எப்பேற்பட்ட மன சஞ்சலத்தில் இருந்தாலும், என் புன்னகையால் அதைத் தீர்த்துவிடுவேன் என்று புன்னகை முகமாக கோவிலில் அழகாக காட்சி கொடுத்தான் அழகன் முருகன். கதிருக்கு தான் அந்த புன்னகையிலும் மனம் லயிக்கவில்லை.. தங்கை ஞாபகம் மனதிற்குள் இருந்து நீங்க மாட்டேன் என்று அடம் பிடித்தது. எத்தனை யோசித்தும் அவனால் அதிலிருந்து வெளிவர முடியவில்லை. தாய் இறந்தபொழுது தன் சட்டையைப் பிடித்துக் கொண்டு கதறிய சிறுமியின் முகமே நினைவிலாடியது. ‘எப்படி அந்த குடும்பத்துக்குள் வாழ அவள் ஒத்துக் கொண்டாள்?’ இந்த கேள்வியே திரும்ப திரும்ப மனதை அரித்தது. தூணில் தலை சாய்த்து, கண்களை மூடி அமர்ந்து கொண்டான். நேற்று மித்ரன் வீட்டிற்கே வந்து ராஜினாமா கடிதத்தை கிழித்தெறிந்தது மூடிய கண்களுக்குள் காட்சியாய் ஓடியது.
பிடிவாதக்காரன், எப்படியும் தன்னை விட மாட்டான் என்று நினைத்துக் கொண்டான். ஏனோ மித்ரனைவிட தங்கையின் மீதே கோபமும் வருத்தமும் அதிகமாக இருந்தது. “கதிரண்ணா” என்று அழைத்தபடியே அருகில் அமர்ந்தாள் கீதாஞ்சலி. அவள் அருகிலேயே இறுகிய முகத்தோடு அபியும் நின்றிருந்தான். இவர்களை இங்கு சற்றும் எதிர்பார்க்காத கதிர் சட்டென்று எழுந்துவிட்டான்.
“எப்படி இருக்கீங்க சார்?” தயக்கத்துடனே அபியிடம் விசாரித்தான். “ஹ்ம்ம்” என்ற உறுமல் மட்டுமே பதிலாக வந்தது அபியிடமிருந்து. எந்தவித கட்டுக்களுமில்லாமல் இருந்த அபியை தலை முதல் பாதம் வரை ஒரு நொடி பார்வையாலேயே குசலம் விசாரித்துக் கொண்டான் கதிர். “நல்லாயிருக்கீங்களா கீதாம்மா” கீதாஞ்சலியிடம் வினவ, “நாங்க நல்லாயிருக்கோம் அண்ணா” அபிக்கும் சேர்த்தே பதிலளித்தாள் பெண்.
“நீங்க ஏன்ணா என்னவோ மாதிரி இருக்கீங்க? என்கிட்ட சொல்லலாம்னா சொல்லுங்க…” தன் கரம் பிடித்து வாஞ்சையுடன் விசாரிக்கும் பெண்ணவளிடமிருந்து எதையும் மறைக்க முடியவில்லை கதிரால். மித்ரனுக்கும் தன் தங்கைக்கும் நடந்த திடீர் திருமணம், தான் வேலையை ராஜினாமா செய்தது அனைத்தையும் கூறி முடித்தான்.
என்ன சொல்வதென்றே தெரியவில்லை அபிக்கும் அஞ்சலிக்கும்… ஏனோ மித்ரனுக்கு திருமணம் முடிந்தது ஒரு சிறு ஆறுதலையே தந்தது அவர்கள் இருவருக்கும். ஆனால் இதை சொல்லி கதிரின் மனதை மேலும் புண்படுத்த விரும்பாமல், “உங்களுக்கு என்னிக்குமே தங்கைன்னு நான் ஒருத்தி இருக்கேன் அண்ணா” என்று மட்டும் கூறிவிட்டு கீதாஞ்சலி கிளம்ப, அபியும் அவன் தோளில் ஆறுதலாக தட்டிக் கொடுத்துவிட்டு கிளம்பினான்.
ப்ளாக் ஆடி கார் கதவை டிரைவர் திறந்து வைக்க இருவரும் ஏறியவுடன் கார் அபியின் அலுவலகம் நோக்கி பறந்தது. மனம் சற்று லேசானது போல் தோன்றியது கீதாஞ்சலிக்கு. மித்ரனுடைய தொலைபேசி உரையாடலுக்கு பின் மித்ரன் என்ற பெயரைக் கூட வெறுத்திருந்தாள் பெண். ஆனாலும் அவனை நல்ல தோழனாக நினைத்த மனம், இன்று அவனுக்கு ஒரு நல்ல பெண்ணுடன் திருமணம் முடிந்துவிட்டது என்றதும் சிறிது ஆசுவாசப்பட்டது. அந்த பெண்ணை எந்த விதத்திலும் மித்ரன் காயப்படுத்திவிடக் கூடாதே என்று தாமரைக்காகவும் மனம் துடித்தது.
அதுவரை சன்னல் பக்கம் பார்வையைப் பதித்திருந்தவள் பக்கவாட்டில் திரும்பி, அபியின் கையோடு மெல்ல தன் கையைக் கோர்த்துக் கொண்டு புன்னகைத்தாள். அருகில் வருமாறு அபி தலையசைக்க கண்களால் டிரைவரை சுட்டிக் காட்டி மறுத்தாள். அபி கோபமாக அந்த பக்கம் திரும்புவது போல் முகத்தை திருப்பிக் கொண்டு, இந்த பக்கம் இவளருகில் நெருங்கி அமர்ந்தான்.
சிரித்துக் கொண்டே தானும் நெருங்கி அமர்ந்தவள், அவன் கை வளைவில் தன் கையைக் கோர்த்துக் கொண்டு அவன் தோளில் பட்டும் படாமல் சாய்ந்துக் கொண்டாள். நேற்று கட்டு பிரித்ததும் குடிலுக்கு அழைத்து சென்று அஞ்சலி என்று வாய்மொழியாக தன் பெயரைக் கூறி சந்தோஷத்தில் திக்கு முக்காடச் செய்தவன், உடனே பேக்டரிக்கு போயாக வேண்டும் என்று ஒற்றைக் காலில் நின்றான்.
கீதாஞ்சலி பிடிவாதமாக வீட்டிற்கு சென்று பெரியவர்களை பார்த்துவிட்டு, மறு நாள் கோவிலுக்கும் சென்றுவிட்டு பிறகு தான் அலுவலகத்திற்கு என்று திட்டவட்டமாக மறுக்கவும் வேறு வழியில்லாமல் சம்மதித்திருந்தான். அன்று முழுவதும் பெற்றோர், தாத்தா, பாட்டி, தங்கை என்று அவர்களுடன் பொழுது போனது. இரவு சீமா எவ்வளவோ மறுத்தும் பிடிவாதமாக மாடியேறி தன்னறைக்குச் சென்றிருந்தான்.
அபிக்கு பாலெடுத்துக் கொண்டு மாடிக்கு சென்றவள், அவன் கட்டிலில் அமர்ந்திருக்கவும் அவனிடம் பாலைக் கொடுத்துவிட்டு அடிபடாத கால் பக்கம் அமர்ந்தவள் அப்படியே அவன் மடியில் தலை சாய்த்துக் கொண்டாள். அவள் தலைக் கோதிக் கொண்டிருந்தவன் தன் உடை தாண்டி ஈரம் உணரவும் பதறிப் போய் அவள் முகம் நிமிர்த்தினான்.
கண்களில் கண்ணீர் ஊற்றெடுக்க விசும்பிக் கொண்டிருந்தாள். “அம்மாடி… என்னடா…. வேண்டாம்டா” என்று அவள் கண்ணீரைத் துடைத்தான். “ரொம்ப பயந்துட்டேன் அபி… நான் அழுதா எல்லாரும் ரொம்ப உடைஞ்சிடுவாங்கன்னு, என்னை நானே கட்டுபடுத்திக்கிட்டு இருந்தேன் அபி… என்னால முடியல… இதுக்கும் மேல என்னால மனசுக்குள்ள அடக்க முடியாது” என்று வெடித்தழுதாள். இப்படி இவள் கண்ணீர் விட்டு கதறுவதைப் பார்க்கவா அவ்வளவு ஆசையாக திருமணம் செய்து கொண்டோம், நினைக்க நினைக்க மித்ரன் மீது கொலைவெறி உண்டானது.
“எனக்கு வேற எதுவுமே வேண்டாம் அபி… நீங்க இப்படியே என் பக்கத்துலயே இருந்தா போதும்” சொல்லிவிட்டு அவன் தலை முதல் கால் வரை பரிதவிப்புடன் தடவிப் பார்த்தாள். “வேற எதுவுமே வேண்டாமா” அவள் மனதை மாற்றவே விஷமப் புன்னகையுடன் கேட்டான். அவன் பார்வையின் வேறுபாட்டை உணர்ந்தவள், “ம்ஹூம் வேண்டவே வேண்டாம்” என்றாள் வெட்கப் புன்னகையுடன். கண்களில் லேசான கண்ணீர் தடம், வெட்கத்தால் சிவந்த கன்னங்கள், உதட்டில் குறும்புப் புன்னகை என்று எழிலோவியமாய் இருந்தாள்.
ஒற்றை விரலால் அவள் முக வடிவை அளந்தவன், “ஆனா எனக்கு வேணுமே” என்றான் கிறக்கமாக. அவள் ஏதோ மறுத்துப் பேசும் முன் அவள் இதழை முற்றுகையிட்டிருந்தான். மெல்ல கைகளும் இதழும் அவள் உடலில் அத்துமீற தொடங்க, அஞ்சலி அபியின் உடல் நலம் கருதி மறுக்க, “அம்மாடி ப்ளீஸ்டா” என்று கொஞ்சிக் கொஞ்சியே அவளை சரிகட்டி தனக்கு தேவையான சிலவற்றையாவது நடத்தியபிறகே அவளை விட்டான்.
???????????????
பிடிவாதக்காரன், எப்படியும் தன்னை விட மாட்டான் என்று நினைத்துக் கொண்டான். ஏனோ மித்ரனைவிட தங்கையின் மீதே கோபமும் வருத்தமும் அதிகமாக இருந்தது. “கதிரண்ணா” என்று அழைத்தபடியே அருகில் அமர்ந்தாள் கீதாஞ்சலி. அவள் அருகிலேயே இறுகிய முகத்தோடு அபியும் நின்றிருந்தான். இவர்களை இங்கு சற்றும் எதிர்பார்க்காத கதிர் சட்டென்று எழுந்துவிட்டான்.
“எப்படி இருக்கீங்க சார்?” தயக்கத்துடனே அபியிடம் விசாரித்தான். “ஹ்ம்ம்” என்ற உறுமல் மட்டுமே பதிலாக வந்தது அபியிடமிருந்து. எந்தவித கட்டுக்களுமில்லாமல் இருந்த அபியை தலை முதல் பாதம் வரை ஒரு நொடி பார்வையாலேயே குசலம் விசாரித்துக் கொண்டான் கதிர். “நல்லாயிருக்கீங்களா கீதாம்மா” கீதாஞ்சலியிடம் வினவ, “நாங்க நல்லாயிருக்கோம் அண்ணா” அபிக்கும் சேர்த்தே பதிலளித்தாள் பெண்.
“நீங்க ஏன்ணா என்னவோ மாதிரி இருக்கீங்க? என்கிட்ட சொல்லலாம்னா சொல்லுங்க…” தன் கரம் பிடித்து வாஞ்சையுடன் விசாரிக்கும் பெண்ணவளிடமிருந்து எதையும் மறைக்க முடியவில்லை கதிரால். மித்ரனுக்கும் தன் தங்கைக்கும் நடந்த திடீர் திருமணம், தான் வேலையை ராஜினாமா செய்தது அனைத்தையும் கூறி முடித்தான்.
என்ன சொல்வதென்றே தெரியவில்லை அபிக்கும் அஞ்சலிக்கும்… ஏனோ மித்ரனுக்கு திருமணம் முடிந்தது ஒரு சிறு ஆறுதலையே தந்தது அவர்கள் இருவருக்கும். ஆனால் இதை சொல்லி கதிரின் மனதை மேலும் புண்படுத்த விரும்பாமல், “உங்களுக்கு என்னிக்குமே தங்கைன்னு நான் ஒருத்தி இருக்கேன் அண்ணா” என்று மட்டும் கூறிவிட்டு கீதாஞ்சலி கிளம்ப, அபியும் அவன் தோளில் ஆறுதலாக தட்டிக் கொடுத்துவிட்டு கிளம்பினான்.
ப்ளாக் ஆடி கார் கதவை டிரைவர் திறந்து வைக்க இருவரும் ஏறியவுடன் கார் அபியின் அலுவலகம் நோக்கி பறந்தது. மனம் சற்று லேசானது போல் தோன்றியது கீதாஞ்சலிக்கு. மித்ரனுடைய தொலைபேசி உரையாடலுக்கு பின் மித்ரன் என்ற பெயரைக் கூட வெறுத்திருந்தாள் பெண். ஆனாலும் அவனை நல்ல தோழனாக நினைத்த மனம், இன்று அவனுக்கு ஒரு நல்ல பெண்ணுடன் திருமணம் முடிந்துவிட்டது என்றதும் சிறிது ஆசுவாசப்பட்டது. அந்த பெண்ணை எந்த விதத்திலும் மித்ரன் காயப்படுத்திவிடக் கூடாதே என்று தாமரைக்காகவும் மனம் துடித்தது.
அதுவரை சன்னல் பக்கம் பார்வையைப் பதித்திருந்தவள் பக்கவாட்டில் திரும்பி, அபியின் கையோடு மெல்ல தன் கையைக் கோர்த்துக் கொண்டு புன்னகைத்தாள். அருகில் வருமாறு அபி தலையசைக்க கண்களால் டிரைவரை சுட்டிக் காட்டி மறுத்தாள். அபி கோபமாக அந்த பக்கம் திரும்புவது போல் முகத்தை திருப்பிக் கொண்டு, இந்த பக்கம் இவளருகில் நெருங்கி அமர்ந்தான்.
சிரித்துக் கொண்டே தானும் நெருங்கி அமர்ந்தவள், அவன் கை வளைவில் தன் கையைக் கோர்த்துக் கொண்டு அவன் தோளில் பட்டும் படாமல் சாய்ந்துக் கொண்டாள். நேற்று கட்டு பிரித்ததும் குடிலுக்கு அழைத்து சென்று அஞ்சலி என்று வாய்மொழியாக தன் பெயரைக் கூறி சந்தோஷத்தில் திக்கு முக்காடச் செய்தவன், உடனே பேக்டரிக்கு போயாக வேண்டும் என்று ஒற்றைக் காலில் நின்றான்.
கீதாஞ்சலி பிடிவாதமாக வீட்டிற்கு சென்று பெரியவர்களை பார்த்துவிட்டு, மறு நாள் கோவிலுக்கும் சென்றுவிட்டு பிறகு தான் அலுவலகத்திற்கு என்று திட்டவட்டமாக மறுக்கவும் வேறு வழியில்லாமல் சம்மதித்திருந்தான். அன்று முழுவதும் பெற்றோர், தாத்தா, பாட்டி, தங்கை என்று அவர்களுடன் பொழுது போனது. இரவு சீமா எவ்வளவோ மறுத்தும் பிடிவாதமாக மாடியேறி தன்னறைக்குச் சென்றிருந்தான்.
அபிக்கு பாலெடுத்துக் கொண்டு மாடிக்கு சென்றவள், அவன் கட்டிலில் அமர்ந்திருக்கவும் அவனிடம் பாலைக் கொடுத்துவிட்டு அடிபடாத கால் பக்கம் அமர்ந்தவள் அப்படியே அவன் மடியில் தலை சாய்த்துக் கொண்டாள். அவள் தலைக் கோதிக் கொண்டிருந்தவன் தன் உடை தாண்டி ஈரம் உணரவும் பதறிப் போய் அவள் முகம் நிமிர்த்தினான்.
கண்களில் கண்ணீர் ஊற்றெடுக்க விசும்பிக் கொண்டிருந்தாள். “அம்மாடி… என்னடா…. வேண்டாம்டா” என்று அவள் கண்ணீரைத் துடைத்தான். “ரொம்ப பயந்துட்டேன் அபி… நான் அழுதா எல்லாரும் ரொம்ப உடைஞ்சிடுவாங்கன்னு, என்னை நானே கட்டுபடுத்திக்கிட்டு இருந்தேன் அபி… என்னால முடியல… இதுக்கும் மேல என்னால மனசுக்குள்ள அடக்க முடியாது” என்று வெடித்தழுதாள். இப்படி இவள் கண்ணீர் விட்டு கதறுவதைப் பார்க்கவா அவ்வளவு ஆசையாக திருமணம் செய்து கொண்டோம், நினைக்க நினைக்க மித்ரன் மீது கொலைவெறி உண்டானது.
“எனக்கு வேற எதுவுமே வேண்டாம் அபி… நீங்க இப்படியே என் பக்கத்துலயே இருந்தா போதும்” சொல்லிவிட்டு அவன் தலை முதல் கால் வரை பரிதவிப்புடன் தடவிப் பார்த்தாள். “வேற எதுவுமே வேண்டாமா” அவள் மனதை மாற்றவே விஷமப் புன்னகையுடன் கேட்டான். அவன் பார்வையின் வேறுபாட்டை உணர்ந்தவள், “ம்ஹூம் வேண்டவே வேண்டாம்” என்றாள் வெட்கப் புன்னகையுடன். கண்களில் லேசான கண்ணீர் தடம், வெட்கத்தால் சிவந்த கன்னங்கள், உதட்டில் குறும்புப் புன்னகை என்று எழிலோவியமாய் இருந்தாள்.
ஒற்றை விரலால் அவள் முக வடிவை அளந்தவன், “ஆனா எனக்கு வேணுமே” என்றான் கிறக்கமாக. அவள் ஏதோ மறுத்துப் பேசும் முன் அவள் இதழை முற்றுகையிட்டிருந்தான். மெல்ல கைகளும் இதழும் அவள் உடலில் அத்துமீற தொடங்க, அஞ்சலி அபியின் உடல் நலம் கருதி மறுக்க, “அம்மாடி ப்ளீஸ்டா” என்று கொஞ்சிக் கொஞ்சியே அவளை சரிகட்டி தனக்கு தேவையான சிலவற்றையாவது நடத்தியபிறகே அவளை விட்டான்.
???????????????