• The opinions expressed within the content are solely the author’s and do not reflect the opinions and beliefs of the website or its affiliates.

Palagi Parkkalam - Chapter 24 Part 2

Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள், mspublications1@gmail.com என்ற மின்னஞ்சலிலோ சைட் அட்மினின் (smteam) தனி செய்தியிலோ தொடர்பு கொள்ளவும்.தளத்தில் கதைகளை பதிவது எப்படி- விளக்கம்

Vijiya lakshmi jagan

மண்டலாதிபதி
Joined
Jan 17, 2018
Messages
193
Reaction score
4,743
Chapter 24 Continuation

சுடரிடம் அந்த குரலுக்கு முற்றிலும் மாறு பட்டு மென்மையாக…”உன் கிட்ட கேட்காம ஸ்டாங்கான்னு சொல்லிட்டேன்….ஸ்டாங்கா குடிப்பலே….” என்ற குரலுக்கு மறுத்து பேச முடியாது.
தலையை ஆட்டயவளிடம். சிரித்த முகத்துடன்…. “காபி குடிச்சிட்டு கொஞ்ச நேரம் ரெஸ்ட்டு எடும்மா...அப்போ தான் சாயங்காலம் வரவேற்ப்புக்கு முகம் கொஞ்சம் தெளிவா இருக்கும். பாரு முகமே ஓஞ்சி போய் தெரியுது ….” கன்னம் தட்டி சொல்ல.
அந்த அன்புக்கு முன் அனைத்துக்கும் “சரி...சரி….” என்று தான் அவளாள் சொல்ல முடிந்தது.
மாலையில் வரவேற்ப்பில் சூர்ய பிரகாஷ், விக்ரம் , சூர்ய கலா சிரித்த முகமாய் காட்சி தர. சுடருக்கு தான் தன் அண்ணனுக்கு துரோகம் இழைக்கிறோமே...என்று எண்ணமே அவள் முகத்தை கலை இழக்க செய்ய.
அந்த சமயத்தில் மேடையேறிய வேதாச்சலம். இரு ஜோடியையும் வாழ்த்தியவர். விக்ரமின் வயிற்றில் குத்தி விட்டு…”இனி எனக்கு ஆப்போ சிட்டா நின்னன்னு வெச்சிக்கோ...நா என் மக கிட்ட உன்ன பத்தி புகார் பத்திரம் வாசிச்சிடுவேன். அப்புறன் அவ்வளவு தான் உன் பாடு.” என்று அவனை வாறியவர்.
சூர்ய கலாவிடம்…”என்னம்மா நான் சொன்னா அவனை நல்லா கவனிக்க மாட்ட….?” என்று கேட்டவருக்கு என்ன பதில் சொல்வது என்று தெரியாது பாவம் விழித்து நின்று இருந்தாள்.
தன் அக்காவிடம் ஒத்துக் கொண்ட தன் காதலை தன் காதலனிடம் சொல்வதற்க்கு இன்னும் அவளுக்கு தைரியம் வரவில்லை . காதலனிடம் சொல்ல வில்லை என்றாலும் கணவனிடமாவது சொல்வாளா…?பார்க்கலாம்.
“என்னம்மா அதட்டுவியா….?இல்லியா…? என்று கேட்டவரிடம் பொத்தாம் பொதுவாய் இரு பக்கமும் தலையாட்டியவளை பார்த்து விக்ரமுக்கு சிரிப்பு தான் வந்தது.
விக்ரமின் சிரிப்பை பார்த்து வேதாச்சலமும் சிரித்துக் கொண்டே….”எப்போதும் இப்படி மகிழ்ச்சியா இருக்கனும் விக்ரம்.” அந்த குரலில் அவரை பார்க்க.
தன்னை பார்த்த விக்ரமை பார்த்து….”அதே போல மற்றவர்களும் மகிழ்ச்சியா இருக்க விடனும். இல்லேன்னா….?” அவர் பேச்சில் அது வாழ்த்தா…? மிரட்டலான்னு தெரியாது விழித்திருக்கும் போதே…
சூர்ய பிரகாஷின் கை பற்றி…. “ நீ ரொம்ப புன்னியம் பண்ணி இருக்க சூர்யா. எனக்கு தெரிஞ்சு இந்த ஜென்மத்தில் இல்ல. போன ஜென்மம் இதில் எல்லாம் எனக்கு நம்பிக்கை இல்ல. முன்னோர்கள் என்று சொன்னவர்.” அந்த பக்கம் சென்ற நாரயணனை பார்த்து.
“ம்...சான்ஸே இல்ல.” என்று சொல்லி விட்டு அவனை பார்க்க.
என்ன கோர்ட்டில் உலறுவது போல இங்கு உலறிட்டு இருக்காரு. என்று நினைத்தவன். ஆனால் அதை சொல்ல முடியாது செய்து விட்டது சுடரின் சிரித்த முகம்.
இவ்வளவு நேரமும் யாருக்கு வந்த விருந்தோ…? என்று முகத்தை வைத்துக் கொண்டு இருந்தவள். வேதாச்சலம் மேடை ஏறியதும் தான் அவள் முகத்தில் கொஞ்சம் சிரிப்பு ஏறியது.
அதுவும் விக்ரமிடமும் , கலாவிடமும் அவர் பேச பேச பற்கள் தெரியும் அளவுக்கு நன்றாகவே சிரிக்க.
அவளின் குருவான அவரை ஏதாவது சொன்னா...நமக்கு ஏன் வம்பு என்று தான் வேதாச்சலம் தன் தந்தையை பார்த்து கிண்டல் செய்யும் போது கூட பற்களை கடித்து அமைதியாக இருந்தான்.அவன் நிலை அவன் முகத்தை பார்த்தே தெரிந்துக் கொண்ட வேதாச்சலம் ஒரு வெடி சிரிப்பு சிரித்து விட்டு.
“என்ன ஆடு ஆடினிங்க….? அடங்குடா அடங்குங்க….அதுவும் சுடர் மாதிரி பொண்ணு கிடைப்பது என்பது சாதரண விஷயமா…?” என்று கேட்டவர்.
“பின் விக்ரமுக்கு செய்தது போலவே அவனின் வயிற்றில் குத்தி….”உனக்கு எங்கேயோ மச்சம் இருக்கு.” வாங்கி வந்த இரு பரிசு பொருட்களை சுடரிடம் ஒன்று சூர்ய கலாவிடம் ஒன்று கொடுத்து விட்டு சென்றவரை பார்த்து அப்போதிக்கு விக்ரம், சூர்யாவுக்கு முறைக்க மட்டும் தான் முடிந்தது அதுவும் தத்தம் மனைவி மார்களுக்கு தெரியாது தான்பா…
சிரித்த முகத்துடன் தன் பக்கத்தில் நிற்க்கும் தன் மனைவியை பார்த்த விக்ரமுக்கு தான் இது கனவா…? நினைவா….? என்று அடிக்கடி சந்தேகம் எழுந்துக் கொண்டு இருந்தது. இந்த திருமணம் பற்றி பேச்சி எழுந்ததில் இருந்து விக்ரமுக்கு கொஞ்சம் பயம் இருந்துக் கொண்டு தான் இருந்தது. ஒன்று தன் குடும்பம். என்ன தான் பணம் கொட்டிக் கிடந்தாலும் குடும்ப சூழ்நிலை சொல்லிக் கொள்ளும் படி இல்லையே….?
பணத்தை பெரியதாக மதிப்பு கொடுக்காத அவர்கள் தனக்கு பெண் கொடுப்பார்களா…? என்ன தான் மீடியா முன் பேசி இருந்தாலுமே…….. அவன் பயத்தை குணசேகரின் பேசிய ஒத்த வார்த்தை தீர்த்து வைத்தது.
“நம்ம சூர்யா பொண்ணுக்கு விக்ரமை பிடித்து இருக்கு...சுடர் தான்.” என்று இழுத்த இழுப்பில் விக்ரம் ஆகாயத்துக்கு பறந்தான் என்றால் சூர்யா….பதட்டத்துடன் அவரை பார்க்க.
“நான் ஏதேதோ பேசி சம்மதிக்க வெச்சிட்டேன்.” என்ற சொல்லில் சூர்யா ஆறுதல் அடைந்தாலும் விக்ரமின் மகிழ்ச்சியை பார்த்து துரோகி என்று தான் நினைக்க தோன்றியது.
இப்படி அவர் அவர் நினைவுகளில் அந்த வரவேற்ப்பு நல்ல முறையில் முடிந்தாலும். அந்த விழாவில் சற்றும் பொறுந்தாது இருந்த சந்திர கலாவை பார்த்து தான் சூர்யாவுக்கு மனது பாரமாக கணத்தது.
ஏதாவது அவளுக்கு செய்து ஆக வேண்டும். இல்லை என்றால் ஆசை பட்டவளை மணந்தாலும் அவளுடன் என்னால் முழுமகிழ்ச்சியில் குடும்பம் நடத்த முடியாது.(என்னவோ அவ ரெடியா இருக்க மாதிரியே பய புள்ள நினப்ப பாரு….)
பார்க்கலாம் சந்திராவுக்கு என்ன வழி செய்கிறான். தன் மனைவியின் மனம் மாற்றி மகிழ்ச்சியில் திளைக்கிறானா….? இல்லை திணறுகிறானா….? என்று.
 




Jai

மண்டலாதிபதி
Joined
Feb 5, 2018
Messages
273
Reaction score
688
Location
India
Hi viji mam
Surya ku second option and vikram ku first option nu thaan thonuthu
நான் ஏதேதோ பேசி சம்மதிக்க வெச்சிட்டேன்.” என்ற சொல்லில் சூர்யா ஆறுதல் அடைந்தாலும் விக்ரமின் மகிழ்ச்சியை பார்த்து துரோகி என்று தான் நினைக்க தோன்றியது.
Mee too surya bro. All the best surya. Nice update waiting for the next update ☺☺☺☺
 




Nishirdha

அமைச்சர்
Joined
Feb 8, 2018
Messages
3,003
Reaction score
5,586
Location
Tamil Nadu
பார்க்கலாம் சந்திராவுக்கு என்ன வழி செய்கிறான். தன் மனைவியின் மனம் மாற்றி மகிழ்ச்சியில் திளைக்கிறானா….? இல்லை திணறுகிறானா….? என்று.
Naangalum Surya yenna panna poranu paakirom:giggle: we'll be waiting....
 




elakkiyaganesh

இணை அமைச்சர்
Joined
Feb 17, 2018
Messages
564
Reaction score
779
Location
chennai
Super ...yeppidio rendu parum kalyanathe muduchutanga ...pavom Surya ....unna nanCha than konjam kastama irukku ...Sudar unna yeppi yellam paduthi vaikka poralo...:love:.
 




Advertisements

Latest updates

Latest Episodes

Advertisements

Top