ஹாய் டியர்ஸ்.. எல்லாரும் எப்படி இருக்கீங்க... ரொம்ப ரொம்ப சாரிப்பா... டைப் பண்ண கொஞ்சம் லேட் ஆகிட்டு... லேட்டா எபி கொண்டு வந்திருக்கேன்... இந்த எபி படிங்க படித்து உங்க கமெண்ட்ஸ் சொல்லுங்க... ஏதாவது தவறுகள் இருந்தால் சொல்லுங்க திருத்திக் கொள்கிறேன்...படித்து கமெண்ட்ஸ் சொல்லுற உங்க எல்லோருக்கு ரொம்ப நன்றி...நன்றி டியர்ஸ்....
கட்டு – 12
தன் தவம், கலை எல்லா நிலையையும் முடித்துவந்த சாமுண்டி சித்தர் தன் குருவை நோக்கி வந்தார்... வந்தவர் அவரை கண்டு அதிர்ந்து விட்டார்...
அக்ரதாவுக்காகஅணிலாக மாறி சிலை அருகில் இருந்த மகரிஷி அந்த சிலையை வெறிக்க பார்த்துக் கொண்டு இருந்தார்... ஊரில் எழிலன் புது வருகையையும் அறிந்துக் கொண்டார்...
கோட்டை மிக தீவிரமாக விண்பாவை காக்க தவம் இருக்கிறாள்... அதற்க்கு முன் அவளை எப்படியாவது இங்கு அழைத்து வரவேண்டும் என்று எண்ணினார்..
அதன் படி தன் மந்திரத்தால் ஒருகறுப்பு துணியை கொண்டு வந்து அந்த சிலையின் கண்ணை கட்டி வைத்தார்... அதன் அருகில் அணிலாக இரு கைகளையும் தூக்கி மேல் நோக்கி வணங்கி நின்று மந்திரத்தை உச்சரித்துக் கொண்டு இருந்தார்... அது ஒரு கண்கட்டு துணி.. இந்த துணியில் மூலம் விண்பாவின் கண்ணை அவர் கட்டிவிட்டார்...
இனி அவளுக்கு கனவில் வந்து தன்னை உணர்த்தி சீக்கிரம் இங்கு அழைத்து வரவேண்டும் என்று எண்ணிக் கொண்டார்...
அவர் செயல் சாமுண்டிக்கு மிக பிரிய அதிர்ச்சியாக இருந்தது.... அவர் உச்சரித்த மந்திரம் எவராக இருந்தாலும் அவர்களை தன் கட்டுக்குள் கொண்டு வரும் மந்திரம்...
சாமுண்டி சித்தருக்கு தெரியவில்லை, “ குரு ஏன் இப்பொழுது இந்த மந்திரத்தை உச்சரிக்கிறார், அந்த சிலை யாருக்கு வடிவமைத்தது, இங்கு என்ன தான் நடக்கிறது இங்கு இத்தனை வருடமாக ” எண்ணி கண்களை ஒரு நிமிடம் மூடி இத்தனை வருடம் நடந்ததை அறிய எண்ணினார்...
“மகரிஷி உடலை எரித்தது, கோட்டைக்கும் – இவருக்கும் உள்ள போட்டி, இவர் ஆசை அழிந்தது, அக்ரதாவின் உடலில் பாயிந்தது, விண்பாவின் மேல் உள்ள காதல், அவளை வைத்து இவர் ஆசையை நிறைவேற்றுவது என்று எல்லாமே அவருக்கு மனகண்ணில் தெரிந்தது....
அவருக்கு அதிர்ச்சியாகஇருந்தது... முற்றும் துறந்தவர்கள் தான் கடவுளின் சீடராக முடியும். அப்படி எல்லாம் துறந்து வந்த மகரிஷி சித்தருக்குஏன் இப்படி ஒரு ஆசை வந்தது என்று எண்ணிக் கொண்டே அவரின் குருவை பார்த்துக் கொண்டு கோட்டைத்தாயிடம் ஆசி வாங்க ஊரை நோக்கி சென்றார்..
காலையில் எழும் எழிலன் அருவிக் கரைக்கு சென்று குளித்துவிட்டு புத்துணர்ச்சியுடன் விண்பாவை பார்க்க சென்றான்.... அவன் இங்கு வந்த இத்தனை நாளில் விண்பாவின் நெருங்கிய தோழன் ஆனான் எழிலன்...
விண்பாவின் மனத்தை கொஞ்சம் கொஞ்சமாக கோட்டை திறந்தாள், அந்த தருணத்தில் எல்லாம் எழிலன் கோட்டை உதவியுடன் அவள் மனதில் நன்றாக இடம் பிடித்து விட்டான்....
எழுந்து அவள் அறையின் முன் நின்ற எழிலன் கண்ணை அங்கும் இங்கும் சுழற்றி பார்த்தான்... சமையல் அறையில் மைத்ரேயி நிற்பதை கண்ட எழிலன்அவளை நோக்கிப் சென்றான்...
மைத்ரேயிக்கு அவனைப் பார்க்கும் பொழுது எல்லாம் மனதில் தோன்றுவது “ எவ்வளவு நல்ல பையன் இவன்.. இவனைப் போல ஒருவனை தான் தனக்கு மருமகனாக வரவேண்டும்” என்ற எண்ணம் அவளுக்கு எப்பொழுதுமே தோன்றும்....
அதற்கும் காரணம் இருக்கிறது “ காலையில் எழுந்து அருவியில் குளித்து வந்து, கோட்டைத்தாயை வேண்டிவிட்டு தான் வேற வேலையே செய்வான்.. எப்பொழுதாவது கௌதம்க்கு உதவியாகவும், மைத்ரேயிக்கு சமையலில் உதவி, விண்பாவுக்கு படிப்பில் உதவி என்று எப்பொழுதும் யாருக்காவது உதவி செய்துக் கொண்டே இருப்பான்...
அந்த விதத்தில் மைத்ரேயி மனதை பெரிதும் கவர்ந்துவிட்டான்... கெளதம் கூட எண்ணுவான் இவனை போல் ஒரு மருமகன் வேண்டும் என்று... இப்படி எல்லார் மனதையும் கவர்ந்த மகராசன் இப்பொழுது விண்பாவின் மனத்தை கவர தான் போராடிக் கொண்டு இருக்கிறான்...
“ சிறுத்தை கூட சிக்கும், இந்த சில்வண்டு சிக்காது “ என்பது போல சுற்றிக் கொண்டு திரிகிறாள் அவள்... இன்று கொஞ்சமேனும் அவள் மனத்தை அசைக்க வேண்டும் என்று மைத்ரேயியை தேடி வந்துவிட்டான்...
“ ஹாய் ஆன்ட்டி, என்ன பண்ணுறீங்க “ என்று சமையல் மேடையில் ஏறி அமர்ந்து... அருகில் இருந்த ஒரு கேரட்டை கடித்துக் கொண்டே கேட்கவும்..
“ ஒண்ணும் இல்லடா எழிலன், பாப்பா பொங்கல் கேட்டா, அது தான் பண்ணிட்டு இருக்கேன், இன்னும் எழுந்துக்காம இருக்கா? அவளை வச்சுக்கிட்டு நான் படுற பாடு இருக்கே முடியலடா எழில்” என்று சோக கீதம் வாசிக்கவும்,
அவனின்பேபியை நினைத்து சிரித்துக் கொண்டே “ பேபி சின்ன பொண்ணு ஆன்ட்டி, நீங்க தான் அவளை திட்டுறீங்க.. அவள் பேபி ஆன்ட்டி “ என்று கூறவும்,
“ ஆமாண்டா, உன் பேபியை நீ தான் மொச்சிக்கணும், மணி என்ன ஆகுது எழும்பனும்னு தோணுதா..? இன்னைக்கு அவளுக்கு காபி கிடையாது, அவளே வந்து போட்டுக் குடிக்கட்டும் அப்போ தான் அவளுக்கு அறிவு வரும்” எனவும்,
அருகில் இருந்த அக்கி அம்மா சிரித்துக் கொண்டார், இது தினமும் வீட்டில் நடப்பது தான், சமையல் எல்லாம் மைத்ரேயி தான் செய்வாள்... அக்கி அம்மா மைத்ரேயியின் உதவிக்கு... வீட்டை சுத்தம் செய்வது, துணி துவைப்பது இது எல்லாம் முத்தம்மாள் அக்கியின் அம்மாவின் வேலை..
தினமும் மைத்ரேயி விண்பாவை திட்டும் பொழுது எல்லாம் எழிலன் அவளுக்கு சப்போர்ட் பண்ணுவதும், மைத்ரேயி அவனை செல்லமாக முறைப்பது என்று எப்பொழுதும் நடப்பது தான்..
இவர்கள் பேசிக் கொண்டு இருக்கவும், முத்தம்மாள்விண்பாவுக்கான காபியை தயார் செய்ய வரவும்,அவர் அருகில் வந்தஎழிலன்“ நான்
இன்னைக்கு காபி போடுறேன் நீங்க எல்லாரும் என் காபியை குடிங்க” என்று கூறி உடனே செயலில் இறங்கினான் எழிலன்...
அவனின் போனை எடுத்து யூடியூப் சென்று காபி போடுவது எப்படி என்று பார்த்து செய்வதை கண்ட இருவருக்கும் சிரிப்பு வந்தது...
சத்தம் போட்டு சிரிக்கவும் அவர்கள் நோக்கி திரும்பிய அவன் “ ஆன்ட்டி இன்னைக்கு என் காபியை குடிச்சுட்டு தினமும் இந்த காபி தான் கேட்பிங்க, கிண்டல் பண்ணாதீங்க “ என்று செல்ல கண்டிப்புடன் கூறவும்
அவர்களும் கேலியுடன் வாயை கையால் மூடிக் கொண்டு ஒருவரை ஒருவர் பார்த்து சிரித்தனர்...
கட்டு – 12
தன் தவம், கலை எல்லா நிலையையும் முடித்துவந்த சாமுண்டி சித்தர் தன் குருவை நோக்கி வந்தார்... வந்தவர் அவரை கண்டு அதிர்ந்து விட்டார்...
அக்ரதாவுக்காகஅணிலாக மாறி சிலை அருகில் இருந்த மகரிஷி அந்த சிலையை வெறிக்க பார்த்துக் கொண்டு இருந்தார்... ஊரில் எழிலன் புது வருகையையும் அறிந்துக் கொண்டார்...
கோட்டை மிக தீவிரமாக விண்பாவை காக்க தவம் இருக்கிறாள்... அதற்க்கு முன் அவளை எப்படியாவது இங்கு அழைத்து வரவேண்டும் என்று எண்ணினார்..
அதன் படி தன் மந்திரத்தால் ஒருகறுப்பு துணியை கொண்டு வந்து அந்த சிலையின் கண்ணை கட்டி வைத்தார்... அதன் அருகில் அணிலாக இரு கைகளையும் தூக்கி மேல் நோக்கி வணங்கி நின்று மந்திரத்தை உச்சரித்துக் கொண்டு இருந்தார்... அது ஒரு கண்கட்டு துணி.. இந்த துணியில் மூலம் விண்பாவின் கண்ணை அவர் கட்டிவிட்டார்...
இனி அவளுக்கு கனவில் வந்து தன்னை உணர்த்தி சீக்கிரம் இங்கு அழைத்து வரவேண்டும் என்று எண்ணிக் கொண்டார்...
அவர் செயல் சாமுண்டிக்கு மிக பிரிய அதிர்ச்சியாக இருந்தது.... அவர் உச்சரித்த மந்திரம் எவராக இருந்தாலும் அவர்களை தன் கட்டுக்குள் கொண்டு வரும் மந்திரம்...
சாமுண்டி சித்தருக்கு தெரியவில்லை, “ குரு ஏன் இப்பொழுது இந்த மந்திரத்தை உச்சரிக்கிறார், அந்த சிலை யாருக்கு வடிவமைத்தது, இங்கு என்ன தான் நடக்கிறது இங்கு இத்தனை வருடமாக ” எண்ணி கண்களை ஒரு நிமிடம் மூடி இத்தனை வருடம் நடந்ததை அறிய எண்ணினார்...
“மகரிஷி உடலை எரித்தது, கோட்டைக்கும் – இவருக்கும் உள்ள போட்டி, இவர் ஆசை அழிந்தது, அக்ரதாவின் உடலில் பாயிந்தது, விண்பாவின் மேல் உள்ள காதல், அவளை வைத்து இவர் ஆசையை நிறைவேற்றுவது என்று எல்லாமே அவருக்கு மனகண்ணில் தெரிந்தது....
அவருக்கு அதிர்ச்சியாகஇருந்தது... முற்றும் துறந்தவர்கள் தான் கடவுளின் சீடராக முடியும். அப்படி எல்லாம் துறந்து வந்த மகரிஷி சித்தருக்குஏன் இப்படி ஒரு ஆசை வந்தது என்று எண்ணிக் கொண்டே அவரின் குருவை பார்த்துக் கொண்டு கோட்டைத்தாயிடம் ஆசி வாங்க ஊரை நோக்கி சென்றார்..
காலையில் எழும் எழிலன் அருவிக் கரைக்கு சென்று குளித்துவிட்டு புத்துணர்ச்சியுடன் விண்பாவை பார்க்க சென்றான்.... அவன் இங்கு வந்த இத்தனை நாளில் விண்பாவின் நெருங்கிய தோழன் ஆனான் எழிலன்...
விண்பாவின் மனத்தை கொஞ்சம் கொஞ்சமாக கோட்டை திறந்தாள், அந்த தருணத்தில் எல்லாம் எழிலன் கோட்டை உதவியுடன் அவள் மனதில் நன்றாக இடம் பிடித்து விட்டான்....
எழுந்து அவள் அறையின் முன் நின்ற எழிலன் கண்ணை அங்கும் இங்கும் சுழற்றி பார்த்தான்... சமையல் அறையில் மைத்ரேயி நிற்பதை கண்ட எழிலன்அவளை நோக்கிப் சென்றான்...
மைத்ரேயிக்கு அவனைப் பார்க்கும் பொழுது எல்லாம் மனதில் தோன்றுவது “ எவ்வளவு நல்ல பையன் இவன்.. இவனைப் போல ஒருவனை தான் தனக்கு மருமகனாக வரவேண்டும்” என்ற எண்ணம் அவளுக்கு எப்பொழுதுமே தோன்றும்....
அதற்கும் காரணம் இருக்கிறது “ காலையில் எழுந்து அருவியில் குளித்து வந்து, கோட்டைத்தாயை வேண்டிவிட்டு தான் வேற வேலையே செய்வான்.. எப்பொழுதாவது கௌதம்க்கு உதவியாகவும், மைத்ரேயிக்கு சமையலில் உதவி, விண்பாவுக்கு படிப்பில் உதவி என்று எப்பொழுதும் யாருக்காவது உதவி செய்துக் கொண்டே இருப்பான்...
அந்த விதத்தில் மைத்ரேயி மனதை பெரிதும் கவர்ந்துவிட்டான்... கெளதம் கூட எண்ணுவான் இவனை போல் ஒரு மருமகன் வேண்டும் என்று... இப்படி எல்லார் மனதையும் கவர்ந்த மகராசன் இப்பொழுது விண்பாவின் மனத்தை கவர தான் போராடிக் கொண்டு இருக்கிறான்...
“ சிறுத்தை கூட சிக்கும், இந்த சில்வண்டு சிக்காது “ என்பது போல சுற்றிக் கொண்டு திரிகிறாள் அவள்... இன்று கொஞ்சமேனும் அவள் மனத்தை அசைக்க வேண்டும் என்று மைத்ரேயியை தேடி வந்துவிட்டான்...
“ ஹாய் ஆன்ட்டி, என்ன பண்ணுறீங்க “ என்று சமையல் மேடையில் ஏறி அமர்ந்து... அருகில் இருந்த ஒரு கேரட்டை கடித்துக் கொண்டே கேட்கவும்..
“ ஒண்ணும் இல்லடா எழிலன், பாப்பா பொங்கல் கேட்டா, அது தான் பண்ணிட்டு இருக்கேன், இன்னும் எழுந்துக்காம இருக்கா? அவளை வச்சுக்கிட்டு நான் படுற பாடு இருக்கே முடியலடா எழில்” என்று சோக கீதம் வாசிக்கவும்,
அவனின்பேபியை நினைத்து சிரித்துக் கொண்டே “ பேபி சின்ன பொண்ணு ஆன்ட்டி, நீங்க தான் அவளை திட்டுறீங்க.. அவள் பேபி ஆன்ட்டி “ என்று கூறவும்,
“ ஆமாண்டா, உன் பேபியை நீ தான் மொச்சிக்கணும், மணி என்ன ஆகுது எழும்பனும்னு தோணுதா..? இன்னைக்கு அவளுக்கு காபி கிடையாது, அவளே வந்து போட்டுக் குடிக்கட்டும் அப்போ தான் அவளுக்கு அறிவு வரும்” எனவும்,
அருகில் இருந்த அக்கி அம்மா சிரித்துக் கொண்டார், இது தினமும் வீட்டில் நடப்பது தான், சமையல் எல்லாம் மைத்ரேயி தான் செய்வாள்... அக்கி அம்மா மைத்ரேயியின் உதவிக்கு... வீட்டை சுத்தம் செய்வது, துணி துவைப்பது இது எல்லாம் முத்தம்மாள் அக்கியின் அம்மாவின் வேலை..
தினமும் மைத்ரேயி விண்பாவை திட்டும் பொழுது எல்லாம் எழிலன் அவளுக்கு சப்போர்ட் பண்ணுவதும், மைத்ரேயி அவனை செல்லமாக முறைப்பது என்று எப்பொழுதும் நடப்பது தான்..
இவர்கள் பேசிக் கொண்டு இருக்கவும், முத்தம்மாள்விண்பாவுக்கான காபியை தயார் செய்ய வரவும்,அவர் அருகில் வந்தஎழிலன்“ நான்
இன்னைக்கு காபி போடுறேன் நீங்க எல்லாரும் என் காபியை குடிங்க” என்று கூறி உடனே செயலில் இறங்கினான் எழிலன்...
அவனின் போனை எடுத்து யூடியூப் சென்று காபி போடுவது எப்படி என்று பார்த்து செய்வதை கண்ட இருவருக்கும் சிரிப்பு வந்தது...
சத்தம் போட்டு சிரிக்கவும் அவர்கள் நோக்கி திரும்பிய அவன் “ ஆன்ட்டி இன்னைக்கு என் காபியை குடிச்சுட்டு தினமும் இந்த காபி தான் கேட்பிங்க, கிண்டல் பண்ணாதீங்க “ என்று செல்ல கண்டிப்புடன் கூறவும்
அவர்களும் கேலியுடன் வாயை கையால் மூடிக் கொண்டு ஒருவரை ஒருவர் பார்த்து சிரித்தனர்...