10. மோனிஷா டியரின் என் கடவுள்
நம்முடைய கடவுள்களின் சிலைகள் வெளிநாட்டுக்கு
செல்வதைப் பார்த்து வெகு நாட்களாக என் மனதில்
இருந்த உறுத்தலுக்கு இந்த சிறுகதை படித்ததும்
கொஞ்சம் ஆறுதலாக இருந்தது, மோனிஷா டியர்
அன்னை உமாதேவிக்கே இந்த நிலைமை-ன்னா
நம்மைப் போல சாதாரண ஆளுங்க என்னதான்
செய்ய முடியும்?
ஆனால், இதே சாமான்யன் நினைத்தால் எதுவும்
செய்யலாம்
எதுவும் மாறலாம்
எதையும் மாற்றலாம்
ஏனென்றால் மாற்றம் ஒன்றுதானே, மாற்றமில்லாதது
உமாதேவி அம்மையின் காத்திருப்பு வீண் போகவில்லை
‘’கடவுளுக்காக மனிதன் காத்திருந்த காலம் போய்
மனிதனுக்காக கடவுள் காத்திருக்க
‘’எங்கள் கடவுள்களை கடத்திச் சென்று உங்கள் நாட்டு அருங்காட்சியகத்தில் வைப்பதற்கு பேர் ரசனையல்ல
களவாணித்தனம்’’
ஆஹா, என்ன உணர்வுப்பூர்வமான வார்த்தைகள்
என்னுடைய மனதிலிருந்ததை அப்படியே சொல்லி
விட்டீர்கள், மோனிஷா டியர்
11. கார்த்திகா மனோகரன் டியரின் உயிர்
போரில் இறந்த ராணுவ வீரன் கௌதம்
இளம் கணவனைப் பிரிந்தாலும் தன்னுடைய மகனை
கணவனின் விருப்பப்படி நாட்டுக்கு சேவை செய்ய
அனுப்ப, தாய்நாட்டுக்கு நல்லதொரு மகனை ஊனமில்லாமல்
அர்ப்பணிக்க எண்ணும் இளம் விதவைத் தாய் ப்ரியாவுக்கு
என்னுடைய ராயல் சல்யூட்
அந்தக் காலத்தில் கணவனையும் தந்தையையும் போரில்
இழந்த பெண்ணொருத்தி போர் முனைக்கு வீட்டுக்கு ஒரு
காவல் ஆள் கேட்ட அரசனிடம் விளையாடும் பருவத்தில்
இருக்கும் ஒரே மகனையும், இதோ என்னுடைய மகனை
அழைத்து செல்லுங்கள்=ன்னு பால் மணம் மாறாத
சின்னஞ்சிறு பிள்ளையையும் அனுப்பி வைத்தாளாம்
அந்த வழியில் வந்த பெண்களின் வீர உதிரம்தானே,
இந்த ப்ரியாவின் உடலிலும் ஓடுகிறது
கடுமையான வெயில், மழை, குளிர் இவற்றைப்
பொருட்படுத்தாமல் நம்முடைய தாய்த் திருநாட்டைக்
காக்கும் உன்னதமான மாபெரும் பணியில் ஈடுபடும்
ராணுவ வீரர்களுக்கு என்னுடைய வீர வணக்கங்கள்,
கார்த்திகா மனோகரன் டியர்
12. வநிஷா டியரின் சக்களத்தி
ஹா... ஹா... ஹா........
ஒரு செல் போனை சக்களத்தியாக்கி வழக்கம் போல
வநிஷா டியர் நமக்கு செம பல்ப் கொடுத்துட்டாங்க
ஆனாலும் மனைவியை விட அந்த பாழாப்போன
செல்போன்கள் முக்கியமா, கணவன்மார்களே?
13. வித்யா நாராயணன் டியரின் பொட்டில் அடித்தது
எப்பவுமே ஒரு பொருள் அருகில் இல்லாத பொழுதுதான்
அதனோட அருமை தெரியுமாம்
ராகவனின் தாயின் பெருமை, அடுத்தவர் விக்கரமுக்கு
தெரியும் பொழுது ராகவனுக்கு மட்டும் ஏன் தன்னோட
அம்மாவின் அருமை புரியலை?
இப்போ ராகவன் விஷ்ராந்திக்கு போவது, அன்னையை
அழைத்து வருவதற்கா?
இல்லை..........?
14, Jaa Sha டியரின் தொல்லையான பேசி
ஹா... ஹா... ஹா.........
உயிரோடிருப்பவரை இறந்து விட்டதாக சேதி சொல்லி
தனலட்சுமியை அலைக்கழித்த தொலைபேசி, உண்மையில் தொல்லைப்பேசி-தான்ப்பா
15. சௌந்தர்யா கிரிஷ் டியரின் உழைப்பாளி
எல்லோருக்கும் ஒரு கதை இருப்பது போல கோயில்
மணிக்கும் ஒரு கதையை சௌந்தர்யா டியர் கொடுத்துட்டாங்க
கோவில் மணியின் புலம்பலும் நல்லாத்தானிருக்குப்பா
யப்பா, கோவிலுக்கு வந்து சாமி கும்பிட்டு மணி
அடிக்கிறவங்க கொஞ்சம் பார்த்து அடிங்கப்பா
நம்ம ‘’மணி’’க்கும் வலிக்குமில்லே?
16. அபர்ணா டியரின் சீமந்தம்
பிள்ளை வரம் கிடைக்காமல் பலரின் ஏச்சு பேச்சுக்களுக்கும்
ஆளாக நேர்வது, எந்தப் பெண்ணின் வாழ்விலும்
நடக்கக் கூடாது-ங்கிறதே என்னோட பிரார்த்தனை
மழலைச் செல்வம் கிடைக்கப்பெறாமல் மனதளவில்
ரொம்பவே பாதிக்கப்பட்ட ஜோதிக்கு குழந்தை வடிவில்
அம்பாளே வந்து அருள் பாலிக்கிறாளோ?
அந்த பாட்டியாக வந்து வளையல் கொடுத்து ஜோதிக்கு
அம்மனே சீமந்தம் செய்தாளோ?
அருமையான சிறுகதை, அபர்ணா டியர்
17. கனிஸ்கா வர்ணா டியரின் கல்வி
எதுவுமே இல்லாதபொழுதுதான் அதனோட அருமை
தெரிய வருமோ?
தமிழ்நாட்டில் கல்வியின் இன்றைய அவல நிலையை
நன்றாகவே தோலுரித்து காட்டியிருக்கிறார் கனிஸ்கா
வர்ணா டியர்
மற்றவர்களைப் போல தன்னுடைய மகனும் நன்கு படித்து
எஞ்சினியர் ஆக வேண்டும்
நிறைய சம்பாதிக்க வேண்டும்-ங்கிற பழனியின் ஆசை
நியாயமானதுதான்
ஆனால், அதற்காக எவனோ ஒரு கூமுட்டை ப்ரெண்ட்
சொன்னான்-னு படிப்பு படிப்பு-ன்னு கண்ணன் பையனை
கசக்கி பிழிஞ்சிருக்கக் கூடாது
இப்போ முதலுக்கே மோசமாகி கண்ணன் இறந்துட்டானே?
ஏதோ ஒரு விஜயகாந்த் சினிமாவில் காட்டுவது போல
கலெக்டர் முதலான பெரிய அதிகாரிகளும் அரசியல்வாதிகளும் தன்னுடைய மக்களை படிப்பதற்கு அரசுப் பள்ளிகளில்
சேர்க்க முன்வர வேண்டும்
அப்பொழுதுதான் அரசுப் பள்ளிகளில் கல்வித்தரம் உயரும்
தனியார் பள்ளிகளின் கொட்டமும் அடங்கும்
நடக்குமா……………..:?
18. பிரேமலதா டியரின் கானல் நீர்
ஹா... ஹா... ஹா..............
செம ஜாலியான சிறுகதை
இந்த சைட்டில் வலம்வரும் க்ரீன் சேண்டுகளான லட்டு,
பட்டு, ஜெயா, பாகி எல்லோரையும் வைச்சு வைச்சு நல்லா செய்திருக்காங்க
அது மட்டுமா?
ஒரு கதையில கூட ஒரு ஹீரோவைக் கூட விடலை
எல்லோரையும் தன்னோட சிறுகதையில் இழுத்துப்பிடிச்சு
போட்டுட்டாங்க
போதாக்குறைக்கு அந்த மனநல டாக்டர் ஷாலினி,
அவங்களையும் இழுத்துட்டாங்க, பிரேமலதா டியர்
ஹா... ஹா... ஹா............
புலிகளெல்லாம் எலிகளாச்சு
பயந்து, பயந்து பம்மிய பூனைகளெல்லாம்
வேங்கைகளாச்சு
ஆண்களை ரொம்ப நல்லாவே ஒட்டியிருக்கிறார், நமது
அன்பிற்குரிய பிரேமலதா டியர்
இந்த சிறுகதையைப் படித்து என்னால் சிரிப்பை அடக்கவே
முடியலைப்பா
19. ஆர்த்தி டியரின் மூதாட்டி
மருந்துச் சீட்டுடன் பணம் தொலைந்தது தெரியாமல்
பஸ்ஸில் ஏறிய ஒரு மூதாட்டியைப் பற்றிய சிறுகதை
நல்லவேளையாக பயணச்சீட்டு வாங்குமுன் பாட்டி
இறங்கவேண்டிய இடமும் வந்துவிட்டது
செக்கிங்குக்கும் ஆள் வரலை
அப்பாடா, பாட்டியும் தப்பித்தார்
கண்டக்டரும் தப்பித்து விட்டார்
20. HANA RAVIN ஹனா ராவின் டியரின் காதல்
ஒரு ஆணோ, பெண்ணோ ஒரே பாலரிடம் எப்படி
காதல் வரும்?
ஒரு ஆண், பெண்ணைத்தான் கல்யாணம் செய்துக்க
முடியும்
ஒரு பெண், ஆணைத்தான் கல்யாணம் செய்துக்க
முடியும்
செய்யணும்=ங்கிற பழைய கலாச்சாரத்தில் மட்டுமே
எனக்கு நம்பிக்கை இருக்கு
இந்த காலகட்டத்தில் நடக்கும் இந்த மாதிரியான
கண்றாவிகள், எனக்கு பிடிப்பதில்லை
சாரி நான் கொஞ்சம் பழமையான ஆளு, HANA RAVIN டியர்
ஒரு குழந்தைக்கு பேச்சு வரும்பொழுது அம்மாவை
அம்மா-ன்னு கூப்பிட்டுவிட்டு வயதான பின்னர் மாற்றி
அம்மாவை மாமி or அத்தை என்று அழைப்பதில்லை
எப்பொழுதுமே வாயால் தான் சாப்பிடுகிறோம்
அதை ஏன் மாற்ற நினைக்கிறீர்கள், என் இனியத் தோழிகளே?
21. Jaa Sha டியரின் ஒரு குட்டி மொக்க கதை
இந்த சிறுகதைக்கு பேர் இல்லையாப்பா?
ஹா... ஹா... ஹா............
இதுவும் ஒரு ஜாலியான, தமாஷான சிறுகதை
தான் பார்த்த ஹிந்தி சினிமாவில் வருவது போல
வெள்ளைக்கார போலீஸ்ஸிடமிருந்து தப்பிக்க, பர்ஸை
மறந்துவிட்டு வந்து மனைவியுடன் ரொமான்ஸ் பண்ண
நினைத்த குமாருக்கு (சுமார் மூஞ்சி குமாராப்பா?)
செம பலுப்பு
பொஞ்சாதி குமுதா, பர்ஸை மறக்காம கொண்டு வந்து
மச்சானுக்கு வைச்சுட்டா, ஆப்பு
22. Minni @ மிரு டியரின் கன்னத்தில் முத்தமிட்டாள்
அருமையான சிறுகதை
குழந்தைப்பேறு கிடைக்கப் பெறாதவர்கள் அதனால்
துவண்டு போகாமல் அனாதை ஆசிரமத்திலிருந்து
ஒரு குழந்தையை தத்தெடுத்து வளர்க்க ஆரம்பிக்கும்
தேவேந்திரனின் எண்ணமும், முடிவும் மிகவும் அருமை
ஆராதனாவுக்கு அருமையான பரிசு, அவளுடைய
தத்துக்குழந்தை
ஊஹூம், இனி அவளோட சொந்தக் குழந்தை
பேசும் தெய்வம் கொடுத்த பரிசு முத்தம்
ஆராவுக்கு குழந்தை, ''கன்னத்தில் முத்தமிட்டாள்''
23. சஞ்சனாரிஷி டியரின் இரயில் (சிந்தனையின்) பயணம்
உண்மையிலேயே இந்த சிறுகதை, ஒரு நல்ல சிந்தனையின்
பயணம்தான், சஞ்சனாரிஷி டியர்
தங்களுடைய குழந்தைக்கு பிடிவாதம் ஜாஸ்தி-ங்கிறதை
பிடிவாதம்-ங்கிற கெட்ட பழக்கத்தை என்னமோ பாரீனில்
படித்து பட்டம் வாங்கின ரேஞ்சுக்கு கொண்டாடுகிறார்கள்
இது ரொம்பவே தப்பு
அடுத்தவருக்கு உதவி செய்யணும்-ங்கிற, அடுத்த மனிதரையும் மதிக்கணும்-ங்கிற நல்ல நல்ல பண்புகளை, ஈவு இரக்கம்
பிறருக்கு உதவுதல் போன்ற நல்ல பழக்கங்களை
குழந்தைகளுக்கு சொல்லித்தந்து ''நல்ல பேரை வாங்க
வேண்டும் பிள்ளைகளே நம் நாடு என்னும் தோட்டத்திலே''-ன்னு
புரட்சித் தலைவர் எம் ஜி ஆர் பாடின மாதிரி, குழந்தைகளை
நல்ல பிள்ளைகளாக வளர்க்க வேண்டும்-ங்கிற நல்ல மெசேஜ்
கொடுத்த இளம் எழுத்தாளர் சஞ்சனாரிஷி-க்கு என்னுடைய
மனமார்ந்த பாராட்டுக்கள்
24. ஆர்த்தி டியரின் ஊடகங்கள்
தொலைக்காட்சி ஆரம்பித்த காலத்தில் இருந்த நிலையையும் தற்போதைய நிலையையும் ரொம்பவே அழகாக ஆர்த்தி டியர் சொல்லியிருக்காங்க
உண்மைதான்
இப்பொழுதெல்லாம் தனி ஒரு நபராகக் கூட டி வி பார்க்க
முடிவதில்லை
ஒவ்வொரு புரோக்ராமும் அவ்வளவு அபத்தமாக
கண்றாவியாக இருக்கு
இதிலே எங்கே குடும்பத்தோடு, குழந்தைகளோடு உட்கார்ந்து
எந்த நிகழ்ச்சியைப் பார்ப்பது என்பது கொஞ்சமில்லை,
ரொம்பவே கஷ்டமான விஷயம்தான்ப்பா
எல்லோருமே ரொம்பவும் நல்லா நல்லா எழுதியிருக்காங்க
யாருமே முதல் தடவை எழுதற மாதிரி எனக்குத் தோணலை
தேர்ந்த எழுத்தாளரைப்போல அவ்வளவு அருமையாக
எழுதியிருக்காங்க
நம் நாட்டின் கல்வியின் தரத்தைப்பற்றி, மாணவர்களை படிப்பு
படிப்புன்னு பிழிவதைப்பற்றி முதியவர்களை மதிக்காததைப்பற்றி
தாய் நாட்டுக்காக தியாகம் செய்யும் ராணுவ வீரர்களைப்பற்றி
நிறைய சமுதாய சிந்தனைகளை மெசேஜ்ஜாக கொடுத்திருக்காங்க
மோனிஷா டியர் and கிருஷ்ணப்ரியா நாராயண் டியர் இரண்டு
பேருமே அவங்களோட சிறுகதையை போட்டிக்கு எடுத்துக்க வேண்டாமுன்னு சொல்லிட்டாங்க
ஆனால் நம் நாட்டிலிருந்து கொள்ளையடித்து கொண்டு போய்
அவங்க நாட்டிலே அலங்காரமாக வைத்திருக்கும் சாமி
சிலைகளை பற்றியும், உடல்நிலை சரியில்லாத வாயில்லாத
ஜீவனுக்கும் கருணை காட்டும் மனித நேயத்திற்கும், நான் தலைவணங்குகிறேன்
இருந்தாலும் எழுத்து நடையில் சிறந்ததாக புதிய இளம்
எழுத்தாளர் செல்வ சங்கரி டியரின் ''வாழ்க்கைப் பக்கங்கள்'' சிறுகதையையும் சிறந்த கதையாக புதிய இளம் எழுத்தாளர்
சஞ்சனாரிஷி டியரின் ''இரயில் சிந்தனையின் பயணம்''
ஆகிய இரண்டு சிறுகதைகளையும் சிறந்ததாக நான்
தேர்ந்தெடுக்கிறேன்-ப்பா
என்னோட தீர்ப்பு தப்பாயிருந்தால், குணமா பதவிசா
பதமா பக்கத்துல வந்து நாட்டாமை தீர்ப்பை மாத்து-ன்னு
சொல்லணும், ஓகே
பேச்சு பேச்சாகாகத்தான் இருக்கணும், ஓகே
கட்டை, கத்தி, கப்படா-லாம் தூக்கிட்டு வந்து, இந்த
சின்னப் புள்ளையை பயமுறுத்தக்கூடாது, ஓகே
அநேக கோடி நன்றிகளுடன், வணக்கம், வந்தனம், நமஸ்காரம், நமோஸ்கார் என்னுடைய இனியத் தோழிகளே