• The opinions expressed within the content are solely the author’s and do not reflect the opinions and beliefs of the website or its affiliates.

Palagi Parkkalam - Chapter 8 Part 2

Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள், mspublications1@gmail.com என்ற மின்னஞ்சலிலோ சைட் அட்மினின் (smteam) தனி செய்தியிலோ தொடர்பு கொள்ளவும்.தளத்தில் கதைகளை பதிவது எப்படி- விளக்கம்

Vijiya lakshmi jagan

மண்டலாதிபதி
Joined
Jan 17, 2018
Messages
193
Reaction score
4,743
Chapter 8 Continuation....

“முதல் பிரச்சனை நீ சொன்னது போல் கடத்தல் சட்ட விரோதமானது தான். ஆனா அதிலும் நாம எப்படி தப்பிப்பதுன்னு தான் பாக்கனும்.
அடுத்து தூக்குவது யாரோ இல்ல. அதனால யார வெச்சி இத செய்யிறது. எங்கு வைப்பது. யார பாதுகாப்புக்கு வைக்கிறது இத யோசிக்கனும். அதுவும் இரண்டு மணிநேரத்துக்கு உள்ள.
“அது என்னடா இரண்டு மணிநேரத்துக்குள்ள….?” என்று சூர்யா கேட்டதுக்கு.
“இரண்டு பேருமே காலேஜ் விட்டு வீட்டுக்கு போனா அடுத்து மறு நாள் தான் வீட்டை விட்டே வெளியில் வருவாங்க. நாளை வர எல்லாம் காத்து இருக்க முடியாது.
உங்க அப்பா ஊரில் இருந்து வந்துடுவாரு. இன்னிக்கி தூக்குனா தான் அவங்க அப்பா, அம்மா பயந்து நாளைக்கோ நாளனிக்கோ….கேஸ் வாபஸ் வாங்க சரியா இருக்கும்.” என்று சொல்லி முடித்தவன் பேச்சு சரி என்பதால்…
“சரிடா இந்த இடம் பிரச்சனைய நான் பாத்துக்குறேன்.” என்று சொல்ல.
“பாதுகாப்பா இருக்குமா…..?”
“என் வீடு பாதுகாப்பான இடம் தானேடா….?” என்ற சூர்யாவின் பேச்சில் அதிர்ந்த விக்ரம்.
“ஏய் என்னடா சொல்ற….நாம மிரட்டுவதுக்கு தான்டா பொண்ண தூக்குறோம். ஹனிமூன் கொண்டாடுறதுக்கு இல்ல.” விளையாட்டு தனமாய் விக்ரம் பேசினாலும், சூர்யாவின் பேச்சில் பயந்து தான் போய் விட்டான்.
ஏன் என்றால்…..?சூர்யாவின், குரலும் முகமும் இதை அவன் சீரியஸாக தான் சொல்கிறான் என்று.
“சொல்றதுக்கு இல்ல. இது ஹனிமூனாகவும் மாற வாய்ப்புகள் அதிகம் இருக்கு.”
“ஏய்… “ என்று சொல்ல வந்தவன். சொல்லாது “என்னடா சொல்ற…..” என்று கேட்டான். இவன் பேசுவதுக்கு எல்லாம் ஏய்...ஏய் என்று தெலுங்கு பட டையலாக் மாதிரியா சொல்லிக் கொண்டு இருக்க முடியும்.
“எத்தன படத்தில் பார்த்து இருக்கோம்.கிட் நாப் பண்ணவங்க மேலேயே இம்ரெஸ் ஆகுறத….”
“அது படத்தில் டா.நிஜத்தில் அவங்க கண்ணுக்கு நாம வில்லனா தான்தெரிவோம்டா….பார்த்தலே உன் ஆளு அன்னிக்கே என் சட்டை பிடிச்சி என்ன எகுரு எகிரிச்சின்னு. அதுவும் இதில் முழு வில்லன் நீ தான்னு தெரியாம.” தானே தனக்கு குழி வெட்டிக் கொள்வது போல. விக்ரமின் இந்த பேச்சில் அவனே மாட்டிக் கொள்ள.
“வாடா என் சகல. அன்னிக்கி கூட சுடர் உன் சட்டைய பிடிச்ச அப்போ நீ அமைதியா இருக்குறத பார்த்து. கோபக்காரன் ஆனா நீ நமக்காக தான் அமைதியா இருக்கான்னு. என் நண்பேன்டான்னு மனசுக்குள்ள உனக்கு பாராட்டு பத்திரம் எல்லாம் வாசிச்சேன்டா…
ஆனா நீ அன்னிக்கு அமைதியா இருந்ததுக்கு உன் ஆள் தான் காரணம் என்று” என்று சொல்லிக் கொண்டு துரோகி என்பது போல் பார்க்க.
அதை எல்லாம் தூசு தட்டுவது போல் தட்டிக் கொண்ட விக்ரம்…..”சரிடா இதெல்லாம் விடு. ஒரே வீட்டில் பெண் கட்ட போறோம் நமக்குள் என்னடா….” என்று சொல்லிக் கொண்டே தோள் மீது கைய் போட்ட விக்ரம்.
பின்…”நீ சொல்வது போல் நடக்குமா சூர்யா….?”
“என்னது நடக்குமா…..?”
“அதான் கடத்திக்கிட்டு போனவனையே லவ் பண்ணுறது.”
“ஆ நடக்கும் நடக்கும். என்ன அவங்க வீட்டில் நம்ம நிபந்தனைய ஏத்துக்க கொஞ்ச காலம் எடுத்துக்கிட்டா...நாம பழகி பார்க்க நமக்கு வசதியா இருக்கும்.”
பார்க்கலாம்….முதலில் இவங்க பழகி பார்க்கும் அளவுக்கு அவள் பெற்றோர் நேரம் கொடுப்பார்களா என்று….? அடுத்து பழக பழக பிடிக்குமா…..? என்றும்.
 




Nishirdha

அமைச்சர்
Joined
Feb 8, 2018
Messages
3,003
Reaction score
5,586
Location
Tamil Nadu
Yenna da nadakuthu inga:rolleyes: sagala nu kooptukiranga, ponna avanga veetuke thookitu pogalam nu solranga:unsure: ippave ponnu kettu marriage panra scene ku imagine pannitu irukangao_O ivanga heroines Kita irundhu tharma adi vaangurathu conform(y) waiting for that action:);)(y)
 




Jasha

மண்டலாதிபதி
Joined
Mar 11, 2018
Messages
164
Reaction score
307
Location
Karaikudi
Sudaroda appa dialogue enga veetukku vaanga rendu ponnu irukku palahippaapom nu salamon paapaya maari ithunga rendayum kooptaaro
Viji mam sivaji padam paathu intha story clickahiducco
 




Jai

மண்டலாதிபதி
Joined
Feb 5, 2018
Messages
273
Reaction score
688
Location
India
Yenna da nadakuthu inga:rolleyes: sagala nu kooptukiranga, ponna avanga veetuke thookitu pogalam nu solranga:unsure: ippave ponnu kettu marriage panra scene ku imagine pannitu irukangao_O ivanga heroines Kita irundhu tharma adi vaangurathu conform(y) waiting for that action:);)(y)
Athane. Boss neenga avangalukku villan veliaiya thaan paakka poreenga appidingratha konjam niyabagam vachukkonga. Because neenga marakkalam but avanga marakka maattanga neenga villans nu ok ??????????
 




Advertisements

Latest updates

Latest Episodes

Advertisements

Top