??? நன்றிடா ஹனிHey shanu ka?????... kalakkal briyani dhan ponga...enaku romba romba pidichathu ???????
??? நன்றிடா ஹனிHey shanu ka?????... kalakkal briyani dhan ponga...enaku romba romba pidichathu ???????
?? நன்றி தனு பாப்பா ???Shanthini pappa super pappa
thanks akka...........Very nice Briyani Shanthini??
Unga writing style aaa ....
Entha vidha salasalappu illama thelinda neerodai pola irukku ??
thanks akka..........Oru briyanila ellathaiyum kalanthu asathiteenga shanthini dear...
Supero super briyani ma
Wow nice da??????நேராக கட்டிக் கொண்டு அந்த மணலில் கால் புதைய நடந்தாள்,
அவளை புன்னகையுடன் பார்த்துக் கொண்டே, அந்த மணலில் அமர்ந்தான் மித்ரன். அவன் அருகில் வந்த இரண்டு நாட்களிலையே அவள் அவனுள் செய்த மாயங்கள் ஏராளம்,
அவள் கடல் அலையில் காலை நனைத்துக் கொண்டு நின்றிருந்தாள், அவளை பார்த்த அவனுள் ஏதோ ஓன்று எட்டிப் பார்த்தது, ( வண்ண பட்டாம்பூச்சி எட்டி பார்த்தது என்று வச்சுகோங்க.)
அழகாக புடவை கட்டி, தலையில் சூடியிருந்த ஜாதி மல்லி தன் நிறத்தை இழந்திருந்தாலும், அதன் வாசத்தை இன்னும் பரப்பிக் கொண்டிருந்தது, அவளின் அந்த அமைதியான அழகு அவனை அவள் பின்னே இழுத்துக் கொண்டிருந்தது...
முன்னால் எப்படி இருந்தானோ தெரியாது ஆனால், இன்று அவளுகென்று அவன், நினைக்கவே அத்தனை சந்தோசமாக இருந்தது,
இதுவரை அவள் அவனிடம் ஏதும் கூறவில்லை, அவனும் ஏதும் கேட்டுக் கொள்ளவில்லை,
அலையில் மனம் கொஞ்சம் சமாதானமடைய மித்ரனை நோக்கி அவள் வர, அவளுடன் அவனும் எழுந்து நடந்தான்...
தனது பாட்டியுடன் பேசிக் கொண்டிருந்த மித்ரன் மனதை புரிந்துக் கொண்ட ஜெயந்திக்கு அத்தனை சந்தோசமாக இருந்தது, பாட்டியை போல் மனைவியாக தாமரை அமைந்திருந்தாள்.
தன் அறைக்கு வந்தவன் யோசனையுடன் சுற்றிக்கொண்டிருந்தான், பாக்டரியில் நடந்தது அவனுக்கு தெரியவில்லை, அவளும் கூறவில்லை.. கதிர் என்ன கூறினான் என்றும் தெரியவில்லை...
அங்கிருந்து நேராக கடற்கரைக்கு தான் சென்றனர்... அங்கிருந்து வந்து தன் அறைக்கு சென்று உடை மாற்றியவள் ஹாலில் இருந்து பேசிக் கொண்டிருந்து நேராக தன் அறைக்கு சென்றிருந்தாள்...
நேற்று அவளிடம் பேசிக் கொண்டிருந்து அங்கயே தூங்கிய நினைவு வர, இப்பொழுது அவள் அறை வாசலில் நின்று கதவை தட்டினான்.
அவள் கதவை திறக்க, வெளியில் யாரும் இல்லாமல் போக, வாசலை விட்டு வெளியில் வந்து பார்த்தாள்.
யாரும் இல்லை எனவும் யோசனையுடன் கதவை பூட்டி உள் வர கட்டிலில் அவன் அமர்ந்திருந்தான் மித்ரன். அவள் வெளியே சென்ற கேப்பில் உள்ளே நுழைந்திருந்தான்,
அவனைப் பார்த்து அதிசயித்தவள் மெதுவாக அவனை நோக்கி வந்தாள், அவளை பார்த்தவன் மனம் வெகுவாக அவள் பின்னே சாய்ந்தது, இந்த பெண் ஏதோ மாயம் செய்கிறாள் என்றே அவனுக்கு தோன்றியது,
அவன் அருகில் வந்து அமர, அவளின் கையை பிடித்துக் கொண்டான் மித்ரன். மெதுவாக அவன் முகம் பார்க்க,
“ கதிர் என்ன சொன்னான் என்று தெரியாது, ஆனா இப்போ சொல்லுறேன், உன்னை பிடித்து சத்தியமா கல்யாணம் பண்ணல, ஆனால் இப்போ ஒவ்வொரு நொடியும் உன்னை பிடித்து உன் கூட வாழ ஆசைபடுறேன், உன் அண்ணன் ஏதாவது சொன்னான் என்று என்னை விட்டு போயிடமாட்டியே “ சிறு தவிப்புடன் கேட்டான்...
“ என்னாச்சு, என்ன பேச்சு இது “ அவன் நேற்று கூறியபடி கொஞ்சம் அதட்டலாகவே கேட்டாள்.. அவள் முகத்தையே பார்த்தான், அவன் முகத்தின் கேள்வியை கண்டவள் மனதில் பாக்டரியில் நடந்தது ஓடியது,
காலையில் இருவரும் பாக்டரி செல்ல, தாமரை மனதோ “ அண்ணன் வருவானா “ என்ற சிந்தனையில் இருந்தது, மித்ரனும் அதை பற்றி தான் சிந்தித்து கொண்டிருந்தான்.
“ அவன் வரவில்லை என்றால் பாவம் ஏமாந்து விடுவாளே..? “ அவனுக்கு தான் கஷ்டமாக இருந்தது.
மித்ரனுக்கு முன்னமே கதிர் பாக்டரி வந்திருந்தான், ஆனால் யாரையும் அவன் பார்க்கவில்லை எப்பொழுதும் போல் வந்து தன் வேலையை பார்த்திருந்தான்,
அங்கு வந்த மித்ரன் கதிர் வந்ததை அறிந்து, தாமரையை அழைத்துக் கொண்டு அவன் முன் விட்டு சென்றான்.. அண்ணனும், தங்கையும் பேசிக்கொள்ளட்டும் என்று,
“ அண்ணா “ மெதுவாக தாமரை அழைக்க,
அவளை ஏறெடுத்துப் பார்க்கவே இல்லை கதிர்...
“ அண்ணா அவர் ரொம்ப மோசமானவரா, அது தான் என்கிட்ட பேசாம இருக்கியா..? “ சிறுபிள்ளையாக கேட்டாள் அவள்..
உடனே விலுக்கென்று தலையை தூக்கியவன் “ என்னை விட அவர் கூட இருந்தா மட்டுமே நீ ரொம்ப சந்தோசமா இருப்ப “ மித்ரனை பற்றி நன்கு தெரியும் அவனுக்கு, மித்ரன் தனகென்று வந்தவளை அவனை விட நன்றாக பார்த்துக் கொள்வான் என்று தெரியும், ஏனோ சில காலம் தடம்மாறிவிட்டான் அவ்வளவே..
“ அப்போ எதுக்குண்ணா என்கிட்ட பேசாமலே இருக்க “
“ உன்கிட்ட பேசாமல் எல்லாம் இல்ல, கொஞ்சம் வருத்தம் மட்டும் தான், அதுவும் கூடிய சீக்கிரம் போயிரும் “ என்றவன் அதன் பிறகு அவளிடம் ஏதும் பேசாமல் வெளியில் சென்று விட்டான்..
மித்ரனிடம் கூறி முடிக்க அவன் அவள் முகத்தையே பார்த்திருந்தான் கொஞ்சம் சந்தோசமாய்... அப்படியே அவள் உள்ளங்கையில் அழுத்தமாய் இதழ்பதித்தான்...
மொத்தமாய் சிலிர்த்து போய் நிமிர்ந்தாள் அவள் “ மரக்கட்டை கண்ணம்மா நான், வாழ்கையிலே எல்லாம் இருந்தும் எதையே தேடி அலைந்தேன், சந்தோசம், துக்கம், வெற்றி, ஏமாற்றம் எல்லாத்தையும் அனுபவித்தேன், ஆனா எதுவும் என்னை பெரிசா பாதித்ததில்லை, நான் யார் கிட்டையும் தோத்து போக விரும்பினதில்லை, ஆனா முதல் முறையா உன்கிட்ட தோற்று போக விரும்புகிறேன், தோற்று போகிறேன் வாழ்கையில்
?super