• The opinions expressed within the content are solely the author’s and do not reflect the opinions and beliefs of the website or its affiliates.

Palagi Parkkalam - Chapter 11 Part 2

Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள், mspublications1@gmail.com என்ற மின்னஞ்சலிலோ சைட் அட்மினின் (smteam) தனி செய்தியிலோ தொடர்பு கொள்ளவும்.தளத்தில் கதைகளை பதிவது எப்படி- விளக்கம்

Vijiya lakshmi jagan

மண்டலாதிபதி
Joined
Jan 17, 2018
Messages
193
Reaction score
4,743
Chapter 11 Continuation.

“மெத்தனமாய் இருக்கேன்னு உங்களுக்கு யாரு சொன்னது….?”
“யார்டா சொல்லனும். என் மகனை பத்தி எனக்கு தெரியாதா….? தொழில் விஷயத்திலேயே காலம் தாழ்த்த மாட்டான். அப்படி பட்டவன் அவன் ஆசை மருமகன் விஷயத்தில் இவ்வளவு...எங்கேயோ இடிக்குதே…..?” தான் ஒரு நல்ல அரசியல்வாதி என்று அவர் ஒவ்வொரு பேச்சும் எடுத்துரைத்தது.
தந்தையின் பேச்சில் ஒரு நிமிடம் அமைதி காத்தவன். பின்… “ இன்னும் இரண்டு நாளில் முடிச்சுடுறேன்.” என்றதும்.
“நான் முடிச்சிட்டேன்.” என்று நாரயணன் பேச்சு சரியாக காதில் விழுந்ததா….?அவர் ஏதோ சொல்லி நாம் தான் தவறாய் புரிந்துக் கொண்டோமா….? என்று விக்ரமை பார்க்க.
விக்ரமின் அதிர்ந்த தோற்றம் தான் கேட்டது சரி தான் என்று தெளிவாக்க.
“அப்பா என்ன சொல்றிங்க…..?” எப்போதும் ஒரு பிசிறு இல்லாது பேசும் சூர்ய பிரகாஷின் குரல் பிசு பிசுத்து ஒலிக்க.
அதை உள்வாங்கிக் கொண்டே…. “அந்த லாயரையே கேச எடுத்துக்கலேன்னு சொல்ல வெச்சிட்டேன்.”
அதை கேட்ட விக்ரம் நம்ப முடியாது…. “எப்படி...எப்படி….? இதை விக்ரமால் நம்ப முடியவில்லை. வேதாச்சலம் வந்த கேசு அனைத்தையும் எடுத்துக் கொள்ள மாட்டார்.
நியாயமாக இருந்தால் மட்டும் தான் அவர் ஆஜர் ஆவார். எடுத்த கேசை ஜெயிக்காமலும் விட மாட்டார். எந்த சல சலப்புக்கும் அஞ்சாதவர். எப்படி கேசை வாபஸ் வாங்கினார்…..? இதே மண்டையை குடைய.
விக்ரம் பார்த்தே அவன் எண்ண ஒட்டத்தை புரிந்துக் கொண்ட நாரயணன்…
“நீங்க நீங்கலா இருந்து இருந்தா…..இந்நேரம் எப்போவோ இத முடிச்சி இருப்பிங்க….” என்று சொன்னவர்.
பின்…. “இனி இதில் நீங்க தலையிடாதிங்க நான் பாத்துக்குறேன்.” என்று தெள்ள தெளிவாக ஒவ்வொரு வார்த்தைக்கும் இடைவெளி விட்டு நிதானமாக சொல்ல.
சூர்ய பிரகாஷோ….”ஏன்….? என் மேல் நம்பிக்கை இல்லையா…..?” என்று தன் தந்தையை பார்த்து கூர்மையுடன் கேட்க.
அவன் பார்வையில் ஒரு நிமிடம் நாரயணனே தடுமாறி விட்டு. பின் “ என் பேரன் விஷத்தில் நான் ரிஸ்க் எடுக்க விரும்பல.” என்று சொல்லி விட.
“ஒ….” என்று ஒரு நிமிடம் நிதானித்தவன். பின் “உங்க பேரன் . சரி உங்களுக்கு பேரன். அப்போ எனக்கு என்ன உறவு ….? அவன் மேல எனக்கு அக்கரை இல்லையா…..?” என்று கேட்டவனுக்கு.
பதில் அளிக்காது அமைதி காத்த தந்தையிடம் மீண்டும்…. “எனக்கு அவன் மேல பாசம் இல்லையா…..?” முன்னை விட தன் பேச்சில் சூட்டை ஏத்தி கேட்க.
“இருக்கு சூர்யா. இருக்கு இல்லேன்னு சொல்லலே...ஆனா அத விட அந்த பொண்ணு மேல காதல் கொஞ்சம் கூடுதலா இருக்கு.” பட்டென்று மகன் காதலை போட்டுடைக்க.
அந்த இடமே சிறிது நேரம் அமைதியாகி விட. விக்ரம் தான் “அங்கிள்….” என்ற அழைத்தவனை பார்த்து.
“நீயாவது ஸ்டெடியா இருந்து இருந்தா….பரவாயில்லையா இருந்து இருக்கும். நீயும் அவனுக்கு மேல.” ஏதோ சொல்ல வந்தவர் அதை விடுத்து.
மீண்டும் சொன்னதையே…”இந்த விஷயத்தை நான் பாத்துக்குறேன்.” என்று கூறி விட்டு.
“சீப்பை மறச்சி வெச்சா எல்லாம் கல்யாணம் நிக்காது. முதல்ல அந்த பிள்ளைங்கல வீட்டில் விடுற வழியே பாருங்க. நம் வீட்டுக்கு மருமகளா வரும் பொண்ணு பேரு கெட கூடாது.” என்று சொல்லி விட்டு சென்றவரின் முதுகை தான் இருவரும் பார்க்க வேண்டி இருந்தது.
அவர் சென்ற பிறகு கூட இருவரும் பேசாது இருந்தனர். பின் விக்ரம் தான்… “என்ன சூர்யா உங்க அப்பா இப்படி சொல்லிட்டு போறாரு. அதுவும் கடைசியில சுடர உங்க வீட்டு மருமகள் வேற சொல்லிட்டு போறாரு. இவரு நல்லவரா….? கெட்டவரா சூர்யா….? முதலில் குழப்பத்தில் ஆராம்பித்து முடிவில் கிண்டலில் முடிக்க.
“தெரியாது எல்லாம் சொல்ல மாட்டேன். சுடர மருமகளா ஒத்துக்குனதுக்கு காரணம். அவர் மறுத்தாலும் நான் கல்யாணம் செய்துப்பேன்னு அவருக்கு தெரியும். நான் யோசிக்கிறது எல்லாம் எப்படி வேதாச்சலத்தை கேசு வாபஸ் வாங்க வெச்சாரு அதான்.” என்று யோசித்தவனிடம்.
விக்ரமும்… “எனக்கும் அதே தான்டா குழப்பமா இருக்கு….” என்று சொல்ல.
ஏதோ முடிவோடு போனை எடுத்து யாருக்கோ அழைத்து பேசி வைத்ததும் சூர்ய பிரகாஷின் முகத்தில் சிந்தனையின் சாயல்.
“என்ன சூர்யா ஏதாவது பிரச்சனையா….?” என்று கேட்டவனுக்கு ..
“இல்ல….” என்று சொன்னதும்.
“அப்போ ஏன் போன் பேசி மூட் ஆவிட் ஆகி இருக்கே….?”
“அப்பா கேச வாபஸ் வாங்குனத நினச்சி தான்.” என்று சொன்னதும்.
ஆவளுடன்… “எப்படி…?எப்படி வாங்கினார்….?”
“வேதாச்சலம் குடும்பத்தை பத்தி தெரியுமா….?” என்ற கேள்விக்கு.
“ரொம்ப எல்லாம் தெரியாது. ஒரு மகன் இருக்கான்னு தெரியும்.”
“அவன் என்ன தொழில் பண்றான்.”
“ஏன்டா இதெல்லாம் கேட்குற….?”
“ காரணமா தான். அவன் என்ன…? தொழில் பண்றான்.”
“ஏதோ ஹார்பர்ல ஏற்றுமதி இறக்குமதி பண்றான். போன மாசம் கூட ஏதொ வக்கீல் கிட்ட இந்த தடவையும் ஹார்பர் கான்ராக்ட் தன் பையனுக்கு கிடச்சி இருக்குன்னு பேசிட்டு இருந்தாரு.” என்று கட கட வென்று சொல்விய விக்ரம்.
பின் …”எதுக்குடா இதெல்லாம் கேட்ட….?”
“காரணமா தான். இப்போ தான் அப்பாக்கு எல்லாமா இருக்குறவரு கிட்ட பேசினேன்.
முதல்ல சொல்ல தயங்கினாரு. பின் நான் அதட்டியதும் வேதாச்சலம் பையன் சரக்கு கப்பல்ல சாமி சிலைய வெச்சி அந்த கப்பல் பாதுகாவலர் பிடிச்சி. இது எதுவும் இலேன்னா ஆகனுமுன்னா இந்த கேச உங்க அப்பாவ வாபஸ் வாங்க சொல்லுன்னு மிரட்டி. அப்போ கூட வேதாச்சலம் கேக்கலையாம்.
அவர் மகன் தற்கொலை முயற்ச்சியில் ஹாஸ்பிட்டல்ல சேர்த்துட்டு அவன் மனைவி வேதாச்சலத்திடன் ஏதோ பேசி சண்டை போட்ட பிறகு தான் வாபஸ் வாங்கி இருக்காரு.” முழு மூச்சுடன் சொல்லி விட்ட பிறகும் சூர்யாவின் முகத்தில் சிந்தனை கோடு மறையவில்லை.
அதை பார்த்த விக்ரம்…”நீ ஏன்டா ரொம்ப பீல் பண்ற. அதான் எல்லாம் நல்ல படியா முடிஞ்சிடுச்சிலே… அப்புறம் என்ன…?” என்று கேட்டவனை புரியாது ஒரு பார்வை பார்க்க.
அந்த பார்வையில்… “என்ன சூர்யா என்ன பிரச்சனை…?”
“இந்த வேலைய அப்பா இரண்டு நாளுக்கு முன்னவே ஆராம்பிச்சிட்டாரு. இதே வேகத்தை சுடர் வீட்டிலும் காட்டினா….?”
 




vadivelammal

இணை அமைச்சர்
Joined
Jan 22, 2018
Messages
574
Reaction score
1,781
Location
bangalore
empa viji surya appa nalla arasiyalvaadhinnu prove pannitaar aanaal suryavum vikramukkum thaan inimel thalavali vara poguthu ithuga lkgye thondala innum school college mudigirradukulla arupathu vayashu agiduma nice
 




Nishirdha

அமைச்சர்
Joined
Feb 8, 2018
Messages
3,003
Reaction score
5,586
Location
Tamil Nadu
“என்ன சூர்யா உங்க அப்பா இப்படி சொல்லிட்டு போறாரு. அதுவும் கடைசியில சுடர உங்க வீட்டு மருமகள் வேற சொல்லிட்டு போறாரு. இவரு நல்லவரா….? கெட்டவரா சூர்யா….?
Same doubt than engalukum:unsure: but ivanga appa ivlo fast ah:rolleyes: sudar family ya yenna panna poraro:confused: heroine vera konjam kalanda casu!! Iva yenna panna poralo:censored: waiting for the next action ud(y)
 




Jai

மண்டலாதிபதி
Joined
Feb 5, 2018
Messages
273
Reaction score
688
Location
India
I think minister oru positive villan nu????aana ivlo seekarama sudar ah marumagal nu othuttu irukka vendaam. But its ok avar othukkitta sudar and her family othukkanum la????
இந்த வேலைய அப்பா இரண்டு நாளுக்கு முன்னவே ஆராம்பிச்சிட்டாரு. இதே வேகத்தை சுடர் வீட்டிலும் காட்டினா….?”
Ithe speed na onnu success illa failure. Unnoda case porutha varaikkum failure aarakkana chance romba bright and very much bright ah irukku surya bro
 




Chitra srinee

இணை அமைச்சர்
Joined
Jan 19, 2018
Messages
674
Reaction score
2,741
Location
Chennai
Hai viji nice epic eththanukku eththan narayanan nu proof pannittaru sudar a marumagala eathukittaru aana surya bayam crt thano athiradiya sudar vittla narayanan Enna panna poraro sudar entha case LA aduthu Enna panna pora lawyer a Case a eadukkalana Enna panna pora Waiting viji keep rocking
 




Advertisements

Latest updates

Latest Episodes

Advertisements

Top