Muthupandi
அமைச்சர்
Nice
notopening maஹாய் மக்களே
எல்லாரும் ஹேப்பியா? மீ வெரி ஹேப்பி அண்ணாச்சி. ஒவ்வொரு Comments, ரிவியூவையும் பார்க்கும் போது சந்தோஷமா இருக்கு. அதே சந்தோஷதோட அடுத்த எபியும் குடுக்கறேன். அதுக்கு முன்னாடி சில வார்த்தைகள். இது ஜஸ்ட் கிண்டலுக்காக மட்டுமே. ஆனா அந்த பிடிஎப் பை பார்த்த போது மனம் ரொம்பவுமே வருந்தியது. எவ்வளவு நாள் உழைப்பை இவர்கள் அசால்ட்டாக திருடுகிறார்கள் என்று. அப்படி திருடுவதை கூட ஒழுங்காக செய்ய மாட்டார்களா என்று வேதனையாகவும் இருந்தது. சோ பிடிஎப் போடறவங்க கொஞ்சம் கவனமா போடும்படி கேட்டுக் கொள்கிறேன்.
புது கவிதை பிடிஎப்பில் படிப்பவர்கள் கவனத்துக்கு:
pdf ஐ நானும் பார்த்தேன். ஆனா நடுவில் நான் சேர்த்திருக்கும் epi எதுவுமே அதில் இல்லையே பாஸ்? அதை படிச்சா எப்படிங்க கதை புரியும்? pdf போட்டவங்க பிளாகிலிருந்து அத்தியாயங்களை எடுத்துக் கொண்டு, கடைசி அத்தியாயங்களை புத்தகத்திலிருந்து எடுத்து மெனக்கெட்டு சேர்த்திருக்கிறார்கள். (ocr ஆ typing ஆ? ஆனா கொஞ்சம் மொக்கை தான்) அது யார் செய்தது என்பதெல்லாம் எங்களுக்கு தெரியும். மக்களுக்கு நாங்கள் சேவை செய்கிறோம் என்று கூறுவார்கள். இது சேவையா? செய்யற சேவைய சரியா செய்யுங்க, அதாவது ஒழுங்கா முழு கதையை புத்தகத்தில் இருப்பது போல போடுங்க பாஸ்.
அதில் படித்துவிட்டு டக்குன்னு முடிஞ்சு போச்சு, இது இல்ல, அது இல்ல என்று என்னிடமே வந்து கேட்கும் போது சத்தியமா எனக்கு 'இவங்க என்ன கேட்கிறாங்க?' என்று புரியவில்லை. அதுக்கப்புறம் தான் பிடிஎப் பை பார்க்கும் போது புரிகிறது. பொதுவாகவே, நான் சைட்டில் எழுதி முடித்து விட்டு perfection காக நான் நிறைய சேர்ப்பேன், நிறைய cut செய்வேன். புது கவிதையில் நடுவில் நிறைய சேர்த்திருக்கிறேன். நிறைய தூக்கி இருக்கிறேன், லாஜிக் காக. அதை புத்தகத்தில் படித்தவர்கள் உணர்ந்திருப்பார்கள்.
அதனால் pdf இல் படித்தவர்கள், படிக்க நினைப்பவர்களுக்கு நான் சொல்வதெல்லாம்; சைட்டில் நான் அப்டேட் செய்ய ஆரம்பித்து விட்டேன், அதனால் அரைகுறையாக pdf இல் படித்து விட்டு குழம்ப வேண்டாம், என்னையும் குழப்ப வேண்டாம் என்று கேட்டுக் கொள்கிறேன்.
Happy Reading
Puthu kavithai 2