நன்றி சிஸ்.. அடுத்த எபியில் வருவான் அவன்nice epi..ezhilan enke??
நன்றி சிஸ்.. அடுத்த எபியில் வருவான் அவன்nice epi..ezhilan enke??
நன்றி சிஸ்... உங்கள் கேள்விக்கான பதில் அடுத்த எபியில்superb epi shanthini.. akkki avalai kapatruvana?? akki uyir pilaipaanaa?? ezhilan enke?
நன்றி அக்கா... உங்கள் கேள்விக்கான பதில்கள் அடுத்த எபியில்...நாம் எப்பொழுதும் அப்படி தான் இருக்கிறோம்.. சோதனை வரும் நேரம் கடவுளை திட்ட தான் செய்கிறோம்... அவன் எப்பொழுதும் நம்மளுடனே தான் இருக்கிறான் என்பதை அந்த நேரம் ஏனோ மறந்திவிடுகிறோம்...கோபம் ஒரு பெரிய நோய்...ஹாய் ஷாந்தினி
அப்டேட் ரொம்ப சோகமா முடிஞ்சிருச்சு சிலையில் விண்பாவை அடைத்தாகி விட்டது அதை கட்டவிழ்ப்பது யாரு எழிலா அல்லது அக்ரதாவா இதில் கோட்டைத்தாயின் செயல் எப்படி அண்ட் சித்தரின் பங்கு என்ன ஒரு துன்பம் வரும்பொழுது எப்பவுமே கடவுளை பழிப்பது மனிதர்களின் பழக்கம் இதில் கௌதமும் விதிவிலக்கில்லை என்று நிரூபித்துவிட்டான் நம் கர்மாவின்படி நமக்கு பிரச்சனை வந்தாலும் கடவுள் நம்மை காக்கத் தான் நினைப்பார் அதை புரிந்துகொள்வதை மனிதன் தவறிவிடுகிறான் வேற என்ன சொல்றது அறியாமை அண்ட் அளவுக்கு அதிகமான கோபம் நம் கண்ணை மறைத்து செயல் இழக்க மற்றும் தவறான பாதையில் கொண்டு செல்கிறது நன்றி ஷாந்தினி அடுத்து என்னாகும் என்று ஆர்வத்தை தூண்டும் பதிவென்றே சொல்லலாம்
நன்றி சிஸ்... சீக்கிரம் தாரேன் சிஸ்..Very nice epi sis. I'm waiting for next ud soon
enna sha gowtham ipdi panitan....கண்களை திறந்து அவனை பார்த்தாள்.. அச்செயலில் சந்தோசமடைந்த அக்ரதா, அவளை கட்டியணைத்துக்கொண்டான்... அச்செயல் அவளுக்கு எழிலனை நினைவு படுத்தியது... அதை அக்ரதா கவனிக்கவே இல்லை..
அவள் தன் அருகில் வந்துவிட்டாள் என்ற சந்தோஷத்தில் இருந்தார்.... சீக்கிரம் யாகத்தை ஆரம்பிக்க வேண்டும் என்று மனதில் எண்ணிக் கொண்டு இருந்தார்...
நேரம் விடியப் போவதை அறிந்த அக்ரதா அவள் உடலை அந்த சிலை அருகில் வைத்து விட்டு வெளியில் வந்து சில மந்திரங்களை கூறி அந்த மண்டபம் யார் கண்களுக்கும் தெரியாதபடி மறைத்து வைத்தார்...
நேராக தோட்டத்துக்கு சென்று, எதுவும் தெரியாததுப் போல் கெளதமை நோக்கி வந்தான்.. “ என்ன ஐயா கோவில் கதவை அடைத்து வைத்திருகீங்க... என்ன ஆச்சு. ” என கேட்கவும்..
“ அக்கி.., விண்பாவை காணும்டா ” என வேதனையாக கூற..
அவன் கூறுவதை கேட்ட அக்கி அதிர்ந்து “ என்ன... விண்பாவை காணுமா..? எனக்கு தெரியும் அவள் இந்த எழில் கூட பழகும் போதே தெரியும் அவன் தான் இவளை ஏதாவது செய்திருப்பான் “ என கூற..,
“ பச். இல்லடா அக்கி.., அவன் ஒண்ணும் செய்யல,, நான் தான் அவனை தப்பா புரிஞ்சுட்டு அடிச்சுட்டேன்... இப்போ அவன் எங்க இருக்கானும் தெரியல..? அந்த சித்தர் தான் அழைச்சுட்டு போனார்... விண்பாவும்எங்க என்று தெரியல..” என கவலையாக கூறிக் கொண்டு இருக்கும் பொழுது..
அவர்களை நோக்கி சாமுண்டி சித்தர் வந்தார்... அவர் வருவதைக் கண்ட அக்ரதாஉடனே அந்த இடத்தை விட்டு நகர்ந்து விட்டான்...
கெளதம் அருகில் வந்த சாமுண்டி “ கெளதம்.., உன் மகளுக்கு எதுவும் ஆகவில்லை..., அவளை கூடிய சீக்கிரம் நான் இங்கு அழைத்து வருவேன்... இங்கு நீ யாரையும் அளவுக்கு அதிகமாக நம்பாதே.., முதலில் உன் குடும்ப விஷயத்தை யாரிடமும் கூறாதே.., நான் இப்பொழுது கூறியதையும் யாரிடம் கூறாதே.... உன் மகளே உன்னை தேடி வருவாள்... அந்த நாள் தூரத்தில் இல்லை.., என்று கூறி அக்ரதாவையே பார்த்து சென்றார்..
அவர் செல்லவும் கெளதம் அருகில் வந்த அக்கி “ என்ன ஐயா அவர் சொல்லிட்டு போகிறார்“ என கேட்க...
அப்பொழுது தான் சாமுண்டி கூறியது நியாபகம் வர, அக்ரதாவை யோசனையுடன் பார்த்த கெளதம் “ கோவில் கதவை திறக்க கூறி செல்கிறார் “ என கூறவும்..
“ அப்படியா.. சரி ஐயா நான் தோட்டத்துக்கு போகிறேன் “ என்று யோசனையுடன் சென்றான் அக்ரதா..
அக்ரதாசெல்வதையே யோசனையாக பார்த்து நின்றான் கெளதம், இவனை கவனிக்க வேண்டும் என்று மனதில் எண்ணிக் கொண்டான்..
அவன் எண்ணியது உடனே அக்ரதாவுக்கு தெரிய மெலிதாக சிரித்துக் கொண்டான்...
அந்த நள்ளிரவு எப்பொழுதும் போல் கெளதம் தூங்கிய பொழுது அந்த காட்டுக்கு சென்றான்.. செல்லும் பொழுது மகரிஷி முதலில் குடி இருந்த பாம்பின் தோல் அந்த புற்று பக்கம் இருக்கவும்.. ஒரு யோசனை தோன்ற அந்ததோலை எடுத்துக் கொண்டு மண்டபத்தை நோக்கி சென்றார்..
நடு இரவு முழுவதும் பூஜைகள் செய்து அந்த பாம்பு தோலை ஒரு பாம்பாக மாற்றிய அவர், அக்ரதாஉடலில் இருந்து த ஆன்மாவை அந்த பாம்பில் புகுத்திக் கொண்டு அவனை அந்த மண்டபத்தை விட்டு வெளியில் எறிந்தார்...
அவருக்கு தெரிந்து விட்டது.. கௌதம்க்கு அவன் மேல் சந்தேகம் வந்து விட்டது என்று. இனியும் அவன் உடலில் நாம் இருந்தால் எண்ணம் ஈடேறாது என்று எண்ணி அவனை குப்பை என வீசினார்..
மண்டப்பதை விட்டு வெளியில் வந்த அக்கி அப்பொழுது தான் பழைய அக்கியாக தன் நினைவுகளை பெற முயற்சிக்கவும், அதை அறிந்த சித்தர்..
விண்பா உடலையும், அக்கி உடலையும் ஒரு சேர அந்த ஆற்றில் விட்டெறிந்தார்... அவருக்கு இனி அந்த உடல்கள் தேவை இல்லை..
இருவர் உடலும் அந்த ஆற்றில் கோட்டைநல்லூரை கடந்து ஆற்றின் போக்கில் சென்றுக் கொண்டு இருந்தது...
உயிருக்கு போராடிய அக்கி தன் குட்டிம்மாவை எப்படியாவது காக்க வேண்டும் என்று எண்ணி அவளை தன் கூடவே இழுத்து ஆற்றின் போக்கில் அதன் பின்னே சென்றான்...
கட்டவிழ்க வருவான்...