J
JaChi
Guest
நான் என்னுடைய உண்மையான பெயரை மறைத்து இங்கு வந்ததன் காரணம் ஒன்று தான். என்னுடைய பிரச்னையை என்னுடைய அடையாளத்தோடு விவாதிக்க விரும்பவில்லை. BSc (computer science), படித்து, தனியார் நிறுவனத்தில் பணிபுரியும், 29 வயது, பெண் நான். என் பெற்றோருக்கு வயதான காரணத்தால் நான் மட்டுமே எனது குடும்பத்தின் வருமானத்திற்கு ஆதாரம். எனக்கு ஒரு தங்கை இருக்கிறாள், வயது இருபத்திஏழு.
என் தங்கைக்கு, சரியான வேலை அமையவில்லை. தங்கையின் திருமணம் முடிந்த பிறகே, நான் திருமணம் செய்து கொள்ள வேண்டும் என்பதில், உறுதியாய் இருந்தேன்.
எங்கள் வீட்டுக்கு அருகில் வசிக்கும் ஒருவரை, காதலிப்பதாக கூறினாள். அவரை பற்றி விசாரித்ததில், படித்து, நல்ல வேலையில் இருப்பதாக தெரிந்தது. எனவே, என் பெற்றோரை சமாதானப்படுத்தி, திருமணத்துக்கு சம்மதிக்க வைத்தேன்.
ஆனால், திருமணத்துக்கு முன், இருவருக்கும் கருத்து வேறுபாடு ஏற்பட்டு, பிரிந்து விட்டனர். இச்சமயத்தில், தங்கையை பெண் கேட்டு, துாரத்து சொந்தம் ஒருவர் வர, திருமணத்துக்கு சம்மதித்தாள்; திருமணமும் நல்லபடியாக முடிந்தது. இனி என் வாழ்க்கையை பார்க்கலாம் என்று நினைத்திருந்த போது, ஒரு நாள் நள்ளிரவு, கண்ணீருடன் வீட்டிற்கு வந்தாள், தங்கை. என்ன என்று விசாரித்தபோது, 'திருமணத்துக்கு முன் யாரையாவது காதலித்து இருக்கிறாயா' என்று கேட்டுள்ளார், அவள் கணவர். இவளும் முன்பின் யோசிக்காமல், தன் பழைய காதலை பற்றி சொல்லி, திருமணம் வரை வந்து, நின்று விட்டதாக கூறியுள்ளாள். அப்போது, பிடித்தது வினை.
தங்கையின் கணவர், தினமும் மது அருந்தி வந்து, அவளை அடித்து, உதைத்து, தகாத வார்த்தைகளால் திட்டியுள்ளார். இறுதியாக, வீட்டை விட்டே துரத்தியும் விட்டுள்ளார்.
நாங்களும், உறவினர்களும், எவ்வளவோ சொல்லி பார்த்தும், அவர் சமாதானமாகவில்லை. இப்போது என்ன செய்வது என்று தெரியவில்லை. மனதளவில் பெரிய வருத்தத்தில் இருக்கிறோம். அதை மறக்க கதைகளை படிக்க இங்கு எப்பவும் வருவேன். அப்போதுதான் மணி sis யார் வேண்டுமானாலும் advice கேட்கலாம் என்று போட்டிருந்தார். அதனால் அறிவுரைக்காக போடலாம் என்று நினைத்து இங்கு என் பிரச்சனையை ஷேர் செயருக்கிறேன். நன்றி மணி sis.
என் தங்கைக்கு, சரியான வேலை அமையவில்லை. தங்கையின் திருமணம் முடிந்த பிறகே, நான் திருமணம் செய்து கொள்ள வேண்டும் என்பதில், உறுதியாய் இருந்தேன்.
எங்கள் வீட்டுக்கு அருகில் வசிக்கும் ஒருவரை, காதலிப்பதாக கூறினாள். அவரை பற்றி விசாரித்ததில், படித்து, நல்ல வேலையில் இருப்பதாக தெரிந்தது. எனவே, என் பெற்றோரை சமாதானப்படுத்தி, திருமணத்துக்கு சம்மதிக்க வைத்தேன்.
ஆனால், திருமணத்துக்கு முன், இருவருக்கும் கருத்து வேறுபாடு ஏற்பட்டு, பிரிந்து விட்டனர். இச்சமயத்தில், தங்கையை பெண் கேட்டு, துாரத்து சொந்தம் ஒருவர் வர, திருமணத்துக்கு சம்மதித்தாள்; திருமணமும் நல்லபடியாக முடிந்தது. இனி என் வாழ்க்கையை பார்க்கலாம் என்று நினைத்திருந்த போது, ஒரு நாள் நள்ளிரவு, கண்ணீருடன் வீட்டிற்கு வந்தாள், தங்கை. என்ன என்று விசாரித்தபோது, 'திருமணத்துக்கு முன் யாரையாவது காதலித்து இருக்கிறாயா' என்று கேட்டுள்ளார், அவள் கணவர். இவளும் முன்பின் யோசிக்காமல், தன் பழைய காதலை பற்றி சொல்லி, திருமணம் வரை வந்து, நின்று விட்டதாக கூறியுள்ளாள். அப்போது, பிடித்தது வினை.
தங்கையின் கணவர், தினமும் மது அருந்தி வந்து, அவளை அடித்து, உதைத்து, தகாத வார்த்தைகளால் திட்டியுள்ளார். இறுதியாக, வீட்டை விட்டே துரத்தியும் விட்டுள்ளார்.
நாங்களும், உறவினர்களும், எவ்வளவோ சொல்லி பார்த்தும், அவர் சமாதானமாகவில்லை. இப்போது என்ன செய்வது என்று தெரியவில்லை. மனதளவில் பெரிய வருத்தத்தில் இருக்கிறோம். அதை மறக்க கதைகளை படிக்க இங்கு எப்பவும் வருவேன். அப்போதுதான் மணி sis யார் வேண்டுமானாலும் advice கேட்கலாம் என்று போட்டிருந்தார். அதனால் அறிவுரைக்காக போடலாம் என்று நினைத்து இங்கு என் பிரச்சனையை ஷேர் செயருக்கிறேன். நன்றி மணி sis.