ஹாய் டியர்ஸ்!!!
சென்ற udக்கு லைக்ஸ் அண்ட்
கமெண்ட்ஸ் போட்ட அனைவருக்கும் மனமார்ந்த நன்றிகள் பல தோழமைகளே !!!!!
என்னடா இது ஒரு வாரம் ஆகும்னு சொல்லிட்டு 3 நாள்ல
வந்துட்டான்னு நீங்க ஷாக் ஆகறது தெரியுது. அந்த ஷாக்ல இருந்த கரண்ட் வெச்சு கொஞ்ச நாள் ஈஸியா மாவாட்டிப்பேன்...நன்றி!
ஓகே இனிமே இந்த மாதிரி 2 ud எல்லாம் வராது . இப்ப கொஞ்சம்
வெட்டியா இருந்தேன்.அதான். சோ , நிம்மதியா போய் படிங்க ..அப்படியே கொஞ்சம் லைக்ஸ் அண்ட் கமெண்ட்ஸ் போட்டுடுங்க....
அடுத்த ud இதோ!!!!
ஷாலி!!!
?
ராகவ்!!!
கண்களை மூடிக்கொண்டு விநாயகர் முன்னே நின்றிருந்தாள் ஷாலினி.
அவளை அறியாமல் கண்கள் நீரைச் சொரிந்தன. அழுந்தக் கூப்பியிருந்த இரு கரங்களும், அவளது இறுக்கமான மனநிலையைக் காட்டியது. எவ்வளவு நேரம் ஆனதோ தெரியவில்லை.
கோவிலுக்கு வருவோர் அனைவரும் அவளைத் திரும்பிப் பார்த்துக்கொண்டே சென்றனர்.
எதையும் உணராமல் , கண்களைத் திறவாமல் சிலை போல நின்றிருந்தாள்.
அப்பொழுது வந்த ரூபா தோழியின் தோளை ஆறுதலுடன் பற்றினாள். அதிலே சுய உணர்வு பெற்ற ஷாலினி, வேகமாகப் பிரகாரத்தை சுற்றி வந்து அங்கே இருந்த தூணின் அருகில் அமர்ந்தாள்.
கூடவே வந்த ரூபா,
"நேரமாச்சு ஷாலினி. அப்பறம் இருட்டிடும். வீட்டுக்குப் போகலாமா?"
என்று மெதுவாகக் கேட்டாள்.
"நீ வேணும்னா போடி. எனக்கு யாரும் வேண்டாம்."
"என்னடி இப்படி சொல்லிட்ட . நான் கூட உனக்கு வேண்டாதவளா போயிட்டேனா"
சற்று இளகிய ஷாலினி ,
"இல்ல இல்லடி. நான் ஏதோ நினைப்புல சொல்லிட்டேன். கொஞ்ச நேரத்துக்கு அப்பறமா போகலாம் . இரு" என்று அவசரமாகக் கூறினாள்.
லேசாக சிரித்துக் கொண்டாள் ரூபா.
அவளை சகஜமாக்கும் பொருட்டு,
"ஏதோ நினைப்பா இல்ல யாரோ நினைப்பா"
என்று மெல்லக் கேட்ட ரூபாவை , ரூபேரி போட்டு வெளுத்துவிட்டாள் ஷாலினி.
"என்னடி கொழுப்பா போச்சா ? ஓவரா பேசற.எனக்கு யாரு நினைப்பும் இல்ல . இப்ப நடந்ததை எப்படி சரி பண்ணறதுன்னு தான் பார்க்கறேன். மத்தப்படி நீ சொல்றமாதிரி எல்லாம் ஒன்னும் இல்ல "
"அப்படி ஒன்னும் இல்லன்னா எதுக்கு அழற ? சரி பண்ண பார்க்கறவ யோசிக்க தான செய்யணும். "
"யோசிப்பேன் ரூபா. இனிமே அழ மாட்டேன். அவனை எப்படி எல்லாம் டார்ச்சர் பண்ணலாம்னு யோசிப்பேன்." என்றாள் ஷாலினி.
இதைக் கேட்டதும் ரூபா பதறினாள்.
"அம்மா தாயே , அதுக்கு நீ அழுத்துட்டே இருக்கலாம்."
"எதுக்குடி அப்படி சொல்லற. என் மேல நம்பிக்கை இல்லையா?"
"உன் மேல அவ்ளோ நம்பிக்கை ஷாலினி. கண்டிப்பா அவனைப் பழி வாங்கறேன்னு போய், நீ தான் தேவை இல்லாம அவன் இமேஜ கெடுக்கப் போன அப்படிங்கற பழியை வாங்கிட்டு வருவ.
போதும்டி ஆத்தா. இனிமே நீ என்ன பண்ணாலும் யாரும் நம்ப மாட்டாங்க.பேசாம போய்த் தூங்கு வீட்ல. அவ்ளோதான்"
"ரொம்ப அசிங்கப்படுத்தற ரூபா"
ஷாலினியின் முகம் சுருங்கியது.
அதைக் கண்ட ரூபா, இவளை எவ்வாறேனும் வீட்டிற்க்கு அழைத்துச் செல்ல வேண்டும் என்ற நோக்கத்தில் ,
" நீயே தாண்டி அசிங்கப்படுத்திக்கற. அப்பறமா மத்தவங்கள சொல்லி என்ன யூஸ்? இப்ப பேசாம கிளம்பு. எனக்கு லேட்டாகுது"
"நான் தான் சொன்னேன்ல , நீ கிளம்பிக்கோ. என்கூட வந்தா உனக்கும் அசிங்கம் தான்"
ஷாலினியின் கண்கள் மறுபடியும் நீரைச் சொரிய , ரூபாவிற்குத் தலையை சொறிந்தது.
"நான் அப்படி சொன்னேனா உன்கிட்ட ? சரி நம்ம இங்கயே இருப்போம். நான் போய் குடம் எடுத்துட்டு வரேன். நல்லா அழு, பிள்ளையாருக்குக் கண்ணீராபிஷேகம் பண்ணிடலாம்."
திரும்பி ரூபாவை நன்கு முறைத்த ஷாலினி, அங்கே உள்ளே வந்த ஜக்குவைப் பார்த்து வேகமாக எழுந்தாள்.
அப்படியே ரூபாவின் கையைப் பிடித்துக் கொண்டு அவளை இழுக்காத குறையாகக் கூட்டிச் சென்றாள்.
"அடியே , நீ என்ன பண்ணாலும் சொல்லிட்டுப் பண்ணுடி. எதுக்கு இப்ப இவ்ளோ வேகமா கூட்டிட்டுப் போற?"
" சும்மா வா. வீட்டுக்குத்தான் போறோம்"
அவளின் நடவடிக்கையைப் புரிந்து கொள்ள முடியாமல் ரூபா அவள் பின்னே சென்றாள்.
ஜக்கு, ஷாலினியைத் தேடி கோவிலுக்கு வந்திருந்தான். அவன் மனம் உறுதியாகச் சொன்னது அவள் இங்கு தான் வந்திருப்பாள் என்று.
பரபரப்பாக அவளைத் தேடிக் கொண்டிருந்த ஜக்குவை உணர்வற்றுப் பார்த்த ஷாலினி , அவன் பார்வையில் சிக்காமல் ரூபாவுடன் வீட்டிற்குச் சென்றுவிட்டாள்.
வீட்டு வாயிலை அடைந்ததும் , ரூபாவிடம், "நீ கிளம்பு. நாளைக்கு மீட் பண்ணலாம்"
என்று கூறினாள். ஆனால் அவளோ , "எனக்கு ஒரு வேலை இருக்கு. நான் இப்ப உன்கூடவே உள்ள வரேன்" என்றாள்.
"நான் வேற எங்கயும் போயிட மாட்டேன். பிரச்சனையைப் பார்த்து இன்னிக்கு ஓடலாம். ஆனா, என்னைக்கும் முடியாது"
ஒரு விரக்தியான புன்னகை அவள் அதரங்களில் தோன்ற, மேலும் எதுவும் பேசாமல் ரூபா அவளது கையை அழுத்திக் கொடுத்து அவ்விடம் விட்டு அகன்றாள்.
ஷாலினி உள்ளே நுழைய , அங்கே ஆள் நடமாட்டம் இருக்கும் அறிகுறியே இல்லை.
ராஜஷேகர், அவரது அறையின் மூலையில் அமர்ந்திருக்க , சத்யவதி சமையலறையின் மேடையில் சாய்ந்திருந்தார்.
அவர் அருகில் சிவசங்கரி ஏதோ சிந்தனையில் ஆழ்ந்திருக்க, அனைத்தையும் ஒரு பார்வை பார்த்த ஷாலினி, தன் அறைக்குச் செல்ல விழைந்தாள்.
"ஒரு நிமிஷம் "
என்ற சத்யவதியின் குரல் அவளைத் தடுத்தது. திரும்பித் தன் தாயைப் பார்க்கக் கூடத் தோன்றாமல் அப்படியே நின்றாள் ஷாலினி.
அதற்குள் சிவசங்கரி ஷாலினியிடம் ஓடி வந்தார்.
"ஷாலினி, எங்க போயிருந்த? சொல்லிட்டுப் போயிருக்கலாம் தான."
பரிவுடன் வினவிய அவரைக் கண்டு , ஷாலினி கண்களில் நீர் கோர்த்தது.
"இல்ல சங்ஸ், நம்ம புலியகுளம் விநாயகர் கோவில் தான் போயிருந்தேன். மனசு சரியில்லை. சாரி சங்ஸ், சொல்லணும்னு அப்ப தோணல "
என்று கூறிய ஷாலினியிடம், ஜக்குவப் பார்த்தியா என்று கேட்க நினைத்து அதை மனதிலேயே மறைத்துக்கொண்டார்.
"சரி விடுமா, வா வந்து கொஞ்சம் டீ குடி"
"இல்ல சங்ஸ் எனக்கு வேண்டாம். கொஞ்ச நேரம் ரெஸ்ட் எடுத்துட்டு வரேன் " என்று சோர்ந்த குரலில் ஷாலினி கூறினாள்.
பின்னோடு வந்த சத்யவதி ,
" நல்லா இருக்கே, என்னத்த கிழிச்சன்னு ரெஸ்ட் எடுக்கப் போற? பேசாம டீ குடிக்க வா. வந்து உங்கப்பாக்கும் குடுத்துட்டு குடி"
"அம்மா , ப்ளீஸ் ஆளை விடு. அவரு டீ குடிக்கணும்னா நீயே போய் குடு. எதுக்கு இந்த இன்டர்மீடியேட் வேலை எனக்கு?"
"சரி போ. ரெண்டு பேரும் சேர்ந்து என்னைத்தான் பைத்தியம் ஆக்கறீங்க. மிச்சம் இருக்கற கொஞ்ச நாள ஏதோ ஓட்டிடலாம்னு தான் பார்க்கறேன். விட்டா தான "
"சரிமா. நீ வேற புலம்பாத. டீ போட்டு வை. வரேன்"
விடு விடுவென்று தன் அறைக்குள் புகுந்து கொண்டாள் ஷாலினி.
படுக்கையில் சென்று அமர்ந்த அவள் மனம் கொதித்த கொதிப்பில் , அதனுள் வலுக்கட்டயமாகக் குடி வந்திருக்கும் ராகவ் வெந்து போயிருப்பான்.
நல்லவேளை, தண்ணீரை எடுத்து சொம்புடன் வாயில் கவிழ்த்துக் கொண்டாள் அவள்.
பின்னர் மெதுவாக எழுந்து, அறையில் இருந்த கண்ணாடி முன்னே நின்று தனக்குள்ளேயே தைரியம் சொல்லிக் கொண்டாள்.
' இனிமே அடிக்கடி அவனைப் பார்க்க வேண்டி இருக்கும் ஷாலினி. சோ, எப்பவும் கெத்தா இருக்கணும். அவன் முன்னாடி மட்டும் பிரேக் ஆகவே கூடாது'
சென்ற udக்கு லைக்ஸ் அண்ட்
கமெண்ட்ஸ் போட்ட அனைவருக்கும் மனமார்ந்த நன்றிகள் பல தோழமைகளே !!!!!
என்னடா இது ஒரு வாரம் ஆகும்னு சொல்லிட்டு 3 நாள்ல
வந்துட்டான்னு நீங்க ஷாக் ஆகறது தெரியுது. அந்த ஷாக்ல இருந்த கரண்ட் வெச்சு கொஞ்ச நாள் ஈஸியா மாவாட்டிப்பேன்...நன்றி!
ஓகே இனிமே இந்த மாதிரி 2 ud எல்லாம் வராது . இப்ப கொஞ்சம்
வெட்டியா இருந்தேன்.அதான். சோ , நிம்மதியா போய் படிங்க ..அப்படியே கொஞ்சம் லைக்ஸ் அண்ட் கமெண்ட்ஸ் போட்டுடுங்க....
அடுத்த ud இதோ!!!!
ஷாலி!!!
?
ராகவ்!!!
கண்களை மூடிக்கொண்டு விநாயகர் முன்னே நின்றிருந்தாள் ஷாலினி.
அவளை அறியாமல் கண்கள் நீரைச் சொரிந்தன. அழுந்தக் கூப்பியிருந்த இரு கரங்களும், அவளது இறுக்கமான மனநிலையைக் காட்டியது. எவ்வளவு நேரம் ஆனதோ தெரியவில்லை.
கோவிலுக்கு வருவோர் அனைவரும் அவளைத் திரும்பிப் பார்த்துக்கொண்டே சென்றனர்.
எதையும் உணராமல் , கண்களைத் திறவாமல் சிலை போல நின்றிருந்தாள்.
அப்பொழுது வந்த ரூபா தோழியின் தோளை ஆறுதலுடன் பற்றினாள். அதிலே சுய உணர்வு பெற்ற ஷாலினி, வேகமாகப் பிரகாரத்தை சுற்றி வந்து அங்கே இருந்த தூணின் அருகில் அமர்ந்தாள்.
கூடவே வந்த ரூபா,
"நேரமாச்சு ஷாலினி. அப்பறம் இருட்டிடும். வீட்டுக்குப் போகலாமா?"
என்று மெதுவாகக் கேட்டாள்.
"நீ வேணும்னா போடி. எனக்கு யாரும் வேண்டாம்."
"என்னடி இப்படி சொல்லிட்ட . நான் கூட உனக்கு வேண்டாதவளா போயிட்டேனா"
சற்று இளகிய ஷாலினி ,
"இல்ல இல்லடி. நான் ஏதோ நினைப்புல சொல்லிட்டேன். கொஞ்ச நேரத்துக்கு அப்பறமா போகலாம் . இரு" என்று அவசரமாகக் கூறினாள்.
லேசாக சிரித்துக் கொண்டாள் ரூபா.
அவளை சகஜமாக்கும் பொருட்டு,
"ஏதோ நினைப்பா இல்ல யாரோ நினைப்பா"
என்று மெல்லக் கேட்ட ரூபாவை , ரூபேரி போட்டு வெளுத்துவிட்டாள் ஷாலினி.
"என்னடி கொழுப்பா போச்சா ? ஓவரா பேசற.எனக்கு யாரு நினைப்பும் இல்ல . இப்ப நடந்ததை எப்படி சரி பண்ணறதுன்னு தான் பார்க்கறேன். மத்தப்படி நீ சொல்றமாதிரி எல்லாம் ஒன்னும் இல்ல "
"அப்படி ஒன்னும் இல்லன்னா எதுக்கு அழற ? சரி பண்ண பார்க்கறவ யோசிக்க தான செய்யணும். "
"யோசிப்பேன் ரூபா. இனிமே அழ மாட்டேன். அவனை எப்படி எல்லாம் டார்ச்சர் பண்ணலாம்னு யோசிப்பேன்." என்றாள் ஷாலினி.
இதைக் கேட்டதும் ரூபா பதறினாள்.
"அம்மா தாயே , அதுக்கு நீ அழுத்துட்டே இருக்கலாம்."
"எதுக்குடி அப்படி சொல்லற. என் மேல நம்பிக்கை இல்லையா?"
"உன் மேல அவ்ளோ நம்பிக்கை ஷாலினி. கண்டிப்பா அவனைப் பழி வாங்கறேன்னு போய், நீ தான் தேவை இல்லாம அவன் இமேஜ கெடுக்கப் போன அப்படிங்கற பழியை வாங்கிட்டு வருவ.
போதும்டி ஆத்தா. இனிமே நீ என்ன பண்ணாலும் யாரும் நம்ப மாட்டாங்க.பேசாம போய்த் தூங்கு வீட்ல. அவ்ளோதான்"
"ரொம்ப அசிங்கப்படுத்தற ரூபா"
ஷாலினியின் முகம் சுருங்கியது.
அதைக் கண்ட ரூபா, இவளை எவ்வாறேனும் வீட்டிற்க்கு அழைத்துச் செல்ல வேண்டும் என்ற நோக்கத்தில் ,
" நீயே தாண்டி அசிங்கப்படுத்திக்கற. அப்பறமா மத்தவங்கள சொல்லி என்ன யூஸ்? இப்ப பேசாம கிளம்பு. எனக்கு லேட்டாகுது"
"நான் தான் சொன்னேன்ல , நீ கிளம்பிக்கோ. என்கூட வந்தா உனக்கும் அசிங்கம் தான்"
ஷாலினியின் கண்கள் மறுபடியும் நீரைச் சொரிய , ரூபாவிற்குத் தலையை சொறிந்தது.
"நான் அப்படி சொன்னேனா உன்கிட்ட ? சரி நம்ம இங்கயே இருப்போம். நான் போய் குடம் எடுத்துட்டு வரேன். நல்லா அழு, பிள்ளையாருக்குக் கண்ணீராபிஷேகம் பண்ணிடலாம்."
திரும்பி ரூபாவை நன்கு முறைத்த ஷாலினி, அங்கே உள்ளே வந்த ஜக்குவைப் பார்த்து வேகமாக எழுந்தாள்.
அப்படியே ரூபாவின் கையைப் பிடித்துக் கொண்டு அவளை இழுக்காத குறையாகக் கூட்டிச் சென்றாள்.
"அடியே , நீ என்ன பண்ணாலும் சொல்லிட்டுப் பண்ணுடி. எதுக்கு இப்ப இவ்ளோ வேகமா கூட்டிட்டுப் போற?"
" சும்மா வா. வீட்டுக்குத்தான் போறோம்"
அவளின் நடவடிக்கையைப் புரிந்து கொள்ள முடியாமல் ரூபா அவள் பின்னே சென்றாள்.
ஜக்கு, ஷாலினியைத் தேடி கோவிலுக்கு வந்திருந்தான். அவன் மனம் உறுதியாகச் சொன்னது அவள் இங்கு தான் வந்திருப்பாள் என்று.
பரபரப்பாக அவளைத் தேடிக் கொண்டிருந்த ஜக்குவை உணர்வற்றுப் பார்த்த ஷாலினி , அவன் பார்வையில் சிக்காமல் ரூபாவுடன் வீட்டிற்குச் சென்றுவிட்டாள்.
வீட்டு வாயிலை அடைந்ததும் , ரூபாவிடம், "நீ கிளம்பு. நாளைக்கு மீட் பண்ணலாம்"
என்று கூறினாள். ஆனால் அவளோ , "எனக்கு ஒரு வேலை இருக்கு. நான் இப்ப உன்கூடவே உள்ள வரேன்" என்றாள்.
"நான் வேற எங்கயும் போயிட மாட்டேன். பிரச்சனையைப் பார்த்து இன்னிக்கு ஓடலாம். ஆனா, என்னைக்கும் முடியாது"
ஒரு விரக்தியான புன்னகை அவள் அதரங்களில் தோன்ற, மேலும் எதுவும் பேசாமல் ரூபா அவளது கையை அழுத்திக் கொடுத்து அவ்விடம் விட்டு அகன்றாள்.
ஷாலினி உள்ளே நுழைய , அங்கே ஆள் நடமாட்டம் இருக்கும் அறிகுறியே இல்லை.
ராஜஷேகர், அவரது அறையின் மூலையில் அமர்ந்திருக்க , சத்யவதி சமையலறையின் மேடையில் சாய்ந்திருந்தார்.
அவர் அருகில் சிவசங்கரி ஏதோ சிந்தனையில் ஆழ்ந்திருக்க, அனைத்தையும் ஒரு பார்வை பார்த்த ஷாலினி, தன் அறைக்குச் செல்ல விழைந்தாள்.
"ஒரு நிமிஷம் "
என்ற சத்யவதியின் குரல் அவளைத் தடுத்தது. திரும்பித் தன் தாயைப் பார்க்கக் கூடத் தோன்றாமல் அப்படியே நின்றாள் ஷாலினி.
அதற்குள் சிவசங்கரி ஷாலினியிடம் ஓடி வந்தார்.
"ஷாலினி, எங்க போயிருந்த? சொல்லிட்டுப் போயிருக்கலாம் தான."
பரிவுடன் வினவிய அவரைக் கண்டு , ஷாலினி கண்களில் நீர் கோர்த்தது.
"இல்ல சங்ஸ், நம்ம புலியகுளம் விநாயகர் கோவில் தான் போயிருந்தேன். மனசு சரியில்லை. சாரி சங்ஸ், சொல்லணும்னு அப்ப தோணல "
என்று கூறிய ஷாலினியிடம், ஜக்குவப் பார்த்தியா என்று கேட்க நினைத்து அதை மனதிலேயே மறைத்துக்கொண்டார்.
"சரி விடுமா, வா வந்து கொஞ்சம் டீ குடி"
"இல்ல சங்ஸ் எனக்கு வேண்டாம். கொஞ்ச நேரம் ரெஸ்ட் எடுத்துட்டு வரேன் " என்று சோர்ந்த குரலில் ஷாலினி கூறினாள்.
பின்னோடு வந்த சத்யவதி ,
" நல்லா இருக்கே, என்னத்த கிழிச்சன்னு ரெஸ்ட் எடுக்கப் போற? பேசாம டீ குடிக்க வா. வந்து உங்கப்பாக்கும் குடுத்துட்டு குடி"
"அம்மா , ப்ளீஸ் ஆளை விடு. அவரு டீ குடிக்கணும்னா நீயே போய் குடு. எதுக்கு இந்த இன்டர்மீடியேட் வேலை எனக்கு?"
"சரி போ. ரெண்டு பேரும் சேர்ந்து என்னைத்தான் பைத்தியம் ஆக்கறீங்க. மிச்சம் இருக்கற கொஞ்ச நாள ஏதோ ஓட்டிடலாம்னு தான் பார்க்கறேன். விட்டா தான "
"சரிமா. நீ வேற புலம்பாத. டீ போட்டு வை. வரேன்"
விடு விடுவென்று தன் அறைக்குள் புகுந்து கொண்டாள் ஷாலினி.
படுக்கையில் சென்று அமர்ந்த அவள் மனம் கொதித்த கொதிப்பில் , அதனுள் வலுக்கட்டயமாகக் குடி வந்திருக்கும் ராகவ் வெந்து போயிருப்பான்.
நல்லவேளை, தண்ணீரை எடுத்து சொம்புடன் வாயில் கவிழ்த்துக் கொண்டாள் அவள்.
பின்னர் மெதுவாக எழுந்து, அறையில் இருந்த கண்ணாடி முன்னே நின்று தனக்குள்ளேயே தைரியம் சொல்லிக் கொண்டாள்.
' இனிமே அடிக்கடி அவனைப் பார்க்க வேண்டி இருக்கும் ஷாலினி. சோ, எப்பவும் கெத்தா இருக்கணும். அவன் முன்னாடி மட்டும் பிரேக் ஆகவே கூடாது'
Last edited: