இனிமையான எண்பதுகளின் காலங்களை மறுபடியும் ஒரு மீட்டலாக மீட்ட வைத்து விட்டீர்கள்!புனர் ஜென்ம கதைன்னு கூட எடுத்துக்கலாம்,காலம் எல்லாத்துக்கும் ஒரு கணக்கு போட்டு தான் வச்சுருக்கு!விடை தெரியும் போது நமக்கு ஆச்சரியம் தான்!அன்ற்றைய நாகரிகமான காதல்!கண்டிப்பா இன்னிக்கு இல்லைன்னு தான் சொல்வேன்,ஐ லவ் யூ ரஸ்னா! அதில் இருக்கும் ஒரு காதல்!சான்ஸே இல்ல!மீரா கண்ணன்...மறக்க முடியாத ஜோடி!மாதவன் போன்ற வெறி பிடித்த ரசிகன்,என்ன சொல்ல?சினிமா. ஆசையில் உயிர் விடுவதும் நண்பனுடனேயே தானும் உயிர் விடுவதும்...மீராவும் தொடர்ந்து மரணிப்பதும்....இன்ற்றைய கதையில் வருணும் முகிலனும்!!அந்த ஆஹான்!மறக்கவே முடியாத வார்த்தை!என்ன கம்பீரமான முகிலன்,நம் ப்ரியங்களை அள்ளிக் கொள்கிறான்.மயூரா,மீராவை போன்றே தோற்றம்,காலம் மறுபடியும் மூவரையும் இணைக்கிறது!அதே போன்ற விபத்து,ஆனால் இம்முறை காலம் அவர்களை இணைக்கிறது.சமீபமாக ஒரு நடிகையின் தொடர் குற்றச்சாட்டுகளை மீடியாவில் பார்க்கும் போது எனக்கு உங்க கதையின் அனுபமா நினைவு வந்தாள்!இது ஒரு தற் செயல்தான்,ஆனால் கதையில் முகிலன் கொடுத்த அடி நிறைவா இருந்தது !இன்னும் ஒன்று சொல்லியே ஆக வேண்டும்,கவிதை போல ரொமான்ஸ் ...அவ்வளவு அழகா எழுதி இருந்திங்க!வாழ்த்துக்கள்!