• The opinions expressed within the content are solely the author’s and do not reflect the opinions and beliefs of the website or its affiliates.

Latest Episode Sokkattan paarvai - 17

Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள், mspublications1@gmail.com என்ற மின்னஞ்சலிலோ சைட் அட்மினின் (smteam) தனி செய்தியிலோ தொடர்பு கொள்ளவும்.தளத்தில் கதைகளை பதிவது எப்படி- விளக்கம்

Sripathi

அமைச்சர்
Joined
Aug 26, 2018
Messages
1,530
Reaction score
2,297
Location
Tamil nadu
" ஷாலு " என்று அவளை உலுக்கியவன் , அவளிடம் அசைவில்லாமல் போகவும் , அசைய
போன தருணம் ,


" கிருஷ் , ப்ளீஸ் பீ அட் மை சைடு "

என்று அவள் தெளிவாக முணுமுணுக்க ஆவலுடன் அவளருகே வந்து,

" ஷாலு , நான் இருக்கேன் உன்கூட . என்னைப் பாருடி . "

என்று அவளின் நினைவை நிலைநிறுத்த முயன்றான். ஆனால் , பலன் என்னவோ பூஜ்யம் தான். அதற்குப் பின் இரு முறை கண் விழித்தவள் , ஒருவரையும் அடையாளம் தெரியாமல் திணறினாள்.

வாழ்வில் முதன் முறையாகத் தான் வாழும் வாழ்க்கைக்கே அர்த்தம் தெரியாமல் நொறுங்கிப் போனான் ராகவ். அவளிடம் முன்னேற்றம் தெரியாமல் போகவும் , மனதைக் கல்லாக்கிக் கொண்டு அங்கே செல்வதைத் தவிர்த்தான்.

மரத்துப் போனது மூளை தானே தவிர மனம் இல்லையே !! காதல் கொண்ட மனதிற்கு, தன் காதல் தோற்பதைக் கண்டும் காணாமல் இருக்க முடியவில்லை. வீட்டில் , தன்னுடைய அறையை விட்டு வெளியே வராமல் , சுற்றுப்புறத்தைக் குறித்து சிந்திக்க இயலாமல் முடங்கிக் கிடந்தான்.

ஷாலினிக்கு நினைவு திரும்புவது மிகவும் கடினம் என்று மருத்துவர்கள் கை விட்ட நிலையில் , ராஜஷேகர் மற்றும் ஜகதீஷ் இருவரும் சேர்ந்து ராகவைக் காரணம் காட்டி , அவனால்தான் ஷாலினிக்கு இந்த நிலைமை என்று கதை கட்டி விட்டனர். அவனின் பிசினஸை சூர்யா சில நாள் நன்கு கவனித்துக் கொண்டான்.

அவ்வாறிருக்க ஒரு நாள் , மருத்துவமனையில் இருந்த ஷாலினி காணாமல் போயிருந்தாள்.
யாருக்கும் விவரம் தெரியவில்லை. எங்கெல்லாமோ தேடிப் பார்த்து சோர்ந்து போயினர். இதில் விந்தை என்னவெனில் , ராகவ் தான் எங்கோ மறைத்து வைத்திருக்கிறான் என்று ராஜஷேகரும் , ஷாலினியைத் தன்னிடம் இருந்து பிரிக்க ராஜஷேகர் போடும் நாடகம் இது என்று ராகவும் மலையளவு நம்பினர்.


ராகவின் நிலையை அதன் பின்னர் சொல்லவேண்டியதில்லை. தெருத் தெருவாக சுற்றி , ராஜஷேகர் , ரஞ்சித் என அனைவரையும் பாடாய் படுத்தி எடுத்தான். அவர்களும் , இவனை நம்பாமல் , பல்வேறு வழிகளில் இல்லாத உண்மையை வெளிக்கொணர முயன்றனர். இப்படியே கிட்டத்தட்ட ஒரு மாதம் சென்ற நிலையில் , ராகவின் எண்ணிற்கு ஒரு அழைப்பு வந்தது.

" ஹெலோ சர் , ரேஸ் கோர்ஸ்ல MR அபார்ட்மெண்ட்ல ஒரு பொண்ணோட பாடி அடையாளம் தெரியாம சிதைஞ்சு போய் இருக்கு . நீங்க வந்து எதுக்கும் செக் பண்ணிடுங்க "

உலகம் உருண்டு விழுந்துவிடாதா என்று இருந்தது ராகவிற்கு. அப்படியே சரிந்து அமர்ந்தவன் தான். அங்கு சென்று பார்க்கும் தைரியம் எல்லாம் அவனுக்கில்லை. அது ஷாலினியாக இருக்காது என்று பல முறை மனதில் கூறிக் கொண்டான். ஆனாலும் , எங்கோ ஒரு புள்ளியில் அவனின் மொத்த நம்பிக்கையும் இடிந்து விழும் என்று தோன்றிக் கொண்டேயிருந்தது.

அவன் முன்னே ஷாலினியின் உருவம் வந்தது. அவனின் ஷாலு சிரித்தாள் ,அவனுடன் கை கோர்த்துக் கொண்டாள் , அவனை சீண்டினாள் , அவனிடம் கோபித்தாள் , பின்னர் , அவனை விட்டு மறைந்தாள் .

தலையைக் கைகளால் தாங்கிக் கொண்டவன் , அதன்பின்னர் நிமிரவே இல்லை.
விவரம் அறிந்து சென்ற சூர்யா திரும்பி வரும்போது அந்த உடல் ஷாலினியுடையதே என்ற மோசமான செய்தியைத் தாங்கி வந்தான். ராஜஷேகரும் பின்னோடு சென்று அதை உறுதிப்படுத்த , நிமிர்ந்து அனைவரையும் எரிக்கும் பார்வை பார்த்த ராகவ் ,


" அது ஷாலினி இல்ல . இப்பதான் அவ வந்தா இங்க . பொய் சொல்லாதீங்க ."

என்று கர்ஜித்தான் . ஏதோ ஒரு சக்தி உந்த , மனபலத்தைத் திரட்டியவன் அங்கிருந்து வேகமாக சென்றான். வீட்டில் அனைவரும் துக்கத்தில் தவிக்க , யாரை யார் தேற்றுவது என்றறியாமல் ஆளுக்கொரு மூலையில் அழுது கொண்டிருந்தனர்.
சில மணி நேரத்தில் வந்த ராகவைக் கண்டு சத்தியவதி ஓடி சென்று அவனின் சட்டையைப் பற்றிக் கொண்டு கதறினார் .


" சொல்லு தம்பி , அது என் பொண்ணு இல்லன்னு சொல்லு "

" நிச்சயமா அது என் ஷாலு இல்ல"

உறுதியாகத் தெறித்தது அவன் குரல்.ஒரே நொடியில் நிசப்தமாகியது அவ்விடம்.

" என் ஷாலுவை பத்தி இனிமே எதுவும் பேசிப் பாருங்க
,சாவடிச்சிடுவேன் "


என்று உறுமியவன் ,

" அம்மா , நாம கொஞ்ச நாளைக்கு பாம்பேல போய் இருக்கப் போறோம். இங்க இருந்தா , பைத்தியமா மாறிடுவேன் போல இருக்கு. என் ஷாலு , நிச்சயமா என்னைத் தேடி வருவா . இதுக்கெல்லாம் காரணம் யாரோ , அவங்கள அன்னிக்கு முடிக்கறேன் "

என்றவன் இரவோடு இரவாக ஊரையே காலி செய்தான். உடன் சூர்யாவும் சென்றுவிட்டான்.
அப்பொழுதும் ராஜஷேகர் தான் தன்னை திசைதிருப்ப இவற்றை செய்கிறார் என்று நினைத்தான் ராகவ். அவரும் , ராகவ் தான் தன் மகளை மறைத்து வைத்துள்ளான் என்று நம்பிவிட்டார்.


ஆக , இது எதையும் அறியா ஷாலினி தன் மறு ஜென்மத்தில் மகிழ்ந்திருந்தாள்.

ஒன்றரை மாதம் கழித்து , எதேச்சையாக ஷாலினியின் இருப்பிடம் குறித்த தகவலை அறிந்த கிருஷ் உடனே அவளைத் தேடி ஓடி வந்திருந்தான். அவளின் கிருஷ்ஷாக வந்திருந்தான்.

ஆம் , இப்பொழுது அவன் தன் அடையாளத்தை முழுமையாக மாற்றியிருந்தான். எவருக்கும் தன் பழைய வாழ்வின் சுவடைக் காட்ட அவன் விரும்பவில்லை . தன் காதலிக்கே அவை நினைவில்லாத போது , அதை அவனும் நினைவுபடுத்திக் கொள்ள ஆசைப்படவில்லை.

ஆனால் , தன்னுடைய வருகை , ஷாலினியின் வாழ்வில் பல திருப்பங்களைத் தரும் என்று அவன் நம்பினான். புதியதான வாழ்வில் , புது விதமான காதலை அவளுக்குக் காட்ட எண்ணியே மறுபடியும் வந்தான். வந்தவன் , அவனின் எண்ணத்தை ஈடேற்றிக் கொள்வானா ??

நாம் ஒன்று நினைக்க தெய்வம் ஒன்று நினைக்கும் ...

ராகவ் , ரஞ்சித் , ராஜஷேகர் , ஜகதீஷ் ஆகிய எவர் போட்ட கணக்கும் பலிக்கவில்லை.

விதியின் ஆட்டத்தில் , இலக்கில்லாமல் இழையோடும் நிகழ்வுகளில் யாரின் பங்களிப்பும் இல்லாமல் நடந்தேறியவற்றில் எவரை குற்றம் சொல்வது ?

சொக்கட்டான் பார்வை தொடரும்...
Super harini ur way of writing is awesome ????
 




Riha

SM Exclusive
Author
Joined
Feb 8, 2018
Messages
12,391
Reaction score
32,389
Location
Tamilnadu
Wowwww super ud Partner(y)(y) apdiye aruvi maari kottita.... First starting laye nalla periya bulb ah koduthuta... Shalini avalave than hospital ah vittu ponala??? Krish avan shalu va thirumba kondu varuvana...??? Waiting for the next ud partner(y)(y)(y)
Thank u very much partner ??????...bulb kudukka va namaku solli tharanum ???...wait panni paakalam partner krish enna panran nu
 




Advertisements

Latest updates

Latest Episodes

Advertisements

Top