நீங்கள் நினைத்தது தவறில்ல @Madhumathi Bharath . மற்ற நேரங்களில் அது பொருந்தும். ஆனால் போட்டி என்று அறிவித்து, பிறகு தளத்தில் பரிசு பெற்ற கதைகள் என்று அறிவித்த பின்னர், அதை நீக்கி விட்டால், வாசகர்கள் தளத்தில் அந்தக் கதையை படிப்பது எப்படி சாத்தியம் ?எனக்கு இது இவ்வளவு பெரிய விஷயம் என்று தோன்றவில்லை மோனிஷா அவர்களே....சாதாரண விஷயம் என்று நினைத்து விட்டேன்.கதையை ஏதாவது ஒரு தளத்தில் எழுதுவதும் பின் எழுத்தாளர் சொல்லும் பொழுது அதை நீக்குவதும் இயல்பான ஒன்று தானே...அப்படி எண்ணிதான் நான் போஸ்ட் போட்டது.கதையை முடிக்காத வாசகர்களுக்கு தெரிவித்த பின்னரே லிங்கை எடுக்க வேண்டும். இல்லையென்றால் வாசகர்கள் தவிக்க நேருமே என்று எண்ணியும் தான் பொதுவில் போட்டது.