Vijiya lakshmi jagan
மண்டலாதிபதி
- Joined
- Jan 17, 2018
- Messages
- 193
- Reaction score
- 4,743
Chapter 9 Continuation
தன் ஆள குள்ள வாத்து என்று சொன்னவனின் பேச்சில் கொலை வெறியோடு கேட்டுக் கொண்டு இருந்த விக்ரம். சுடரை கோழி அமுக்குவது போல் அமுக்கினேன் என்று சொல்லும் போது விக்ரமின் பார்வை தன்னால் சூர்யாவை நோக்க.
சூர்யாவோ டேவிட்டின் அந்த சொல்லில் அவனை எரித்து விடுவது போல் பார்ப்பதை பார்த்து இப்போது விக்ரம் தன் முறை என்பது போல்…
“டேவிட்...எப்படி அந்த சுடர் பிள்ளைய அமுக்கின……?” என்று கேள்வி கேட்டதும்.
இன்னும் உற்சாகத்தோடு….”கோழி அமுக்குவது போல் சார்.”
இப்போது சூர்யா…. “எப்படி…?எப்படி….?” என்று கேட்டதும் தான் குரல் மாறு பாட்டை உணர்ந்து.
“சார்…..”
“நீ எக்ஸ் கர்னல் வீட்டில் தானே வேல பார்த்துட்டு இருந்த…..?” சம்மந்தமே இல்லாது சூர்யா கேள்வி கேட்க.
“ஆமாம் சார்.”
“அப்போ ஏன் வில்லேஜில் கோழி, வாத்து பிடிச்சிட்டு இருந்த மாதிரி பேசுற…?.”
சூர்யாவின் பேச்சில் அதிர்ந்து “சார் நான் கராத்தே, குங்பூ, கத்தி சண்ட, கம்பு சுத்துறது..” வேறு என்ன பேசி இருப்பானோ….?
அவன் பேச்சை இடையிட்ட சூர்யா…. இதெல்லாம் பார்த்து தான் நான் உன்னை என் பாடிகாட்டா வெச்சேன். ஆனா நீ தான் உன் எல்லை தெரியாம பேசிட்டு இருக்க …” என்று சொன்னதும் அடுத்து பேச்சாய்.
“சாரி சர்.” என்ற சொல்லோடு அந்த இடத்தை விட்டு அகல.
வாய் பொத்தி தன் சிரிப்பை அடக்கிக் கொண்டு இருந்தவன் மேல் அவன் குடித்துக் கொண்டு இருந்த ஸ்காச்சை அவன் மேல் ஊத்த.
“ஏய்...என்னடா செய்யிற….இப்போ அவங்க முழிக்கிற டைமுடா….என் மேல நாத்தம் வந்தா அந்த பிள்ள என்னை பத்தி தப்பா நினைக்காது.”
“தப்பு செய்தவனை பார்த்து தப்பா தான்டா நினப்பா….” என்ற சூர்யாவை முறைத்த பார்த்த விக்ரம்.
“உன்னால தான்டா அந்த பிள்ள கண்ணுக்கு நான் வில்,லனா தெரியறேன். இல்லேன்னா நல்ல முறையில் அவ கிட்ட அறிமுகமாகி இருப்பேன்.” என்றவனை பார்த்து ஒரு தெனவெட்டான ஒரு லுக்கை விட்ட சூர்யா….
“என்னால தான் அந்த பிள்ளைய நீ பார்த்த. இல்லேன்னா கேசுக்கட்டு அக்யூஸ்ட்டுன்னு உன் வாழ்க்கை போயிட்டு இருக்கும். அத முதல்ல நியாபகத்தில் வெச்சிகோ….” என்று நியாபகப்படுத்தியனை பார்த்து ஒரு மந்தகாச புன்னகை சிந்திய விக்ரம்.
“நான் தாமாஷூக்கு தான் பேசின்டா...நீ ஏன் இதை இவ்வளவு சீரியஸா எடுத்துட்டு பேசின்னு இருக்க….? எனக்கு தெரியாதா….எனக்கு ஒரு நல்லது நடந்ததுன்னா….? அது உன்னால தான். அதே போல் நல்லது நடக்குமுன்னா…? அதுவும் உன்னால தான்.” ஏதோ பழைய நினைவில் இது வரை இலகி இருந்த அவன் முகம் கல்லாய் மாற.
அவன் நினைவு மாறும் பொருட்டு…… “நாமலே எவ்வளவு நாள் தான்டா பேசிட்டு இருக்குறது. வா...நம்ம ஆளுங்க முழிச்சாச்சான்னு பார்க்கலாம்.” என்று சூர்யா….. சுடர், சூர்ய கலா இருக்கும் அறைக்கு அழைத்துக் கொண்டு செல்ல.
சூர்ய பிரகாஷ் நினைத்தது போலவே சூர்ய கலாவின் நினைவில் பழைய உற்சாகம்திரும்ப…. “ஆமா...ஆமா வா..வா...சீக்கிரம் போகலாம்.” என்று சொல்லிக் கொண்டே சூர்யாவின் தோளில் கைய் போட்டுக் கொண்டு பேசியனின் பேச்சில் வில்லங்கம் தென்பட.
“என்னடா…..?” என்று சந்தேகத்துடன் கேட்கும் சூர்யாவை பார்த்து சிரித்துக் கொண்டே….
“நமக்கு தான்டா அவங்க நம்ம ஆளு….அவங்களுக்கு நாம வில்லன்.
தோ பாரு மயக்கம் தெளிந்ததும் நம்மல பார்த்து சினிமாவில் காட்டுவது போல் வாய் பொத்தி அலர போறாளுங்க. நீ என்னவோ நம்மல பார்த்ததும் பக்கம் பக்கமா காதல் வசனம் பேசுவது போல் ஆவலா அழச்சிட்டு போற….” என்ற பேச்சு வாக்கின் முடிவில் சுடர், சூர்ய கலா அடைத்து வைத்திருந்த அறைக்கு சூர்ய பிரகாஷ், விக்ரம் வந்தடைய.தாழ் போடாத அந்த கதவை தள்ளியதும் கதவு தன்னால் திறந்தது.
இந்த இடைப்பட்ட நேரத்தில் மயக்கத்தில் இருந்து கொஞ்சம் கொஞ்சமாய் தெளிவுக்கு வந்த சகோதரிகள் பக்கத்தில் இருக்கும் தண்ணீரை குடித்து கொஞ்சநஞ்சம் இருந்த மயக்கத்தையும் மொத்தமாய் விரட்டி விட்டு கட்டில் மேல் அமர்ந்து இருக்க.
கதவு திறக்கும் ஓசையில் இரு சகோதரிகளும் ஒரு சேர பார்த்து இருவரும் ஒரு சேர அதிர்ந்தும் போயினர்.
தன் வீட்டுக்கு வந்தவர்கள் தான் இப்போது தங்களை கடத்தியவர்கள் என்று அறிந்தது ஒன்று என்றால்…..
கதவு தாப்பால் போட்டு இருக்கிறதா….?இல்லையா….? என்று கூட அறியாது. தண்ணியைய் குடித்து விட்டு அமர்ந்து விட்டோமே...கதவை திறந்து பார்த்து இருந்தால்….தப்பிக்க வழி கிடைத்து இருக்கலாமே…..? என்று நினைத்து இருவரும் ஒருவர் முகத்தை ஒருவர் பார்த்துக் விழித்து இருந்தனர்ச்.
தன் ஆள குள்ள வாத்து என்று சொன்னவனின் பேச்சில் கொலை வெறியோடு கேட்டுக் கொண்டு இருந்த விக்ரம். சுடரை கோழி அமுக்குவது போல் அமுக்கினேன் என்று சொல்லும் போது விக்ரமின் பார்வை தன்னால் சூர்யாவை நோக்க.
சூர்யாவோ டேவிட்டின் அந்த சொல்லில் அவனை எரித்து விடுவது போல் பார்ப்பதை பார்த்து இப்போது விக்ரம் தன் முறை என்பது போல்…
“டேவிட்...எப்படி அந்த சுடர் பிள்ளைய அமுக்கின……?” என்று கேள்வி கேட்டதும்.
இன்னும் உற்சாகத்தோடு….”கோழி அமுக்குவது போல் சார்.”
இப்போது சூர்யா…. “எப்படி…?எப்படி….?” என்று கேட்டதும் தான் குரல் மாறு பாட்டை உணர்ந்து.
“சார்…..”
“நீ எக்ஸ் கர்னல் வீட்டில் தானே வேல பார்த்துட்டு இருந்த…..?” சம்மந்தமே இல்லாது சூர்யா கேள்வி கேட்க.
“ஆமாம் சார்.”
“அப்போ ஏன் வில்லேஜில் கோழி, வாத்து பிடிச்சிட்டு இருந்த மாதிரி பேசுற…?.”
சூர்யாவின் பேச்சில் அதிர்ந்து “சார் நான் கராத்தே, குங்பூ, கத்தி சண்ட, கம்பு சுத்துறது..” வேறு என்ன பேசி இருப்பானோ….?
அவன் பேச்சை இடையிட்ட சூர்யா…. இதெல்லாம் பார்த்து தான் நான் உன்னை என் பாடிகாட்டா வெச்சேன். ஆனா நீ தான் உன் எல்லை தெரியாம பேசிட்டு இருக்க …” என்று சொன்னதும் அடுத்து பேச்சாய்.
“சாரி சர்.” என்ற சொல்லோடு அந்த இடத்தை விட்டு அகல.
வாய் பொத்தி தன் சிரிப்பை அடக்கிக் கொண்டு இருந்தவன் மேல் அவன் குடித்துக் கொண்டு இருந்த ஸ்காச்சை அவன் மேல் ஊத்த.
“ஏய்...என்னடா செய்யிற….இப்போ அவங்க முழிக்கிற டைமுடா….என் மேல நாத்தம் வந்தா அந்த பிள்ள என்னை பத்தி தப்பா நினைக்காது.”
“தப்பு செய்தவனை பார்த்து தப்பா தான்டா நினப்பா….” என்ற சூர்யாவை முறைத்த பார்த்த விக்ரம்.
“உன்னால தான்டா அந்த பிள்ள கண்ணுக்கு நான் வில்,லனா தெரியறேன். இல்லேன்னா நல்ல முறையில் அவ கிட்ட அறிமுகமாகி இருப்பேன்.” என்றவனை பார்த்து ஒரு தெனவெட்டான ஒரு லுக்கை விட்ட சூர்யா….
“என்னால தான் அந்த பிள்ளைய நீ பார்த்த. இல்லேன்னா கேசுக்கட்டு அக்யூஸ்ட்டுன்னு உன் வாழ்க்கை போயிட்டு இருக்கும். அத முதல்ல நியாபகத்தில் வெச்சிகோ….” என்று நியாபகப்படுத்தியனை பார்த்து ஒரு மந்தகாச புன்னகை சிந்திய விக்ரம்.
“நான் தாமாஷூக்கு தான் பேசின்டா...நீ ஏன் இதை இவ்வளவு சீரியஸா எடுத்துட்டு பேசின்னு இருக்க….? எனக்கு தெரியாதா….எனக்கு ஒரு நல்லது நடந்ததுன்னா….? அது உன்னால தான். அதே போல் நல்லது நடக்குமுன்னா…? அதுவும் உன்னால தான்.” ஏதோ பழைய நினைவில் இது வரை இலகி இருந்த அவன் முகம் கல்லாய் மாற.
அவன் நினைவு மாறும் பொருட்டு…… “நாமலே எவ்வளவு நாள் தான்டா பேசிட்டு இருக்குறது. வா...நம்ம ஆளுங்க முழிச்சாச்சான்னு பார்க்கலாம்.” என்று சூர்யா….. சுடர், சூர்ய கலா இருக்கும் அறைக்கு அழைத்துக் கொண்டு செல்ல.
சூர்ய பிரகாஷ் நினைத்தது போலவே சூர்ய கலாவின் நினைவில் பழைய உற்சாகம்திரும்ப…. “ஆமா...ஆமா வா..வா...சீக்கிரம் போகலாம்.” என்று சொல்லிக் கொண்டே சூர்யாவின் தோளில் கைய் போட்டுக் கொண்டு பேசியனின் பேச்சில் வில்லங்கம் தென்பட.
“என்னடா…..?” என்று சந்தேகத்துடன் கேட்கும் சூர்யாவை பார்த்து சிரித்துக் கொண்டே….
“நமக்கு தான்டா அவங்க நம்ம ஆளு….அவங்களுக்கு நாம வில்லன்.
தோ பாரு மயக்கம் தெளிந்ததும் நம்மல பார்த்து சினிமாவில் காட்டுவது போல் வாய் பொத்தி அலர போறாளுங்க. நீ என்னவோ நம்மல பார்த்ததும் பக்கம் பக்கமா காதல் வசனம் பேசுவது போல் ஆவலா அழச்சிட்டு போற….” என்ற பேச்சு வாக்கின் முடிவில் சுடர், சூர்ய கலா அடைத்து வைத்திருந்த அறைக்கு சூர்ய பிரகாஷ், விக்ரம் வந்தடைய.தாழ் போடாத அந்த கதவை தள்ளியதும் கதவு தன்னால் திறந்தது.
இந்த இடைப்பட்ட நேரத்தில் மயக்கத்தில் இருந்து கொஞ்சம் கொஞ்சமாய் தெளிவுக்கு வந்த சகோதரிகள் பக்கத்தில் இருக்கும் தண்ணீரை குடித்து கொஞ்சநஞ்சம் இருந்த மயக்கத்தையும் மொத்தமாய் விரட்டி விட்டு கட்டில் மேல் அமர்ந்து இருக்க.
கதவு திறக்கும் ஓசையில் இரு சகோதரிகளும் ஒரு சேர பார்த்து இருவரும் ஒரு சேர அதிர்ந்தும் போயினர்.
தன் வீட்டுக்கு வந்தவர்கள் தான் இப்போது தங்களை கடத்தியவர்கள் என்று அறிந்தது ஒன்று என்றால்…..
கதவு தாப்பால் போட்டு இருக்கிறதா….?இல்லையா….? என்று கூட அறியாது. தண்ணியைய் குடித்து விட்டு அமர்ந்து விட்டோமே...கதவை திறந்து பார்த்து இருந்தால்….தப்பிக்க வழி கிடைத்து இருக்கலாமே…..? என்று நினைத்து இருவரும் ஒருவர் முகத்தை ஒருவர் பார்த்துக் விழித்து இருந்தனர்ச்.