• The opinions expressed within the content are solely the author’s and do not reflect the opinions and beliefs of the website or its affiliates.

Palagi Parkkalam - Chapter 24 Part 1

Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள், mspublications1@gmail.com என்ற மின்னஞ்சலிலோ சைட் அட்மினின் (smteam) தனி செய்தியிலோ தொடர்பு கொள்ளவும்.தளத்தில் கதைகளை பதிவது எப்படி- விளக்கம்

Vijiya lakshmi jagan

மண்டலாதிபதி
Joined
Jan 17, 2018
Messages
193
Reaction score
4,743
Hi friends,

24th chapter posted below. Pona episode ku comments pannavagaluku thanks much.

அத்தியாயம்----24​
ஹாய்….கருத்து தெரிவித்தவர்களுக்கும் , விருப்பு தெரிவித்தவர்களுக்கு என் நன்றி மக்களே….தொடர்ந்து உங்கள் ஆதரவு தான் உடல் நிலை ஒத்துழைக்கா விட்டாலும் மனது ஒத்துழைக்க வைக்கும் சத்து கஞ்சி. ப்ளீஸ் கருத்து தெரிவித்தால் மகிழ்ச்சி.
“என்னடி சொல்ற…?” தன் மயக்கம் தெளிந்து கேட்ட சுடருக்கு பதில் அளிக்க முடியாத மயக்கத்தில் இருந்த சூர்ய கலாவை ஒரு உலுக்கு உலுக்கியவளை.
கண் சிமிட்டி இது பூலோகமா ….?மேலோகமா….?என்று கேட்கும் நிலையில் தன்னை பார்த்த சூர்ய கலாவை கன்னம் கன்னமா அரைந்தால் என்ன என்று கூட யோசிக்க வைத்தது அவளின் பார்வை.
“தோ பாருடி அவனை லவ் பண்றேன்னு சொன்னத கூட நான் டைஜிஷன் செஞ்சிப்பேன். ஆனா இந்த பார்வை தான்டி என்னால தாங்க முடியல.” என்று சொன்னவளின் பேச்சு காதில் வாங்காது அங்கு இருக்கும் கண்ணாடி முன் நின்று முன்பு தான் செய்தது போலவே கண் சிமிட்டி பார்த்தவள்.
“நல்லா தானே இருக்கு. நான் அப்படி அன்னிக்கு பண்ப்ப அவர் ஆசையா தானே பார்த்தாரு….” கண்ணாடி முன் தன் மேவாயில் தன் விரல் வைத்து தானே பேசுவது போல் தன் காதில் விழும் மாறு பேசிய பேச்சை கேட்டு கொதி நிலைக்கு வந்த சுடர்.
“ஓ அதுவெல்லாம் கூட நடந்ததா….?அது எப்படி அவன் நீ இப்படி பண்ணா நல்லா இருக்குன்னு சொன்னான்….?” என்று கோபத்துடன் கேட்ட சுடரின் பேச்சில் மத்ததை விட்ட சூர்ய கலா.
“சுடர் அவன் இவன் எல்லாம் சொல்லாத என்ன இருந்தாலும்….” என்று இழுத்தவளை பார்த்து தன் தலையில் தான் கொட்டிக் கொள்ளலாம் என்று தோன்றியது.
இப்படி பேசினால் வேலைக்கு ஆகாது என்று நேரிடையாகவே…. “எப்படி உனக்கு அவர் மீது லவ் வந்தது….?” அவன் என்று சொன்னால் திரும்பவும் பேச்சு திசை மாறக் கூடும் என்று முன்னெச்சரிக்கையாக அவர் போட்டு கேட்க.
“அன்னிக்கு அன்னிக்கு….” திக்கி திணறி அந்த அன்னிக்கு என்ற நிலையிலேயே இருக்க.
“என்னக்கி….? என்று கேட்டால் என்ன சொல்வாளோ….? என்று பயந்து.
“சரி அன்னிக்கு என்ன ஆச்சு….?” நேரிடையாக கேள்வியில் இறங்கிய சுடரிடம்.
“அவனுங்க என் கிட்ட தப்பா நடந்துக்க பாத்தப்போ...எப்படி கோபம் வந்தது தெரியுமா…?அவருக்கு. யார் மீது கைய் வைக்க பாத்தேன்னு எவ்வளவு கோபப்பட்டார் தெரியுமா….?” சூர்ய கலாவின் பேச்சில் திரும்பவும் தலை கொட்ட உயர்ந்த தன் கை தன்னால் கீழே இறங்கியது சுடருக்கு.
இவளின் ஒவ்வொரு பேச்சுக்கும் தலையில் கொட்டினால் தன் தலை பள்ளம் ஆவது நிச்சயம் என்ற எண்ணத்தில் அதை கை விட்டவளாய்.
“அந்த அவனையே அனுப்பி வெச்சது. அந்த அவரு தான்டி.” கோபப்படாமல் பேச வேண்டும் என்று நினைத்தாலுன்ம் கோபம் தன்னால் எழுவதை கட்டு படுத்த முடியாமல் பற்களை கடித்துக் கொண்டு கேட்க.
“ஆமா...ஆனா பயந்து அவரே வந்து தானே காப்பத்தினாரு.” என்று திரும்பவும் அவள் கண்கள் கனவுலகில் மிதக்கும் நிலைக்கு செல்ல.
இதற்க்கு மேல் இவளிடம் பேசுவது கவுண்டமணி, செந்திலின்வாழைப்பழம் கதையாக தான் முடியும் என்று நினைத்து.
அவள் திருமணத்தோடு தன் திருமணத்தை முடிச்சி போட வேண்டாம் என்று தன் தந்தையிடம் வாதடியவளின் பேச்சு எடுபடாமல் போக. இதோ கல்யாணம் வரை வந்தாகி விட்டது.
எங்கு கலாவை காணும் என்று சுற்றி முற்றி பார்த்தவளின் பின் புறம் இருந்து ….”என்னையா தேடுற….?” என்ற சூர்ய பிரகாஷின் மென்மையான குரலை கேட்டால் மற்ற பெண்களுக்கு சிலிர்ப்பு வந்து இருக்குமோ என்னவோ...ஆனா நம் சுடருக்கோ...இப்போ எதுக்கு இவ்வளவு மெல்லமா பேசுறான் என்று நினைத்தவள்.
சிறிதும் வெக்கமோ….நாணமோ...இல்லாது அவன் கண்ணை நேர்க் கொண்டு பார்த்து…. “சூர்யா…. என்று சொல்ல வந்தவள். “சூர்ய கலாவை எங்குன்னு பார்க்குறேன்.” என்று அவன் பேசிய ரொமான்ஸ் பேச்சுக்கு வாத்தியார் கேட்ட கேள்விக்கு பதில் சொன்ன மாணவி போல் சொன்னதும் அல்லாமல் அவனிடமே….
“சூர்ய கலா எங்கே….?” என்றும் கேட்டும் வைக்க.
“கஷ்டம்…” என்று முனகியவனிடம்.
“ரகசியமா பேசுறிங்க…? இப்படி மெல்லமா பேச….?” என்று கேட்டதுக்கு.
“ஆமா ரகசியமா பேசிட்டாலும்….” என்று முனகியவன்.
சுடர் காதில் விழாது என்ன என்பது போல் பார்த்தவளிடம்…. “விக்ரம் கூட அந்த ரூமில் இருக்கா….?” என்று சத்தமாக சொன்னவன். பின் மெல்ல…”ஆ கொடுத்து வெச்ச மகராசன்.” என்று முனகிக் கொண்டு இருக்கும் போது விக்ரம், சூர்ய கலா, தங்கி இருக்கும் அறை பக்கம் சுடர் செல்வதை பார்த்து.
“ஏய்….” என்று சொல்லிக் கொண்டே அவள் கை பிடித்து இழுத்து நிறுத்தியவன்.
“உனக்கு அறிவு இருக்கா….? அங்கு போற….?” என்று கேட்டவனுக்கு பதில் அளிக்காது தன் கை பிடித்து இருந்த அவன் கையைய் பார்த்து விட்டு…. “இந்த கை பிடிச்சி இழுக்குற வேல எல்லாம் என் கிட்ட வெச்சிக்காத….” என்று சொன்னவளின் பேச்சில்.
அவன் முகம் குரல் இரண்டும் மாறி போக….”அப்போ யாருக்கிட்ட வெச்சிக்க சொல்ற…..? ஆ ...இது உன் கிட்ட தான் வெச்சிக்க முடியும். உன் கை பிடிச்சி தான் இழுக்க முடியும். வேற யாரு கை பிடிச்சாலும் அவள் புருஷன்காரன் வந்து மொத்துவான்.” என்று சொன்னவனிடம்.
‘என் கை பிடிச்சா நான் மொத்துவேன்.”
“ஆ இது பேச்சு. மொத்து எவ்வளவு வேண்டுமானலும் மொத்து உன்ன யாரு வேண்டாமுன்னது. ஆனா தனியா மொத்துமா….” என்று சொன்னவனின் பேச்சை நம்ப முடியாது பார்க்க.
அவளின் பார்வையிலேயே அவள் எண்ணம் புரிந்தவனாய்…. இன்னும் பேச்சை வளர்க்கும் பொருட்டு….
“ஆன ஒன்னு வாங்குற அடிக்கு ஒரு வேல்யூ வேண்டும்லே... அடி என்று ஆயிட்ட பின் என் கைய் ஏன்...கைய் பிடிப்பதோடு நிறுத்திக்கனும்….?” என்று கேட்டவனை அதிர்ச்சியோடு பார்த்தவள்.
பதட்டத்தில் என்ன பேசுகிறோம் என்று தெரியாது…”அப்போ என்ன பிடிப்பிங்க….?” என்று கேட்ட பின் தான் தன் தவறு உணர்ந்து நாக்கை மடித்து கை உதறியவளின் கை பற்றி…
“ஆ தெரிஞ்சிடுச்சின்னு நினைக்கிறேன். என் வாயல் கேட்கமுனுன்னா இது பொது இடம் இங்கு வேண்டாம். இன்னிக்கி ராத்திரி நமக்கு நேரம் ஒதுக்கி இருக்காங்க. அப்போ சொல்றேன்.” என்றவனிடம் திக்கி திணறி…
சந்தேகத்துடன்…”எதுக்கு நேரம் ஒதுக்கி இருக்காங்க….?” என்று கேட்டவளிடம் அவள் கன்னத்தை தன் விரல் கொண்டு தட்டியவன்.
“எல்லாம் உனக்கு நானே சொல்லனும். ஆம்பிளையா இருந்தாலும் எனக்கும் வெக்கமா இருக்காதா….?” வெட்கம் போல் நடித்து தன்னை ஒழுங்கு ஏத்துபவனை முறைத்து பார்த்தவள்.
“தோ பாருங்க இது மாதிரி ஏதாவது எண்ணம் இருந்தா…?இப்போவே அழிச்சிடுங்க. எங்க அப்பா சொன்னதுக்காக தான் உங்களை கல்யாணம் செய்துக்கிட்டேன்.” அவன் வெட்கப்படுவதை போல் நடிப்பதை பார்க்க முடியாது வார்த்தையால் கடித்து துப்ப.
“அது தான் நானும் சொல்றேன்.” என்று சொன்னவனின் பேச்சு புரியாது.
நாம என்ன சொன்னோம் ..அவனுக்கு சாதகமா பேசினா மாதிரி பேசுறான். நம்மையும் அறியாது ஏதாவது உலறிட்டோமா…..? என்று மனதில் சந்தேகம் வந்தாலும் அதை வெளியில் காட்டாது.
“என்ன உலர்றிங்க….?”
“இல்லேம்மா உலறல..கல்யாணத்தை அப்பா சொன்னதுக்காக செஞ்சிக்கட்ட மாதிரி. ராத்திரி என் ரூமுக்கு அனுப்பும் போது உன் அம்மா சொல்றத கேளுன்னு சொல்றேன்.” அவன் எத்தனை திரைப் படத்தில் பார்த்து இருக்கான்.
பால் சொம்பை கையில் கொடுத்து…”மாப்பிள்ளை மனசு கோணமா நடந்துக்கோம்மான்னு….” சொல்லி அனுப்புவதை அதை நினைத்து சொல்லியவனிடம்.
“நினப்பு தான் பொழப்ப கெடுக்குமா….” என்று பழ மொழி சொல்லியவளிடம்.
“என்ன கெடுக்குமுன்னு பாக்கலாம்.” போகும் போக்கில் அசால்ட்டாய் ஒரு குண்டை வீசி விட்டு போக. அவன் முதுகையே பார்த்திருந்தவளுக்கு பயம் கொஞ்சம் வரத்தான் செய்தது.
“நம்ம அனுமதி இல்லாம….” அதுக்கு மேல் நினைக்க கூட முடியாது தன் தலை உதற.
அப்போது தான் அந்த இடத்துக்கு வந்த ரேவதி…. “என்னம்மா தலை வலிக்குதா…..? சூடா காபி எடுத்துட்டு வர சொல்லட்டா….? என்று சுடரிடன் கேட்டுக் கொண்டே அந்த வழியாக சென்ற வேலையாளை அழைத்து …
“ஸ்டாங்கா காபி எடுத்துட்டு வா…” என்று வேலையாளிடம் ஏவியவர்.
 




banumathi jayaraman

முடியிளவரசர்
Joined
Jan 17, 2018
Messages
28,178
Reaction score
67,725
:D :p :D
நான்தான் First,
விஜி டியர்
 




Last edited:

Suvitha

அமைச்சர்
Joined
Jan 28, 2018
Messages
4,090
Reaction score
19,824
Location
Tirunelveli
ஹாஹாஹா..."அவன் இவன் என்று ஏக வசனத்தில் பேசவேண்டாம்"...
சூர்யகலா கலக்குற கண்ணம்மா...
விக்ரம் மச்சம் தான்டா உனக்கு...
ஹேய் சுடர், ரொமான்ஸ் வரலன்னா உன் தங்கை கிட்ட இருந்து கொஞ்சம் கத்துக்கோ ராசாத்தி...

உடல்நிலை ஒத்துழைக்காத போதிலும் எங்களுக்காக அழகான பதிவை தந்த உங்களுக்கு நன்றி விஜிமா....
 




Suvitha

அமைச்சர்
Joined
Jan 28, 2018
Messages
4,090
Reaction score
19,824
Location
Tirunelveli
சூர்யாவா ப்பா இது??? என்ன பேச்சு பேசுறான்...
வார்த்தை யிலே பந்தல் போட்டு தோரணமும் கட்டிருவான் போல...
 




Advertisements

Latest updates

Latest Episodes

Advertisements

Top