வாழ்க்கையில் நீயும் ஒரு ஆசிரியை..
நீ கற்பிக்கும் பாடங்கள் தான்
எத்தனை எத்தனையடி தோழி...
கண்களின் இமைகள் பிரிந்தால்
தான் உலகத்தின் அழகு தெரியும்..
செடியில் இருந்து மலர்கள் தான்
மாலையாக இறைவனின்
தோள்களில் சேரும்...
ஒரு உறவின் அருமை கூட
அவர்கள் நம்மை பிரிந்தால் தான்
உறவுகளின் ஆழமும் அழியாத
நெஞ்சத்தின் நேசமும் புரியும்...
ஒவ்வொரு பிரிவும் வாழ்க்கையின்
அடுத்த வளர்ச்சிக்கான திருப்பு முனை..
கடந்து வந்தால் மட்டும் வெற்றி
என்ற புதையலை அடைய முடியும்..
ஒவ்வொரு பிரிவை கடந்து வந்த
என்னால் ஏனோ உனது பிரிவை
ஏற்க முடியாமல் மனம் ஏனோ
தவிக்குதடி கண்ணே..
இந்த பிரிவு ஒன்று போதுமடி
என் வாழ்நாள் முழுவதற்கும்..
உன்னை நேசித்த இதயத்தின்
துடிக்கும் ஓசையில் கூட
உனது பிரிவின் வலி தெரியுதடி..
இனி நீயே பிரிந்து சென்றாலும்
என் இதயம் உன்னைப் பிரியாது...
உனது ஒரு பிரிவில் அறிதேனடி..
நீதான் எனது வாழ்க்கையென்று...!
சந்தியா ஸ்ரீ
நீ கற்பிக்கும் பாடங்கள் தான்
எத்தனை எத்தனையடி தோழி...
கண்களின் இமைகள் பிரிந்தால்
தான் உலகத்தின் அழகு தெரியும்..
செடியில் இருந்து மலர்கள் தான்
மாலையாக இறைவனின்
தோள்களில் சேரும்...
ஒரு உறவின் அருமை கூட
அவர்கள் நம்மை பிரிந்தால் தான்
உறவுகளின் ஆழமும் அழியாத
நெஞ்சத்தின் நேசமும் புரியும்...
ஒவ்வொரு பிரிவும் வாழ்க்கையின்
அடுத்த வளர்ச்சிக்கான திருப்பு முனை..
கடந்து வந்தால் மட்டும் வெற்றி
என்ற புதையலை அடைய முடியும்..
ஒவ்வொரு பிரிவை கடந்து வந்த
என்னால் ஏனோ உனது பிரிவை
ஏற்க முடியாமல் மனம் ஏனோ
தவிக்குதடி கண்ணே..
இந்த பிரிவு ஒன்று போதுமடி
என் வாழ்நாள் முழுவதற்கும்..
உன்னை நேசித்த இதயத்தின்
துடிக்கும் ஓசையில் கூட
உனது பிரிவின் வலி தெரியுதடி..
இனி நீயே பிரிந்து சென்றாலும்
என் இதயம் உன்னைப் பிரியாது...
உனது ஒரு பிரிவில் அறிதேனடி..
நீதான் எனது வாழ்க்கையென்று...!
சந்தியா ஸ்ரீ
Last edited: