? மனமே மயங்காதே..! ??
“ அபி பால் “ அவன் கையில் கொடுத்து பால்கனியில் போய் நின்றாள் அஞ்சலி..
போகும் அவளையே பார்த்திருந்தவன், “ அம்மணி கோபம் இன்னும் போகலை போலவே “ கையில் வைத்திருந்த பைலை மூடி வைத்து மெதுவாக அவளை நோக்கி சென்றான் அபி.
தொலைதூரத்தில் தெரிந்த தொடுவானத்தை பார்த்திருந்தாள் அவள்,
அவளுக்கு அபி பேசியதே நினைவில் வந்து இம்சித்தது,
“ கொஞ்சம் கணக்கு வழக்கு பார்க்கணும் அஞ்சலி “ இதை கூறும் பொழுது அவன் கண்களில் தெரிந்த கோபம், அவளுக்கே சிறு பயத்தை கொடுத்திருந்தது,
அப்பொழுது கூட அபி, அவளை முழு பெயரிட்டு அழைத்த சந்தோசம் அவள் முகத்தை விட்டு போயிருந்தது,
அப்படியே அபியின் முகத்தையே பார்த்திருந்தவள், அவனிடம் எதுவும் பேசாமல் நேராக காரில் சென்று அமர்ந்தாள்.
சிறிது நேரம் அந்த குடிலில் நின்றவன் காரை நோக்கி சென்றான். இவன் வரவும் முகத்தை வெளி பக்கமாக திருப்பிக் கொண்டாள் மனையாள்.
அவளின் கோபம் அவன் முகத்தில் புன்னகையை வரவழைப்பதாய், அவன் முகம் பார்ப்பதும், பின் திருப்புவதுமாக இருந்தாள்...
தன்னை சுற்றி மட்டுமே அவள் உலகம் என வாழ்பவளை தான் கஷ்டப்படுத்துவதாக இருந்தது, அவளுக்காக இரண்டு நாள் கழித்து பாக்டரி செல்வோம் என எண்ணியவன்,
மெதுவாக அவள் அருகில் நெருங்கி அமர்ந்தான், அவனை திரும்பி பார்த்தவள் மேலும் முகத்தை முழுதாக மேலும் திருப்பிக் கொள்ள, அவள் அருகில் மேலும் நெருங்கி அமர்ந்தவன் அவளின் இடையோடு கைகோர்த்து கொண்டான்,
இப்பொழுது அவன் முகத்தை முழுவதுமாக திரும்பிப் பார்த்தவள், முன்னால் டிரைவர் இருப்பதை பார்வையால் சுட்டிக்காட்டி, இடையில் இருந்து கையை எடுக்க கூற,
அவளை ஒரு பார்வை பார்த்தவன் மேலும் நெருங்கி அமர்ந்துகொண்டான்...
வெட்கத்தில் முகம் சிவக்க, வெளிப்புறம் பார்வையை திருப்பிக் கொண்டாள் வீடு வரும் வரைக்கும்,
வீட்டுக்கு வந்தவுடன் பாட்டி, தாத்தா, அம்மா என்று எல்லாரிடமும் பேசியவனை அப்படியே பார்த்திருந்தாள், பேச்சு கொஞ்சம் கொஞ்சமாக வெளியில் வந்துகொண்டிருந்தது,
இதனை நாள் பட்ட கஷ்டம் எல்லாம் ஒரே நொடியில் சரியானதைப் போல் உணர்ந்தாள்.
எத்தனை நேரம் அப்படியே தொடுவானத்தை பார்த்திருந்தாளோ தெரியாது,
“ அஞ்சலி “
மயிலிறகு போல் மென்மையாய் வருடிய அவனது குரலில் மெல்ல கண்களை அவனை நோக்கி திருப்பினாள்,
அவன் அவளையே தான் பார்த்திருந்தான்.
“ என்ன பண்ணுற அஞ்சலி “
“ அந்த நிலாவை என்ன பண்ணலாம்னு பார்த்திட்டு இருக்கேன் “ என்றபடி வானில் தோன்றிய நிலாவை மீண்டும் பார்த்தாள்.
“ அந்த நிலாவுகென்ன அழகாதானே இருக்கு “ என்றபடி தலையை கோதிக் கொண்டான்.
அவனை ஒரு நொடி திரும்பிப் பார்த்தவள், மீண்டும் வானையே பார்த்தாள்.
அவளையே ரசனையுடன் பார்த்துக் கொண்டிருந்தவன், “ இந்த நிலாவும் ரொம்ப அழகு தான் “ அவளது காதுக்கருகில் ஒலித்த குரலில், அவனை நோக்கி திரும்பியவள் அவன் முகத்தையே பார்க்க,
“ இப்போ இந்த நிலா இன்னும் அழகா இருக்கு “ குறும்பு குரலில் கூறியவனின் பார்வையில் ரசனையையும் தாண்டிய வேறு ஏதோ ஒரு உணர்வு இருந்தது.
அவனின் பார்வையை பார்த்தவள், “ அபி “ என்றழைக்க,
“ ம்ம் “ என்றபடி அங்கிருந்த கூடை ஊஞ்சலில் அமர்ந்துக் கொண்டான்,
“ உங்க கணக்கு வழக்கை கொஞ்சம் பொறுத்து பார்க்கலாமே..?” சிறு பயத்துடனேயே கூறினாள்.
அவள் முகத்தை பார்த்தவன் “ ம்ம், இங்க வா “ என அவளை நோக்கி கையை நீட்ட,
அவன் கையோடு, தன் கையை பிணைத்தவளை தன்னை நோக்கி இழுத்தவன் தன் மடியில் அமரவைத்து, அவளை தன் நெஞ்சோடு சேர்த்தணைத்து கொண்டான்,
அவளின் வலதுக் கையை தனது நெஞ்சில் வைத்து “ இங்க இப்போ முழுசும் நிறைந்து இருக்கிறது நீ தான், உன் மனசில் இருக்கிறது எனக்கு நல்லா தெரியும், எனக்காக நீ அத்தனையும் செய்யும் பொழுது உனக்காக இதை கூட செய்யமாட்டேனா.? “
உருக்கமான அவன் பேச்சில், பாவையவள் மயங்கி, உருகி தான் போனாள்.
அவன் நெஞ்சில் தன் தலையை சாய்த்தவள் “ ரொம்ப பயந்துட்டேன் அபி “ இறுக்க அணைத்துக் கொண்டாள்.
அவளை மேலும் தன்னோடு அணைத்தவன் “ அந்த நிலாவை ஏதோ செய்ய போறதா சொன்னியே “ என்றபடி வலதுக் கையை வானத்தை நோக்கி குறும்பு கண்ணனாய் கேட்டான்..
அவன் கையை தொடர்ந்து அவளும் பார்க்க, அந்த நிலவு இவர்களை பார்த்து கண்சிமிட்டிக் கொண்டிருந்தது,
அந்த நிலவையே பார்திருந்தவளை, இவன் ஒட்டுமொத்த காதலையும் கண்களில் தேக்கி ரசனையுடன் பார்க்க,
அவன் கண்களில் தோன்றிய காதலை கண்டவள் அதில் மயங்கி, அவளையும் அறியாமல் அவன் கன்னத்தில் தன் முத்திரையை பதித்திருந்தாள்.....
@@@@@@@@@@@@@@@
கடற்கரை சாலையில் தனது வண்டியை நிறுத்திய மித்ரன் காரில் இருந்து இறங்க, அவனை தொடர்ந்து தாமரை இறங்கினாள். பாக்டரியில் இருந்து நேராக இங்கு தான் வருகிறார்கள்.
ரொம்ப நாட்களுக்கு பிறகு கடற்கரைக்கு வருகிறாள் தாமரை, சில்லென்ற மாலை நேர கடற்காற்று அவளை ஓடி வந்து தழுவிக் கொள்ள, கைகளை மார்புக்கு நேராக கட்டிக் கொண்டு அந்த
“ அபி பால் “ அவன் கையில் கொடுத்து பால்கனியில் போய் நின்றாள் அஞ்சலி..
போகும் அவளையே பார்த்திருந்தவன், “ அம்மணி கோபம் இன்னும் போகலை போலவே “ கையில் வைத்திருந்த பைலை மூடி வைத்து மெதுவாக அவளை நோக்கி சென்றான் அபி.
தொலைதூரத்தில் தெரிந்த தொடுவானத்தை பார்த்திருந்தாள் அவள்,
அவளுக்கு அபி பேசியதே நினைவில் வந்து இம்சித்தது,
“ கொஞ்சம் கணக்கு வழக்கு பார்க்கணும் அஞ்சலி “ இதை கூறும் பொழுது அவன் கண்களில் தெரிந்த கோபம், அவளுக்கே சிறு பயத்தை கொடுத்திருந்தது,
அப்பொழுது கூட அபி, அவளை முழு பெயரிட்டு அழைத்த சந்தோசம் அவள் முகத்தை விட்டு போயிருந்தது,
அப்படியே அபியின் முகத்தையே பார்த்திருந்தவள், அவனிடம் எதுவும் பேசாமல் நேராக காரில் சென்று அமர்ந்தாள்.
சிறிது நேரம் அந்த குடிலில் நின்றவன் காரை நோக்கி சென்றான். இவன் வரவும் முகத்தை வெளி பக்கமாக திருப்பிக் கொண்டாள் மனையாள்.
அவளின் கோபம் அவன் முகத்தில் புன்னகையை வரவழைப்பதாய், அவன் முகம் பார்ப்பதும், பின் திருப்புவதுமாக இருந்தாள்...
தன்னை சுற்றி மட்டுமே அவள் உலகம் என வாழ்பவளை தான் கஷ்டப்படுத்துவதாக இருந்தது, அவளுக்காக இரண்டு நாள் கழித்து பாக்டரி செல்வோம் என எண்ணியவன்,
மெதுவாக அவள் அருகில் நெருங்கி அமர்ந்தான், அவனை திரும்பி பார்த்தவள் மேலும் முகத்தை முழுதாக மேலும் திருப்பிக் கொள்ள, அவள் அருகில் மேலும் நெருங்கி அமர்ந்தவன் அவளின் இடையோடு கைகோர்த்து கொண்டான்,
இப்பொழுது அவன் முகத்தை முழுவதுமாக திரும்பிப் பார்த்தவள், முன்னால் டிரைவர் இருப்பதை பார்வையால் சுட்டிக்காட்டி, இடையில் இருந்து கையை எடுக்க கூற,
அவளை ஒரு பார்வை பார்த்தவன் மேலும் நெருங்கி அமர்ந்துகொண்டான்...
வெட்கத்தில் முகம் சிவக்க, வெளிப்புறம் பார்வையை திருப்பிக் கொண்டாள் வீடு வரும் வரைக்கும்,
வீட்டுக்கு வந்தவுடன் பாட்டி, தாத்தா, அம்மா என்று எல்லாரிடமும் பேசியவனை அப்படியே பார்த்திருந்தாள், பேச்சு கொஞ்சம் கொஞ்சமாக வெளியில் வந்துகொண்டிருந்தது,
இதனை நாள் பட்ட கஷ்டம் எல்லாம் ஒரே நொடியில் சரியானதைப் போல் உணர்ந்தாள்.
எத்தனை நேரம் அப்படியே தொடுவானத்தை பார்த்திருந்தாளோ தெரியாது,
“ அஞ்சலி “
மயிலிறகு போல் மென்மையாய் வருடிய அவனது குரலில் மெல்ல கண்களை அவனை நோக்கி திருப்பினாள்,
அவன் அவளையே தான் பார்த்திருந்தான்.
“ என்ன பண்ணுற அஞ்சலி “
“ அந்த நிலாவை என்ன பண்ணலாம்னு பார்த்திட்டு இருக்கேன் “ என்றபடி வானில் தோன்றிய நிலாவை மீண்டும் பார்த்தாள்.
“ அந்த நிலாவுகென்ன அழகாதானே இருக்கு “ என்றபடி தலையை கோதிக் கொண்டான்.
அவனை ஒரு நொடி திரும்பிப் பார்த்தவள், மீண்டும் வானையே பார்த்தாள்.
அவளையே ரசனையுடன் பார்த்துக் கொண்டிருந்தவன், “ இந்த நிலாவும் ரொம்ப அழகு தான் “ அவளது காதுக்கருகில் ஒலித்த குரலில், அவனை நோக்கி திரும்பியவள் அவன் முகத்தையே பார்க்க,
“ இப்போ இந்த நிலா இன்னும் அழகா இருக்கு “ குறும்பு குரலில் கூறியவனின் பார்வையில் ரசனையையும் தாண்டிய வேறு ஏதோ ஒரு உணர்வு இருந்தது.
அவனின் பார்வையை பார்த்தவள், “ அபி “ என்றழைக்க,
“ ம்ம் “ என்றபடி அங்கிருந்த கூடை ஊஞ்சலில் அமர்ந்துக் கொண்டான்,
“ உங்க கணக்கு வழக்கை கொஞ்சம் பொறுத்து பார்க்கலாமே..?” சிறு பயத்துடனேயே கூறினாள்.
அவள் முகத்தை பார்த்தவன் “ ம்ம், இங்க வா “ என அவளை நோக்கி கையை நீட்ட,
அவன் கையோடு, தன் கையை பிணைத்தவளை தன்னை நோக்கி இழுத்தவன் தன் மடியில் அமரவைத்து, அவளை தன் நெஞ்சோடு சேர்த்தணைத்து கொண்டான்,
அவளின் வலதுக் கையை தனது நெஞ்சில் வைத்து “ இங்க இப்போ முழுசும் நிறைந்து இருக்கிறது நீ தான், உன் மனசில் இருக்கிறது எனக்கு நல்லா தெரியும், எனக்காக நீ அத்தனையும் செய்யும் பொழுது உனக்காக இதை கூட செய்யமாட்டேனா.? “
உருக்கமான அவன் பேச்சில், பாவையவள் மயங்கி, உருகி தான் போனாள்.
அவன் நெஞ்சில் தன் தலையை சாய்த்தவள் “ ரொம்ப பயந்துட்டேன் அபி “ இறுக்க அணைத்துக் கொண்டாள்.
அவளை மேலும் தன்னோடு அணைத்தவன் “ அந்த நிலாவை ஏதோ செய்ய போறதா சொன்னியே “ என்றபடி வலதுக் கையை வானத்தை நோக்கி குறும்பு கண்ணனாய் கேட்டான்..
அவன் கையை தொடர்ந்து அவளும் பார்க்க, அந்த நிலவு இவர்களை பார்த்து கண்சிமிட்டிக் கொண்டிருந்தது,
அந்த நிலவையே பார்திருந்தவளை, இவன் ஒட்டுமொத்த காதலையும் கண்களில் தேக்கி ரசனையுடன் பார்க்க,
அவன் கண்களில் தோன்றிய காதலை கண்டவள் அதில் மயங்கி, அவளையும் அறியாமல் அவன் கன்னத்தில் தன் முத்திரையை பதித்திருந்தாள்.....
@@@@@@@@@@@@@@@
கடற்கரை சாலையில் தனது வண்டியை நிறுத்திய மித்ரன் காரில் இருந்து இறங்க, அவனை தொடர்ந்து தாமரை இறங்கினாள். பாக்டரியில் இருந்து நேராக இங்கு தான் வருகிறார்கள்.
ரொம்ப நாட்களுக்கு பிறகு கடற்கரைக்கு வருகிறாள் தாமரை, சில்லென்ற மாலை நேர கடற்காற்று அவளை ஓடி வந்து தழுவிக் கொள்ள, கைகளை மார்புக்கு நேராக கட்டிக் கொண்டு அந்த