Monisha
அமைச்சர்
- Joined
- Jan 17, 2018
- Messages
- 3,233
- Reaction score
- 58,772
பின்குறிப்பு : இதுவரைக்கும் சிறு கதை எழுதியதே இல்லை. முதல் முயற்சி. கதை மாறி இல்லன்னா கண்டுக்காதீங்க... உட்ருங்க...
மூச்சு முட்டியது அவளுக்கு. எங்கும் ஒரே நிசப்தம்
. “எங்கே இருக்கிறேன் நான்?” நின்றபடியே அந்த இடத்தைச் சுற்றி பார்த்தாள் அவள். அழகாய் விசாலமாய் இருந்தது அந்த இடம். வரிசையாய் மேன்னாட்டு மக்களின் அணிவகுப்பு... மீண்டும், ‘எங்கே இருக்கிறேன் நான்?’ அவள் தன்னைத்தானே கேட்டுக் கொண்டாள். அப்போது அங்கிருந்த எல்லோரின் பார்வையும் அவளைத்தான் சுற்றி வந்தன... ஸ்தம்பித்து... அதே நேரம் சிலாகித்து...
அவர்கள் யாவரும் தன்னைத்தான் ரசிக்கிறார்கள் என்பதை உணர்தவளுக்கு உள்ளம் கொதித்தது. அவர்கள் எல்லோரையும் சுட்டெரிக்க எண்ணினாள். ஆனால் அது சாத்தியப்படவில்லை. அவள் கண்ணாடி பேழைக்குள் இருந்தாள். மீண்டும் மூச்சு முட்டியது.
அப்போது அவளைப் பார்த்து கொண்டிருந்தவர்கள் சிலர் தன் கரத்திலிருந்த கேமராவால் அவளைப் படம் எடுத்தனர். தோன்றி மறைந்த மின்னல் போன்ற ஒளியில் அதிர்ந்தவளுக்கு அப்போதே விளங்கியது. தான் நின்று கொண்டிருப்பது ஓர் அருங்காட்சியகம்.
அப்படியெனில் இனி எனக்கு அபிஷேகங்கள் இல்லையா? பிரசாதங்கள் இல்லையா? ஊதுபத்தியும் பூக்களும் கமழ மாலை சூட்டப்பட்டு மங்கலமாய் மணியோசை ஒலிக்க தீப ஆராதனைகள் இல்லையா?
அவளை எள்ளிநகையாடியது அவள் மனம்
‘அடியே! இது உன் தேசம் இல்லை. இவர்கள் யாரும் உன் பக்தர்கள் இல்லை. நீ நிற்கும் இடம் கோவிலும் இல்லை. இங்கே உனக்கு வழிபாடுகளும் இல்லை. அவர்களுக்கு நீ கடவுளும் இல்லை... வெறும் காட்சி பொருள்’ என்று
அப்படியே சிலையாய் நின்று விட்டாள். பதினோராம் நூற்றாண்டில் எம் சோழர் கால சிற்பியின் உளியில் உயிர் பெற்ற உமாதேவி.
கடவுளுக்காகப் பக்தன் காத்திருந்த காலம் போய் பக்தனின் வருகைக்காகக் கடவுள் காத்திருக்க... அவள் காத்திருப்பு வீண் போகவில்லை. ஓர் பக்தனின் பார்வை பட்டு சிங்கப்பூர் அருங்காட்சியகத்திலிருந்து அவள் இன்று மீட்டெடுக்கப்பட்டுவிட்டாள்..
ஆனால் இன்றும் நம்முடைய பல கடவுள்கள் வேற்றுத் தேசங்களில் உள்ள கண்ணாடி பேழைக்குள் மூச்சு முட்டிக் கொண்டிருக்கின்றனர். அவர்களை எல்லாம் யார்... எப்போது மீட்பது?
எங்கள் கடவுள்களை கடத்திச் சென்று உங்கள் நாட்டு அருங்காட்சியகளில் வைத்து ரசிப்பதற்குப் பெயர் கலை நயம் அல்ல. களவாணித்தனமாகும்.
click this link?To view
உமா தேவி சிலை வடிவம்
To comment. Click on this
என் கடவுள்
மூச்சு முட்டியது அவளுக்கு. எங்கும் ஒரே நிசப்தம்
. “எங்கே இருக்கிறேன் நான்?” நின்றபடியே அந்த இடத்தைச் சுற்றி பார்த்தாள் அவள். அழகாய் விசாலமாய் இருந்தது அந்த இடம். வரிசையாய் மேன்னாட்டு மக்களின் அணிவகுப்பு... மீண்டும், ‘எங்கே இருக்கிறேன் நான்?’ அவள் தன்னைத்தானே கேட்டுக் கொண்டாள். அப்போது அங்கிருந்த எல்லோரின் பார்வையும் அவளைத்தான் சுற்றி வந்தன... ஸ்தம்பித்து... அதே நேரம் சிலாகித்து...
அவர்கள் யாவரும் தன்னைத்தான் ரசிக்கிறார்கள் என்பதை உணர்தவளுக்கு உள்ளம் கொதித்தது. அவர்கள் எல்லோரையும் சுட்டெரிக்க எண்ணினாள். ஆனால் அது சாத்தியப்படவில்லை. அவள் கண்ணாடி பேழைக்குள் இருந்தாள். மீண்டும் மூச்சு முட்டியது.
அப்போது அவளைப் பார்த்து கொண்டிருந்தவர்கள் சிலர் தன் கரத்திலிருந்த கேமராவால் அவளைப் படம் எடுத்தனர். தோன்றி மறைந்த மின்னல் போன்ற ஒளியில் அதிர்ந்தவளுக்கு அப்போதே விளங்கியது. தான் நின்று கொண்டிருப்பது ஓர் அருங்காட்சியகம்.
அப்படியெனில் இனி எனக்கு அபிஷேகங்கள் இல்லையா? பிரசாதங்கள் இல்லையா? ஊதுபத்தியும் பூக்களும் கமழ மாலை சூட்டப்பட்டு மங்கலமாய் மணியோசை ஒலிக்க தீப ஆராதனைகள் இல்லையா?
அவளை எள்ளிநகையாடியது அவள் மனம்
‘அடியே! இது உன் தேசம் இல்லை. இவர்கள் யாரும் உன் பக்தர்கள் இல்லை. நீ நிற்கும் இடம் கோவிலும் இல்லை. இங்கே உனக்கு வழிபாடுகளும் இல்லை. அவர்களுக்கு நீ கடவுளும் இல்லை... வெறும் காட்சி பொருள்’ என்று
அப்படியே சிலையாய் நின்று விட்டாள். பதினோராம் நூற்றாண்டில் எம் சோழர் கால சிற்பியின் உளியில் உயிர் பெற்ற உமாதேவி.
கடவுளுக்காகப் பக்தன் காத்திருந்த காலம் போய் பக்தனின் வருகைக்காகக் கடவுள் காத்திருக்க... அவள் காத்திருப்பு வீண் போகவில்லை. ஓர் பக்தனின் பார்வை பட்டு சிங்கப்பூர் அருங்காட்சியகத்திலிருந்து அவள் இன்று மீட்டெடுக்கப்பட்டுவிட்டாள்..
ஆனால் இன்றும் நம்முடைய பல கடவுள்கள் வேற்றுத் தேசங்களில் உள்ள கண்ணாடி பேழைக்குள் மூச்சு முட்டிக் கொண்டிருக்கின்றனர். அவர்களை எல்லாம் யார்... எப்போது மீட்பது?
எங்கள் கடவுள்களை கடத்திச் சென்று உங்கள் நாட்டு அருங்காட்சியகளில் வைத்து ரசிப்பதற்குப் பெயர் கலை நயம் அல்ல. களவாணித்தனமாகும்.
click this link?To view
உமா தேவி சிலை வடிவம்
To comment. Click on this
Last edited: