இந்த நிலை என்று மாறும்?
இந்த பால் மனம் மாறா பிள்ளைகளை தப்பா பாக்க வச்சது எது?
பட்டாசு வெடிக்க நேரம் கொடுத்து, வெறி கொள்ள வைக்கிற டாஸ்மாக் விற்பனைக்கு டார்கெட் வைக்கிற அரசாங்கமா?
பக்கத்து வீட்டுல இருக்கிறவங்க யாருன்னு கூட தெரியாம தனி மனித சுதந்திரத்துல அதீத ஈடுபாடு கொண்ட சமூகமா?
காதல்ங்கிற பேர்ல வரைமுறை இல்லா காமக் காட்சிகளை கொடுத்து சீரழிக்கிற கலைத்துறையா?
வேலைக்கும் போயி வீட்டுக்கும் வந்து உழைக்கும் அம்மா அப்பா, கொஞ்சம் நல்ல புத்தியும் சொல்லி கொடுக்காததாலா?
தப்பு பண்ணினா டீச்சர் அடிப்பாரு / திட்டுவாரு-ங்கிற காலம் போயி, ஸ்டூடெண்ட்ஸ் தண்ணீ அடிச்ச பாட்டிலை பொறுக்கி போட வேண்டிய நிலையில் இருக்கும் ஆசிரியர்களா?
இல்ல ஆசிரியர்களுக்கே தண்ணீ வாங்கி வர வேண்டிய கட்டாயத்துல இருக்கிற மாணவர்களா?
எல்லாத்துக்கும் மேல, மலையளவு வழக்குகள் இருக்கும் போது, முன்னணி நடிகரின் படத்துக்கு பிரச்சனைன்னா மூக்கு துருத்தி வரும் நீதித்துறையா?
தேவைப்படற அளவு நீதிபதிகளை நியமிச்சு, எல்லா வழக்குகளையும் முடிச்சு, தப்பு செஞ்சா , தண்டனை உடனுக்குடன்-ன்னு சாட்டையை சுழட்ட வேண்டிய நீதிதேவதை .. கண்ல கருப்புத்துணி கட்டினது, இதுக்குத்தானா? [உன் ஆடை பத்திரம் நீதிதேவதையே .....]
அதுவரை இவரை போன்றோரின் போராட்டங்கள் ...... ...... ................. ......... .......
இன்னும் எத்தனை பூக்கள், மிதிபடுமோ ....?
மனிதம் மரித்துப் போனது....
மனமோ மரத்துப் போனது.....
இனியாவது குடிப்பழக்கத்துக்கு ஆளாகாத, கற்பை சூறையாடாத, தனி மனித ஒழுக்கத்தை நிலை நிறுத்தற நாயகர்களை ஊடகங்கள் கொடுக்கணும்.
மோனிம்மா ...
பதிவு அருமை..