Sri Sathya
நாட்டாமை
போர்க்களத்தில் ஒரு பெண்புறா...(பகுதி-7)
சுகம் மருத்துவமணை ...
அவசர சிகிச்சைப் பிரிவின் வாயிலில் கணேசனும்,திலீப்பும் பதற்றமாய் நின்றிருந்தனர்!
அங்கே சுவற்றில் தன் ஆட்காட்டி விரலை தன் உதட்டின் மேல் வைத்திருந்த குழந்தையின் படத்தை கண்டவுடன் கணேசனின் கண்களில் கண்ணீர் வழிந்தோடியது ...
"இந்த புள்ள என்ன பாவத்த பண்ணி பிறந்துச்சி ...
அப்பன்காரன் பெத்த புள்ள முகத்த கூட பார்க்காம போய்ச் சேர்ந்துட்டான்...
இப்போ ஆத்தாக்காரியின் ..." அதற்கு மேல் பேச முடியாமல் கதறியழுத கணேசனை ஆறுதலாய் தன் தோளில் சாய்த்துக் கொண்டான் திலீப்!
"சார் அழாதீங்க சார் ..
மகாவுக்கு ஒண்ணுமாகாது சார் ..."என்று திலீப் சொல்லிக் கொண்டிருந்த விநாடி அவசர சிகிச்சைப் பிரிவின் கதவை திறந்துக்கொண்டு டாக்டர் வெளியே வந்தார்!
"டாக்டர் ...என் மகா ...மகாவுக்கு என்னாச்சி டாக்டர் ...
எப்படியிருக்கா டாக்டர்...
எப்படியாச்சும் என் பொண்ண காப்பாத்தி கொடுத்திடுங்க டாக்டர் ...
பச்ச புள்ள அநாதையாகிடும் டாக்டர் ...அநாதையாகிடும்..." என்று டாக்டரின் கையை பிடித்துக் கொண்டு கணேசன் கதறியழ ...
"நீங்க பதற்ற படாதீங்கய்யா ...
அவங்களுக்கு ஒண்ணுமில்ல ...
ஸ்ட்ரெஸ் அதிகமானதால பிக்ஸ் வந்திருக்கு ...
ஏதோ ஒண்ணு அவங்க ஆழ் மனசுல பலமான பாதிப்பை உண்டாக்கியிருக்கு ...
நவ் ஷீ இஸ் ஆல்ரைட் ...
இன்னும் கொஞ்ச நேரத்துல கண் முழிச்சிடுவாங்க நர்ஸ்கிட்ட சொல்லி அவங்க கண் விழிச்சா உங்களை கூப்பிட சொல்றேன் அது வரை கொஞ்சம் பொறுமையா அப்படி சேர்ல உட்காருங்கய்யா ..."என்று டாக்டர் கூற கணேசனுக்கு நிம்மதியானது!
"டாக்டர் என் பொண்ணுக்கு ஒண்ணுமில்லலா...
நல்லாயிருக்கால்ல ..."
"அவங்களுக்கு ஒண்ணுமில்லைய்யா ...
நல்லாயிருக்காங்க ...
ஏதோ ஒரு பாதிப்பு அவங்க மனசுல இருக்கு அது விலகினா அவங்க பழைய நிலமைக்கு வந்திடுவாங்க ...
நீங்க கவலைப்பட்டு உடம்ப கொடுத்துக்காதீங்க ..."என்று சொல்லிவிட்டு டாக்டர் நகர. ..
"விலகுற பாதிப்பா அது...
கடவுளே ..."என்று கணேசன் கதற திலீப்பின் செல்போன் ஒலித்தது!
எடுத்து பார்த்தவன் திரையில் மலர் என்ற பெயர் வர அழைப்பை கட் செய்து சட்டை பாக்கெட்டில் வைத்தான்!
அடுத்த இருபது நொடிகளில் மீண்டும் செல்போன் ஒலிக்க ...
"அய்யா ஒரு நிமிசம் வந்துடுறேன் ..." என்று கணேசனிடம் கூறிவிட்டு சற்றே விலகி சென்று இசைத்துக் கொண்டிருந்த இசைக்கு முற்றுப்புள்ளி வைத்தான்!
"ஹலோ ஒரு முறை கட் பண்ணா பேச முடியாத நிலமையில இருக்கேன்னு உனக்கு தெரியாதா? ??
எதுக்கு திரும்ப திரும்ப கால் பண்ணி சாகடிக்குற ..."என்று கத்த மறுமுனையில் மலரின் அழுகைச் சத்தம் சன்னமாய் கேட்டது!
"ஏய் மலர் என்னாச்சி? ??
ஏன் அழற? ??
ஏதாவது பிரச்சனையா? ??"
"மாமா ...அது ...வந்து ..."
"சொல்லுடி என்னாச்சி? ??"
"மாமா நான் ...நான்... "
"என்னடி உனக்கு? ??"
"நான் முழுகாமயிருக்கேன் மாமா ..." என்று மலர் கூற திலீப் பதற்றத்தில் கையிலிருந்த செல்போனை தரைக்கு தாரைவார்த்தான்!
**************************************************
"என்ன மகேஷ் நல்லா தூங்கினயா? ??" என்று கேட்டவாறே உள்ளே நுழைந்த சுக்வீந்தர் குல்தீப்பையும்,ஃபரூக்கையும் பார்க்க அவர்கள் இருவரும் தன் பார்வையை திருப்பிக் கொண்டனர்!
"இல்ல சார் ...மகாகிட்ட பேசாம சாப்பிட முடியல ...
தூங்க முடியல ...
எனக்கு மகாகிட்ட பேசணும் சார் ...
சாட்டிலைட் போன் எடுத்து வந்தீங்களா? ??" என்றான் மகேஷ்!
"எடுத்து வந்திருக்கேன் மகேஷ் ...இந்தாங்க மகா நம்பருக்கு போன் பண்ணி பேசுங்க நாங்க வெளியே வெயிட் பண்றோம் ..."என்று கூறிவிட்டு குல்தீப்பையும்,ஃபரூக்கையும் பார்த்து வெளியே வரும்படி சைகை காட்ட இருவரும் சுக்வீந்தருக்கு பின்னால் நடந்தனர்!
"டேய் நான் என்ன சொன்னேன் ..
நீங்க என்ன பண்ணி வெச்சிருக்கிங்க ...
நான் கொடுக்க சொன்ன மருந்தை கொடுத்திங்களா இல்லையா? ??" என்று சுக்வீந்தர் கேட்க இருவரும் தலைகுனிந்து நின்றனர்!
"............."
"ஏன் ...ஏன் இப்படி பண்ணிங்க ..."
"சார் ...கொடுக்கலாம்னுதான் பார்த்தோம் ஆனா நைட் முழுக்க அவர் அவரோட பொண்டாட்டி படத்தை வெச்சிகிட்டு அதுக்கூட பேசுறதும் முத்தம் கொடுக்கறதுமா இருந்ததையெல்லாம் பார்க்கும் போது மனசு கேட்கல சார் ...
பேசட்டுமே சார் ...
ராணுவ வீரன் மட்டும் ரகசியம் காக்க மாட்டான் ...அவனோட உறவுகளும் இரகசியத்தை காப்பாங்க சார் ..."
"மண்ணாங்கட்டி ...
நான் கொடுத்தது சில மூலிகைகளால செய்யப்பட்ட மாத்திரை ...
அதை சாப்பிட்டா அது இரத்தத்துல கலந்து மூளைக்குப் போய் நினைவு நரம்புகளை தாக்கி நினைவிழக்கச் செய்யும் ...
ஆல்மோஸ்ட் வசியம்,பில்லி சூனியம் போலத்தான் ...
வசியம், பில்லி சூனியம் வெக்கிறவனெல்லாம் இதுப்போல ஒரு தாவரத்துல இருந்து எடுக்கப்பட்ட சாற்றை சூனியம் வெக்க வேண்டியவங்களுக்கு ஏதோ ஒரு வகையில அவங்களுக்கே தெரியாம சாப்பிட கொடுப்பாங்க ...
அதை சாப்பிட்ட உடனே அது இரத்தத்துல கலந்து மூளை நரம்புகளை பாதிக்கச் செய்து அவங்களுக்கே அவங்க யாருணு தெரியாத அளவுக்கு பண்ணும் ...
இது சூனியம் வெக்கிறவனோட திறமையில்லை ...
அந்த தாவரங்களோட பவர் ...
இதை "விஷ போஜனம்' னு சொல்லுவாங்க ...
உதாரணத்துக்கு குன்றிமணியில் உள்ள ஆப்ரின், ஊமத்தைவிதியிலுள்ள ரைசின், கள்ளிமந்தாரையிலுள்ள தெவிற்றியா ஏ, பாப்பி செடியில் உள்ள மோர்ஃபின், காட்டு சிகையில் உள்ள குராரி, டெட்லி நைட் ஷேட் எனப்படும் நீல கதிரியில் இருக்கும் அட்ரோபின், காக்கை கொல்லியில் இருக்கும் பிக்ரோ டாக்ஸின், இண்டியன் ஹெம்ப் எனப்படும் காட்டு கதிரியில் உள்ள ட்ரைக்ளிக் ஆஸிட், நீர் பாசியில் இருக்கும் ஆர்சனிக், போன்றவை மிக கடுமையான பாதிப்புகளை ஏற்படுத்தக்கூடியவை ...
இதை கொடுத்தா மூளை நரம்புகளை பாதிக்க செய்யும் ... இதைத்தான் மாந்தீரிகம் மண்ணாங்கட்டினு பண்றவனெல்லாம் யூஸ் பண்றான் ...
இதை சாப்பிட்டிருக்காங்கனு எந்த ஒரு மருத்துவ ஆய்வுலேயும் கண்டுபிடிக்க முடியாது ...
எல்லா டாக்டரும், எல்லா ஆஸ்பிட்டலும் பார்த்துட்டு கடைசியா மந்திரவாதிகிட்ட போவாங்க அவன் சூனியம் வெச்சிருக்கு அதை எடுக்குறேன்னு சொல்லி அந்த விஷ முறிவு மருந்தை கொடுக்க பாதிக்கப்பட்டவங்க கொஞ்ச. ..கொஞ்சமா பழைய நிலமைக்கு வருவாங்க ...
வெக்கிறவனும் அவனே எடுக்குறவனும் அவனேனு தெரியாத நம்ப ஆளுங்க மாந்திரீகத்தை நம்புறாங்க ...
இதைத்தான் இப்போ மகேஷ் விசயத்துல பயன்படுத்தப் போறோம் ...
மகேசை பழைய நினைவோட அனுப்பினா கண்டிப்பா பாசம்,பொண்டாட்டினு ப்ளானை சொதப்பிடுவான் ...
அதனால அவன் நினைவை மறக்க செய்யணும் அதுக்கப்புறம் அவன் அவனுக்குள்ள நம்ம செய்யப் போற விசயத்தை விதைக்கணும் ..
ஆப்ரேசன் சக்சஸ் ஆனதுக்கப்புறம் திரும்ப இதே ப்ரோசிஜர்தான் ...
மகேஷ் திரும்ப அவன் குடும்பத்தோட சந்தோசமாயிருப்பான் ஆனா அதுக்கு ஆறு மாசமாகும் ...
அவன் இந்த வேலையை வெற்றிகரமா முடிச்சிட்டா அவனை இந்தியாவே கொண்டாடும் ...
ஆனா அவன் செய்யப் போறதை விட உங்க தியாகம் பெருசு ..."என்று கூறிக் கொண்டே விரைப்பாய் இருவரையும் நோக்கி சுக்வீந்தர் சல்யூட் அடிக்க ...
"சார்...என்ன சார் நீங்க போய் எங்களுக்கு ..."என்று இருவரும் பதற ...
"தேசத்துக்காக ஒரு பிடி மண்ண அள்ளி போட்டாலும் அவன் கடவுளை விட உயர்ந்தவன் ..
உயிரையே கொடுக்க துணிந்த நீங்க எதுக்கும் இணையில்லாதவங்க ..."என்று சுக்வீந்தர் இருவரையும் அணைத்துக் கொள்ள ...
"பாரத் மாதாகீ ஜே..."என்று இருவரும் ஒருமித்த குரலில் விரைப்பாய் கூறினர்!
"சாரி சார் ...நாங்க அந்த மருந்தை கொடுத்திருக்கணும் தவற விட்டுட்டோம் மன்னிச்சிடுங்க. ..
இப்போ மகேஷ் மகாகிட்ட பேசினா காரியமே கெட்டுடுமே சார்..."என்று குல்தீப் கூற
"மகேஷ் பேசுவான் ...மகாவும் பேசுவா ...ஆனா மகேசோட குரல் மகாவுக்கு கேட்காது ...
அந்த போன்ல மைக் இல்ல ..." என்று சுக்வீந்தர் கூறிக் கொண்டிருந்த விநாடி ...
"மகா...நீ பேசுறது எனக்கு நல்லா கேட்குது மகா ..
பாப்பா அழற சத்தம் கேட்குது ...பாப்பா பொறந்ததுடுச்சா மகா ...
நான் சீக்கிரம் வந்திடுவேன் மகா ..நான் பேசுறது கேட்குதா..." என்று மகேஷ் கத்திக் கொண்டிருந்தது வெளியே சன்னமாய் கேட்டது!
(தொடரும்)
-சத்யா ஸ்ரீராம்
சுகம் மருத்துவமணை ...
அவசர சிகிச்சைப் பிரிவின் வாயிலில் கணேசனும்,திலீப்பும் பதற்றமாய் நின்றிருந்தனர்!
அங்கே சுவற்றில் தன் ஆட்காட்டி விரலை தன் உதட்டின் மேல் வைத்திருந்த குழந்தையின் படத்தை கண்டவுடன் கணேசனின் கண்களில் கண்ணீர் வழிந்தோடியது ...
"இந்த புள்ள என்ன பாவத்த பண்ணி பிறந்துச்சி ...
அப்பன்காரன் பெத்த புள்ள முகத்த கூட பார்க்காம போய்ச் சேர்ந்துட்டான்...
இப்போ ஆத்தாக்காரியின் ..." அதற்கு மேல் பேச முடியாமல் கதறியழுத கணேசனை ஆறுதலாய் தன் தோளில் சாய்த்துக் கொண்டான் திலீப்!
"சார் அழாதீங்க சார் ..
மகாவுக்கு ஒண்ணுமாகாது சார் ..."என்று திலீப் சொல்லிக் கொண்டிருந்த விநாடி அவசர சிகிச்சைப் பிரிவின் கதவை திறந்துக்கொண்டு டாக்டர் வெளியே வந்தார்!
"டாக்டர் ...என் மகா ...மகாவுக்கு என்னாச்சி டாக்டர் ...
எப்படியிருக்கா டாக்டர்...
எப்படியாச்சும் என் பொண்ண காப்பாத்தி கொடுத்திடுங்க டாக்டர் ...
பச்ச புள்ள அநாதையாகிடும் டாக்டர் ...அநாதையாகிடும்..." என்று டாக்டரின் கையை பிடித்துக் கொண்டு கணேசன் கதறியழ ...
"நீங்க பதற்ற படாதீங்கய்யா ...
அவங்களுக்கு ஒண்ணுமில்ல ...
ஸ்ட்ரெஸ் அதிகமானதால பிக்ஸ் வந்திருக்கு ...
ஏதோ ஒண்ணு அவங்க ஆழ் மனசுல பலமான பாதிப்பை உண்டாக்கியிருக்கு ...
நவ் ஷீ இஸ் ஆல்ரைட் ...
இன்னும் கொஞ்ச நேரத்துல கண் முழிச்சிடுவாங்க நர்ஸ்கிட்ட சொல்லி அவங்க கண் விழிச்சா உங்களை கூப்பிட சொல்றேன் அது வரை கொஞ்சம் பொறுமையா அப்படி சேர்ல உட்காருங்கய்யா ..."என்று டாக்டர் கூற கணேசனுக்கு நிம்மதியானது!
"டாக்டர் என் பொண்ணுக்கு ஒண்ணுமில்லலா...
நல்லாயிருக்கால்ல ..."
"அவங்களுக்கு ஒண்ணுமில்லைய்யா ...
நல்லாயிருக்காங்க ...
ஏதோ ஒரு பாதிப்பு அவங்க மனசுல இருக்கு அது விலகினா அவங்க பழைய நிலமைக்கு வந்திடுவாங்க ...
நீங்க கவலைப்பட்டு உடம்ப கொடுத்துக்காதீங்க ..."என்று சொல்லிவிட்டு டாக்டர் நகர. ..
"விலகுற பாதிப்பா அது...
கடவுளே ..."என்று கணேசன் கதற திலீப்பின் செல்போன் ஒலித்தது!
எடுத்து பார்த்தவன் திரையில் மலர் என்ற பெயர் வர அழைப்பை கட் செய்து சட்டை பாக்கெட்டில் வைத்தான்!
அடுத்த இருபது நொடிகளில் மீண்டும் செல்போன் ஒலிக்க ...
"அய்யா ஒரு நிமிசம் வந்துடுறேன் ..." என்று கணேசனிடம் கூறிவிட்டு சற்றே விலகி சென்று இசைத்துக் கொண்டிருந்த இசைக்கு முற்றுப்புள்ளி வைத்தான்!
"ஹலோ ஒரு முறை கட் பண்ணா பேச முடியாத நிலமையில இருக்கேன்னு உனக்கு தெரியாதா? ??
எதுக்கு திரும்ப திரும்ப கால் பண்ணி சாகடிக்குற ..."என்று கத்த மறுமுனையில் மலரின் அழுகைச் சத்தம் சன்னமாய் கேட்டது!
"ஏய் மலர் என்னாச்சி? ??
ஏன் அழற? ??
ஏதாவது பிரச்சனையா? ??"
"மாமா ...அது ...வந்து ..."
"சொல்லுடி என்னாச்சி? ??"
"மாமா நான் ...நான்... "
"என்னடி உனக்கு? ??"
"நான் முழுகாமயிருக்கேன் மாமா ..." என்று மலர் கூற திலீப் பதற்றத்தில் கையிலிருந்த செல்போனை தரைக்கு தாரைவார்த்தான்!
**************************************************
"என்ன மகேஷ் நல்லா தூங்கினயா? ??" என்று கேட்டவாறே உள்ளே நுழைந்த சுக்வீந்தர் குல்தீப்பையும்,ஃபரூக்கையும் பார்க்க அவர்கள் இருவரும் தன் பார்வையை திருப்பிக் கொண்டனர்!
"இல்ல சார் ...மகாகிட்ட பேசாம சாப்பிட முடியல ...
தூங்க முடியல ...
எனக்கு மகாகிட்ட பேசணும் சார் ...
சாட்டிலைட் போன் எடுத்து வந்தீங்களா? ??" என்றான் மகேஷ்!
"எடுத்து வந்திருக்கேன் மகேஷ் ...இந்தாங்க மகா நம்பருக்கு போன் பண்ணி பேசுங்க நாங்க வெளியே வெயிட் பண்றோம் ..."என்று கூறிவிட்டு குல்தீப்பையும்,ஃபரூக்கையும் பார்த்து வெளியே வரும்படி சைகை காட்ட இருவரும் சுக்வீந்தருக்கு பின்னால் நடந்தனர்!
"டேய் நான் என்ன சொன்னேன் ..
நீங்க என்ன பண்ணி வெச்சிருக்கிங்க ...
நான் கொடுக்க சொன்ன மருந்தை கொடுத்திங்களா இல்லையா? ??" என்று சுக்வீந்தர் கேட்க இருவரும் தலைகுனிந்து நின்றனர்!
"............."
"ஏன் ...ஏன் இப்படி பண்ணிங்க ..."
"சார் ...கொடுக்கலாம்னுதான் பார்த்தோம் ஆனா நைட் முழுக்க அவர் அவரோட பொண்டாட்டி படத்தை வெச்சிகிட்டு அதுக்கூட பேசுறதும் முத்தம் கொடுக்கறதுமா இருந்ததையெல்லாம் பார்க்கும் போது மனசு கேட்கல சார் ...
பேசட்டுமே சார் ...
ராணுவ வீரன் மட்டும் ரகசியம் காக்க மாட்டான் ...அவனோட உறவுகளும் இரகசியத்தை காப்பாங்க சார் ..."
"மண்ணாங்கட்டி ...
நான் கொடுத்தது சில மூலிகைகளால செய்யப்பட்ட மாத்திரை ...
அதை சாப்பிட்டா அது இரத்தத்துல கலந்து மூளைக்குப் போய் நினைவு நரம்புகளை தாக்கி நினைவிழக்கச் செய்யும் ...
ஆல்மோஸ்ட் வசியம்,பில்லி சூனியம் போலத்தான் ...
வசியம், பில்லி சூனியம் வெக்கிறவனெல்லாம் இதுப்போல ஒரு தாவரத்துல இருந்து எடுக்கப்பட்ட சாற்றை சூனியம் வெக்க வேண்டியவங்களுக்கு ஏதோ ஒரு வகையில அவங்களுக்கே தெரியாம சாப்பிட கொடுப்பாங்க ...
அதை சாப்பிட்ட உடனே அது இரத்தத்துல கலந்து மூளை நரம்புகளை பாதிக்கச் செய்து அவங்களுக்கே அவங்க யாருணு தெரியாத அளவுக்கு பண்ணும் ...
இது சூனியம் வெக்கிறவனோட திறமையில்லை ...
அந்த தாவரங்களோட பவர் ...
இதை "விஷ போஜனம்' னு சொல்லுவாங்க ...
உதாரணத்துக்கு குன்றிமணியில் உள்ள ஆப்ரின், ஊமத்தைவிதியிலுள்ள ரைசின், கள்ளிமந்தாரையிலுள்ள தெவிற்றியா ஏ, பாப்பி செடியில் உள்ள மோர்ஃபின், காட்டு சிகையில் உள்ள குராரி, டெட்லி நைட் ஷேட் எனப்படும் நீல கதிரியில் இருக்கும் அட்ரோபின், காக்கை கொல்லியில் இருக்கும் பிக்ரோ டாக்ஸின், இண்டியன் ஹெம்ப் எனப்படும் காட்டு கதிரியில் உள்ள ட்ரைக்ளிக் ஆஸிட், நீர் பாசியில் இருக்கும் ஆர்சனிக், போன்றவை மிக கடுமையான பாதிப்புகளை ஏற்படுத்தக்கூடியவை ...
இதை கொடுத்தா மூளை நரம்புகளை பாதிக்க செய்யும் ... இதைத்தான் மாந்தீரிகம் மண்ணாங்கட்டினு பண்றவனெல்லாம் யூஸ் பண்றான் ...
இதை சாப்பிட்டிருக்காங்கனு எந்த ஒரு மருத்துவ ஆய்வுலேயும் கண்டுபிடிக்க முடியாது ...
எல்லா டாக்டரும், எல்லா ஆஸ்பிட்டலும் பார்த்துட்டு கடைசியா மந்திரவாதிகிட்ட போவாங்க அவன் சூனியம் வெச்சிருக்கு அதை எடுக்குறேன்னு சொல்லி அந்த விஷ முறிவு மருந்தை கொடுக்க பாதிக்கப்பட்டவங்க கொஞ்ச. ..கொஞ்சமா பழைய நிலமைக்கு வருவாங்க ...
வெக்கிறவனும் அவனே எடுக்குறவனும் அவனேனு தெரியாத நம்ப ஆளுங்க மாந்திரீகத்தை நம்புறாங்க ...
இதைத்தான் இப்போ மகேஷ் விசயத்துல பயன்படுத்தப் போறோம் ...
மகேசை பழைய நினைவோட அனுப்பினா கண்டிப்பா பாசம்,பொண்டாட்டினு ப்ளானை சொதப்பிடுவான் ...
அதனால அவன் நினைவை மறக்க செய்யணும் அதுக்கப்புறம் அவன் அவனுக்குள்ள நம்ம செய்யப் போற விசயத்தை விதைக்கணும் ..
ஆப்ரேசன் சக்சஸ் ஆனதுக்கப்புறம் திரும்ப இதே ப்ரோசிஜர்தான் ...
மகேஷ் திரும்ப அவன் குடும்பத்தோட சந்தோசமாயிருப்பான் ஆனா அதுக்கு ஆறு மாசமாகும் ...
அவன் இந்த வேலையை வெற்றிகரமா முடிச்சிட்டா அவனை இந்தியாவே கொண்டாடும் ...
ஆனா அவன் செய்யப் போறதை விட உங்க தியாகம் பெருசு ..."என்று கூறிக் கொண்டே விரைப்பாய் இருவரையும் நோக்கி சுக்வீந்தர் சல்யூட் அடிக்க ...
"சார்...என்ன சார் நீங்க போய் எங்களுக்கு ..."என்று இருவரும் பதற ...
"தேசத்துக்காக ஒரு பிடி மண்ண அள்ளி போட்டாலும் அவன் கடவுளை விட உயர்ந்தவன் ..
உயிரையே கொடுக்க துணிந்த நீங்க எதுக்கும் இணையில்லாதவங்க ..."என்று சுக்வீந்தர் இருவரையும் அணைத்துக் கொள்ள ...
"பாரத் மாதாகீ ஜே..."என்று இருவரும் ஒருமித்த குரலில் விரைப்பாய் கூறினர்!
"சாரி சார் ...நாங்க அந்த மருந்தை கொடுத்திருக்கணும் தவற விட்டுட்டோம் மன்னிச்சிடுங்க. ..
இப்போ மகேஷ் மகாகிட்ட பேசினா காரியமே கெட்டுடுமே சார்..."என்று குல்தீப் கூற
"மகேஷ் பேசுவான் ...மகாவும் பேசுவா ...ஆனா மகேசோட குரல் மகாவுக்கு கேட்காது ...
அந்த போன்ல மைக் இல்ல ..." என்று சுக்வீந்தர் கூறிக் கொண்டிருந்த விநாடி ...
"மகா...நீ பேசுறது எனக்கு நல்லா கேட்குது மகா ..
பாப்பா அழற சத்தம் கேட்குது ...பாப்பா பொறந்ததுடுச்சா மகா ...
நான் சீக்கிரம் வந்திடுவேன் மகா ..நான் பேசுறது கேட்குதா..." என்று மகேஷ் கத்திக் கொண்டிருந்தது வெளியே சன்னமாய் கேட்டது!
(தொடரும்)
-சத்யா ஸ்ரீராம்