nish
நாட்டாமை
akka super epi
Aiyo idhu enna vamba naale velaikku vangittena??ஹா ஹா ஓட்ட வாயா.. நீங்க சொல்லவும் தான் யோசிக்கிறேன்.
vinba pavomm.....la sha...அவர்களின் சிரிப்பை சிறுகேலியாக முறைத்த எழிலன் “ சிரிங்க நல்லா சிரிங்க உங்களுக்கு இன்னைக்கு காபி கட்” என்று கூறி அவனின் பேபிக்குஅவளின் கப்பில் ஊற்றிய அவன் ”முதல்ல பேபிக்குகாபியை குடுத்துட்டு வந்து உங்களை கவனித்துக் கொள்கிறேன்” என்று கூறி அவளின் அறை நோக்கி சென்றான்... அவன் செல்லவும் அவனைப் பார்த்து சத்தமில்லாமல் இருவரும் சிரித்துக் கொண்டனர்... விண்பாவை பற்றி நன்கு அறிந்தவர்களாக...
கதவை திறந்துக் கொண்டு உள்ளே சென்ற எழிலன் அவள் உறங்கும் அழகை கண்டு அப்படியே நின்றுவிட்டான்..
தலை முடிகள் கலைந்து, கணுக்கால்பளிங்கென வெளியில் தெரிய, கழுத்தில்போர்வையைஇறுக்க பிடித்துக் கொண்டு, கண்களை சுருக்கி குழந்தையென உறங்கிக் கொண்டு இருந்தாள் விண்பா,
எவ்வளவு நேரம் அவளை ரசித்துக் கொண்டு இருந்தானோ அவனே அறியவில்லை, அவள் அந்த பக்கம் திரும்பிப் படுக்க அசையவும் அவளின் அசைவில் சுயம்வந்தஎழிலன்
“ பேபி“ என அழைக்க
“ம்ம்ம்” என்றுதூக்க கலக்கத்தில் மீண்டும் திரும்பி படுத்தாள் அவள்..
“அடபாவி, இதுக்கு தான் ஆன்ட்டி அப்படி சிரிச்சாங்களா? இது தெரியாம வீணா கொண்டு தலையை விட்டுட்டியே ஏகாம்பரம்” என்று தனக்கு தானே தலையில் அடித்துக் கொண்டான்..
ஆனாலும்“ டேய்..., எழில் இன்னைக்கு அவளை எழுப்பியே ஆகணும்டா“ என்று தனக்கு தானே சூளுரைத்துக் கொண்டான்...
டபிள் மேல் காபியை வைத்த எழிலன் அவனின் மொபைல் போனை எடுத்து “ டங்காமாரி ஊதாரி “ பாடலைஹைய் டெசிபலில் ஒலிக்க விட.
அந்த பாடலைக் கேட்ட அவளோ இதழைசுழித்து மீண்டும் உறங்க ஆரம்பித்தாள்...
பாவம் அவனுக்கு தெரியவில்லைதூக்கத்தில் அவளை எழுப்புவது என்பது ஆனைமலையை புரட்டுவதுக்கு சமம் என்று அறியாமலே பாவம் சிங்கம்சிங்கிளாக யானை குகைக்குள் தலையை விட்டது...
அவனும்உருண்டு பிரண்டு என பலவகையில் அவளை எழுப்ப முயற்சிகள் செய்த மிகவும் களைத்துப் போனான், “ எப்படி தான் அவளை எழுப்புவது “ என்று அவனுக்கு பெரும் யோசனையாக இருந்தது...
அவனுக்கு தான் பெரும் டயர்டாக இருந்தது அவளை எழுப்ப போராடியதில், சரி காபி குடித்துவிட்டு தெம்பாக அவளை எழுப்புவோம் என்று எண்ணி காபியை கையில் எடுக்கவும் மனதின் ஓரத்தில் இருந்து” காபியை வைத்து அவளை எழுப்புடா மடையா“என்று அவனுக்கு ஒரு பட்சி சொல்லவும்,
கடைசி முயற்சியா காபியை அவள் மூக்கின் அருகில் கொண்டு சென்ற எழில் “ பேபி காபி குடிம்மா” எனவும்,
காபி வாசனை மூக்கை துளைக்க, கண்களை மூடிய படியே எழுந்த விண்பா அவன் கையை பிடித்து காபியேகுடித்து விட்டு அவன் கன்னத்தை பிடித்து அழுந்த முத்தமிட்டு “ ஐ லவ் யூ மம்மீ ” என்றுமீண்டும் படுத்துவிட்டாள்... அவளும் மைத்ரேயிக்கு எப்பொழுதும் குடுப்பதுபோல் முத்தம் கொடுத்துவிட்டு படுத்துவிட்டாள்...
முத்தம்வாங்கியவனோஅப்படியே சிலையென அமர்ந்துவிட்டான்.... அவளின் முதல் முத்தம், கூடவே“ ஐ லவ்யூ“ என்ற வார்த்தையும் அவனை அப்படியே ஜிவ்வென வானத்தில் பறக்க செய்தது...
அவள்உதட்டின்ஈரம் கன்னத்தையும், நெஞ்சையும் குளிரசெய்தது, அப்படியே கன்னைத்தை பிடித்துக் கொண்டு அமர்ந்துவிட்டான்...
விண்பாவை காண வந்த அக்கி இந்த செயலையும், எழிலனின் காதல் மயக்கத்தையும் கண்ட அவன் முகத்தில் கோபம் ஏற அவனின் குட்டிம்மாவை காணாமலே வெளியில் சென்று விட்டான்....
அதே நேரம் கோவில் மணி ஓங்கி ஒலிக்க மயக்கத்தை உதற செய்த எழிலன் என்னவோ ஏதோ என்று கோவில் நோக்கி ஓடினான்...
அங்கு சாமுண்டி சித்தர் நின்றிருந்தார்... ஊர் மக்கள் அனைவரும் அவரை சுற்றி இருக்க, மைத்ரேயி, கெளதம் இருவரும் அவரைப் பார்த்துக் கொண்டு இருக்க அவர்கள் அருகில் சென்ற அவன் “ ஆன்ட்டி யார் இவர் “ என கேட்க
“ தெரியலடா யாருனே தெரியல, ஏதோ சித்தர் போல இருக்கு, எதுக்கு வந்திருகார்ன்னு தெரியல” என்று கூறவும்
அவள் பதிலை கேட்ட அவர் சிரித்துக் கொண்டே அந்தபூவரசம் மரத்தின் அடியில் அமர்ந்துக் கொண்டார்.. இப்படி அடிக்கடி இங்கு யாராவது வருவது தான் என்று எல்லாரும் அவரவர் வேலையை பார்க்க சென்றனர்..
இப்படியாக நாட்கள் கடக்க “ அக்ரதா விண்பாவிடம் காதலை கூற வந்து தோற்றுப் போனான்...
எழிலன் இப்பொழுது எல்லாம் விண்பாவை “ பேபி “ என்று அழைத்து அவளின் மனதில் நீங்கா இடம் பிடித்தான்...
இப்படியாக நாட்கள் கடக்க விண்பாவுக்கு 2௦ வயது பிறக்க இன்னும் ஒரு மாதமே இருந்தது...
அக்ரதா ஊரின் உள் சென்று 2 வாரம் ஆன நிலையிலும் இன்னும் அவன் திரும்பி வரும் வழியை காணும் என்று மகரிஷி சித்தர் யோசித்துக் கொண்டு இருந்தார்..
அன்று அப்படி யோசித்துக் கொண்டு இருக்கும் பொழுது தான் அவருக்கு ஒரு யோசனை அந்த யோசனைப் படி தன் ஆத்மாவை அக்கி வேலை செய்யும்தோட்டத்தில் உள்ள மரத்தில் புகுத்திக் கொண்டார்...
மதியம் எப்பொழுதும் போல் அந்த மரத்தின் அருகில் படுத்த அக்கி அப்படியே தூங்கிப் போனான்... அந்த நேரம் அவன் உடலில் மீண்டும் ஈசியாக தன்னைப் பொருத்திக் கொண்டார் சித்தர்...
ஒரு உடலில் ஒரு முறை சென்று வந்த பின்னர், மீண்டும் அந்த உடலில் செல்வது என்பது மிகவும் சுலபமாகும், அப்படி தான் அவரும் இந்த முறை ஈசியாக அவன் உடலில் சென்றுவிட்டார்..
எழிலனுக்கு முத்தம் கொடுத்த அந்த நாளில் இருந்து விண்பா மனதில் ஒரு அலைபுறுதல், அந்த அலைபுறுதலே அவளை கடந்த ஒரு மாதமாக அவளை நிம்மதியாக இருக்க விடவில்லை...
அதிலும்இப்பொழுது எல்லாம் அவளால் எழிலனை பார்க்கவே முடியவில்லை ஏதோ ஓன்று தடுகிறது... இப்படி யோசித்துக் கொண்டே படுத்திருந்த விண்பா அப்படியே தூங்கவும், இந்தஒருமாதமாக வந்த கனவு மீண்டும்,
ஒரு அழகான இடம் அதை சுற்றிலும் ஆரஞ்சுநிற பூக்கள் பூத்திருக்க.. அதன் நடுவே ஒரு குட்டி வீடு அத்தனை அழகாக இருக்க,
அதன் அருகில் இவள் செல்லவும் இவளை ஒரு கரம் இழுத்து அணைத்துக் கொண்டது..... இப்படி கனவு வரவும் தினமும் எழுந்துக் கொள்வாள் அவள்... ஆனால் இன்றோ அவளால் முடியவில்லை... அந்த கரம் அப்படியே அவளைப் பிடித்துக் கொண்டது...
அந்த கரங்கள் அவளுக்கு மிகவும் பரிசயமான கரம், அந்த கரம் அவளின் இடையில் அழுத்தமாக பதியவும், அந்த இடத்தின் குளிர்ச்சியை அவளால் அறிந்துக் கொள்ள முடிகிறது,
ஆனால் அந்த அணைப்பில் இருந்து அவளால் விலக முடியவில்லை... அவளைஅணைத்த கைகள் இப்பொழுது அவளின் இடையை அழுந்தப் பிடிக்க, அந்த தாக்கம் இவள் அடி வயிறு வரைப் பரவ அந்த மயக்கத்தில் இவள் தானாக அவன் முகத்தைநோக்கி திரும்பவும் அந்த கரங்கள் இவளை டக்கென்றுவிட்டு விலகிக் கொண்டது...
அந்த கரங்கள் விலகவும் விலுக்கென்று எழுந்து அமர்ந்த விண்பா தன் இடையில் கைவைக்க இப்பொழுதும் அதன் கரங்களின் குளிர்ச்சி அவள் கரங்கள் உணர அப்படியே சிலையென அமர்ந்துவிட்டாள் அவள்... ஏதோ தவறு செய்வதாக மனம் உணரஆரம்பித்தது.,
உடல்வேர்க்க அப்படியே கண்களில் நீர் வழிய அமர்ந்திருந்தாள் அவள்... அவளின் வேதனை முகத்தை இரு கண்கள், வேதனையாக பார்த்து சென்றது,
அந்த நேரம் ஜன்னல் வழியாக வீசிய காற்றில் அவள் டேபிள் மேல் இருந்த பேப்பர் “ சட சட “ என அடித்து அவள் கவனத்தை ஈர்த்தது...
கட்டவிழ்க வருவான்...
???? ரிஹா செம நீங்க....ரிஹா பேர் சொல்லலாம் தானே?Aiyo idhu enna vamba naale velaikku vangittena??
Cha unga 8 aam arivu aanalum over ah velai seiyuthe....???? ரிஹா செம நீங்க....ரிஹா பேர் சொல்லலாம் தானே?
ஹா ஹா உன்னோட பெயர் ஹரிணியா... ???.. நான் கேட்டது உங்க பெயர் சொல்லலாமா என்று. சின்ன பொண்ணா பெரியவங்களா என்று அறிய தான் ???.. அதுக்குள்ள நீயே வந்து மாட்டிட்ட பேபி.Cha unga 8 aam arivu aanalum over ah velai seiyuthe....
Ennoda peru idhu illa nu eppidi kandupidicheenga ka...
Neengalum pet name la dhan irukeengala....
My name is harini ka...adhula konjam thiruppi pottu short panni riha....???
Aiyo aiyo enakku inikku nerame seri illaye...ஹா ஹா உன்னோட பெயர் ஹரிணியா... ???.. நான் கேட்டது உங்க பெயர் சொல்லலாமா என்று. சின்ன பொண்ணா பெரியவங்களா என்று அறிய தான் ???.. அதுக்குள்ள நீயே வந்து மாட்டிட்ட பேபி.