ஹா ஹா.. பார்பான் சினேகாக்கா..அச்சோச்சா இப்படி ஆயிடுச்சே அந்த மகரிஷி விண்பா கடத்திட்டு போயிட்டாரே சொல்லவந்த எழிலனை என்னன்னு கூட அடிக்காரெ கெளதம் யோவ் போயி ருமை பாரு உன் பொண்ணு மிஸ்ஸிங்
ஹா ஹா.. பார்பான் சினேகாக்கா..அச்சோச்சா இப்படி ஆயிடுச்சே அந்த மகரிஷி விண்பா கடத்திட்டு போயிட்டாரே சொல்லவந்த எழிலனை என்னன்னு கூட அடிக்காரெ கெளதம் யோவ் போயி ருமை பாரு உன் பொண்ணு மிஸ்ஸிங்
ஏதாவது செய்வாள் பார்ப்போம் ??எழிலனுக்கு என்னாகும் பிழைச்சிருவானா சித்தர் பிழைக்க வைச்சிடுவாரா அம்மா கோட்டை தாயி கொஞ்சம் கண் விழித்து பாரும்மா இங்கே எல்லாம் தப்பாக நடக்குது
????ஷாந்தினி என்னம்மா இப்படி தவிக்க விடறியேம்மா எங்களை
நன்றி பானும்மா ?
மிகவும் அருமையான பதிவு,
ஷாந்தினிதாஸ் டியர்
enna sha....????????????????????????////அவளின் கைகளை பிடித்துக் கொண்ட அவன் “ நான் நினைச்சதை இப்போ சொல்லு பிங்கி.. இல்லைனா நான் நினைத்தை இங்க செய்யவா..? “ என கண்களில் மயக்கத்துடன் கூற..,
“டேய்.. வேணாம்டா.. நான் சொல்லுறேன்.. “ என அவன் கைகளில் இருந்து தன் கைகளை விடுபட முயற்சி செய்துக் கொண்டே அவனைப் பார்க்க...
அவளின் பார்வையை கண்ட அவன் ஒன்றை கண்ணை சிமிட்டி, தன் இதழை நாவால் ஈரம் செய்ய அவன் செயலில் அவள் தலையை குனிந்துக் கொண்டு நடுங்கும் தன் இதழை அழுந்த கடிக்க....
அவள் செயல் அவனை போதையேற்ற“ நீ ஏன் பிங்கி அதை டிஸ்டர்ப் பண்ணுற.... அந்த வேலையை நான் செய்யமாட்டேனா.” என கிசுகிசுக்க....
தன் மயக்கும் கண்களை விரித்து அவனை நோக்கி இழுக்க..... அவள் கண்கள் அவனை எங்கோ இழுக்க... “ அய்யோ முட்டைகண்ணி கொல்லுறாளே ” என மனதில் சுகமாய் நினைக்க..
“ நான் முட்டைகண்ணியா...” என அவனை மீண்டும் கண்களை விரித்து பார்க்க...
“ அடேய் ஆண்டவா.. இப்படி ஒரு இக்கட்டை எனக்கு தந்துட்டியே... மனதில் கூட நினைக்க முடியாமல் நான் படும் வேதனை உனக்கு புரியவில்லையா..” என அவன் அவளை மீண்டும் மனதால் சீண்ட...
“ டேய்... நான் உனக்கு வேதனையா என்று... அவள் அவனை காதல் பார்வை பார்த்து அந்த கண்ணில் இழுக்க...
அதில் அப்படியே மயங்கிய அவன் அவளை தன் நோக்கி இழுக்க... அவனின் இந்த செயலில் அவன் நெஞ்சில் மோதி நின்றவள் அவனை நோக்குவதற்குள்..
அவள் இதழை சிறை செய்திருந்தான் அவன்.... வன்மையாக.... அவன் நினைத்ததை செயலில் காட்டிக் கொண்டு இருந்தான்... வண்டு பூவில் தேனெடுப்பதுப் போல் அவளின் இதழில் தேனெடுத்துக் கொண்டு இருந்தான்...
அவன் கைகள் அவளின் இடையில் அழுந்த பதித்து... அவளை அணைக்க.. அவனின் அணைப்பிலும், அவனின் முத்தத்திலும் திளைத்திருந்தனர்.... அவர்கள் காதலை உணர்ந்த முதல் முத்தம்...
அவளை அவன் அவனோடு இறுக்க அணைத்ததில், அவளின் உடல், அவன் உடலோடு தீண்டிக் கொண்டிருந்தது... இன்னும்அவனுள் புதைந்துப் போனாள் அவள்....
அதே நேரம் காட்டில் விண்பாவை அங்கு வரவைக்க படு தீவிரமாக யாகம் செய்துக் கொண்டிருந்தான் அக்ரதா.. அவன் நினைவு எல்லாம் அந்த மந்திரத்திலையே இருந்தது...
அப்பொழுது அந்த யாகத்தில் இருந்து பெரும் புகை எழும்பியது... அந்த புகைகளுக்கு இடையே பதுமை தோன்றியது....
அக்ரதாமுன் கோபமாக நின்ற அது “ இங்கு என்ன செய்துக் கொண்டிருக்கிறாய் நீ... அங்கு அவர்கள் மனத்தால் இணைந்து, உடலால் இணைய போகிறார்கள்... அவர்கள் உடலால் இணைந்த பின் அவளை நீ இங்கு அழைத்து வந்தாலும், உன்னால் யாகத்தை செய்யமுடியாது.. நீ நினைத்தது நடக்காது.. உன் ஆசை உனக்கு நிராசையாக போகும் “ என கூறி வந்ததுப் போல் சென்றது....
பதுமை கூறிய பிறகு தான் அக்ரதா அவர்கள் நிலையை உணர்ந்தான்.. உணர்ந்தவன் உடனே அவர்கள் நிலையை கலைக்க “ விண்பா.. விண்பா...” அழைத்துக் கொண்டே ஓடினான்...
அவன் குரல் அவளுக்கு எட்டவே இல்ல... அவள் எழிலனின் முழு கட்டுப் பாட்டில் இருந்தாள்....
அக்ரதா நடு இரவு ஊரின் உள் வந்தான்... அன்று அமாவாசைப் போல் ஊர் முழுவதும் உறங்கிக் கொண்டு இருந்தது...சாமுண்டியும் உறங்கிக் கொண்டு இருந்தார்... அந்த மரம் அவருக்கு மெதுவாக தாலாட்டுப் பாடிக் கொண்டு இருந்தது... “ விண்பா- எழிலன் இன்று கனவில்இணைந்தால், அவளை அக்ரதாவால் ஒண்ணும் செய்யமுடியாது என்று கோட்டைக்கு தெரியும்... அந்த சந்தோஷத்தில் அவளும் அந்த மரத்தின் தாலாட்டில் வேறு சிந்தனை இல்லாமல் சுகமாய் நனைந்தாள்......
அது அக்ரதாவுக்கு மிகவும் வசதியாகிப் போனது.... மனத்தால்“ விண்பா.. விண்பா “ என்று உரக்க அழைத்தான்.. அவனின் அழைப்பு அவளுக்கு எட்டவே இல்லை....
இப்பொழுது அவளை தூக்கத்தில் இருந்து எழுப்பினால் மட்டுமே அவளின் கனவை கலைக்க முடியும்.... கெளதம் கோட்டைக்குள் அவனால் இப்பொழுது நுழைய முடியாது.. காலை வரையும் அவனால் காத்திருக்க முடியாது... எல்லாம் இடமும் அடைபட்டுக் கொண்டது...
கெளதம் கோட்டை முன் தரையில் மடங்கி அமர்ந்து வான் நோக்கி அலறினான்... ” ஆஆஆஆஆஆஆஆஆஆஆஆஆஆ ”
அப்பொழுது ஒரு மின்னல் வெட்ட மாடியில் விண்பா அறையில் அந்த மின்னல் வெட்டி செல்ல அவனுக்குள் ஒரு மின்னல் அடித்தது....
கொஞ்சமும் தாமதிக்காமல் மாடிக்கு செல்லும் பைப் லைனை பிடித்துக் கொண்டு அவள் அறையை அடைந்தான் அவள்... விண்பா ஆழ்ந்த உறக்கத்தில் இருந்தாள்.. கனவில் அவனுடன் மகிழ்ந்திருந்தாள்...
ஜன்னல் கதவை தட்டி “ விண்பா.. விண்பா என விடாமல் அழைத்துக் கொண்டே இருக்க... அவனின் விடா முயற்சியில் பலன் கிடைத்தது...
அங்கு முத்தத்தை தொடர்ந்து அவன் அவளை உணரும் நேரம் விண்பாவை யாரோ அழைக்கும் குரல் கேட்டு இருவரும் பிரிந்தனர்..பிரிந்த அடுத்த நிமிடம் அவர்களை சுற்றி இருந்த மாயவலை அறுபட இருவரும் ஒரே நேரத்தில் தூக்கத்தில் இருந்து விழித்தனர்....
தூக்கத்தில் இருந்து விழித்த எழிலனுக்கு சாமுண்டியின் தொடர் மந்திரம் இல்லாததால், அவனுக்கு அக்ரதாவின் அழைப்பு தெரியவே இல்லை... அவன் அந்த கனவில் மயங்கி இருந்தான்....
எழுந்த விண்பா தன் அறையை சுற்றிப் பார்க்க ஜன்னல் அருகில் அகர்தா நிற்பது தெரிந்தது.... எழிலன் கூறியது எதுவும் அவள் காதில் விழாததால் இப்பொழுது இங்கு நிற்கும் அக்ரதாவின் மனம் அவளுக்கு தெரியாமலேப் போனது...
அவன் ஜன்னல் அருகில் நிற்பதை கண்ட அவள் “ என்ன அக்கி இங்க நிற்கிற”
“ நீ உடனே வெளிய வா குட்டிம்மா... அங்க எழிலன் செய்கிற வேலையை பார்.” என அழைக்க...
எழிலன் என்று கூறியதால் அவனை நம்பி அவள் அறையை திறந்து வெளியில் வந்த விண்பா...
கோட்டைக்கு வெளியில் நின்ற அக்ரதாவை நோக்கிப் போனாள்... “ என்ன அக்கி ” என..
“ எழிலன் அங்க, அந்த ஆற்றை தாண்டி போனான்.. நான் இப்போ தான் தோட்டத்தில் இருந்து வந்தேன்... அவன் எதுக்கு போறான் என்று
தெரியல.. வா நாம போய் பார்போம்.... அதிலும் அவன் உன்னை காதலிக்கிறான்.. அவன் என்ன செய்கிறான்னு உனக்கு தெரியனும் தானே.” என அவளிடம் பசப்பாக பேசி அவளை அந்த ஆற்றின் பக்கம் அழைத்து சென்றான்....
அவளின் மனது அங்கு செல்லாதே என்று கூறியதை பொருட்படுத்தாமல், “ அந்த அக்கி நல்லவன் இல்லை “ என அன்று எழிலன் கூறியதையும் பொருட்படுத்தாமல்...
இருட்டில் அக்ரதா கையை பிடித்துக் கொண்டு அந்த ஆற்றை கடந்து சென்றாள்... அவள் செல்லும் பொழுது ஒரு நிமிடமேனும் அவன் முகத்தை அவள் கண்டிருந்தால் அவன் கூட அவள் சென்றிருக்கவே மாட்டாள்...அவன் முகம் பாம்பாக மாறி இருந்தது... அவளை நோக்கி தன் நாக்கை வெளியில் நீட்டி நீட்டி அவளை அழைத்து சென்றான்...
அவள் ஆற்றை கடந்து அந்த காட்டில் கால் வைக்கவும், “ விண்பா“ என்ற அலறலுடன் எழுந்த எழிலன் அவளின் அறைக்கதவை தட்டினான்...
அவனின் தட்டலில், தன் அறையில் இருந்து கதவை திறந்துக் கொண்டு கௌதமும், மைத்ரேயியும் வெளியில் வந்தனர்...
“ டேய் எழில் என்ன ஆச்சுடா.. விண்பா உள்ள தூங்கிட்டு இருக்கா.. உனக்கு ஏன் இப்படிவேர்த்திருக்கு.. இந்தா தண்ணீர் குடி “ என அருகில் இருந்த ஜக்கில் இருந்து தண்ணீரை எடுத்து அவன் கையில் கொடுக்கவும்
கெளதம் கையில் இருந்த தண்ணீரை தட்டி விட்ட எழிலன்.. “ அங்கிள் நான் இப்போ உடனே பிங்கியை பார்க்கணும் “ என்று தவிப்புடனும், கண்ணீருடனும் எழிலன் கேட்டுக் கொண்டிருக்க..
அவன் தண்ணீர் கீழே கொட்டியதிலே கெளதம் முகம் கோபத்தில் ரத்தமென சிவந்தது... அவனை உதாசினபடுத்தியதாக எண்ணினான் கெளதம்.. இப்பொழுது நடுசாமத்தில் வந்து ஒரு வயசு பெண்ணை அவன் பார்க்கணும் என்று கூறினால் யார் தான் ஒத்துக் கொள்வார்கள்..
அதிலும், அவன் கண்களில் உள்ள தவிப்பு, அழுகை எல்லாம் அவனை கோபம் கொள்ள வைத்தது... அந்த நேரம் ஒரு பாசமுள்ள அப்பாவாக மாறிய கெளதம் அவனை ஓங்கி அறைந்திருந்தான்...
அவன் அறைந்ததில் அதிர்ந்த மைத்ரேயி, பாசமான எழிலனை அவன் அடிப்பது பொறுக்காமல், எதையும் விசாரிக்காமல் அடிகுறாரே என “ மாமா“ என அழைத்து அவனை தடுக்க வர...
அவளை ஒரே பார்வையில் தள்ளி நிறுத்திய கெளதம் “ ஏண்டா, இந்த நேரத்தில உனக்கு எதுக்குடா என் பொண்ணை பார்க்கணும்” என கேட்டுக் கொண்டே அவனை இழுத்து வந்து வெளியில் தள்ளினான் கெளதம்... அவனை இந்த ஒருரூபத்தில் யாரும் பார்த்ததில்லை...கோபத்தில் அத்தனை கொடூரமாக இருந்தான் கெளதம்...
“ அங்கிள் நான் சொல்லுறதை கேளுங்க முதலில் விண்பாவை பாருங்க “ என கூற..
“அவளைப் பார்க்க எனக்கு தெரியும்டா ராஸ்கல்” பாசமாக பார்த்தவன் பொய்த்து போனான் என்ற கோபத்தில் என்ன செய்கிறோம் என்று அறியாமலே அருகில் கிடந்த கம்பை எடுத்து அவனை ஓங்கி அடித்தான் கெளதம்... தன் மகளுக்காக ருத்திரமூர்த்தியாக மாறி இருந்தான்..
அவனின்“ ஆஆஆஆஆஆஆஆஆஆஆ”என்றஅலறலில் தான் கோட்டையும், சாமுண்டியும் எழுந்தனர்.. எழுந்தவர்கள் நடப்பதை தடுக்கும் முன் எழிலன் கீழே விழுந்து துடித்துக் கொண்டு இருந்தான்....
மீனை தண்ணீரில் இருந்து எடுத்து வெளியில் போட்டால் உயிருக்கு எத்தனை போராடுமே அதே நிலையில் இப்பொழுது இருந்தான் எழிலன்... மீன் தலையில் நாம் அடித்தால் எப்படி துடிக்குமோ அப்படி துடித்துக் கொண்டு இருந்தான்.... அவன் சாவு அவனை நொடிகளாக நெருங்கிக் கொண்டு இருந்தது.....
கட்டவிழ்க வருவான்...
நன்றி ஸ்ரீ.... அவனுக்கு வாழ்வு கம்மி தான்.. நாம என்ன பண்ணுறது... அவர் அவளை சிலையில் அடைத்துவிடுவார்.. அதில் இருந்து எப்படி வெளியில் வருகிறாள் என்று பார்ப்போம்.... எப்பவுமே கடவுள் பொய் ஆகமாட்டார்... ஹா ஹா வியாழன் அடுத்த எபி தாரேன்...ennoda ezhil paavam shanthinioru meenukku vaazhkai kuraivuthan purikirathu.. anaal manam romba valikkuthu shanthini ippoluthu kuttimmavai yaar kappaarruvaar..? sither jeythuviddal theyivam iruppathu poyi enru aakividum..nxt epi eppoluthu..? innum oru vaaram aakumo..?!
ஹா ஹா.. என்ன அனி இப்படி முழிக்குற..enna sha....????????????????????????////
நன்றி சிஸ்... இன்னைக்கு தான் என் கதைக்கு நீங்க கமெண்ட்ஸ் சொல்லிருக்கீங்க.. ஐ ஆம் சோ ஹாப்பிஅருமையான பதிவு