நெகிழ்ந்து போயிருக்கிறேன் சித்ரா.
@Chitrasaraswathi உங்களை இப்படிப் பெயர் சொல்லியே அழைத்துப் பழகிவிட்டேன். அது தவறோ என்று இப்போது எண்ணத் தோன்றுகிறது. நடமாடும் நூலகமா நீங்கள்?
அடேங்கப்பா! எத்தனை எழுத்தாளர்கள்...! எத்தனை புத்தகங்கள்...!
உங்கள் புத்தகக் கலெக்ஷன் பார்த்த போதே நான் திகைத்துப் போனேன். அத்தனையையும் நெஞ்சில் சுமக்கிறீர்களே!
உங்களைப் பார்க்கும் போது 'நானும் புத்தகங்கள் படிப்பேன்' என்று சொல்லக் கொஞ்சம் தயக்கமாக இருக்கிறது என்பது தான் உண்மை.
ஒரு போது என் எழுத்துக்களை தனிப்பட்ட முறையில் பாராட்டி இருந்தீர்கள். அன்று நான் சந்தோஷப்பட்டிருந்தாலும், இன்று தான் அந்த சந்தோஷத்தை முழுமையாக உணருகிறேன். பாராட்டியது சாமான்யமான பேர்வழி இல்லை.
வாழ்த்த வயதில்லை... போற்றுகிறேன்...????