிலோ தொடர்பு கொள்ளவும்.தளத்தில் கதைகளை பதிவது எப்படி- விளக்கம்

Vijiya lakshmi jagan

மண்டலாதிபதி
Joined
Jan 17, 2018
Messages
193
Reaction score
4,743
Chapter 10 continuation...

விக்ரம்…”இப்போ என்ன தொடர வேல எல்லாம் வெச்சிக்கோ கூடாது அவ்வளவு தானே…..?சரி நான் உன்னை தொடவே மாட்டேன்.” என்று அழுத்தம் திருத்தமாக சொன்னவனிடம்.
“என் தங்கச்சியும் தொட கூடாது. சொல்லிட்டேன்.” என்று சொன்னவள்.
பின் “நீங்க என்ன தான் எங்க கிட்ட நடிச்சாலும் நாங்க கேச வாபஸ் வாங்க மாட்டோம். அதனால நேரத்த கடத்தாம மரியாதைய எங்கள எங்க வீட்டில விட்டுடுங்க. இல்லேன்னா…..” என்று அதட்டிய பேசியவளின் கை விரலை பற்றிய சூர்ய பிரகாஷ்.
“என்னடி செய்வ….?என்ன செய்வ….? நாங்க நடிக்கிறோமா…..ஆமான்டி ஆமா நடிக்கிறோம் தான்.
மத்தவங்க கிட்ட நடந்துக்குற மாதிரி நடந்து இருந்தா...இன்நேரம் அந்த வக்கீல் நோட்டிஸ் கூட வராத அளவுக்கு என்ன……? அந்த வக்கீல பாக்காத அளவுக்கு கூட செஞ்சிருப்போம்.
ஏதோ மனசுக்கு பிடிச்ச பொண்ணுங்களா போயிட்டிங்கலேன்னு தன்மையா சொன்னா….நடிக்கிறோமா….? என்று சுடரிடம் எகிறிய சூர்ய பிரகாஷின் கோபத்தை தடுக்கும் பொருட்டு விக்ரம் அவள் தோள் மீது கை வைத்து ஒரு அழுத்தம் கொத்த வாறே…
விக்ரம் ...சுடர், சூர்ய கலாவை, பார்த்து….”நீங்க இந்த கேச எவ்வளவு சீக்கிரம் வாபஸ் வாங்குறிங்கலோ...அது உங்களுக்கு தான் நல்லது.” பொறுமையுடன் கூற.
எப்போதும் ஒரு பார்வையாளய் மட்டும் இருந்த நம் சூர்ய கலாவோ வயை வைத்துக் கொண்டு சும்மா இராமல்…. “வாபஸ் வாங்கலேன்னா…..?”
எப்போதும் பேசாத தன் குஜிலி பேசிய சந்தோஷத்தில் “எங்களுக்கு நல்லது.” என்று சொன்னவனின் பேச்சு புரியாது.
“கேச வாபஸ் வாங்குலேன்னா உங்களுக்கு நல்லதா….?எப்படி…..? வெள்ளந்தியாக கேட்க.
அந்த வெகுளித்தனத்தில் விக்ரம் மேலும் கவரப்பட்டவனாய் அவளை ஆழமான ஒரு பார்வை பார்த்துக் கொண்டே….
“நாம பழக நேரம் கிடைக்குதுல……”
“எதுக்கு…..?”
“என்ன குஜிலி இப்படி கேட்குற….? என்று கேட்டது தான். இவ்வளவு நேரமும் நான் அமைதியாக இருந்ததே அதிகம் என்ற ரீதியில்….”தோ பாரு இந்த குஜிலி புஜிலின்னு கூப்பிடுற வேல எல்லாம் வேண்டாம். மரியாதை கெட்டுடும் ராஸ்கல்.” என்று சுடர் மிரட்ட.
சூர்ய பிரகாஷை ஒரு பரிதாபமான லுக்கு விட்ட விக்ரம். மனதில் டேய் நண்பா உன் பாடு திண்டாட்டம் தான். அவ சகோதரியையே கொஞ்ச விட மாட்டேங்குறா...இதில் நீ கொஞ்ச எங்கே விட போறா…..? தன் நண்பனுக்காக மனதில் பரிதாபப்பட்ட விக்ரம்.
சுடரிடம்…. “ கலாவை குஜிலி தானே சொன்னேன். புஜிலி இந்த பேரு கூட நல்லா தான் இருக்கு. இனிமே என் கொஞ்சலில் இதையும் சேர்த்துக்குறேன்.” என்று சொன்னவனிடம்.
“என்ன கிண்டலா…..?”
“அய்யோ கிண்டல் இல்லேம்மா நிஜமா தான் சொல்றேன்.” என்று அவன் பேச்சு உண்மை என்று உரைக்க.
“எங்கே கூப்பிடு ….? கூப்பிட்டு தான் பாரேன்.” என்று சொன்ன சுடரிடம்.
“என்ன சுடர் நான் உன்னை கூப்பிட்டுவேன் சொன்னது போல ஏன் கோபப்படுற...அதை அவ…..” அவன் வார்த்தை முழுமை பெறுவதர்க்குள்…
அங்கு இருந்த பூஞ்சாடியைய் எடுக்க. அதை பார்த்த சூர்ய பிரகாஷ்…..”ஏய்…. அவன் சும்மா தான் சொன்னான்.” விக்ரம் மேல் அந்த பூஞ்ஜாடி பட்டு விடுமோ என்ற பதட்டத்தில் அவளை அணுக.
அவன் எதிர் பார்த்ததுக்கு எதிர் பதமாய்….விக்ரமை குறி பார்த்த சுடர் யாரும் எதிர் பாரா வகையாய் அவன் மேல் சட்டென்று அந்த பூஞ்ஜாடியைய் விட்டெறிய.
தன் மேல் வீசுவாள் என்று சிறிதும் எண்ணாது விக்ரமை காப்பாற்றும் நோக்கத்தோடு சுடரை அணுகியதால்…..சுடர் பார்த்த குறி தப்பாது அவன் நெற்றியைய் சரியாக பதம் பார்த்தது.
சுலீர் என்ற வலியில் தன்னையும் அறியாது நெற்றி மேல் கைய் வைத்து அழுத்த. விரைந்து அவன் அருகில் வந்த விக்ரம்.
“சூர்யா கை எடு….பார்க்கலாம்.” என்று சூர்யாவிடம் பேச்சு நடந்தாலும், சுடரை சுட்டெரிப்பது போல் பார்வை செலுத்த.
அவளோ...மிக தெனவெட்டாக விக்ரமை பார்வையால் உனக்கும் இதே கதி தான் என்று சொல்வது போல் இருக்க.
முடிந்த மட்டும் அவளை முறைத்த விக்ரம்.”சூர்யா கை எடு அடி ஆழமா பட்டு இருக்கான்னு பார்க்கலாம்…..?” என்று அவன் சொல்லிக் கொண்டு இருக்கும் போதே…
சூர்ய பிரகாஷின் கை அழுத்தத்தையும் மீறி…..குருதி கொட்டுவதை பார்த்து விக்ரமுக்கு முன் பதறி…ஒடி வந்து… “அய்யோ ரத்தம்” என்று பதறியவளை ஒரு மென் புன்னகையோடு பார்த்திருந்தான் சூர்ய பிரகாஷ்.
 




Deeksha

மண்டலாதிபதி
Joined
Mar 13, 2018
Messages
203
Reaction score
323
Location
Coimbatore
Enna nadakudu... Kidnap le comedy panrenga le boss... Am nadatunga... Adutu yar mandai yo?????
 




ugina

அமைச்சர்
Joined
Jan 17, 2018
Messages
1,193
Reaction score
1,314
HA HA SUPER UD SIS
 




sridevi

அமைச்சர்
Joined
Jan 22, 2018
Messages
4,750
Reaction score
7,120
Location
madurai
sema ud sis kayam erpatuthitu patharuvam seiranga sudar mam
 




Jai

மண்டலாதிபதி
Joined
Feb 5, 2018
Messages
273
Reaction score
688
Location
India
Achacho blood ah paatha payapadara pullaiya ithu. Pochu da face la rattham varuthu, unakku smile kekkutha bro. Enakku ennamo surya va vida vikram super fast ah irukka maathiri irukku,, athanala first vikram married nadanthalum nadakkalam no aacharya kuri(!!!!!!!!!) ???????super, cute plus action episode ☺☺☺☺☺
 




Last edited:

Advertisements

Latest updates

Latest Episodes

Advertisements

Top