Niceவெகு நாட்களுக்கு பிறகு, இன்று நிம்மதியான மதிய உறக்கம். புத்தக திருவிழா வேலைகள், புது கவிதையை முடிக்க என உறக்கமே இல்லாமல் ஒன்னரை மாதம் கழிந்ததில் ஒருவித அழுத்தத்தோடே இருந்தேன். இப்போது நாம் அறிமுகப்படுத்திய பெரும்பாலான எழுத்தாளர்களின் புத்தகங்களின் சேல்ஸ் திருப்தியாக இருக்கிறது என்ற செய்தி வந்த பிறகுதான் இந்த நிம்மதி. இருபத்தி இரண்டு புத்தகங்கள் நமது பதிப்பகம் மூலம் என்று சொல்லும் போதே, நமது எழுத்தாள தோழிகளே அவ்வளவு பயந்தார்கள். 'வேணாம் சஷிம்மா... இவ்வளவு பெரிய ரிஸ்க் தேவையா?' என்று அவர்கள் கேட்டதெல்லாம் என்னுடைய நலனுக்காகத்தான். ஆனால் நான் உறுதியாக நிற்பதை பார்த்த பின் ஒவ்வொருவரும் வேலைகளை இழுத்துப் போட்டுக் கொண்டு செய்தார்கள். இந்த அன்புக்கு என்ன கைமாறு செய்து விட முடியும்? லவ் யூ ஆல் மக்களே!
இந்த சந்தோஷத்தோடு இன்று முதல் சைட்டில் புது கவிதையை ஆரம்பிக்கிறேன். ஆரம்பம் முதலே நிறைய மாற்றங்கள் உள்ளதால், வாசகர்களுக்கு பொங்கல் பரிசாக முதல் அத்தியாயத்திலிருந்து பதிவு செய்ய தொடங்குகிறேன்.
View attachment 21005
புது கவிதை 1
Happy Reading!