vadivelammal
இணை அமைச்சர்
nalla padhivu shanthini maharishi rompa aattam kaattukiraar. thirumpa ean venbavin mayaakam silayai kottai yetho seitha kaaranathinaal vera eathavathu pilai nernthu vittatha?thanks for udma
enna sha indha maharishi sagave matra ah??? vinba kannu mulipala ah???இறந்துபோகும்உடலில்பற்றுக்கொண்டுள்ளவரைமதித்துசொல்லதக்கதுஒன்றுமில்லை “ என அதே கேலி குரலில் கூற..
அதில் கோபமான மகரிஷி “ யார்.. இறந்து போகும் உடலின் மேல் பற்றுக் கொண்டுள்ளவன் “ என கெளதம் உடலில் புகுந்திருந்துக் கொண்டே அதை கூறுவதை கேட்ட சாமுண்டிபெரும்குரலேடுத்து சிரித்தார்...
“ நீர் தான் சித்தரே.., இறந்துபோகும் உடலில் குடி இருந்துஅவனை (அக்கி) அழித்து இப்பொழுது இவளையும் (விண்பா) அழிக்கஅழைத்து வந்துவிட்டு, இப்பொழுது இதோ இவன் (கெளதம்)உடலில் புகுந்திருக்கும் உம்மை மதித்து யாம் கூற தேவை இல்லை “ என ஏளனமாக கூற...
சாமுண்டியை பார்த்துபல்லைக் கடித்த அவர் தன் வலிமையால் ஒரு வாளை கையில் எடுத்தவர் சாமுண்டியை நோக்கி “ நீ.. என்னை விட எப்படி உயர்ந்தவன், என்னை நீ இவ்வளவு பேச உனக்கு என்ன தகுதி இருக்கு என்று இப்பொழுது அறிவோம் சாமுண்டி“ என கூறி அவரை நோக்கி வாளை நீட்டினார்....
அவரை தடுத்த சாமுண்டி “ நீர்.. என்ன கூறவருகிறீர் “ என கேட்க..
“ நான், என்குரு சாணக்கியரின் அருளால் காயசித்தி பெற்று எக்காலத்திலும் அழியா உடலைப் பெற்றவன் நான் “ என கர்வமாக கூற...
அவரை பார்த்து சிரித்த சாமுண்டி “ காயசித்திப் பெற்றால் வாழும் நாட்கள் அதிகமாகுமே தவிர... அது நிலைத்திருக்காது... அழியும் உடலை அழியா உடலாக கூறுவது வீண்.. அதிலும் நீ உமது உடலை இழந்து, வாழும் நாட்களை மட்டுமே அதிகமாக்கி வைத்துள்ளீர்கள் “ என, மகரிஷியின் நிலையை எடுத்துக் கூற....
அப்பொழுது அவருக்கு கெளதம் மீது தான் கோபம் வந்தது, ஆனாலும் தாம் இப்பொழுது இருபது அவன் உடல் தான் என எண்ணி சாமுண்டியை நோக்கி “ வீண் தர்க்கம் வேண்டாம் சாமுண்டி, நீஅழியா வரம் பெற்றவனா? நான் அழியா வரம் பெற்றவனா? எனவீண் தர்க்கம் வேண்டாம் நிரூபித்து காட்டுகிறேன்“ என கூறி ஏளனமாக அவனைப் பார்த்தார்...
சாமுண்டியிடம் தன் கையில் இருந்த கூர் வாளை கொடுத்து என தோளில் வெட்டு என்றுக் கூறினார் மகரிஷி...
மகரிஷி செயலை கோட்டை தடுக்க வர, அவள் தடுக்க காரணம் மகரிஷி இருப்பது கெளதம் உடல், ஏற்கனவே மகரிஷி உடலை கெளதம் எரித்தால் அவர் மேல் சிறு கோபம் உண்டு அந்த கோபத்தை இப்பொழுது தீர்க்க பார்த்தால், அழிவது அவள் வாரிசு அது தான் தடுக்க வந்தாள்...
ஆனால்சாமுண்டியோஅவளைதடுத்து மகரிஷியிடம் இருந்து அந்த வாளை வாங்கினார்...
அவர் வாங்குவதை கண்ட அக்ரதாவும், எழிலனும் தடுக்க வர அவர்களை பார்வையால் எட்டி நிற்க கூறிய மகரிஷி“ ம்ம்.. வெட்டு‘ என கூற....
வாளை ஓங்கிய சாமுண்டி, மகரிஷி மேல் வெட்டினார்.. உடலின் மேல் பட்ட வாள்“ கிண்“ என்ற ஒலியுடன் தெறித்து விலகியதே தவிர அவர் உடலில் எந்த வித காயமும் ஏற்படவில்லை... அதை கண்ட மகரிஷி “ பார்த்தாயா.. என் வலிமையை “என செருக்குடன் சாமுண்டியை நோக்க....
அவரை கண்ட சாமுண்டியோ “ சரி உன் திறமையை நீ காட்டிவிட்டாய்.. என் திறமையை நீ அறிவாயாக.” என கூறி கையில் இருந்து வாளை அவர் நோக்கி வீசினார்...
அதை பிடித்த மகரிஷியை நோக்கி “ ம்ம்ம்... என்னை வெட்டு “ என கூற...
மகரிஷியும், சாமுண்டியை வாள் கொண்டு வெட்டினார்.. “ மகரிஷி வெட்டிய வாள், சாமுண்டி உடலில் புகுந்து வெளி வந்தது.. மீண்டும் மீண்டும் வெட்டினார் மகரிஷி... காற்றை வெட்டுவது போல் உடலில் புகுந்து வெளி வந்தது... மகரிஷியை விட மிக்க சக்தி வாய்ந்த சாமுண்டியை கண்டு கோபமான மகரிஷி...
அந்த தேவதைகள் மூட்டிய யாககுண்டத்தில் தன்னை அழிக்க பார்த்தார்... அப்பொழுதும் அவர் செய்வது அவருக்கு தவறு என்று தோணவில்லை...
கெளதம் உடலுடன் அந்த யாக குண்டத்தில் விழ போனவரை கடைசி நேரத்தில் கோட்டை கௌதமை தன் கையால் பிடித்து இழுத்ததில் கெளதம் உடலில் இருந்த, மகரிஷி ஆன்மா மட்டும் தனியாக பிரிந்து யாககுண்டத்தில் விழுந்து எரிந்தது...
அவர் எரியவும், விண்பா அருகில் சென்ற கோட்டை அவளை பார்த்து நின்றாள்...
அப்பொழுதுமழை நின்றதின் அடையாளமாக, மரத்தில் இருந்து விழுந்த ஒரு சொட்டு எழிலன் கையில் விழுந்தது...,
அது விழவும், சாமுண்டியை பார்த்து கோட்டை கண்ணை அசைக்க... எழிலன் விண்பா ஆன்மா நீர் திவலைகளுடன் தன் மேல் விழுந்த நீரை அதனுடன் சேர்த்தான்... சேர்ந்த அடுத்த நிமிடம் அவளின் ஆன்மா மீண்டும் உயிர் பெற்று எழுந்து தன் உடலுக்காக நின்றது...
அடுத்த 3௦ செகண்டில் அவள் தன் உடலில் புகவில்லை என்றால் அதன் பிறகு எப்பொழுதும் அவள் உடலை அவள் சேர்வது என்பது முடியாத காரியம்....
அவள் ஆன்மா எழுந்த அடுத்த 2௦ நிமிடத்தில் எழிலனை அவள் கண்டாள், அவனை காணவும் அவளுக்கு அவன் நினைவு வர..,
அடுத்த நொடி யாககுண்டத்தில் விழுந்து எரிந்த மகரிஷி பெரும் சிரிப்புடன் அவர்களை நோக்கி புகையாக எழுந்து வந்தார்...
அதை கண்ட கோட்டை உக்ரமாக அவரை நோக்கி முறைத்துக் கொண்டே பெரும் காற்றை உண்டு பண்ணினாள்.. காற்று வேகமாக வீசியதால் அந்த புகை மண்டலம் அந்த காடு முழுவதும் பரவி, அந்த மரம் எங்கிலும் புகுந்து சுற்றிலும் இருந்து அவர்களைப் பார்த்து ஏளனமாக சிரித்தார் மகரிஷி....
எழிலனோ விண்பாவை மடியில் படுக்க வைத்துக் கொண்டு அவள் கன்னத்தை தட்டி “ பிங்கி.. பிங்கி“ என எழுப்பிக் கொண்டு இருந்தான்...
அவனின் பிங்கி என்ற அழைப்பில் அவள் உடலை தேடி வந்த அவள் ஆன்மா அந்த உடலுடன் இணைந்தது... இணையவும்“ ஹக்“ என்ற சத்தத்துடன் விண்பா மீண்டும் மயங்கினாள்....
சாமுண்டியோ மயங்கிய கௌதமை எழுப்பிக் கொண்டு இருந்தார்... அக்ரதாவோ அனைத்தையும் பார்த்துக் கொண்டு இருந்தான்... சீக்கிரம் விண்பா எழ அவன் வேண்டிக் கொண்டு இருந்தான்...
கோபமான கோட்டை அருகில் இருந்த மரத்தைப் பார்க்க அந்த மரம் வெடித்து சிதற, அந்த மரத்தில் இருந்து அருகில் இருந்த மரத்துக்கு தாவினார்...
இப்படியாக அவர் கோட்டைக்கு போக்கு காட்ட..., அந்த காட்டில் இருந்து பெரும்பான்மையான மரம் எல்லாம் தானாக வெடித்து சிதறியது... ஆனாலும் மகரிஷியை கோட்டை அழித்த பாடு இல்லை...
இதில் எரிச்சலான கோட்டை சாமுண்டியை நோக்கி “ நீங்கள் ஊரை நோக்கி கிளம்புங்கள்“ என கட்டளையிட...
அக்ரதா, விண்பா பின்னே சென்றான்... அவள் எப்பொழுதும் விண்பாவுக்கு துணையாக இருப்பேன் என்று அவன் பின்னே சென்றான்...
அவர்களை ஊரை அடைந்ததை அறிந்த கோட்டை, மகரிஷியை நோக்கி கோபமாக திரும்ப, அவரோ மணலை கிழித்துக் கொண்டு, சீறி வெளியில் வந்தார்...
அவர் ஒரு கரையில் நின்றால்மட்டுமே கோட்டை அவரை பிடித்து அழிக்கவோ, எதுவோ பண்ண முடியும்.. ஆனால் அவரோ அவளிடம் அகப்படாமல் போக்குக் காட்டிக் கொண்டு இருந்தார்...
காட்டில் மரம் அழிந்தும், பூமியில் பிளவு பல ஏற்பட்டும் அவரை கோட்டையால் பிடிக்க முடியவில்லை.... அப்பொழுது தான் அவள் கண்ணில் அந்த சிலைபட்டது...
அவரை பார்த்து பெரும் குரலெடுத்து சிரித்த கோட்டை அவளின் வேலையை முடித்துக் கொண்டு காலையில் சூரியன் உதிக்கும் தருணம் கெளதம் கோட்டையில் நின்று மயங்கி இருக்கும் விண்பாவை பார்த்துக் கொண்டு நின்றாள்....
கட்டவிழ்க வருவான்...