banumathi jayaraman
முடியிளவரசர்
- Joined
- Jan 17, 2018
- Messages
- 28,178
- Reaction score
- 67,725
முதலில் இந்த அரிய அருமையான
நடுவர்-ங்கிற பதவியை, வாய்ப்பை
இரண்டாவது தடவையாக எனக்குத்
தந்த சஷி முரளி டியர் @ பிரியங்கா
முரளி டியருக்கும் இந்த சைட்டின்
இனியத் தோழர் தோழிகளுக்கும்
என்னுடைய மனமார்ந்த நன்றிகள்
கலந்த வணக்கங்கள்
1. ஹுஸ்னா டியரின் "அம்மா"
நிழலின் அருமை வெயிலில்
தெரிவது போல தோழியின்
தந்தையின் இறப்பு பரிக்ஷயாவுக்கு
நல்லதொரு படிப்பினையைக்
கொடுத்து தனி ஒரு மனுஷியாக
வீட்டுவேலை செய்து பரிக்ஷயாவை
வளர்த்து ஆளாக்கி படிக்க வைத்த
அந்த ஏழை விதவைத்தாயின்
மீது பாசம் காட்டணும்=ங்கிற
ஞானோதயம் பரிக்கு வருகிறதே
2. ஜெயலட்சுமிகோமதி டியரின் "நடிகை"
நடிகைகளின் வாழ்க்கை எப்பவுமே
விளக்கில் விழுந்த விட்டில்
பூச்சியின் நிலைமைதான்
நடிகையென்பவள் ஒரு
பாவப்பட்ட பிறவி
ஆனாலும் அவளுக்கும் பாசம்,
நேசம் உண்டு-ங்கிறதை
தன்னுடைய காதலனை
தங்கைக்கு மணமுடித்து
அருமையாக நிரூபிக்கிறாள்,
இந்த நடிகை
3. தனுஜா செந்தில்குமார் டியரின் "கடலாழி பெண்ணாழி"
கடலை விட ஒரு பெண் மனசு
ரொம்பவும் ஆழமுன்னும்,
கடல் எப்படி தன்னோட
ஆழத்தில் பலவித அரிய
பொருட்களை வைத்துள்ளதோ
அதே போல ஒவ்வொரு
பெண்ணும், தனக்குள்ளேயே
மகள், மனைவி, சகோதரி,
தாய்-ன்னு பலவிதமான
பரிணாமங்களாய்
மிளிர்கிறாள்-ன்னும்
ஒவ்வொரு நிலையிலும்
பெண் என்பவள் எப்பொழுதுமே
அன்பை மட்டுமே மற்றவரிடம்
கொட்டுகிறாள்-ன்னும் அழகாக
சொல்லியிருக்காங்க, தனுஜா டியர்
இந்த பெண் மனசின் ஆழத்தை
நம்மைப் படைத்த பிரம்மனுக்கே
அறிய முடியலைங்கறப்போ
கொஞ்சமில்லை, நிறையவே
கர்வமாக இருக்குப்பா
''உச்சிதனை முகிர்ந்தால்
கர்வம் ஓங்கி வளருதடி''-ங்கிற
பாரதியின் பாடல்தான் என்னோட
நினைவுக்கு வருதுப்பா
4. தனுஜா செந்தில்குமார் டியரின் "பழமையே பெருமை"
ஓல்டு ஈஸ் கோல்டு-ன்னு
பெரியவா சொல்லுவா
எப்பவுமே பழசுக்கு இருக்கிற
மவுசும் மதிப்பும் புதுசுக்கு
வர கொஞ்ச நாளாகும்
சிவகாளையின் கம்பீரம்
வெகு அருமை
உண்மைதான்
அன்றைய ஜல்லிக்கட்டு
விளையாட்டில் வீரம், நேர்மை
கண்ணியம் இதெல்லாம்
இருந்தது
ஆனால் இப்போ………………?
5. சந்தியா ஸ்ரீ டியரின் "பைத்தியம்"
செந்திலுக்கு இருக்கும் பாசமும்,
மனித நேயமும் சிவமணிக்கு
ஏன் இல்லாமல் போனது?
பைத்தியம்-ன்னு சொல்லப்பட்ட
பாட்டி, யார் பைத்தியமுன்னு
தெளிவாக சொல்லிட்டாங்க
ஆம். பத்து மாதம் தன்னை
சுமந்து பெற்ற தாய்க்கு, ஒரு
வேளை சோறு போடாமல்
தவிக்க விடும் ஒவ்வொரு
பிள்ளையும் இந்த உலகில்
பைத்தியம்-தான்ப்பா
6. சுவிதா டியரின் "விடிவெள்ளி"
இன்றைய காலகட்டத்தில் ஏழை
மற்றும் நடுத்தர வர்க்க
மனிதர்களுக்கு மருத்துவப்
படிப்பு-ங்கிற எட்டாக்கனியாகி
விட்டதே
அரசு அளவில் நடக்கும் இந்த
அநீதிகளுக்கு யார்தான்
முடிவு கட்டுவார்களோ?
ஸ்டேட் போர்ட்டில் படித்தவனுக்கு
நீட் தேர்வில் ஏன் ஜெயிக்க
முடிவதில்லை?
அரசு பள்ளிகளில் படிப்பவர்களுக்கு
திறமை இல்லை-ன்னு யார்
சொன்னது?
இன்னொரு அனிதாவாக
உருவாகாமல் ஊரார் ஹெல்ப்
செய்ய, ஸ்ரீலக்ஷ்மிக்கு விரும்பிய
கல்வி கிடைத்தது-ன்னு
நல்ல எண்ணங்களோடு
கதையை பாசிட்டிவாக
முடித்திருக்கிறார், சுவிதா டியர்
7. ஈஸ்வரி காசிராஜன் டியரின் "மனைவி"
பார்த்துக்கொண்டிருந்த வேலை
போய் வேறு வேலை தேடும்
குமரன் வேலை கிடைக்காத
விரக்தியில் மனைவியைத்
திட்டுகிறான்
ஆனால் குணவதியான
குமரனின் மனைவி பொறுமை
காக்கிறாள்
பணம், வேலையில்லாத
நண்பனின் மனைவி, அவனை
விட்டுப் போன நிலையில்
குமரனுக்கு வரும் பயம்,
நியாயமே
மனைவி அமைவதெல்லாம்
இறைவன் கொடுத்த
வரம்-ங்கிறது, உண்மைதான்
ஆண்கள் இதை உணர்ந்து
மனைவியை மதித்தால்
அவங்க வாழ்வு சிறக்குமுன்னு
ஈஸ்வரி டியர் சொல்றாங்க
8. செல்வ சங்கரி டியரின் "வாழ்க்கை பக்கங்கள்"
காதல் தோல்வியால் இறந்த
தோழிக்கு வருந்தும் திவ்யா
தளர்வுற்ற மகளின் மனதை
தற்செயலாக சந்தித்த தன்
முன்னாள் காதலியை வைத்தே
சாதியினால் பிளவுபட்ட
தன்னோட காதல் தோல்வியை
வைத்தே மாற்றும், அப்பா ராம்
வாழ்க்கையின் நிதர்சனத்தை
புரிய வைக்கும் நல்லதொரு
அப்பா, ராம்
மிகவும் அருமையான
சிறுகதை
‘’நம் வாழ்க்கை புத்தகத்தில்
காதல் ஒரு பக்கம்தான்’’
‘’வாழ்க்கையில் காதல்-ங்கிற
பக்கம் சரியில்லாமல்
போனாலும், திருமணம்-ங்கிற
அழகான பக்கம் காத்திருக்கும்’’
ஆஹா, என்ன அருமையான,
அழகான வரிகள்?
ஒரு தேர்ந்த எழுத்தாளரைப்
போலவே எழுதியிருக்கிறீர்கள்,
செல்வ சங்கரி டியர்
9. ஈஸ்வரி காசிராஜன் டியரின் "வாழ்க்கை"
கணவன், மனைவி இருவரும்
படித்து வேலைக்கு செல்வதால்
நீ பெரிதா, நான் பெரிதா-ங்கிற
ஈகோ வருது
அந்த ஈகோ, அவங்களோட
பிள்ளைகளையும்தானேப்பா
பாதிக்குது
வெளி நபர்களிடம் விட்டுக்
கொடுத்துப் போகும் பொழுது
தன்னையே நம்பி வந்த
மனைவியிடமும் கொஞ்சம்
விட்டுக் கொடுத்து வாழணுமுன்னு
அழகானதொரு வாழ்க்கையைப்
பற்றி அப்பாவின் மூலமாக
மகனுக்கு நன்றாகவே
விளக்கிச் சொல்லியிருக்கிறார்,
ஈஸ்வரி காசிராஜன் டியர்
நடுவர்-ங்கிற பதவியை, வாய்ப்பை
இரண்டாவது தடவையாக எனக்குத்
தந்த சஷி முரளி டியர் @ பிரியங்கா
முரளி டியருக்கும் இந்த சைட்டின்
இனியத் தோழர் தோழிகளுக்கும்
என்னுடைய மனமார்ந்த நன்றிகள்
கலந்த வணக்கங்கள்
1. ஹுஸ்னா டியரின் "அம்மா"
நிழலின் அருமை வெயிலில்
தெரிவது போல தோழியின்
தந்தையின் இறப்பு பரிக்ஷயாவுக்கு
நல்லதொரு படிப்பினையைக்
கொடுத்து தனி ஒரு மனுஷியாக
வீட்டுவேலை செய்து பரிக்ஷயாவை
வளர்த்து ஆளாக்கி படிக்க வைத்த
அந்த ஏழை விதவைத்தாயின்
மீது பாசம் காட்டணும்=ங்கிற
ஞானோதயம் பரிக்கு வருகிறதே
2. ஜெயலட்சுமிகோமதி டியரின் "நடிகை"
நடிகைகளின் வாழ்க்கை எப்பவுமே
விளக்கில் விழுந்த விட்டில்
பூச்சியின் நிலைமைதான்
நடிகையென்பவள் ஒரு
பாவப்பட்ட பிறவி
ஆனாலும் அவளுக்கும் பாசம்,
நேசம் உண்டு-ங்கிறதை
தன்னுடைய காதலனை
தங்கைக்கு மணமுடித்து
அருமையாக நிரூபிக்கிறாள்,
இந்த நடிகை
3. தனுஜா செந்தில்குமார் டியரின் "கடலாழி பெண்ணாழி"
கடலை விட ஒரு பெண் மனசு
ரொம்பவும் ஆழமுன்னும்,
கடல் எப்படி தன்னோட
ஆழத்தில் பலவித அரிய
பொருட்களை வைத்துள்ளதோ
அதே போல ஒவ்வொரு
பெண்ணும், தனக்குள்ளேயே
மகள், மனைவி, சகோதரி,
தாய்-ன்னு பலவிதமான
பரிணாமங்களாய்
மிளிர்கிறாள்-ன்னும்
ஒவ்வொரு நிலையிலும்
பெண் என்பவள் எப்பொழுதுமே
அன்பை மட்டுமே மற்றவரிடம்
கொட்டுகிறாள்-ன்னும் அழகாக
சொல்லியிருக்காங்க, தனுஜா டியர்
இந்த பெண் மனசின் ஆழத்தை
நம்மைப் படைத்த பிரம்மனுக்கே
அறிய முடியலைங்கறப்போ
கொஞ்சமில்லை, நிறையவே
கர்வமாக இருக்குப்பா
''உச்சிதனை முகிர்ந்தால்
கர்வம் ஓங்கி வளருதடி''-ங்கிற
பாரதியின் பாடல்தான் என்னோட
நினைவுக்கு வருதுப்பா
4. தனுஜா செந்தில்குமார் டியரின் "பழமையே பெருமை"
ஓல்டு ஈஸ் கோல்டு-ன்னு
பெரியவா சொல்லுவா
எப்பவுமே பழசுக்கு இருக்கிற
மவுசும் மதிப்பும் புதுசுக்கு
வர கொஞ்ச நாளாகும்
சிவகாளையின் கம்பீரம்
வெகு அருமை
உண்மைதான்
அன்றைய ஜல்லிக்கட்டு
விளையாட்டில் வீரம், நேர்மை
கண்ணியம் இதெல்லாம்
இருந்தது
ஆனால் இப்போ………………?
5. சந்தியா ஸ்ரீ டியரின் "பைத்தியம்"
செந்திலுக்கு இருக்கும் பாசமும்,
மனித நேயமும் சிவமணிக்கு
ஏன் இல்லாமல் போனது?
பைத்தியம்-ன்னு சொல்லப்பட்ட
பாட்டி, யார் பைத்தியமுன்னு
தெளிவாக சொல்லிட்டாங்க
ஆம். பத்து மாதம் தன்னை
சுமந்து பெற்ற தாய்க்கு, ஒரு
வேளை சோறு போடாமல்
தவிக்க விடும் ஒவ்வொரு
பிள்ளையும் இந்த உலகில்
பைத்தியம்-தான்ப்பா
6. சுவிதா டியரின் "விடிவெள்ளி"
இன்றைய காலகட்டத்தில் ஏழை
மற்றும் நடுத்தர வர்க்க
மனிதர்களுக்கு மருத்துவப்
படிப்பு-ங்கிற எட்டாக்கனியாகி
விட்டதே
அரசு அளவில் நடக்கும் இந்த
அநீதிகளுக்கு யார்தான்
முடிவு கட்டுவார்களோ?
ஸ்டேட் போர்ட்டில் படித்தவனுக்கு
நீட் தேர்வில் ஏன் ஜெயிக்க
முடிவதில்லை?
அரசு பள்ளிகளில் படிப்பவர்களுக்கு
திறமை இல்லை-ன்னு யார்
சொன்னது?
இன்னொரு அனிதாவாக
உருவாகாமல் ஊரார் ஹெல்ப்
செய்ய, ஸ்ரீலக்ஷ்மிக்கு விரும்பிய
கல்வி கிடைத்தது-ன்னு
நல்ல எண்ணங்களோடு
கதையை பாசிட்டிவாக
முடித்திருக்கிறார், சுவிதா டியர்
7. ஈஸ்வரி காசிராஜன் டியரின் "மனைவி"
பார்த்துக்கொண்டிருந்த வேலை
போய் வேறு வேலை தேடும்
குமரன் வேலை கிடைக்காத
விரக்தியில் மனைவியைத்
திட்டுகிறான்
ஆனால் குணவதியான
குமரனின் மனைவி பொறுமை
காக்கிறாள்
பணம், வேலையில்லாத
நண்பனின் மனைவி, அவனை
விட்டுப் போன நிலையில்
குமரனுக்கு வரும் பயம்,
நியாயமே
மனைவி அமைவதெல்லாம்
இறைவன் கொடுத்த
வரம்-ங்கிறது, உண்மைதான்
ஆண்கள் இதை உணர்ந்து
மனைவியை மதித்தால்
அவங்க வாழ்வு சிறக்குமுன்னு
ஈஸ்வரி டியர் சொல்றாங்க
8. செல்வ சங்கரி டியரின் "வாழ்க்கை பக்கங்கள்"
காதல் தோல்வியால் இறந்த
தோழிக்கு வருந்தும் திவ்யா
தளர்வுற்ற மகளின் மனதை
தற்செயலாக சந்தித்த தன்
முன்னாள் காதலியை வைத்தே
சாதியினால் பிளவுபட்ட
தன்னோட காதல் தோல்வியை
வைத்தே மாற்றும், அப்பா ராம்
வாழ்க்கையின் நிதர்சனத்தை
புரிய வைக்கும் நல்லதொரு
அப்பா, ராம்
மிகவும் அருமையான
சிறுகதை
‘’நம் வாழ்க்கை புத்தகத்தில்
காதல் ஒரு பக்கம்தான்’’
‘’வாழ்க்கையில் காதல்-ங்கிற
பக்கம் சரியில்லாமல்
போனாலும், திருமணம்-ங்கிற
அழகான பக்கம் காத்திருக்கும்’’
ஆஹா, என்ன அருமையான,
அழகான வரிகள்?
ஒரு தேர்ந்த எழுத்தாளரைப்
போலவே எழுதியிருக்கிறீர்கள்,
செல்வ சங்கரி டியர்
9. ஈஸ்வரி காசிராஜன் டியரின் "வாழ்க்கை"
கணவன், மனைவி இருவரும்
படித்து வேலைக்கு செல்வதால்
நீ பெரிதா, நான் பெரிதா-ங்கிற
ஈகோ வருது
அந்த ஈகோ, அவங்களோட
பிள்ளைகளையும்தானேப்பா
பாதிக்குது
வெளி நபர்களிடம் விட்டுக்
கொடுத்துப் போகும் பொழுது
தன்னையே நம்பி வந்த
மனைவியிடமும் கொஞ்சம்
விட்டுக் கொடுத்து வாழணுமுன்னு
அழகானதொரு வாழ்க்கையைப்
பற்றி அப்பாவின் மூலமாக
மகனுக்கு நன்றாகவே
விளக்கிச் சொல்லியிருக்கிறார்,
ஈஸ்வரி காசிராஜன் டியர்
Last edited: