வணக்கம் தோழமைகளே !!!
தங்கள் கருத்துக்களால் என்னை
ஊக்கப்படுத்துவதற்கு மிக்க நன்றி!!!
இதோ அடுத்த பதிவு . படித்து விட்டு
வழக்கம் போல் கருத்தை குணமா சொல்லுங்க . நான் கேட்டுக்கறேன்.
அடிச்சு சொன்னா அழுதுருவேன்.
அடுத்த பதிவில் இருந்து கொஞ்சமே
கொஞ்சம் வேறு மாதிரியான கோணம்
இருக்கலாம் . லைக்ஸ் அண்ட் கமெண்ட்ஸ் போட வாங்க !!!
ஷாலி?ராகவ்...
ராகவ் தண்ணீரை நீட்ட , அவனையே பார்த்தபடி நின்றாள் ஷாலினி .
விக்கலும் நின்றபாடில்லை . ராகவே பாட்டிலைத் திறந்து அவளின் வாயருகே கொண்டு செல்ல,அவனின் நோக்கம் புரிந்து , வேகமாக வாங்கி நீரை ஒரே மிடறில் அருந்தினாள்.
விக்கல் மட்டுப்பட்டதும் , " வெரி குட் "
என்று ராகவ் அவள் தலையினை லேசாகத் தட்டினான்.
ஷாலினி அவனை முறைக்க, அந்நேரம் பார்த்து ஜக்கு உள்ளே வந்தான்.இருவரையும் ஒன்றாகக் கண்ட அவன் மனம் வெதும்பியது.
அவளைத் தேடி எங்கெல்லாமோ அலைந்து திரிந்து வந்தால், அவளோ இங்கே ராகவின் அருகில் நின்று அவனையே பார்த்துக் கொண்டிருக்கிறாள்.
அவள் முறைக்கிறாள் என்று இவனுக்குப் புரியவில்லையே. அங்கே வெறுமனே நின்று கொண்டிருந்த அவன் பெற்றோர்களைக் கண்டு இன்னும் கடுப்பானான் அவன்.
"ஷாலினி, உன்னைத் தான் தேடிட்டு வரேன். சொல்லிட்டுப் போக
மாட்டியா ?"
அவன் அதிகாரமாக வினவினான். அதிலே சரேலெனப் பார்வையைத் திருப்பி அதே முறைப்பை ஜக்குவிற்கும் வழங்கினாள் ஷாலினி.
"வாடா, சீக்கரமா ரெடி ஆகு. நம்ம புது வீட்ல இதெல்லாம் போய் செட்டில் பண்ணனும் "
மஹேந்திரன் அவனிடம் கூற ,
"எதுக்கு நம்ம கிளம்பணும் ? நான் வர மாட்டேன் டாடி . நீங்க வேணா போய்க்கோங்க. நான் எது வந்தாலும் பார்த்துக்கறேன்"
ஜக்கு ராகவையே பார்த்தபடி கூறினான். சூழ்நிலை மோசமாவதை விரும்பாத சிவசங்கரி , ஜக்குவிடம் சென்று ,
"சொன்னா கேளுடா , ஏற்கனவே வீடு ஷிஃப்ட் பண்ண நம்ம யோசிச்சோம் தான.எப்ப போனா என்ன? உனக்கும் வசதியா இருக்கும் ஆஃபீஸ் போக"
என்று தன்மையாகக் கூறினார்.
"எனக்கு இங்க தான் வசதியா இருக்கு. முடிஞ்சா என்னை வீட்டை விட்டு அனுப்பிப் பார்க்கட்டும்.
ஷாலினிய இங்க விட்டுட்டு என்னால வர முடியாது."
இதைக் கேட்டதும் ஷாலினி ஆத்திரம் கொண்டாள். வேகமாக அவனிடம் சென்றவள் ,
"ஸீ , மிஸ்டர் ஜகதீஷ் , எனக்கு யாரோட ஹெல்பும் தேவை இல்லை. தட் டூ , உன்னோட ஹெல்ப் எனக்கு வேண்டவே வேண்டாம்.
நான் நம்புனேன் உன்னை, என்னோட நல்ல ஃப்ரெண்டா நீ இருப்பன்னு. பட் , நீ பொய்யா பழகிருக்க. என்னை லவ் பண்ணிட்டு , அதை நட்புன்னு ஏமாத்திருக்க.
முன்னாடி மாதிரி இருந்தா நீ இங்கயே இருக்க , நானும் ஆசைப்பட்டிருப்பேன். ஆனா , இப்ப இல்லை."
என்று கூறிவிட்டு , யாரையும் நோக்காமல் வேகமாக அவளின் வீட்டிற்குச் சென்று விட்டாள்.
எங்கிருந்துதான் கோபம் வந்ததோ அவளுக்கு. மனதினுள் புழுங்கிக் கொண்டிருக்க முடியாமல், ஜக்குவிடம் ஆத்திரத்தைக் கொட்டிவிட்டு, அவனைத் தன் வாழ்விலிருந்து வெட்டிவிட்டுச் சென்றாள்.
இது நீடிக்குமா! இல்லை அவள் மனம் மாறுமா?
முகத்தில் அறை வாங்கியது போல் நின்றிருந்தான் ஜக்கு. சத்தியமாக இதை எதிர்பார்க்கவில்லை என்பது அவன் முகத்தில் அப்பட்டமாகத் தெரிந்தது.
மஹேந்திரனுக்கும், சிவசங்கரிக்குமே இதில் வருத்தமே. அவ்வளவு பேரின் மத்தியில் ஜக்கு இவ்வாறு சொல்வான் என்று அவர்கள் நினைக்கவில்லையே.
ஆனால், பெற்ற பிள்ளையாகவே இருந்தாலும் நன்கு வளர்ந்த பிள்ளையாகப் போய் விட்டான்.
அதட்டவும் இயலாதே தற்காலத்தில். அவனை என்ன சொல்லி அழைத்துச் செல்வது என்று குழம்பித்தான் போயிருந்தனர்.
"நீங்க கிளம்பிக்கோங்க சர் . நாளைக்கு நாங்க காலி பண்ணி, கீ தந்திடுவோம்."
ராகவிடம் மகேந்திரன் சென்று உரைக்க ,
"யாரு வீட்டுக் கீ , யாருக்கிட்டப் போகணும் ?என்னால ஒத்துக்கவே முடியாது டாடி "
ஜகதீஷ் அதிலேயே நின்றான்.
ராகவின் முன்பு ஷாலினி தன்னை உதாசீனப்படுத்தியது, அவனின் தன்மானத்தை மேலும் தூண்டியது.
வெறுமனே இத்தனை நேரம் வேடிக்கை பார்த்த ராகவ்,மெதுவாக ஜகதீஷிடம் சென்றான்.
" சோ, இங்க தான் இருப்ப !அப்படித்தான"
"யெஸ், நான் இங்க தான் இருப்பேன்."
ராகவை முடிந்த மட்டிலும் முறைத்தான் ஜகதீஷ்.
"அப்போ அந்த ஃபோட்டோ நியூஸ்பேப்பர்ல வந்ததுக்கு நீ தான் காரணம்னு நான் இப்பவே எல்லாருகிட்டயும் சொல்லவா??"
மெதுவாக, ஆனால் அழுத்தமாகக் கூறிய ராகவை அதிர்ந்து நோக்கினான்.
அவனின் கண்கள் வெளிப்படுத்தியது பயத்தையா , பதட்டத்தையா, கோபத்தையா, ஆத்திரத்தையா என்று பிரித்தறிய முடியவில்லை.
உடனே பின்னால் நிற்கும் பெற்றவர்களின் முகத்தைப் பார்த்தான்.
கவலையுடன் நிற்பவர்களைக் கண்டு, அவர்களுக்கு ஒன்றும் கேட்கவில்லை என்று சற்றே நிம்மதி கொண்டான்.
உடனே சுதாரித்து,
" என்ன உளறிட்டு இருக்க?"
என்று அடிக்குரலில் ராகவிடம் சீறினான் ஜக்கு.
"அப்படியா! நான் நடந்ததைத்தான் சொல்றேன். உன்னோட அதிர்ச்சியும் அதைத்தான் சொல்லுது. ஒரு நிமிஷம் தான்னாலும் என் கண்ணுக்கு அது தப்பாது"
அவனை சற்று தள்ளி அழைத்துச் சென்ற ஜக்கு ,
"எனக்கு எதுவும் தெரியாது ராகவ். நீ தப்பா நினைச்சிருக்க"
என்று கூறினான்.
ஏளனமாக அவனைப் பார்த்தான் ராகவ்.
"ஆஹான், அப்போ உன்னோட வண்டவாளத்தை தண்டவாளம் ஏத்திட வேண்டியதுதான்."
"என்ன பண்ண போற?"
சற்றே குரலில் அவனையும் மீறி தடுமாற்றம் தெரிந்தது.
"நாளைக்கு அதே நியூஸ்பேப்பர்ல உன்னோட நியூஸ் கவர் பேஜ்ல வரும் பார்க்கறியா"
"வேண்டாம் ராகவ். ரொம்ப சீண்டி பார்க்கற. நான் என்னோட சுயரூபத்தை காட்டல, என்னை அந்நியனா மாத்தாத "
"நாளைக்கு ஷாலினி இப்ப திட்டுனதை விடப் பல மடங்கு கேவலமா திட்டுவா, அவகிட்ட காட்டிக்கோ அந்நியன், ஆனியன் எல்லாம்."
ஜக்கு ஒன்றும் பேசாமல் ராகவை முறைத்தான்.வேறு வழி?
ஷாலினிக்காகத்தான் இவ்வளவு பொறுமையாக இருக்கின்றான் அவன்.
இல்லையெனில் எப்பொழுதோ அங்கே கலவரம் களை கட்டியிருக்கும்.
"சொல்லு ஜகதீஷ், நீ என்னைப் பழி வாங்கறேன்னு ஷாலினிய சேர்த்து அசிங்கப்படுத்திட்ட . இப்பவும் நான் அவளுக்காகத்தான் உன்னை சும்மா விடறேன்.
நீ அவளை விரும்பறேன்னு தெரிஞ்சதுக்கே இவ்ளோ வருத்தப்படறா , இன்னும் இதெல்லாம் தெரிஞ்சா உடைஞ்சு போயிடுவா. அதான், அமைதியா இருக்கேன்.
ஒழுங்கா இங்க இருந்து போயிடு. இல்லன்னா நான் கண்டிப்பா கதற விடுவேன் உன்னை"
முகத்தில் எந்த உணர்ச்சியையும் காட்டாமல் , குரலிலேயே மரண உணர்வை ஜக்குவிற்குக் காட்டினான் ராகவ்.
அது ஷாலினி என்று தெரியாமல் ராகவைப் பழி வாங்க அவன் எடுத்து அனுப்பிய புகைப்படம், அவனுக்கே ஆப்படித்தது .
ஷாலினிக்கு மட்டும் இது தெரிந்தால், தன் காதலுக்கு , சாதல் தான் என்று உறுதியாக நம்பினான்.
ஷாலினி தன்னை வெறுத்து விடாமல் இருக்க ஒரே வழி இங்கிருந்து செல்வது தான் என்று நன்கு உணர்ந்து கொண்டான் ஜக்கு.
தொழில்முறை எதிரியாக ராகவிற்குப் பலர் உள்ளனர். இது சகஜம் தான். ஆனால் , குறிப்பிட்ட சிலர் அவனை அழிக்க வேண்டும் என்றே குறியாக நிற்பர்.
யாரின் மூளை எவ்வாறு வேலை செய்யும் என்று உணர்ந்து அதற்கேற்றாற் போல் தன் நிலையை வகுத்துக் கொள்வான் ராகவ்.
எதிரிகளை, உதிரிகளாக்க சில நொடிகளே அவனுக்குப் போதுமானது.
சிங்கத்தின் முன்னே செந்நாய் கூட்டம் என்ன செய்ய இயலும்!!
ஜக்கு இதில் அம்பு மட்டுமே. எய்தவன் எங்கோ இருக்க இங்கே அம்பு, வம்பில் சிக்கியது.
ராகவும் இதே போல் வேறொரு அம்பை எய்தே காரியத்தை முடிப்பான்.
தோல்வியே கண்டிராமல் ,வெற்றி இல்லை. ஆனால் நம் ராகவின் அகராதியில், தோல்வி கண்டால் வெற்றி என்பதே இல்லை.
இதுவரை அவன் தன்னுடைய தொழிலில் தோல்வியே கண்டதில்லை. சரிப்படாது என்று தோன்றினால் தொடங்கவே மறுப்பவன், வாழ்வினிலே ஷாலினிக்காக எதையும் பார்க்கலாம் என்ற நிலையை அடைந்திருந்தான்.
"சரி, நான் கிளம்புனா?"
கேள்வி எழுப்பிய ஜக்குவை மெச்சும் பார்வை பார்த்தான் ராகவ்.
"நானா ஷாலினி கிட்ட எதுவும் சொல்ல மாட்டேன்"
"அப்ப ஆளை விட்டு சொல்லுவ அதான"
ஆச்சரியமாக அவனைப் பார்த்தான் ராகவ்.
"பரவால்லயே இவ்ளோ தெரிஞ்சு வச்சுருக்க. இனிமே என் வழில நீ வராம இருந்தா நிச்சயமா சொல்ல மாட்டேன்."
"தென், இதை யாரு சொல்லி செஞ்சியோ, அவன் உன்னால நடுத் தெருவுக்கு வரணும். புரியுதா?"
கடுமையாகக் கூறிய ராகவைக் கண்டு ஜக்கு உண்மையிலேயே வாழ்வை வெறுத்தான்.
" சரி "என்பதைத் தவிர ஒன்றும் சொல்ல இயலவில்லை அவனால். எதையாவது செய்து இந்த ஒரு வேலையை மட்டும் முடித்துவிட்டால், ராகவ் விட்டுவிடுவான் என்று நம்பித் துணிந்தான்.
அதற்காக அவன் விசுவாசத்தையும் இழக்கத் தயாராகவே இருந்தான்.
எய்யப்பட்ட அம்பை , அதே வேகத்திலேயே திருப்பி விட்டுவிட்டான் ராகவ்.
தங்கள் கருத்துக்களால் என்னை
ஊக்கப்படுத்துவதற்கு மிக்க நன்றி!!!
இதோ அடுத்த பதிவு . படித்து விட்டு
வழக்கம் போல் கருத்தை குணமா சொல்லுங்க . நான் கேட்டுக்கறேன்.
அடிச்சு சொன்னா அழுதுருவேன்.
அடுத்த பதிவில் இருந்து கொஞ்சமே
கொஞ்சம் வேறு மாதிரியான கோணம்
இருக்கலாம் . லைக்ஸ் அண்ட் கமெண்ட்ஸ் போட வாங்க !!!
ஷாலி?ராகவ்...
ராகவ் தண்ணீரை நீட்ட , அவனையே பார்த்தபடி நின்றாள் ஷாலினி .
விக்கலும் நின்றபாடில்லை . ராகவே பாட்டிலைத் திறந்து அவளின் வாயருகே கொண்டு செல்ல,அவனின் நோக்கம் புரிந்து , வேகமாக வாங்கி நீரை ஒரே மிடறில் அருந்தினாள்.
விக்கல் மட்டுப்பட்டதும் , " வெரி குட் "
என்று ராகவ் அவள் தலையினை லேசாகத் தட்டினான்.
ஷாலினி அவனை முறைக்க, அந்நேரம் பார்த்து ஜக்கு உள்ளே வந்தான்.இருவரையும் ஒன்றாகக் கண்ட அவன் மனம் வெதும்பியது.
அவளைத் தேடி எங்கெல்லாமோ அலைந்து திரிந்து வந்தால், அவளோ இங்கே ராகவின் அருகில் நின்று அவனையே பார்த்துக் கொண்டிருக்கிறாள்.
அவள் முறைக்கிறாள் என்று இவனுக்குப் புரியவில்லையே. அங்கே வெறுமனே நின்று கொண்டிருந்த அவன் பெற்றோர்களைக் கண்டு இன்னும் கடுப்பானான் அவன்.
"ஷாலினி, உன்னைத் தான் தேடிட்டு வரேன். சொல்லிட்டுப் போக
மாட்டியா ?"
அவன் அதிகாரமாக வினவினான். அதிலே சரேலெனப் பார்வையைத் திருப்பி அதே முறைப்பை ஜக்குவிற்கும் வழங்கினாள் ஷாலினி.
"வாடா, சீக்கரமா ரெடி ஆகு. நம்ம புது வீட்ல இதெல்லாம் போய் செட்டில் பண்ணனும் "
மஹேந்திரன் அவனிடம் கூற ,
"எதுக்கு நம்ம கிளம்பணும் ? நான் வர மாட்டேன் டாடி . நீங்க வேணா போய்க்கோங்க. நான் எது வந்தாலும் பார்த்துக்கறேன்"
ஜக்கு ராகவையே பார்த்தபடி கூறினான். சூழ்நிலை மோசமாவதை விரும்பாத சிவசங்கரி , ஜக்குவிடம் சென்று ,
"சொன்னா கேளுடா , ஏற்கனவே வீடு ஷிஃப்ட் பண்ண நம்ம யோசிச்சோம் தான.எப்ப போனா என்ன? உனக்கும் வசதியா இருக்கும் ஆஃபீஸ் போக"
என்று தன்மையாகக் கூறினார்.
"எனக்கு இங்க தான் வசதியா இருக்கு. முடிஞ்சா என்னை வீட்டை விட்டு அனுப்பிப் பார்க்கட்டும்.
ஷாலினிய இங்க விட்டுட்டு என்னால வர முடியாது."
இதைக் கேட்டதும் ஷாலினி ஆத்திரம் கொண்டாள். வேகமாக அவனிடம் சென்றவள் ,
"ஸீ , மிஸ்டர் ஜகதீஷ் , எனக்கு யாரோட ஹெல்பும் தேவை இல்லை. தட் டூ , உன்னோட ஹெல்ப் எனக்கு வேண்டவே வேண்டாம்.
நான் நம்புனேன் உன்னை, என்னோட நல்ல ஃப்ரெண்டா நீ இருப்பன்னு. பட் , நீ பொய்யா பழகிருக்க. என்னை லவ் பண்ணிட்டு , அதை நட்புன்னு ஏமாத்திருக்க.
முன்னாடி மாதிரி இருந்தா நீ இங்கயே இருக்க , நானும் ஆசைப்பட்டிருப்பேன். ஆனா , இப்ப இல்லை."
என்று கூறிவிட்டு , யாரையும் நோக்காமல் வேகமாக அவளின் வீட்டிற்குச் சென்று விட்டாள்.
எங்கிருந்துதான் கோபம் வந்ததோ அவளுக்கு. மனதினுள் புழுங்கிக் கொண்டிருக்க முடியாமல், ஜக்குவிடம் ஆத்திரத்தைக் கொட்டிவிட்டு, அவனைத் தன் வாழ்விலிருந்து வெட்டிவிட்டுச் சென்றாள்.
இது நீடிக்குமா! இல்லை அவள் மனம் மாறுமா?
முகத்தில் அறை வாங்கியது போல் நின்றிருந்தான் ஜக்கு. சத்தியமாக இதை எதிர்பார்க்கவில்லை என்பது அவன் முகத்தில் அப்பட்டமாகத் தெரிந்தது.
மஹேந்திரனுக்கும், சிவசங்கரிக்குமே இதில் வருத்தமே. அவ்வளவு பேரின் மத்தியில் ஜக்கு இவ்வாறு சொல்வான் என்று அவர்கள் நினைக்கவில்லையே.
ஆனால், பெற்ற பிள்ளையாகவே இருந்தாலும் நன்கு வளர்ந்த பிள்ளையாகப் போய் விட்டான்.
அதட்டவும் இயலாதே தற்காலத்தில். அவனை என்ன சொல்லி அழைத்துச் செல்வது என்று குழம்பித்தான் போயிருந்தனர்.
"நீங்க கிளம்பிக்கோங்க சர் . நாளைக்கு நாங்க காலி பண்ணி, கீ தந்திடுவோம்."
ராகவிடம் மகேந்திரன் சென்று உரைக்க ,
"யாரு வீட்டுக் கீ , யாருக்கிட்டப் போகணும் ?என்னால ஒத்துக்கவே முடியாது டாடி "
ஜகதீஷ் அதிலேயே நின்றான்.
ராகவின் முன்பு ஷாலினி தன்னை உதாசீனப்படுத்தியது, அவனின் தன்மானத்தை மேலும் தூண்டியது.
வெறுமனே இத்தனை நேரம் வேடிக்கை பார்த்த ராகவ்,மெதுவாக ஜகதீஷிடம் சென்றான்.
" சோ, இங்க தான் இருப்ப !அப்படித்தான"
"யெஸ், நான் இங்க தான் இருப்பேன்."
ராகவை முடிந்த மட்டிலும் முறைத்தான் ஜகதீஷ்.
"அப்போ அந்த ஃபோட்டோ நியூஸ்பேப்பர்ல வந்ததுக்கு நீ தான் காரணம்னு நான் இப்பவே எல்லாருகிட்டயும் சொல்லவா??"
மெதுவாக, ஆனால் அழுத்தமாகக் கூறிய ராகவை அதிர்ந்து நோக்கினான்.
அவனின் கண்கள் வெளிப்படுத்தியது பயத்தையா , பதட்டத்தையா, கோபத்தையா, ஆத்திரத்தையா என்று பிரித்தறிய முடியவில்லை.
உடனே பின்னால் நிற்கும் பெற்றவர்களின் முகத்தைப் பார்த்தான்.
கவலையுடன் நிற்பவர்களைக் கண்டு, அவர்களுக்கு ஒன்றும் கேட்கவில்லை என்று சற்றே நிம்மதி கொண்டான்.
உடனே சுதாரித்து,
" என்ன உளறிட்டு இருக்க?"
என்று அடிக்குரலில் ராகவிடம் சீறினான் ஜக்கு.
"அப்படியா! நான் நடந்ததைத்தான் சொல்றேன். உன்னோட அதிர்ச்சியும் அதைத்தான் சொல்லுது. ஒரு நிமிஷம் தான்னாலும் என் கண்ணுக்கு அது தப்பாது"
அவனை சற்று தள்ளி அழைத்துச் சென்ற ஜக்கு ,
"எனக்கு எதுவும் தெரியாது ராகவ். நீ தப்பா நினைச்சிருக்க"
என்று கூறினான்.
ஏளனமாக அவனைப் பார்த்தான் ராகவ்.
"ஆஹான், அப்போ உன்னோட வண்டவாளத்தை தண்டவாளம் ஏத்திட வேண்டியதுதான்."
"என்ன பண்ண போற?"
சற்றே குரலில் அவனையும் மீறி தடுமாற்றம் தெரிந்தது.
"நாளைக்கு அதே நியூஸ்பேப்பர்ல உன்னோட நியூஸ் கவர் பேஜ்ல வரும் பார்க்கறியா"
"வேண்டாம் ராகவ். ரொம்ப சீண்டி பார்க்கற. நான் என்னோட சுயரூபத்தை காட்டல, என்னை அந்நியனா மாத்தாத "
"நாளைக்கு ஷாலினி இப்ப திட்டுனதை விடப் பல மடங்கு கேவலமா திட்டுவா, அவகிட்ட காட்டிக்கோ அந்நியன், ஆனியன் எல்லாம்."
ஜக்கு ஒன்றும் பேசாமல் ராகவை முறைத்தான்.வேறு வழி?
ஷாலினிக்காகத்தான் இவ்வளவு பொறுமையாக இருக்கின்றான் அவன்.
இல்லையெனில் எப்பொழுதோ அங்கே கலவரம் களை கட்டியிருக்கும்.
"சொல்லு ஜகதீஷ், நீ என்னைப் பழி வாங்கறேன்னு ஷாலினிய சேர்த்து அசிங்கப்படுத்திட்ட . இப்பவும் நான் அவளுக்காகத்தான் உன்னை சும்மா விடறேன்.
நீ அவளை விரும்பறேன்னு தெரிஞ்சதுக்கே இவ்ளோ வருத்தப்படறா , இன்னும் இதெல்லாம் தெரிஞ்சா உடைஞ்சு போயிடுவா. அதான், அமைதியா இருக்கேன்.
ஒழுங்கா இங்க இருந்து போயிடு. இல்லன்னா நான் கண்டிப்பா கதற விடுவேன் உன்னை"
முகத்தில் எந்த உணர்ச்சியையும் காட்டாமல் , குரலிலேயே மரண உணர்வை ஜக்குவிற்குக் காட்டினான் ராகவ்.
அது ஷாலினி என்று தெரியாமல் ராகவைப் பழி வாங்க அவன் எடுத்து அனுப்பிய புகைப்படம், அவனுக்கே ஆப்படித்தது .
ஷாலினிக்கு மட்டும் இது தெரிந்தால், தன் காதலுக்கு , சாதல் தான் என்று உறுதியாக நம்பினான்.
ஷாலினி தன்னை வெறுத்து விடாமல் இருக்க ஒரே வழி இங்கிருந்து செல்வது தான் என்று நன்கு உணர்ந்து கொண்டான் ஜக்கு.
தொழில்முறை எதிரியாக ராகவிற்குப் பலர் உள்ளனர். இது சகஜம் தான். ஆனால் , குறிப்பிட்ட சிலர் அவனை அழிக்க வேண்டும் என்றே குறியாக நிற்பர்.
யாரின் மூளை எவ்வாறு வேலை செய்யும் என்று உணர்ந்து அதற்கேற்றாற் போல் தன் நிலையை வகுத்துக் கொள்வான் ராகவ்.
எதிரிகளை, உதிரிகளாக்க சில நொடிகளே அவனுக்குப் போதுமானது.
சிங்கத்தின் முன்னே செந்நாய் கூட்டம் என்ன செய்ய இயலும்!!
ஜக்கு இதில் அம்பு மட்டுமே. எய்தவன் எங்கோ இருக்க இங்கே அம்பு, வம்பில் சிக்கியது.
ராகவும் இதே போல் வேறொரு அம்பை எய்தே காரியத்தை முடிப்பான்.
தோல்வியே கண்டிராமல் ,வெற்றி இல்லை. ஆனால் நம் ராகவின் அகராதியில், தோல்வி கண்டால் வெற்றி என்பதே இல்லை.
இதுவரை அவன் தன்னுடைய தொழிலில் தோல்வியே கண்டதில்லை. சரிப்படாது என்று தோன்றினால் தொடங்கவே மறுப்பவன், வாழ்வினிலே ஷாலினிக்காக எதையும் பார்க்கலாம் என்ற நிலையை அடைந்திருந்தான்.
"சரி, நான் கிளம்புனா?"
கேள்வி எழுப்பிய ஜக்குவை மெச்சும் பார்வை பார்த்தான் ராகவ்.
"நானா ஷாலினி கிட்ட எதுவும் சொல்ல மாட்டேன்"
"அப்ப ஆளை விட்டு சொல்லுவ அதான"
ஆச்சரியமாக அவனைப் பார்த்தான் ராகவ்.
"பரவால்லயே இவ்ளோ தெரிஞ்சு வச்சுருக்க. இனிமே என் வழில நீ வராம இருந்தா நிச்சயமா சொல்ல மாட்டேன்."
"தென், இதை யாரு சொல்லி செஞ்சியோ, அவன் உன்னால நடுத் தெருவுக்கு வரணும். புரியுதா?"
கடுமையாகக் கூறிய ராகவைக் கண்டு ஜக்கு உண்மையிலேயே வாழ்வை வெறுத்தான்.
" சரி "என்பதைத் தவிர ஒன்றும் சொல்ல இயலவில்லை அவனால். எதையாவது செய்து இந்த ஒரு வேலையை மட்டும் முடித்துவிட்டால், ராகவ் விட்டுவிடுவான் என்று நம்பித் துணிந்தான்.
அதற்காக அவன் விசுவாசத்தையும் இழக்கத் தயாராகவே இருந்தான்.
எய்யப்பட்ட அம்பை , அதே வேகத்திலேயே திருப்பி விட்டுவிட்டான் ராகவ்.
Last edited: