1000 பாரதி வந்தாலும் இதை மாற்ற முடியாது....... நாம் ஒவ்வொருவரும் பாரதியாய் மாற வேண்டும்......வெறும் சதைபிண்டங்களா
பெண்கள்?
அந்த உடலில் உணர்வில்லையா?
கண்ணில் அகப்படாமல் மறைந்துள்ள
உயிரில்லையா?
எங்களின் அங்கங்கள்தானே வேறு
ஆசைகள் அவைதாமே...
தொலைகாட்சியிலும்
நாயகனாய் வரும் ஆண்கள்...
கவர்ச்சிக்காக கலையப்பட்ட பெண்கள்...
சுகங்களில் பங்கெடுக்க நீங்கள்
சுமைகள் மட்டும் எங்களின் சுழற்ச்சியில்தான்..
இலக்கியவாதிகள் கூட வானத்தை ஆண்மை என்றும்
மிதிப்படும் பூமியை பெண்மை என்றும் பறைசாற்றியது ஏன்?
பேருந்தில் ஊசாலாடும் ஆண்களுக்கு
கருவினை சுமந்து ஈன்றெடுக்கும் வலியை உணர வைத்திருந்தால்
அந்த உயிரின் மதிப்பை உணர்ந்திருப்பார்கள்...
தர்மனும் துரியோதனனும் ஆடிய
விளையாட்டில்
பாஞ்சாலி பணையமாக்கப்பட்டது ஏன்?
இராமனும் இராவணணும் எதிரிகளாய் மோத
சீதை சிறையிலிடப்பட்டது ஏன்?
காலங்கள் கடந்துவிட்டன
காட்சிகள் மாறவில்லை...
கனவுகள் வளர்ந்துவிட்டன
இருப்பினும் கட்டுபாடுகள் தளரவில்லை...
அறநெறி போதித்த திருவள்ளுவனும்
கற்பினை கன்னிகளுக்கு மட்டுமே விட்டுச்சென்றான்...
பயணத்திற்காக தேரில் பூட்டிய குதிரையும் சரி...
மணமகளாய் மாங்கல்யம் பூட்டிய
பெண்களும் சரி...
வேறு வேறு அல்ல
கடிவாளம் கட்டி காண்பிக்கும் திசையில் ஓடவேண்டியதுதான்..
திருமணத்திற்கு முன்பு தந்தையின் கைப்பிடியில்...
பின்னர் கணவனின் காலடியில்..
அறுபது வயது நிரம்பிய முதுமையில் உன் கால ஏட்டை புரட்டிப் பார்த்தால்
அவை வெள்ளை காகிதங்களாகவே இருக்கும்...
நீ எழுதியவை மொத்தமும் பிறரின் ஏட்டிலே அல்லவா!
சிறகுகள் இருந்தும் பறக்காத பெண்மை
அதனை உணர்ந்து சிறகுகள் விரித்து
வானில் பறக்க நினைக்கும் பறவைகளை கடிந்து கொள்ளத்தானே செய்யும்..
வழக்கங்கள் மாறினால் வழக்குகள் தோன்றும்...
வானை நோக்கிய பறவைகளுக்கு
வேடனின் வருகை தெரியுமோ...
பலநேரங்களில் அவை தின்பண்டங்களாய் மாறிவிடவும் கூடும்...
ஆபரணங்களும் ஆடை அலங்காரங்களும் பெண்மையின் அடையாமாய் மாறிப் போயின...
அழிந்துவிடும் அழகிற்கு அவளை இலக்கணமாக்கிவிட்டு
அழியாத அறிவிற்கு அவனே ஆதாரமாகிவிட்டான்...
மையிட்டு கொண்டு கருக்க செய்தது
உங்கள் விழிகளை மட்டுமல்ல
உங்கள் வழிகளையும்தான்...
சாயம் பூசியது உங்கள் இதழ்களுக்கென்றோ நினைத்தீர்களோ!
உங்கள் வார்த்தைகளுக்கு...
கழுத்தை இறுக்கும் ஆபரணங்களை உனக்கு கொடுத்துவிட்டு
கீரடத்தை அவன்தானே சூட்டிக் கொண்டான்...
பலியாடாய் உனக்கு மாலை சூட்டிவிட்டு
புகழ் மாலையை அவனே சூட்டிக் கொள்வான்...
.
புரிந்து கொள்ளடி பெண்மையே!
பாராட்டுக்காகவோ புகழ்ச்சிக்காக எழுதப்படல.
பெண்மையில் வலி சமூகத்தின் மீதான சீற்றம்..........
நீங்க நிஜமாவே great premi kka ...புது கவிதை (PK) கடைசி பதிவு படித்து விட்டு என்னால கமேன்ட் போட முடியவில்லை..
ரொம்ப கனமான பதிவு...நான் ரொம்ப வருத்தப்பட்டேன் அதைவிட கோபமும் பட்டேன்...
பெண்களை இந்த சமுகம் இப்படி தான் இருக்கனும் என்று வரையறைக்குள் வைக்க பல சட்ட திட்டங்கள் ...
வீண போன நாமும் அதை தலையாய கடமை என்று பின் பற்றுகிறோம்...
ஏன் எங்க அம்மா எனக்கு 20 வயது இருக்கும் போது..
நான் வேலைக்கு போயிட்டு இரவு தாமாதமாக வந்த ... என்ன சொல்லுவாங்க தெரியுமா???
அந்த பக்கம் தெருவிளக்கு இல்லை, ஆள்நடமாட்டம் இல்லை உன்னை ஏதாவது யாராவது செய்தால் ... (அவங்க சொல்ல வந்த விஷயம் இது தான் உன் கற்புக்கு பங்கம் வந்தால் )... அவ்வளவு தான் நான் உயிருடன் இருக்க மாட்டேன்...என்னை பயமுறுத்த அவங்க சொன்ன வார்த்தை...
இருட்டில் வண்டி ஒட்டி ஏதாவது பள்ளத்தில் விழுந்து கை, கால் உடைந்தால் என்ன ஆகும் என்று சொல்லவில்லை அதை விட என் கற்புக்கு தான் முக்கியதுவம் ...
எங்க அம்மாகிட்ட சொன்னேன்
கை, கால் உடைஞ்சா என்னால் இயல்பான வாழ்க்கை வாழ முடியாது...
ஆனால் என் கற்பு போனாலும் என்னால வாழ முடியும் ... என்னை பொறுத்தவரை அதுவும் ஒரு accident than fracture மாதிரி...
முதலில் இந்த பாழபோன கற்பை பத்தி பேசாதே...
இப்படி பேசிய நம்மை நாமே இன்னும் அடிமை படுத்திகொள்கிறோம்...
எனக்கு ஒன்னும் ஆகாது.. நான் வேலை செய்வதே leather manufacturing அங்கு வேலைக்கு வருபவர்கள் எல்லாம். பெரியமேடு அவங்களை வைத்தே வேலை வாங்குறேன் ... தயவு செய்து என் தைரியத்தை குலைக்காதே அப்புறம் பாக்குறது எல்லாத்தையும் பார்த்து பயம் ...
என் Scooty pep la தி நகரில் இருந்து நுங்கம்பாக்கம் பத்து மணிக்கு தனியாக வருவேன்... முடிந்த வரை main ரோட்டில் வருவேன் எங்க அம்மா சொன்ன ஒரே காரணத்தால் .... மற்றபடி நான் நானாக இருந்தேன் இருக்கிறேன் இருப்பேன் ...
எனக்கு சரி என்று படாவிட்டால் என்னால எதையும் செய்ய முடியாது...
நான் கோவிலுக்கு போவேன் என் மாதவிடாய் காலங்களிலும் ... நான் பூஜை செய்வேன் என் மாதவிடாய் காலங்களிலும் ... எனக்கு அதில் தவறு என்று எதுவும் படவில்லை...
மூடபழகத்தை முதலில் ஒழிக்க வேண்டும்....
அப்புறம் தான் பெண்களுக்கு முழு சுதந்திரம் ....
நமக்கு நாமே கட்டுபாடு வகுத்து கொண்டு...
நமக்கு நாமே குழி தோண்டிக் கொள்கிறோம் ....
பெண்ணுக்கு பெண் தான் எதிரி...
அதை நினைத்தால் இன்னும் கோபம்....
சமீபத்தில் நடந்த ராஜலட்சுமி மரணம் கொடுமையின் உச்சம்.... அதற்க்கு குற்றவாளியின் மனைவியும் ஒரு காரணம்...
Sunitha Krishna is always my inspiring person...
நான் ரொம்ப சோர்வாக இருந்த அவங்க விடியோ தான்பார்ப்பேன் அப்புறம் நான் என்னைய கேட்கிற கேள்வி இது தான்...
இவங்க விட நீ வாழ்க்கையில் சோதனைகளை சந்தித்துவிட்டியா...
அவ்வளவு தான் என் கவலைகளை மறந்து விடுவேன் ....
Thank you Moni for sharing this video in this thread....??
ஒவ்வொரு நாளும் புதுசா தெரிறீங்க ப்ரேம்க்கா....You are something special....புது கவிதை (PK) கடைசி பதிவு படித்து விட்டு என்னால கமேன்ட் போட முடியவில்லை..
ரொம்ப கனமான பதிவு...நான் ரொம்ப வருத்தப்பட்டேன் அதைவிட கோபமும் பட்டேன்...
பெண்களை இந்த சமுகம் இப்படி தான் இருக்கனும் என்று வரையறைக்குள் வைக்க பல சட்ட திட்டங்கள் ...
வீண போன நாமும் அதை தலையாய கடமை என்று பின் பற்றுகிறோம்...
ஏன் எங்க அம்மா எனக்கு 20 வயது இருக்கும் போது..
நான் வேலைக்கு போயிட்டு இரவு தாமாதமாக வந்த ... என்ன சொல்லுவாங்க தெரியுமா???
அந்த பக்கம் தெருவிளக்கு இல்லை, ஆள்நடமாட்டம் இல்லை உன்னை ஏதாவது யாராவது செய்தால் ... (அவங்க சொல்ல வந்த விஷயம் இது தான் உன் கற்புக்கு பங்கம் வந்தால் )... அவ்வளவு தான் நான் உயிருடன் இருக்க மாட்டேன்...என்னை பயமுறுத்த அவங்க சொன்ன வார்த்தை...
இருட்டில் வண்டி ஒட்டி ஏதாவது பள்ளத்தில் விழுந்து கை, கால் உடைந்தால் என்ன ஆகும் என்று சொல்லவில்லை அதை விட என் கற்புக்கு தான் முக்கியதுவம் ...
எங்க அம்மாகிட்ட சொன்னேன்
கை, கால் உடைஞ்சா என்னால் இயல்பான வாழ்க்கை வாழ முடியாது...
ஆனால் என் கற்பு போனாலும் என்னால வாழ முடியும் ... என்னை பொறுத்தவரை அதுவும் ஒரு accident than fracture மாதிரி...
முதலில் இந்த பாழபோன கற்பை பத்தி பேசாதே...
இப்படி பேசிய நம்மை நாமே இன்னும் அடிமை படுத்திகொள்கிறோம்...
எனக்கு ஒன்னும் ஆகாது.. நான் வேலை செய்வதே leather manufacturing அங்கு வேலைக்கு வருபவர்கள் எல்லாம். பெரியமேடு அவங்களை வைத்தே வேலை வாங்குறேன் ... தயவு செய்து என் தைரியத்தை குலைக்காதே அப்புறம் பாக்குறது எல்லாத்தையும் பார்த்து பயம் ...
என் Scooty pep la தி நகரில் இருந்து நுங்கம்பாக்கம் பத்து மணிக்கு தனியாக வருவேன்... முடிந்த வரை main ரோட்டில் வருவேன் எங்க அம்மா சொன்ன ஒரே காரணத்தால் .... மற்றபடி நான் நானாக இருந்தேன் இருக்கிறேன் இருப்பேன் ...
எனக்கு சரி என்று படாவிட்டால் என்னால எதையும் செய்ய முடியாது...
நான் கோவிலுக்கு போவேன் என் மாதவிடாய் காலங்களிலும் ... நான் பூஜை செய்வேன் என் மாதவிடாய் காலங்களிலும் ... எனக்கு அதில் தவறு என்று எதுவும் படவில்லை...
மூடபழகத்தை முதலில் ஒழிக்க வேண்டும்....
அப்புறம் தான் பெண்களுக்கு முழு சுதந்திரம் ....
நமக்கு நாமே கட்டுபாடு வகுத்து கொண்டு...
நமக்கு நாமே குழி தோண்டிக் கொள்கிறோம் ....
பெண்ணுக்கு பெண் தான் எதிரி...
அதை நினைத்தால் இன்னும் கோபம்....
சமீபத்தில் நடந்த ராஜலட்சுமி மரணம் கொடுமையின் உச்சம்.... அதற்க்கு குற்றவாளியின் மனைவியும் ஒரு காரணம்...
Sunitha Krishna is always my inspiring person...
நான் ரொம்ப சோர்வாக இருந்த அவங்க விடியோ தான்பார்ப்பேன் அப்புறம் நான் என்னைய கேட்கிற கேள்வி இது தான்...
இவங்க விட நீ வாழ்க்கையில் சோதனைகளை சந்தித்துவிட்டியா...
அவ்வளவு தான் என் கவலைகளை மறந்து விடுவேன் ....
Thank you Moni for sharing this video in this thread....??
Aama bhagya ka... Ovvoru naalum ovvoru parinaamam.. ???ஒவ்வொரு நாளும் புதுசா தெரிறீங்க ப்ரேம்க்கா....You are something special....
உங்க தைரியம் அளப்பரியது...
Hats off you kka...
Such a energetic person...And inspired me lot...
நானும் உங்கள மாதிரியே இருக்கனும் நினைக்குகிறேன்...
Iron lady .....???