Vijiya lakshmi jagan
மண்டலாதிபதி
- Joined
- Jan 17, 2018
- Messages
- 193
- Reaction score
- 4,743
Chapter 26 continuation
சூர்யா மனதில் எப்போவும் நம்ம ஆள் தானே முகத்தில் நெருப்பை கட்டி வைத்து இருப்பா….?இந்த புள்ள அமைதியா தானே இருக்கும் என்று நினைத்துக் கொண்டு இருக்க.
அவன் மனதில் நினைத்ததையே விக்ரம் வார்த்தையாய்…. “என்ன கலாம்மா...ஏன் முகம் ஒரு மாதிரி இருக்கு….?யாராவது ஏதாவது சொன்னாங்களா…..? எது இருந்தாலும் அத்தான் என் கிட்ட சொல்லு…..” பேச்சு தன் மனைவிடம் இருந்தாலும் பார்வை கோபத்துடன் சுடரையே பார்த்து இருந்தது.
இதை பார்த்த சூர்ய பிரகாஷ்…விக்ரமின் அத்தான் என்ற பேச்சில்….அட ரொமான்சுல பின்ரானே பின்ரானே…. என்று அங்கலாய்க்க மட்டும் தான் அவனால் முடிந்தது.
விக்ரம் கேட்ட கேள்விக்கு….”ஒன்னும் இல்ல” என்ற பதில் தந்தவள். சுடரை பார்க்க சுடரோ விக்ரமின் பார்வைக்கு எதிர் பார்வையாய் அவனை முறைத்துக் கொண்டு…
“ஒன்னா இருந்த எங்கள பிரிச்சிட்டல….” என்று விக்ரமை பார்த்து கோபத்துடன் சுடர் கேட்க.
என்ன தான் தன் மனைவியே ஆனாலும் தன் நண்பனை இது மாதிரி கேள்வி கேட்பது பிடிக்காது. “சுடர் அது என்ன மரியாதை இல்லாம நீ என்று பேசுறது. வயசில உன்ன விட பெரியவன் அந்த மரியாதையாவது இருக்கட்டும்.” என்று தன் மனைவியை அதட்ட.
“ பெரியவங்க. ..பெரியவங்க…..” என்று பெரியவங்க என்ற வார்த்தையில் அழுத்தம் கொடுத்து சொன்னவள்.
பின் சூர்ய பிரகாஷை நேர்க் கொண்டு பார்த்து…. “ வயசுல பெரியவங்க எல்லாம் பெரியவங்க இல்ல. பெரியவங்க என்றது அவங்க நடந்துக்குறதுல இருக்கு.” என்று சொல்ல.
சுடர் எதை நினைத்து சொல்கிறாள் என்பதை விக்ரம் சரியாக புரிந்துக் கொண்டான். பின் இருக்காதா...வார்த்தையை விட்டவன் அவன் அல்லவா…..?
ஆனால் நம் சூர்ய பிரகாஷோ தன் நண்பனுக்கு பரிந்து வருகிறேன் என்று….. “ அவனிடம் எந்த விஷயத்தில் நீ சின்ன தனத்தை கண்டுட்ட…..?” என்று வசமாக பேசி சுடரிடம் மாட்டிக் கொள்ள.
இதற்க்கு தான் காத்துக் கொண்டு இருந்தேன் என்பது போல்….”ஓ அன்னிக்கி கோர்ட்டில் என் கிட்ட அப்படி கேட்டது சின்ன தனம் இல்ல….?” என்று கேட்டவள்.
“அது எப்படி என் கிட்ட அப்படி பேசிட்டு எங்க வீட்டு பெண்ணையே உங்களால கட்டிக்க முடிஞ்சது….?” என்று சூடாக கேட்டவளிடம் அந்த புகழ் பெற்ற வக்கீல் எதுவும் பேசாது அமைதியாகவே இருந்தான்.
சூர்யா தான்…”போதும் சுடர் நீ அளவுக்கு அதிகமா பேசிட்டு இருக்க. அவன் இப்போ உன் சகோதரியின் கணவன் அத மனசுல வெச்சிட்டு பேசு. உன் பேச்சால் கலா வருத்தப்படுவா.” என்று சொன்னதும் சூர்ய கலாவின் முகத்தை பார்த்தவளுக்கு தன் கணவன் சொன்னது உண்மையே என்பது போல் தான் இருந்தது அவளின் முகம்.
சுடருக்கு ஒன்று மட்டும் விலங்கவில்லை. அது எப்படி அவங்க செஞ்ச காரியத்தை இவளால் இவ்வளவு சீக்கிரமாக மறக்க முடிந்தது. என்னால் முடியவில்லையே….?
அதுவும் விக்ரம், சூர்யா இருவரையும் ஒன்றாக பார்த்தாலே அப்படி பற்றிக் கொண்டு வந்தது அவளுக்கு. தன் அண்ணன் இறப்புக்கு இவர்கள் காரணமில்லை.
ஆனால் காரணமானவர்களை இவர்கள் தானே மறைக்க பார்த்தார்கள். அதுவும் எவ்வளவு கீழ்த்தரமாக எல்லாம் இறங்கினார்கள்.
இப்போது காதல் என்ற ஒத்த வார்த்தையில் அத்தனையும் துடைத்தெடுத்து விட முடியுமா….? இதுவே அவள் மனதில் எழும் கேள்வியாக இருந்தது.
என்ன தான் விக்ரம் சுடர் பேசிய பேச்சுக்கு எல்லாம் அமைதியாக இருந்தாலும், தன் மேல் குற்றமே ஆனாலும் தன் காதல் மனைவி முன் இப்படி நிற்பது அவனுக்கு அவமானமாகவே இருந்தது.
விக்ரமை பார்த்த சூர்யா நொடியில் புரிந்துக் கொண்டவனாய்….”அவன் கோர்ட்டில் அப்படி பேசியது எல்லாம் எனக்காக தான்.” என்று சொன்னதும்.
“ஆ அப்படியா…..? அப்போ வேதாச்சலம் சார் சொன்னது உண்மை இல்லையா….?” என்று அவனிடம் கேட்க.
“அவர் என்ன சொன்னார்….?”
“நீங்க என் மேல வவ்வோ ...லவ்வாம். அது சொல்லி தான் உங்கல நான் கல்யாணம் செய்து கிட்டா நல்லா இருப்பேன்னு சொன்னார்.” என்று சொன்னவள்.
யோசிப்பது போல் தலையில் தட்டி விட்டு….”லவ் பண்றவங்கல இப்படி தான் அத்தன பேர் முன்னாடி அவமானப்படுத்துவாங்கலா….?இது எனக்கு தெரியாம போச்சே…..” என்று கிண்டலாக சொல்ல.
அவள் பேச்சை மறுத்து அவனால் ஒன்றும் பேச முடியவில்லை. சூர்யாவே விக்ரம் அன்று அப்படி சுடரிடம் கேள்வி கேட்பான் என்று எதிர் பார்க்கவில்லை. அதில் அவனுக்கு துளியும் உடன் பாடு இல்லை தான்.
இப்போது அதை சொன்னால் ஏற்கனவே விக்ரம் மீது கொலை வெறியில் இருப்பவளுக்குநாம் ஏதாவது சொன்னால் இன்னும் கொஞ்சம் ஏத்தி விட்டது போல் ஆகி விடும் அதனால் அமைதி காக்க.
ஆனால் விக்ரம்….”அந்த பேச்சுக்கும் சூர்யாவுக்கும் எந்த சம்மந்தமும் இல்லை. எனக்கு அஸ்வினை எப்படியாவது காப்பத்தி விட வேண்டும். அப்போது எனக்கு அது மட்டும் தான் குறிக்கோளாய் இருந்தது. எந்த கடனையும் விட நன்றிக் கடன் மிக பெரியது. அதை அஸ்வினின் தாத்தாவுக்கு நான் செலுத்தி ஆகானும்.” என்று மேலும் ஏதோ சொல்ல வந்தவனை சூர்யா தடுக்க.
“இல்ல சூர்யா இது கல்யாணதுக்கு முன்னவே சொல்லி இருந்து இருக்கனும். ஆனா சொன்னா எங்கே எனக்கு இவளை கல்யாணம் செய்து கொடுக்க மறுத்து விடுவாங்கலோன்னு தான் சொல்லலே….” சூர்ய கலாவை காமித்து சொன்னான்.
இவர்களின் பேச்சு சுத்தமாக சுடருக்கும், சூர்யா கலாவுக்கும் புரியாது பார்க்க. இப்போது சுடரிடம் இருந்து தன் பார்வையை சூர்ய கலா மேல் செலுத்திய விக்ரம்.
“ நான் ஒரு கொலைக்காரன்.” என்று விக்ரம் சொன்னதும். சுடர், கலா இருவரும் அதிர்ந்து பார்த்தனர்.
சூர்யா மனதில் எப்போவும் நம்ம ஆள் தானே முகத்தில் நெருப்பை கட்டி வைத்து இருப்பா….?இந்த புள்ள அமைதியா தானே இருக்கும் என்று நினைத்துக் கொண்டு இருக்க.
அவன் மனதில் நினைத்ததையே விக்ரம் வார்த்தையாய்…. “என்ன கலாம்மா...ஏன் முகம் ஒரு மாதிரி இருக்கு….?யாராவது ஏதாவது சொன்னாங்களா…..? எது இருந்தாலும் அத்தான் என் கிட்ட சொல்லு…..” பேச்சு தன் மனைவிடம் இருந்தாலும் பார்வை கோபத்துடன் சுடரையே பார்த்து இருந்தது.
இதை பார்த்த சூர்ய பிரகாஷ்…விக்ரமின் அத்தான் என்ற பேச்சில்….அட ரொமான்சுல பின்ரானே பின்ரானே…. என்று அங்கலாய்க்க மட்டும் தான் அவனால் முடிந்தது.
விக்ரம் கேட்ட கேள்விக்கு….”ஒன்னும் இல்ல” என்ற பதில் தந்தவள். சுடரை பார்க்க சுடரோ விக்ரமின் பார்வைக்கு எதிர் பார்வையாய் அவனை முறைத்துக் கொண்டு…
“ஒன்னா இருந்த எங்கள பிரிச்சிட்டல….” என்று விக்ரமை பார்த்து கோபத்துடன் சுடர் கேட்க.
என்ன தான் தன் மனைவியே ஆனாலும் தன் நண்பனை இது மாதிரி கேள்வி கேட்பது பிடிக்காது. “சுடர் அது என்ன மரியாதை இல்லாம நீ என்று பேசுறது. வயசில உன்ன விட பெரியவன் அந்த மரியாதையாவது இருக்கட்டும்.” என்று தன் மனைவியை அதட்ட.
“ பெரியவங்க. ..பெரியவங்க…..” என்று பெரியவங்க என்ற வார்த்தையில் அழுத்தம் கொடுத்து சொன்னவள்.
பின் சூர்ய பிரகாஷை நேர்க் கொண்டு பார்த்து…. “ வயசுல பெரியவங்க எல்லாம் பெரியவங்க இல்ல. பெரியவங்க என்றது அவங்க நடந்துக்குறதுல இருக்கு.” என்று சொல்ல.
சுடர் எதை நினைத்து சொல்கிறாள் என்பதை விக்ரம் சரியாக புரிந்துக் கொண்டான். பின் இருக்காதா...வார்த்தையை விட்டவன் அவன் அல்லவா…..?
ஆனால் நம் சூர்ய பிரகாஷோ தன் நண்பனுக்கு பரிந்து வருகிறேன் என்று….. “ அவனிடம் எந்த விஷயத்தில் நீ சின்ன தனத்தை கண்டுட்ட…..?” என்று வசமாக பேசி சுடரிடம் மாட்டிக் கொள்ள.
இதற்க்கு தான் காத்துக் கொண்டு இருந்தேன் என்பது போல்….”ஓ அன்னிக்கி கோர்ட்டில் என் கிட்ட அப்படி கேட்டது சின்ன தனம் இல்ல….?” என்று கேட்டவள்.
“அது எப்படி என் கிட்ட அப்படி பேசிட்டு எங்க வீட்டு பெண்ணையே உங்களால கட்டிக்க முடிஞ்சது….?” என்று சூடாக கேட்டவளிடம் அந்த புகழ் பெற்ற வக்கீல் எதுவும் பேசாது அமைதியாகவே இருந்தான்.
சூர்யா தான்…”போதும் சுடர் நீ அளவுக்கு அதிகமா பேசிட்டு இருக்க. அவன் இப்போ உன் சகோதரியின் கணவன் அத மனசுல வெச்சிட்டு பேசு. உன் பேச்சால் கலா வருத்தப்படுவா.” என்று சொன்னதும் சூர்ய கலாவின் முகத்தை பார்த்தவளுக்கு தன் கணவன் சொன்னது உண்மையே என்பது போல் தான் இருந்தது அவளின் முகம்.
சுடருக்கு ஒன்று மட்டும் விலங்கவில்லை. அது எப்படி அவங்க செஞ்ச காரியத்தை இவளால் இவ்வளவு சீக்கிரமாக மறக்க முடிந்தது. என்னால் முடியவில்லையே….?
அதுவும் விக்ரம், சூர்யா இருவரையும் ஒன்றாக பார்த்தாலே அப்படி பற்றிக் கொண்டு வந்தது அவளுக்கு. தன் அண்ணன் இறப்புக்கு இவர்கள் காரணமில்லை.
ஆனால் காரணமானவர்களை இவர்கள் தானே மறைக்க பார்த்தார்கள். அதுவும் எவ்வளவு கீழ்த்தரமாக எல்லாம் இறங்கினார்கள்.
இப்போது காதல் என்ற ஒத்த வார்த்தையில் அத்தனையும் துடைத்தெடுத்து விட முடியுமா….? இதுவே அவள் மனதில் எழும் கேள்வியாக இருந்தது.
என்ன தான் விக்ரம் சுடர் பேசிய பேச்சுக்கு எல்லாம் அமைதியாக இருந்தாலும், தன் மேல் குற்றமே ஆனாலும் தன் காதல் மனைவி முன் இப்படி நிற்பது அவனுக்கு அவமானமாகவே இருந்தது.
விக்ரமை பார்த்த சூர்யா நொடியில் புரிந்துக் கொண்டவனாய்….”அவன் கோர்ட்டில் அப்படி பேசியது எல்லாம் எனக்காக தான்.” என்று சொன்னதும்.
“ஆ அப்படியா…..? அப்போ வேதாச்சலம் சார் சொன்னது உண்மை இல்லையா….?” என்று அவனிடம் கேட்க.
“அவர் என்ன சொன்னார்….?”
“நீங்க என் மேல வவ்வோ ...லவ்வாம். அது சொல்லி தான் உங்கல நான் கல்யாணம் செய்து கிட்டா நல்லா இருப்பேன்னு சொன்னார்.” என்று சொன்னவள்.
யோசிப்பது போல் தலையில் தட்டி விட்டு….”லவ் பண்றவங்கல இப்படி தான் அத்தன பேர் முன்னாடி அவமானப்படுத்துவாங்கலா….?இது எனக்கு தெரியாம போச்சே…..” என்று கிண்டலாக சொல்ல.
அவள் பேச்சை மறுத்து அவனால் ஒன்றும் பேச முடியவில்லை. சூர்யாவே விக்ரம் அன்று அப்படி சுடரிடம் கேள்வி கேட்பான் என்று எதிர் பார்க்கவில்லை. அதில் அவனுக்கு துளியும் உடன் பாடு இல்லை தான்.
இப்போது அதை சொன்னால் ஏற்கனவே விக்ரம் மீது கொலை வெறியில் இருப்பவளுக்குநாம் ஏதாவது சொன்னால் இன்னும் கொஞ்சம் ஏத்தி விட்டது போல் ஆகி விடும் அதனால் அமைதி காக்க.
ஆனால் விக்ரம்….”அந்த பேச்சுக்கும் சூர்யாவுக்கும் எந்த சம்மந்தமும் இல்லை. எனக்கு அஸ்வினை எப்படியாவது காப்பத்தி விட வேண்டும். அப்போது எனக்கு அது மட்டும் தான் குறிக்கோளாய் இருந்தது. எந்த கடனையும் விட நன்றிக் கடன் மிக பெரியது. அதை அஸ்வினின் தாத்தாவுக்கு நான் செலுத்தி ஆகானும்.” என்று மேலும் ஏதோ சொல்ல வந்தவனை சூர்யா தடுக்க.
“இல்ல சூர்யா இது கல்யாணதுக்கு முன்னவே சொல்லி இருந்து இருக்கனும். ஆனா சொன்னா எங்கே எனக்கு இவளை கல்யாணம் செய்து கொடுக்க மறுத்து விடுவாங்கலோன்னு தான் சொல்லலே….” சூர்ய கலாவை காமித்து சொன்னான்.
இவர்களின் பேச்சு சுத்தமாக சுடருக்கும், சூர்யா கலாவுக்கும் புரியாது பார்க்க. இப்போது சுடரிடம் இருந்து தன் பார்வையை சூர்ய கலா மேல் செலுத்திய விக்ரம்.
“ நான் ஒரு கொலைக்காரன்.” என்று விக்ரம் சொன்னதும். சுடர், கலா இருவரும் அதிர்ந்து பார்த்தனர்.