Vathsala Raghavan
மண்டலாதிபதி
- Joined
- Jan 17, 2018
- Messages
- 239
- Reaction score
- 3,372
ப்ரியங்களுடன் முகிலன் 06
“பள வேடிக்கை மனிதரைப் போல்
நான் வீல்வேன் என நினைத்தாயோ”
‘ஆண்டவா. பராசக்தி. என் பாரதி பாட்டை எல்லாரும் இப்படி கொன்னு எடுக்கறாங்களே’ வாய் விட்டு கத்தினாள் அவள். அவள் ஒரு இளம் தமிழ் திரைப்பட இயக்குனர்.
குர்தியும், அதற்கேற்ற லெக்கிங்சும் மொத்த கூந்தலையும் ஒரு கிளிப்புக்குள் அடக்கிய நேர்த்தியும், தலையில் மாட்டபட்ட குளிர் கண்ணாடியுமாக அவள்.
பல வேடிக்கை மனிதரைப் போல்
நான் வீழ்வேன் என நினைத்தாயோ
‘இந்த வரிகள் எப்படி பட்ட வரிகள் தெரியுமா. இதை உச்சரிக்கும் போது குரலிலேயும் முகத்திலேயும் எப்படி பட்ட கம்பீரம் இருக்கணும் தெரியுமா? ‘வீல்வேன்’ ங்கறீங்க ‘பள’ ங்கறீங்க. நிஜமா முடியலை என்னாலே. உங்களை எப்படி இந்த படத்திலே ஹீரோவா போடறது.’ கொதிப்பு மேலிட்ட குரலில் கூவினாள் அவள்.
அவள் அடுத்து இயக்கப்போகும் திரைப்படத்திற்கு ஹீரோவாக தேர்ந்தெடுக்கப்பட்டிருந்தான் அவன். அவள் எழுதிய கதையின் படி அந்த திரைப்படத்தின் கதாநாயகன் ஒரு பாரதியார் அபிமானி. இந்த ஹீரோவை வைத்து முதல் நாள் ஒத்திகை நடந்துக்கொண்டிருந்தது.
‘கூல் டவுன்... கூல் டவுன்..’ என்றபடி அவள் அருகில் வந்தான் அந்த ஹீரோ.
‘உங்க தாய் மொழி தமிழ்தானே? அப்புறம் ஏன் இப்படி? அவள் மனம் ஆறவில்லை.
‘கூல் டவுன் பியூட்டி’ என்றபடி அவன் அவள் அருகில் வர சடாரென அவன் முன்னால் நீண்டது அவள் ஆள்காட்டி விரல்
‘இந்த பியூட்டி கீட்டினு கொஞ்சற வேலை எல்லாம் என்கிட்டே வேண்டாம்’ என்றாள் அழுத்தமாக.
‘இல்லமா. நீங்க ரொம்ப அளகா இருக்கீங்க..’ அவன் சொல்ல சுள்ளென்று பொங்கியது அவளுக்கு
‘இங்கே பாருங்க மிஸ்டர்’ என்றாள் அவள் சூடாக. ‘நான் எப்படி இருக்கேன்னு எனக்கு தெரியும் உங்களோட சர்டிஃபிகேட் எனக்கு தேவை இல்லை. அப்படியே நான் அழகாவே இல்லைனாலும் அதை பத்தி கவலை படற கேரெக்டர் நான் கிடையாது புரிஞ்சதா?’ அவனிடம் வெடித்துவிட்டு நேராக தயாரிப்பாளரிடம் வந்தாள்.
‘இங்கே பாருங்க சார். என்னாலே இவரை எல்லாம் வைத்து படம் எடுக்க முடியாது. இன்னும் நாலு நாள் டைம் கொடுங்க. நான் யாரவது ஒரு நல்ல ஹீரோ கொண்டு வரேன். புதுசா இருந்தாலும் பரவாயில்லை. கம்பீரமா இருக்கணும்.
அதுக்கும் மேலே என் பாரதியோட அபிமானியா நடிக்கிறவன் இப்படி பொண்ணுங்ககிட்டே பல்லை காட்டக்கூடாது’ அவரிடம் பொரிந்து விட்டு விடு விடுவென அங்கிருந்து வெளியேறினாள் அவள்.
சற்றே திகைத்து போனான் அந்த ஹீரோ. அவள் நிமிர்வில் கொஞ்சம் பின் வாங்கினான் அவன். இப்போதுதான் இரண்டு படங்கள் நடித்து, வளர்ந்துக்கொண்டிருக்கும் கதாநாயகன்.. அதற்கு மேல் அவள் பின்னணியும் அவனுக்கு தெரியும் என்பதால் மோதிக்கொள்ள தோன்றவில்லை அவளிடம் அவள் போன திசையை கொஞ்ச நேரம் பார்த்திருந்தவன் தயாரிப்பாளரிடம் மெல்ல கேட்டான்
‘இவங்க எப்பவுமே இப்படிதானா? என்றான் அவன் புன்னகைத்தார் தயாரிப்பளார்.
‘ஆமாம்பா. அவ அப்படிதான். அவளும் பாரதியாரோட அபிமானிதான். அவர் பொண்ணுங்களுக்கு வேணும்னு சொன்ன தைரியமும், தன்னபிக்கையும் இவகிட்டே நிறைய உண்டு.
அவ ஒரு முடிவு எடுத்திட்டானா யாருக்காகவும் அதை மாத்திக்க மாட்டா. ரெண்டு படம் கதை எழுதி டைரெக்ட் பண்ணி இருக்கா. காமெராமேனும் அவதான். ரெண்டுமே அவார்ட் வாங்கி இருக்கு. பெரிய ஹிட்டும் கூட. ரொம்ப தரமான படங்கள். இது மூணாவது. படம்’
அப்பா வீட்டை விட்டு கிளம்பி இரண்டு மணி நேரம் கடந்திருந்த நிலையில் விழுந்தடித்துக்கொண்டு முகிலனின் அறைக்கு வந்தான் ஷ்யாம். அங்கே பால்கனியில் நின்றுக்கொண்டு அருகே இருந்த மரத்தில் விளையாடிக்கொண்டிருந்த அணில்களையே பார்த்திருந்தான் முகிலன்
‘வா ஷ்யாம். நானே உன்னை கூப்பிடனும்னு நினைச்சேன். சச்சிதானந்தன் படத்துக்கு நாளையிலிருந்து டேட்ஸ் கொடுத்திருக்கோம் இல்லையா? அவனை திரும்பி பார்க்காமலே கேட்டான் முகிலன்
‘சார்.. அது இருக்கட்டும் சார் அப்பா அங்கே ப்ரெஸ் மீட்லே ஏதேதோ பேசப்போறாராம் சார்..’ ஷ்யாம் படபடக்க அதில் நூற்றில் ஒரு பங்கு படபடப்பு கூட இல்லை முகிலனிடத்தில். மெல்ல திரும்பி அவன் முகம் பார்த்தான் முகிலன்
‘ஷூட்டிங் கன்ஃபர்ம் பண்ணிட்டியா? அப்புறம் அந்த அவார்ட் ஃப்ங்ஷன் என்னைக்கு?’
‘முகிலன் சார்...’ என்றான் ஷ்யாம் பொறுக்க மாட்டாமல். அவன் ரொம்பவும் பொறுமை இழக்கும் போகும்போதுதான் பெயர் சொல்லி அழைப்பான்.
‘நான் அவார்ட் ஃப்ங்ஷன் எப்போன்னு கேட்டேன்’
‘நாளை கழிச்சு சார்..’ ‘அங்கே அப்பா இன்னும் கால் மணி நேரத்திலே ப்ரெஸ் மீட் ஏற்பாடு பண்ணி இருக்கார். என்ன பேசப்போறார்னு தெரியலை.
‘அப்படியா? என்றான் இதழோரம் தேங்கிய சின்ன புன்னகையுடன். இப்போ உங்க டி.வி காரங்க எல்லாரும் சும்மா இருக்க மாட்டங்களே அவர் பேட்டியை லைவா டி.வி.யிலே காட்டினாலும் காட்டுவாங்க. வா வா பார்க்கலாம் ‘என்றபடியே உள்ளே வந்து அங்கிருந்த சாய்வு நாற்காலியில் படு ஆயாசமாக சாய்ந்து கொண்டான் முகிலன்.
‘எங்கே டி.வி போடு பார்ப்போம்’ என்றான் கையை உயர தூக்கி சோம்பல் முறித்தபடியே.. உச்சகட்ட பதற்றத்தோடு டி.வியை உயிர்ப்பித்தான் ஷ்யாம்.
ஆனால் அங்கே செய்தி சேனல்களில் வலம் வந்துக்கொண்டிருந்தது வேறாரு செய்தி ‘நேற்று இரவு ஒரு வாலிபன் குடித்துவிட்டு நடு ரோட்டில் யாரோ ஒரு பத்திரிக்கையாளரை தகாத வார்த்தைகளில் பேசி அடித்து விட்டதாக ஒரு செய்தி அதற்கான வீடியோ ஆதாரத்துடன் வந்துக்கொண்டிருந்தது.’
பத்திரிக்கையாளர்கள் எல்லாரும் கொதிப்புடன் பேசிக்கொண்டிருந்தார்கள். எல்லா சேனல்களிலும் இதே செய்தி. சில நிமிடங்கள் அதையே பார்த்துக்கொண்டிருந்த பிறகுதான் அந்த வாலிபன் யார் என தெளிவானது ஷ்யாமுக்கு.
‘சார்..’ என்று திகைப்புடன் முகிலன் முகம் பார்த்தான் ஷ்யாம்.
‘செக் அண்ட் மேட்’ என்று கண் சிமிட்டினான் முகிலன். ‘நம்ம வெங்கட்ராமன் செக் அண்ட் மேட்’ அந்த வாலிபன் வேறே யாருமல்ல நம் வெங்கட்ராமனின் மகன் ஜெகன்.
‘சார்..இது உங்க வேலையா?’ வியந்து போய் கேட்டான் ஷ்யாம்
‘எஸ். மை பாய். அடிவாங்கின ரிப்போர்டர் நம்மாளு. அவனை வெங்கட்ராமன் பையன் இருக்கிற இடத்துக்கு அனுப்பினதே நான்தான்’ மலர்ந்து சிரித்தான் முகிலன் ‘கிட்டத்தட்ட பத்து வருஷமா சினிமாலே இருக்கேன் இது கூட சாதிக்கலைன்னா எப்படி?’
‘எப்போ சார் இதெல்லாம் பண்ணீங்க?’
நேத்து ராத்திரி யம்மா.... மொட்டை மாடியில் யம்மா...’ அழகாய் சிரித்தான் முகிலன் ‘இந்த செல்போன் மட்டும் வெச்சே எல்லாத்தையும் முடிச்சிட்டேன்’ என்றபடியே கையிலிருந்த கைப்பேசியை தூக்கி கட்டிலின் மீது போட்டான் முகிலன்
‘எங்கப்பாவை வெச்சு என்கிட்டே விளையாடி பார்க்குறார் ஷ்யாம் இந்த வெங்கட்ராமன். அதுதான் அவர் பையனை வெச்சு அவரை அடிச்சேன். சும்மாவே எங்கப்பாவுக்கு நானுன்னா வேப்பங்காய்தான். இதிலே கிட்டதட்ட ரெண்டு மூணு மணி நேரத்திலே பேசி பேசியே எங்கப்பாவை மொத்தமா எனக்கெதிரா திருப்பி இருக்கார் இந்த வெங்கட்ராமன்’ சொன்ன முகிலனின் கண்களில் இப்போது அப்படி ஒரு தீவிரம்.
இன்னமும் வியப்பிலிருந்து மீளாதவனாக முகிலனையே பார்த்திருந்தான் ஷ்யாம்
Last edited: