ஹாய் டியர்ஸ்.. எல்லாரும் எப்படி இருக்கீங்க... ரொம்ப ரொம்ப சாரிப்பா... டைப் பண்ண கொஞ்சம் லேட் ஆகிட்டு... உங்களை காக்க வைக்குறது என் எண்ணம் இல்லை டியர்ஸ்
யோசிக்க மண்டையில் மசாலா இல்லை போல அது தான் இவ்ளோ லேட்.. லேட்டா எபி கொண்டு வந்திருக்கேன்... இந்த எபி படிங்க படித்து உங்க கமெண்ட்ஸ் சொல்லுங்க... ஏதாவது தவறுகள் இருந்தால் சொல்லுங்க திருத்திக் கொள்கிறேன்...படித்து கமெண்ட்ஸ் சொல்லுற உங்க எல்லோருக்கு ரொம்ப நன்றி...நன்றி டியர்ஸ்....
கட்டு – 5
View attachment 2695
அன்று கோட்டைத்தாய் கோவில் பூசாரி எப்பொழுதும் போல் கோட்டைத்தாய்க்கு பொங்கல் வைக்க அந்த காட்டுக்கு விறகு எடுக்க சென்றார்... அங்கு சென்று விறகு எடுத்து வருவதற்குள் நேரம் மாலையை நெருங்கியது.... அந்த நேரமே மிகவும் இருட்டாக இருந்தது அந்த அடர்ந்த காட்டில்...
அவருக்கு மிகவும் பயமாக இருந்தது... காட்டில் பயங்கர சத்தம் வித விதமாக வந்தது... எங்கோ தூரத்தில் கோட்டான் சத்தமும், பல வகை பறவைகளின் சத்தமும் அவர் மனதில் கிலியை ஏற்படுத்தியது...
பயத்துடனேமந்திரம் ஒன்றை உச்சரித்துக் கொண்டே நடந்து வந்தார்... கடவுள் மேல் நம்பிக்கையாக அந்த மந்திரத்தை உச்சரித்துக் கொண்டு வரும் பொழுது தூரத்தில் ஒருவர் படுத்திருப்பதை போல் பூசாரிக்கு தெரிந்தது....
பயத்துடனே, மந்திரத்தை சத்தமாக உச்சரித்துக் கொண்டே அதன் அருகில் சென்றுப் பார்த்தார் அந்த பூசாரி, அது ஒரு சித்தரின் உடல் என்று அறிந்ததும் அதிர்ந்த பூசாரி அவர் உடலை மெதுவாக அந்த முட்புதரில் இருந்து வெளியில் எடுத்தார்... உயிர் இருக்கிறதா என்று பார்க்க.. அப்படி பார்த்து உயிர் இல்லை என்றதும் அந்த இடத்தை விட்டு வேகமாக ஓட்டம் எடுத்தார்... எடுத்தஓட்டம் கெளதம் வீட்டின் முன் தான் நின்றது....
அவன் முன் வந்து நின்று “ ஐய்யா அந்த காட்டில் ஒரு சித்தர் உடல் கிடக்கிறது “ என்று கூறினார்......
அவர் கூறுவதை கேட்ட அவனுக்குஅதிர்ச்சியாக இருந்தது... பெரும்பாலும் அந்த காட்டுப் பக்கம் யாரும் அதிகமாக செல்வது கிடையாது.. விறகு எடுக்க மட்டுமே ஆண்கள் செல்வார்கள்.. ஆனால் அங்கு இறந்த உடல் கிடப்பது என்பது ஆச்சரியமாக ஒரு விஷயம்...
ஆனாலும் அங்கு சென்று பார்ப்பது தான் சரியாக இருக்கும் என்று அவனும், ஊர் மக்களும் அந்த காட்டை நோக்கி ஓடினார்கள்...
அங்கு சென்று அந்த உடலை பார்த்ததும், அவர்களுக்கு திகைப்பு அது ஒரு சித்தர் உடல் என்பதால்... அவர்களுக்கு யாருக்கும் அந்த சித்தரின் கலை பற்றி தெரிய வாய்ப்பில்லை... சிறிது யோசித்த அவன் “ அவர்உடலை ஊருக்கு எடுத்து வந்து நல்ல முறையில் தகனம் செய்ய கூறினான் “ கெளதம்....
அவன் கூறிய படி அந்த சித்தர் உடல் கோட்டைநல்லூர் ஊருக்கு கொண்டு வரப்பட்டு, அடுத்த நாள் நல்ல முறையில் தகனம் செய்யப்பட்டது..
சாமுண்டி சித்தருக்கு உணவு கொடுப்பது இது தான் கடைசி நாள்.. அடுத்த நாளில் இருந்து சாமுண்டி சித்தர் ஊன், உறக்கமின்றி, மனதைகட்டுபடுத்தி என்று கடும் பயிற்சியை ஆரம்பிக்க வேண்டும் கூடவே சில மந்திரங்களையும் கூறிய அவர் இனி உன் யாகத்தை முடித்து விட்டு வெற்றிகரமாக திரும்பி வா என்று அவருக்கு வாழ்த்து கூறி,கூடவேஅடுத்த நிலையை அடைய, அதாவது கூடுவிட்டு கூடு பாயும்கலையும், கூடு விடா கலையும் பற்றி எப்படி எல்லாம் தன்னை தயார் நிலையில் வைக்க வேண்டும் என்று அவருக்கு கூறி விட்டு,
வெளியில் வரவுமே அவருக்கு தெரிந்து விட்டது நடந்த விபரீதம்... அதை தடுக்க உக்ரத்துடன் கோட்டைநல்லூர் நோக்கிவந்தார்...
ஆனால் அவரோ பாம்பின் உடலில் இருப்பதால் அந்த ஊரின் உள்ளே வரமுடியவில்லை... அவர் சாதாரண மனிதராகவோ, சித்தராகவோ இருந்திருந்தால் ஊரின் உள்ளே வந்திருக்க முடியும்... அதிலும் இப்பொழுது அவர் உடலை அவர் மீட்க முடியாத பட்சத்தில் இருக்கும் பொழுது கஷ்டமே....
இப்பொழுது இந்த பாம்பின் உடலில் இருந்து அவர் ஊருக்குள் சென்றால் கண்டிப்பாக கெளதம் உயிருக்கு ஆபத்தாக முடியும்... இதை அறிந்தகோட்டைஊரில் பாதுகாப்பை அதிகரிக்க செய்தாள்...
அந்த பக்கம் இருந்த சித்தர் “ கோட்டை நீ பெரிய தப்பு பண்ணுற.. நீ என்னை அந்த பக்கம் விடு “ என்று இங்கிருந்து கோட்டையை நோக்கி கோபமாக கத்தினார்...
ஆனால் கோட்டையோ அவர் கூறுவது எதையும் காதில் எடுக்கவே இல்லை.. சித்தரை இந்த பக்கம் அவள் விடவே இல்லை... அந்த பக்கம் இருந்து உக்ரத்துடன் கோட்டைநல்லூரைபார்த்துக் கொண்டு இருந்தார் மகரிஷி சித்தர்.....
அப்பொழுது அவர் கண்ணில் பட்டது…, கோவில் அருகில் இருந்த ஊஞ்சலில் இருந்து ஆடிக் கொண்டு இருந்த விண்பாவும், அவளுக்கு பின்னே நின்று அவளை ஆட்டி விட்ட அக்ரதாவுமே....
" வருவான் அவன் வருவான்..
உன்னை மீறி அவளை அழைத்து வருவான் " என்று கோட்டைக்கு அவர் கூறினார்..
இவர் பார்வை அவர்களை வட்டமிடுவதும், அவர் கூறுவதையும் கேட்ட அவளுக்கு விண்பாவுக்கு வரும் பிரச்சனை கண்ணில் படமாக ஓடியது... அந்த நேரம் அவளின் பாதுகாப்பு வளையத்தை கலைத்தாள், ஆனால் சித்தரோ அவளோ ஏளனமாகப் பார்த்தார்....
கோட்டை முதலில் அவரை உள்ளே விட்டிருந்தால், அவர் இத்தனை கோபமடைந்திருக்க மாட்டார்... ஆனால் விதி வலியது என்று இந்த இடத்தில் காட்டியது...
சித்தர் கோட்டையை நோக்கி “ நான் அந்த ஊரில் இனி கால் வைக்க மாட்டேன், எனக்கு அந்த உடல் இல்லை என்றால் வேற உடல்,உங்களில் யாரும் இங்கு வர கூடாது, அப்படி வந்தால் விளைவு மிக மோசமாக இருக்கும், இப்பொழுது கூட என் இடத்துக்கு வந்து என் உடலை அழித்திருகிறான் அவன்... ஆனால் உனக்காக இப்பொழுது அவனை விடுகிறேன்... ஆனால் இனி யாரும் இங்கு வராத படி காத்துக் கொள்” என்று கூறி உரக்க சிரித்தார்.. கூடவே அங்கு இருந்து இங்கு அவள் வாரிசு வர காத்திருந்தார் தன் பழி வெறியை நீக்க...
அவரின் பயங்கரமான சிரிப்பு சத்தத்தில் மரத்தில் ஆங்காங்கே தங்கி இருந்த பறவைகள் சட சட என தன் சிறகை அடித்து வேகமாக அந்த இடத்தை விட்டு அகன்றது.. கோட்டை கண்களுக்கு அவர் " ஒரு நேரம் சீறும் பாம்பாகவும், மறு நேரம் கண்கள் சிவக்க பழிவாங்க துடிக்கும் அரக்கனாகவே தெரிந்தார் மகரிஷி சித்தர்..
அவரின் சிரிப்பு சத்ததுக்கு பின்னால் இருக்கும் காரணத்தை அறிய கோட்டை எண்ணினாள்... ஆனால் அவரோ அவரின் எண்ணத்தை அவள் அறியாத வகையில் தன்னை சுற்றி வளையம் இட்டார்....
அந்த வளையத்தில் தன்னை நிறுத்திக் கொண்டார்... அந்த இடத்தில் அமர்ந்து வரும் நாளுக்காய், அவருக்கு வேறு உடல் கிடைக்க காத்திருக்க ஆரம்பித்தார்....
கோட்டைத்தாய்க்கும், சித்தருக்கும் நடந்த வாக்குவாதத்தை கேட்டுக் கொண்டு இருந்த முக்கோடி தேவர்களும் இரண்டாம் முறையாக கோட்டைநல்லூர் நோக்கி பயணித்தனர்.. அன்று கொடுத்த வாக்கிற்காய்....
தங்களுக்கு சகோதரியாக இருக்கும் கோட்டைக்கும் அவர்கள் சார்ந்து பேசமுடியாது, சித்தருக்கும் சார்ந்து பேசமுடியாது... இருவருமே அந்த கடவுளை சேர்ந்தவர்கள், சார்ந்தவர்கள்..... அதனால் தான் அன்று கொடுத்த வாக்குக்காக வந்தனர்...
வந்து இங்கு உள்ள மக்கள், அங்கு செல்லாதபடியும், அங்கு இருந்து ஒரு தூசி துரும்பு கூட இங்கு வராத படி இருக்க பல யோசனைக்கு பின் வருணபகவான் கொடுத்த யோசனை படி பெரும் மழை கோட்டைநல்லூரை நோக்கி வரவைத்தார்....
மழை என்றால் அப்படி ஒரு மழை, இதுவரை வராத படி.. எங்கும் தண்ணீர் கூடவே இடி மின்னல் என்று நிற்காமல் மழை... எங்கும் வெள்ளக்காடு கெளதம் இதை கொஞ்சமும் எதிர் பார்க்கவில்லை... அவன் இந்த ஊருக்கு வந்த முதற்கொண்டு இப்படி ஒரு மழையை அவன் காணவில்லை.... ராட்சச மழை என்று தான் கூறவேண்டும்....
அப்பொழுது தான் மழை கொஞ்சம் நிற்கவும் ஊர் மக்கள் உறங்க ஆயத்தம் ஆகும் பொழுது மீண்டும் மழை தொடங்கியது, கண்ணை வெட்டும் மின்னலுடன்....
அப்பொழுது அது நடந்தது, பெரும் சத்தத்துடன், காதை கிழிக்கும் சதத்துடனும், பயங்கர வெளிச்சமாகவும் ஒரு மின்னல் வெட்டி ஒரு வெள்ளி துண்டு கோட்டைநல்லூரை நோக்கி பாய்ந்து வந்தது...
எல்லாரும் அந்த சத்தத்தை கேட்டு ஜன்னல் கதவை திறந்துப் பார்த்தனர், கூடவே கௌதமும் அவனது கோட்டையில் இருந்துப் பார்த்தான்..
வானில் இருந்து பாய்ந்து வந்த அந்த வெள்ளி துண்டு அந்த காட்டுக்கும், ஊருக்கும் இடையில் விழுந்து நேர் கோடாக சென்று அதற்கு இடையில் பெரும் பள்ளத்தை உருவாக்கி அடங்கியது..
அதே நேரம் மழை வெள்ளம் எல்லாம் அந்த பள்ளத்தை நோக்கி ஓடியது, மழையும் நின்றது, இடி, மின்னல் என்று எல்லாம் நின்றது. இதில் கோட்டை மிக மிக சந்தோசம் அடைந்தாள்... அந்த பள்ளத்தை தாண்டி யாரும் அங்கு செல்லமாட்டார்கள் என்று முழுமையாக நம்பினாள்... இனி விண்பாவுக்கு ஆபத்து இல்லை என்று முழுதாக நம்பி தேவதைகளுக்கும், தேவர்களும் நன்றி கூறி விடைகொடுத்தாள்..
ஆனால் அவர்களுக்கு தெரியும் மகரிஷி ஏதாவது செய்வான் என்று. ஆனால் கோட்டையின் இந்த சந்தோசத்தை அவர்களுக்கு அழிக்க மனதில்லை.. அவளிடம் ஏதும் கூறாமல் தங்கள் இடம் நோக்கி கிளம்பினார்கள்....
காலையில் அந்த பள்ளத்தை பார்த்த அனைவர்க்கும் ஆச்சரியம் இவ்ளோ பெரிய பள்ளம் ஏன் விழுந்தது என்று.. ஆனாலும் கௌதம்க்கு
யோசிக்க மண்டையில் மசாலா இல்லை போல அது தான் இவ்ளோ லேட்.. லேட்டா எபி கொண்டு வந்திருக்கேன்... இந்த எபி படிங்க படித்து உங்க கமெண்ட்ஸ் சொல்லுங்க... ஏதாவது தவறுகள் இருந்தால் சொல்லுங்க திருத்திக் கொள்கிறேன்...படித்து கமெண்ட்ஸ் சொல்லுற உங்க எல்லோருக்கு ரொம்ப நன்றி...நன்றி டியர்ஸ்....
கட்டு – 5
View attachment 2695
அன்று கோட்டைத்தாய் கோவில் பூசாரி எப்பொழுதும் போல் கோட்டைத்தாய்க்கு பொங்கல் வைக்க அந்த காட்டுக்கு விறகு எடுக்க சென்றார்... அங்கு சென்று விறகு எடுத்து வருவதற்குள் நேரம் மாலையை நெருங்கியது.... அந்த நேரமே மிகவும் இருட்டாக இருந்தது அந்த அடர்ந்த காட்டில்...
அவருக்கு மிகவும் பயமாக இருந்தது... காட்டில் பயங்கர சத்தம் வித விதமாக வந்தது... எங்கோ தூரத்தில் கோட்டான் சத்தமும், பல வகை பறவைகளின் சத்தமும் அவர் மனதில் கிலியை ஏற்படுத்தியது...
பயத்துடனேமந்திரம் ஒன்றை உச்சரித்துக் கொண்டே நடந்து வந்தார்... கடவுள் மேல் நம்பிக்கையாக அந்த மந்திரத்தை உச்சரித்துக் கொண்டு வரும் பொழுது தூரத்தில் ஒருவர் படுத்திருப்பதை போல் பூசாரிக்கு தெரிந்தது....
பயத்துடனே, மந்திரத்தை சத்தமாக உச்சரித்துக் கொண்டே அதன் அருகில் சென்றுப் பார்த்தார் அந்த பூசாரி, அது ஒரு சித்தரின் உடல் என்று அறிந்ததும் அதிர்ந்த பூசாரி அவர் உடலை மெதுவாக அந்த முட்புதரில் இருந்து வெளியில் எடுத்தார்... உயிர் இருக்கிறதா என்று பார்க்க.. அப்படி பார்த்து உயிர் இல்லை என்றதும் அந்த இடத்தை விட்டு வேகமாக ஓட்டம் எடுத்தார்... எடுத்தஓட்டம் கெளதம் வீட்டின் முன் தான் நின்றது....
அவன் முன் வந்து நின்று “ ஐய்யா அந்த காட்டில் ஒரு சித்தர் உடல் கிடக்கிறது “ என்று கூறினார்......
அவர் கூறுவதை கேட்ட அவனுக்குஅதிர்ச்சியாக இருந்தது... பெரும்பாலும் அந்த காட்டுப் பக்கம் யாரும் அதிகமாக செல்வது கிடையாது.. விறகு எடுக்க மட்டுமே ஆண்கள் செல்வார்கள்.. ஆனால் அங்கு இறந்த உடல் கிடப்பது என்பது ஆச்சரியமாக ஒரு விஷயம்...
ஆனாலும் அங்கு சென்று பார்ப்பது தான் சரியாக இருக்கும் என்று அவனும், ஊர் மக்களும் அந்த காட்டை நோக்கி ஓடினார்கள்...
அங்கு சென்று அந்த உடலை பார்த்ததும், அவர்களுக்கு திகைப்பு அது ஒரு சித்தர் உடல் என்பதால்... அவர்களுக்கு யாருக்கும் அந்த சித்தரின் கலை பற்றி தெரிய வாய்ப்பில்லை... சிறிது யோசித்த அவன் “ அவர்உடலை ஊருக்கு எடுத்து வந்து நல்ல முறையில் தகனம் செய்ய கூறினான் “ கெளதம்....
அவன் கூறிய படி அந்த சித்தர் உடல் கோட்டைநல்லூர் ஊருக்கு கொண்டு வரப்பட்டு, அடுத்த நாள் நல்ல முறையில் தகனம் செய்யப்பட்டது..
சாமுண்டி சித்தருக்கு உணவு கொடுப்பது இது தான் கடைசி நாள்.. அடுத்த நாளில் இருந்து சாமுண்டி சித்தர் ஊன், உறக்கமின்றி, மனதைகட்டுபடுத்தி என்று கடும் பயிற்சியை ஆரம்பிக்க வேண்டும் கூடவே சில மந்திரங்களையும் கூறிய அவர் இனி உன் யாகத்தை முடித்து விட்டு வெற்றிகரமாக திரும்பி வா என்று அவருக்கு வாழ்த்து கூறி,கூடவேஅடுத்த நிலையை அடைய, அதாவது கூடுவிட்டு கூடு பாயும்கலையும், கூடு விடா கலையும் பற்றி எப்படி எல்லாம் தன்னை தயார் நிலையில் வைக்க வேண்டும் என்று அவருக்கு கூறி விட்டு,
வெளியில் வரவுமே அவருக்கு தெரிந்து விட்டது நடந்த விபரீதம்... அதை தடுக்க உக்ரத்துடன் கோட்டைநல்லூர் நோக்கிவந்தார்...
ஆனால் அவரோ பாம்பின் உடலில் இருப்பதால் அந்த ஊரின் உள்ளே வரமுடியவில்லை... அவர் சாதாரண மனிதராகவோ, சித்தராகவோ இருந்திருந்தால் ஊரின் உள்ளே வந்திருக்க முடியும்... அதிலும் இப்பொழுது அவர் உடலை அவர் மீட்க முடியாத பட்சத்தில் இருக்கும் பொழுது கஷ்டமே....
இப்பொழுது இந்த பாம்பின் உடலில் இருந்து அவர் ஊருக்குள் சென்றால் கண்டிப்பாக கெளதம் உயிருக்கு ஆபத்தாக முடியும்... இதை அறிந்தகோட்டைஊரில் பாதுகாப்பை அதிகரிக்க செய்தாள்...
அந்த பக்கம் இருந்த சித்தர் “ கோட்டை நீ பெரிய தப்பு பண்ணுற.. நீ என்னை அந்த பக்கம் விடு “ என்று இங்கிருந்து கோட்டையை நோக்கி கோபமாக கத்தினார்...
ஆனால் கோட்டையோ அவர் கூறுவது எதையும் காதில் எடுக்கவே இல்லை.. சித்தரை இந்த பக்கம் அவள் விடவே இல்லை... அந்த பக்கம் இருந்து உக்ரத்துடன் கோட்டைநல்லூரைபார்த்துக் கொண்டு இருந்தார் மகரிஷி சித்தர்.....
அப்பொழுது அவர் கண்ணில் பட்டது…, கோவில் அருகில் இருந்த ஊஞ்சலில் இருந்து ஆடிக் கொண்டு இருந்த விண்பாவும், அவளுக்கு பின்னே நின்று அவளை ஆட்டி விட்ட அக்ரதாவுமே....
" வருவான் அவன் வருவான்..
உன்னை மீறி அவளை அழைத்து வருவான் " என்று கோட்டைக்கு அவர் கூறினார்..
இவர் பார்வை அவர்களை வட்டமிடுவதும், அவர் கூறுவதையும் கேட்ட அவளுக்கு விண்பாவுக்கு வரும் பிரச்சனை கண்ணில் படமாக ஓடியது... அந்த நேரம் அவளின் பாதுகாப்பு வளையத்தை கலைத்தாள், ஆனால் சித்தரோ அவளோ ஏளனமாகப் பார்த்தார்....
கோட்டை முதலில் அவரை உள்ளே விட்டிருந்தால், அவர் இத்தனை கோபமடைந்திருக்க மாட்டார்... ஆனால் விதி வலியது என்று இந்த இடத்தில் காட்டியது...
சித்தர் கோட்டையை நோக்கி “ நான் அந்த ஊரில் இனி கால் வைக்க மாட்டேன், எனக்கு அந்த உடல் இல்லை என்றால் வேற உடல்,உங்களில் யாரும் இங்கு வர கூடாது, அப்படி வந்தால் விளைவு மிக மோசமாக இருக்கும், இப்பொழுது கூட என் இடத்துக்கு வந்து என் உடலை அழித்திருகிறான் அவன்... ஆனால் உனக்காக இப்பொழுது அவனை விடுகிறேன்... ஆனால் இனி யாரும் இங்கு வராத படி காத்துக் கொள்” என்று கூறி உரக்க சிரித்தார்.. கூடவே அங்கு இருந்து இங்கு அவள் வாரிசு வர காத்திருந்தார் தன் பழி வெறியை நீக்க...
அவரின் பயங்கரமான சிரிப்பு சத்தத்தில் மரத்தில் ஆங்காங்கே தங்கி இருந்த பறவைகள் சட சட என தன் சிறகை அடித்து வேகமாக அந்த இடத்தை விட்டு அகன்றது.. கோட்டை கண்களுக்கு அவர் " ஒரு நேரம் சீறும் பாம்பாகவும், மறு நேரம் கண்கள் சிவக்க பழிவாங்க துடிக்கும் அரக்கனாகவே தெரிந்தார் மகரிஷி சித்தர்..
அவரின் சிரிப்பு சத்ததுக்கு பின்னால் இருக்கும் காரணத்தை அறிய கோட்டை எண்ணினாள்... ஆனால் அவரோ அவரின் எண்ணத்தை அவள் அறியாத வகையில் தன்னை சுற்றி வளையம் இட்டார்....
அந்த வளையத்தில் தன்னை நிறுத்திக் கொண்டார்... அந்த இடத்தில் அமர்ந்து வரும் நாளுக்காய், அவருக்கு வேறு உடல் கிடைக்க காத்திருக்க ஆரம்பித்தார்....
கோட்டைத்தாய்க்கும், சித்தருக்கும் நடந்த வாக்குவாதத்தை கேட்டுக் கொண்டு இருந்த முக்கோடி தேவர்களும் இரண்டாம் முறையாக கோட்டைநல்லூர் நோக்கி பயணித்தனர்.. அன்று கொடுத்த வாக்கிற்காய்....
தங்களுக்கு சகோதரியாக இருக்கும் கோட்டைக்கும் அவர்கள் சார்ந்து பேசமுடியாது, சித்தருக்கும் சார்ந்து பேசமுடியாது... இருவருமே அந்த கடவுளை சேர்ந்தவர்கள், சார்ந்தவர்கள்..... அதனால் தான் அன்று கொடுத்த வாக்குக்காக வந்தனர்...
வந்து இங்கு உள்ள மக்கள், அங்கு செல்லாதபடியும், அங்கு இருந்து ஒரு தூசி துரும்பு கூட இங்கு வராத படி இருக்க பல யோசனைக்கு பின் வருணபகவான் கொடுத்த யோசனை படி பெரும் மழை கோட்டைநல்லூரை நோக்கி வரவைத்தார்....
மழை என்றால் அப்படி ஒரு மழை, இதுவரை வராத படி.. எங்கும் தண்ணீர் கூடவே இடி மின்னல் என்று நிற்காமல் மழை... எங்கும் வெள்ளக்காடு கெளதம் இதை கொஞ்சமும் எதிர் பார்க்கவில்லை... அவன் இந்த ஊருக்கு வந்த முதற்கொண்டு இப்படி ஒரு மழையை அவன் காணவில்லை.... ராட்சச மழை என்று தான் கூறவேண்டும்....
அப்பொழுது தான் மழை கொஞ்சம் நிற்கவும் ஊர் மக்கள் உறங்க ஆயத்தம் ஆகும் பொழுது மீண்டும் மழை தொடங்கியது, கண்ணை வெட்டும் மின்னலுடன்....
அப்பொழுது அது நடந்தது, பெரும் சத்தத்துடன், காதை கிழிக்கும் சதத்துடனும், பயங்கர வெளிச்சமாகவும் ஒரு மின்னல் வெட்டி ஒரு வெள்ளி துண்டு கோட்டைநல்லூரை நோக்கி பாய்ந்து வந்தது...
எல்லாரும் அந்த சத்தத்தை கேட்டு ஜன்னல் கதவை திறந்துப் பார்த்தனர், கூடவே கௌதமும் அவனது கோட்டையில் இருந்துப் பார்த்தான்..
வானில் இருந்து பாய்ந்து வந்த அந்த வெள்ளி துண்டு அந்த காட்டுக்கும், ஊருக்கும் இடையில் விழுந்து நேர் கோடாக சென்று அதற்கு இடையில் பெரும் பள்ளத்தை உருவாக்கி அடங்கியது..
அதே நேரம் மழை வெள்ளம் எல்லாம் அந்த பள்ளத்தை நோக்கி ஓடியது, மழையும் நின்றது, இடி, மின்னல் என்று எல்லாம் நின்றது. இதில் கோட்டை மிக மிக சந்தோசம் அடைந்தாள்... அந்த பள்ளத்தை தாண்டி யாரும் அங்கு செல்லமாட்டார்கள் என்று முழுமையாக நம்பினாள்... இனி விண்பாவுக்கு ஆபத்து இல்லை என்று முழுதாக நம்பி தேவதைகளுக்கும், தேவர்களும் நன்றி கூறி விடைகொடுத்தாள்..
ஆனால் அவர்களுக்கு தெரியும் மகரிஷி ஏதாவது செய்வான் என்று. ஆனால் கோட்டையின் இந்த சந்தோசத்தை அவர்களுக்கு அழிக்க மனதில்லை.. அவளிடம் ஏதும் கூறாமல் தங்கள் இடம் நோக்கி கிளம்பினார்கள்....
காலையில் அந்த பள்ளத்தை பார்த்த அனைவர்க்கும் ஆச்சரியம் இவ்ளோ பெரிய பள்ளம் ஏன் விழுந்தது என்று.. ஆனாலும் கௌதம்க்கு
Last edited: