புன்னகைக்கு நீயே தேசமடி
மணி இரவு ஒன்பது ஆனதும் கணிணியை ஷட்டவுன் செய்த உமாபாரதி, கண்களைத் தேய்த்து விட்டுக் கொண்டாள். எப்பொழுதும் இவ்வளவு நேரம் ஆகாது. இன்று நடந்த ஆடிட்டிங்கில் பல குளறுபடி. அதனால் வேலை இழுத்துவிட்டது.
‘இந்த ஸ்கிரினையே முறைச்சு முறைச்சுப் பார்த்து கண்ணு ரெண்டும் அவிஞ்சு போகுது. மண்டையும் சூடாகிறுதுடா சாமி. வீட்டுக்கும் போனதும் மொத வேலையா தலைக்கு எண்ணெய அப்பிட்டு, சோபாவுல சாஞ்சிக்கனும்.’
உமாபாரதி கணக்கு பண்ணுவதில் கெட்டிக்காரி. (ஆடிட்டர்பா) எம்சிஎஸ் பேங்கின் இண்டெர்னல் ஆடிட்டர் அவள். அடிக்கடி எல்லா டிபார்ட்மெண்டுக்கும் திடீர் வருகை அளித்து, அவர்களின் வேலையை பரிசோதிப்பது, தில்லுமுல்லு நடந்திருக்கறதா என கண்காணிப்பது அவளது வேலை. அவளைப் பார்த்தாலே பேயைப் பார்த்தது போல முழிப்பார்கள் மற்ற டிபார்ட்மெண்ட் ஆட்கள். வேலையில் அவ்வளவு கறார். அதனாலேயே அவளுக்கு வேலை இடத்தில் நண்பர்கள் யாரும் இல்லை. நட்பை ஏற்படுத்தி கொள்வதும் தடுக்கப் பட்டிருந்தது நிறுவனத்தால்.
லிப்டினுள் நுழைந்து க்ராவுண்ட் ப்ளோரின் பட்டனை அழுத்தினாள். அங்குதான் கார் பார்க்கிங் இருந்தது. தனது சுசுக்கி ஸ்வீப்டை நெருங்கியவள், ரிமோட்டில் பட்டனை அழுத்தினாள். சத்தமும் கேட்கவில்லை, காரும் திறக்கவில்லை.
‘என்னடா இது ரோதனையா போச்சு.’
மீண்டும் மீண்டும் முயன்றவள், பீதியுடன் சுற்றும் முற்றும் பார்த்தாள். அந்த பார்கிங் இடத்தில் எப்பொழுதுமே வெளிச்சம் குறைவாக தான் இருக்கும். இன்று பார்த்து கும்மிருட்டாக இருந்தது.
எப்பொழுதும் பார்க்கிங் போட்டவுடன் குடுகுடுவென லிப்டுக்கு ஓடுபவள், திரும்ப வரும் போது அவசரமாக காரைக் கிளப்பி வெளியேறிவிடுவாள். வெளியே டெரர் போஸ் கொடுத்தாலும், நிஜத்தில் தொடைநடுங்கி அவள். ஊரில் உள்ள போபியா எல்லாம் இவளிடம் கைக்குலுக்கி குடி இருந்தார்கள். அதில் அதி முக்கிய நிக்தோபோபியா(இருட்டில் ஏற்படும் பயம்) தலையை நீட்டி எட்டிப் பார்த்தது இப்பொழுது.
உடல் நடுங்க , வியர்த்து விறுவிறுக்க, மூச்சு சீரில்லாமல் துடித்தது உமாவுக்கு. கைப்பையைத் துளாவி போனை எடுத்தவள், அதில் இருந்த டார்ச்லைட்டை ஆன் செய்து சுற்றிப் பார்த்தாள். டார்ச் வெளிச்சம் தனக்கு வெகு அருகில் நின்றிருந்த உருவத்தின் மேல் பட, பயந்து அலறியவள் ஓட எத்தனித்து கால் இடறி கீழே விழுந்தாள்.
அவள் அருகே நெருங்கிய அந்த உருவம்,
“பாரதி, உனக்கு ஒன்னும் அடி இல்லையே. என்னைப் பார்த்து என்ன பயம்? ஆர் யூ ஆல்ரைட்” என கேட்டது.
‘நம்ம பேருலாம் தெரியுது! குரலும் கேட்ட மாதிரியே இருக்கு. யாரோ தெரிஞ்சவங்கதான் போல இருக்கு’ என பயத்தை விலக்கியவள், எகிறி துடிக்கும் மூச்சை சமன் செய்ய நெஞ்சை நீவிவிட்டாள்.
“ஐம் ஓகே! நீங்க யாரு?” என கேட்டவாறு எழ முயற்சித்தாள்.
அவன் கைப்பிடித்து அவளைத் தூக்கி நிறுத்தினான்.
“என்னைத் தெரியலயா பாரதி?”
டார்ச்சை மீண்டும் அவன் முகத்தில் அடித்துப் பார்த்தவள்,
“தெரிஞ்ச மாதிரி தான் இருக்கு. தெரியாத மாதிரியும் இருக்கு சார்”
“சார்னு கூப்பிட்டு என்னை அந்நியப்படுத்தாதே பாரதி. காலேஜ்ல உன்னோட சீனியர் ராமானுஜம். மறந்துட்டியா?” முறுவலித்தான்.
‘அடேய்! அந்த அம்மாஞ்சி ராமானுஜமா நீ? ஆளே அடையாளம் தெரியல! எண்ணெய் சட்டியில தலைய விட்ட மாதிரி முடிய வழிச்சு சீவிட்டு வருவீயே, இப்போ என்ன ஸ்டைலா ஸ்பைக் வச்சிருக்க. என்னைப் பார்த்தாலே முகத்த குனிஞ்சிக்குவ, இப்போ கண்ண பார்த்து பேசற. தாடி மீசைலாம் வச்சு பெரிய அப்பாடக்கரு மாதிரி இருக்க! டோட்டல் சேஞ்ச் ஓவர் மாமு’
“நல்லா இருக்கீங்களா மிஸ்டர் ராமானுஜம்?” எவ்வளவு மறைத்தும் குரலில் லேசாக எரிச்சல் எட்டிப் பார்த்தது. இருக்காதா பின்னே! இவள் எங்கு போனாலும், பாடிகார்ட் மாதிரி பின்னாலேயே சுற்றுவானே காலேஜில். இவளின் நண்பர்கள் பட்டாளம் இவன் பெயரை சொல்லியே இவளைக் கலாய்த்து தள்ளுவார்கள்.
“டீ உமா! உன் ஆளு ராமா வந்துட்டாருடி. உமா, ராமா வாவ்! பேருல கூட என்ன ஒரு பொருத்தம். இன்னிக்கும் உனக்கு மேட்சிங்கா சட்டைப் போட்டுட்டு வந்துருக்காருடீ. நிஜமா சொல்லு, நீ கிளம்பற முன்ன அவனுக்கு மேசேஜ் போட்டு இந்தக் கலருல சட்டை போடுங்கன்னு சொல்லிட்டு தான வர? “ ஓட்டி எடுப்பார்கள்.
கடுப்பில் இவள் திரும்பி பார்த்தால், சட்டென முகத்தைத் தொங்கப் போட்டுக் கொள்வான். சுறுசுறுவென கோபம் ஏறும் இவளுக்கு.
மணி இரவு ஒன்பது ஆனதும் கணிணியை ஷட்டவுன் செய்த உமாபாரதி, கண்களைத் தேய்த்து விட்டுக் கொண்டாள். எப்பொழுதும் இவ்வளவு நேரம் ஆகாது. இன்று நடந்த ஆடிட்டிங்கில் பல குளறுபடி. அதனால் வேலை இழுத்துவிட்டது.
‘இந்த ஸ்கிரினையே முறைச்சு முறைச்சுப் பார்த்து கண்ணு ரெண்டும் அவிஞ்சு போகுது. மண்டையும் சூடாகிறுதுடா சாமி. வீட்டுக்கும் போனதும் மொத வேலையா தலைக்கு எண்ணெய அப்பிட்டு, சோபாவுல சாஞ்சிக்கனும்.’
உமாபாரதி கணக்கு பண்ணுவதில் கெட்டிக்காரி. (ஆடிட்டர்பா) எம்சிஎஸ் பேங்கின் இண்டெர்னல் ஆடிட்டர் அவள். அடிக்கடி எல்லா டிபார்ட்மெண்டுக்கும் திடீர் வருகை அளித்து, அவர்களின் வேலையை பரிசோதிப்பது, தில்லுமுல்லு நடந்திருக்கறதா என கண்காணிப்பது அவளது வேலை. அவளைப் பார்த்தாலே பேயைப் பார்த்தது போல முழிப்பார்கள் மற்ற டிபார்ட்மெண்ட் ஆட்கள். வேலையில் அவ்வளவு கறார். அதனாலேயே அவளுக்கு வேலை இடத்தில் நண்பர்கள் யாரும் இல்லை. நட்பை ஏற்படுத்தி கொள்வதும் தடுக்கப் பட்டிருந்தது நிறுவனத்தால்.
லிப்டினுள் நுழைந்து க்ராவுண்ட் ப்ளோரின் பட்டனை அழுத்தினாள். அங்குதான் கார் பார்க்கிங் இருந்தது. தனது சுசுக்கி ஸ்வீப்டை நெருங்கியவள், ரிமோட்டில் பட்டனை அழுத்தினாள். சத்தமும் கேட்கவில்லை, காரும் திறக்கவில்லை.
‘என்னடா இது ரோதனையா போச்சு.’
மீண்டும் மீண்டும் முயன்றவள், பீதியுடன் சுற்றும் முற்றும் பார்த்தாள். அந்த பார்கிங் இடத்தில் எப்பொழுதுமே வெளிச்சம் குறைவாக தான் இருக்கும். இன்று பார்த்து கும்மிருட்டாக இருந்தது.
எப்பொழுதும் பார்க்கிங் போட்டவுடன் குடுகுடுவென லிப்டுக்கு ஓடுபவள், திரும்ப வரும் போது அவசரமாக காரைக் கிளப்பி வெளியேறிவிடுவாள். வெளியே டெரர் போஸ் கொடுத்தாலும், நிஜத்தில் தொடைநடுங்கி அவள். ஊரில் உள்ள போபியா எல்லாம் இவளிடம் கைக்குலுக்கி குடி இருந்தார்கள். அதில் அதி முக்கிய நிக்தோபோபியா(இருட்டில் ஏற்படும் பயம்) தலையை நீட்டி எட்டிப் பார்த்தது இப்பொழுது.
உடல் நடுங்க , வியர்த்து விறுவிறுக்க, மூச்சு சீரில்லாமல் துடித்தது உமாவுக்கு. கைப்பையைத் துளாவி போனை எடுத்தவள், அதில் இருந்த டார்ச்லைட்டை ஆன் செய்து சுற்றிப் பார்த்தாள். டார்ச் வெளிச்சம் தனக்கு வெகு அருகில் நின்றிருந்த உருவத்தின் மேல் பட, பயந்து அலறியவள் ஓட எத்தனித்து கால் இடறி கீழே விழுந்தாள்.
அவள் அருகே நெருங்கிய அந்த உருவம்,
“பாரதி, உனக்கு ஒன்னும் அடி இல்லையே. என்னைப் பார்த்து என்ன பயம்? ஆர் யூ ஆல்ரைட்” என கேட்டது.
‘நம்ம பேருலாம் தெரியுது! குரலும் கேட்ட மாதிரியே இருக்கு. யாரோ தெரிஞ்சவங்கதான் போல இருக்கு’ என பயத்தை விலக்கியவள், எகிறி துடிக்கும் மூச்சை சமன் செய்ய நெஞ்சை நீவிவிட்டாள்.
“ஐம் ஓகே! நீங்க யாரு?” என கேட்டவாறு எழ முயற்சித்தாள்.
அவன் கைப்பிடித்து அவளைத் தூக்கி நிறுத்தினான்.
“என்னைத் தெரியலயா பாரதி?”
டார்ச்சை மீண்டும் அவன் முகத்தில் அடித்துப் பார்த்தவள்,
“தெரிஞ்ச மாதிரி தான் இருக்கு. தெரியாத மாதிரியும் இருக்கு சார்”
“சார்னு கூப்பிட்டு என்னை அந்நியப்படுத்தாதே பாரதி. காலேஜ்ல உன்னோட சீனியர் ராமானுஜம். மறந்துட்டியா?” முறுவலித்தான்.
‘அடேய்! அந்த அம்மாஞ்சி ராமானுஜமா நீ? ஆளே அடையாளம் தெரியல! எண்ணெய் சட்டியில தலைய விட்ட மாதிரி முடிய வழிச்சு சீவிட்டு வருவீயே, இப்போ என்ன ஸ்டைலா ஸ்பைக் வச்சிருக்க. என்னைப் பார்த்தாலே முகத்த குனிஞ்சிக்குவ, இப்போ கண்ண பார்த்து பேசற. தாடி மீசைலாம் வச்சு பெரிய அப்பாடக்கரு மாதிரி இருக்க! டோட்டல் சேஞ்ச் ஓவர் மாமு’
“நல்லா இருக்கீங்களா மிஸ்டர் ராமானுஜம்?” எவ்வளவு மறைத்தும் குரலில் லேசாக எரிச்சல் எட்டிப் பார்த்தது. இருக்காதா பின்னே! இவள் எங்கு போனாலும், பாடிகார்ட் மாதிரி பின்னாலேயே சுற்றுவானே காலேஜில். இவளின் நண்பர்கள் பட்டாளம் இவன் பெயரை சொல்லியே இவளைக் கலாய்த்து தள்ளுவார்கள்.
“டீ உமா! உன் ஆளு ராமா வந்துட்டாருடி. உமா, ராமா வாவ்! பேருல கூட என்ன ஒரு பொருத்தம். இன்னிக்கும் உனக்கு மேட்சிங்கா சட்டைப் போட்டுட்டு வந்துருக்காருடீ. நிஜமா சொல்லு, நீ கிளம்பற முன்ன அவனுக்கு மேசேஜ் போட்டு இந்தக் கலருல சட்டை போடுங்கன்னு சொல்லிட்டு தான வர? “ ஓட்டி எடுப்பார்கள்.
கடுப்பில் இவள் திரும்பி பார்த்தால், சட்டென முகத்தைத் தொங்கப் போட்டுக் கொள்வான். சுறுசுறுவென கோபம் ஏறும் இவளுக்கு.