ஷாலுவை இட்லி உண்ண வைக்க இட்டுக்கட்டித் திருக்குறள் எல்லாம் சொன்ன கிருஷ்ஷை கடைசியில் திருதிருக்க தான் வைத்தாள் அவள்.
இட்லி சாப்பிட அடம் , மாத்திரை சாப்பிட அடம் , பின்னர் தூங்க மாட்டேன் என அடம் , பேச்சு தர சொல்லி அடம் .
இப்படி அனலைஸ் பண்ணி அடம் பிடித்தவளை அடக்கி ஒரு வழியாக இரவு 2 மணிக்குத் தூங்க சென்றான் கிருஷ் .
ஆனால் தூக்கமும் , வருவேனா பார் என்று அவனை ஒரு வழி செய்தது . இதனைத்தையும் மீறி அவன் உறக்கத்தைத் தழுவிய போது , அவனின் செல்பேசியில் அழைப்பு டேஞ்சர் அலாரம் போல் அடித்தது .
" ஹலோ "
தூக்கம் கலையாமல் பேசியவன் , அடுத்த நொடி அடித்துப் பிடித்து எழுந்தான்.
" என்ன அங்கிள் , இப்பவே வரீங்களா ? "
என்று அதிர்ந்தவன் , அடுத்த நொடி சுதாரித்து சாதாரணமாகப் பேசிவிட்டு வைத்தான் அழைப்பை .
மணி காலை 6.30 என காட்டியது .
அசுர வேகத்தில் ஷாலுவின் அறைக்குள் சென்றவன் , ஆழ்ந்து உறங்கும் அவளை ஆன மட்டும் எழுப்ப முயன்றான் .
அவளோ , மருந்தின் வீரியத்தில் வீழ்ந்திருக்க கிருஷ் செய்வதறியாது தவித்தான் .
இன்னும் சற்று நேரத்தில் மஹேந்திரனும் , சிவசங்கரியும் வந்துவிடுவர் .
கிருஷ்ஷாகத் தன்னைக் கண்டால் , என்ன செய்வரோ என்ற எண்ணம் வேறு அவனை நிம்மதி இழக்க செய்தது.
அவனுக்கொன்றும் அவர்களிடம் தன்னை வெளிப்படுத்த யோசனை இல்லை.
ஷாலுவின் நிம்மதி குறித்து தான் அவன் எண்ணம் இருந்தது . ஏதேனும் பழைய கதை பேசப் போய் நினைவு மறந்தவளுக்கு படக்கென அதிர்ச்சி தரும் நிகழ்வு நேரக் கூடாதே என்று நினைத்தான் .
அவளின் தற்போதைய நிலைமைக்கு அது சரிவராது.மஹேந்திரனும் பட பட என்று பேசுபவர் இல்லை தான் .
இருந்தாலும் , சந்தர்பங்கள் சறுக்கி விழ வைக்குமல்லவா?
ஆகையால் அவர் வருமுன் கிளம்ப எண்ணினான் கிருஷ். உறங்கும் ஷாலுவை எழுப்ப இயலாமல் , உடனே பிரகாஷிற்கு அழைப்பு விடுத்தான் .
அவன் எடுத்ததும் , விலாசம் கூறி உடனே வரும்படி கூறினான் .
சற்று நேரத்திற்கெல்லாம் பிரகாஷ் வந்துவிட , நிலவரத்தைக் கூறி தான் அவசர வேலையாக சென்றுவிட்டதாக மட்டும் அவர்களிடம் கூறும்படியும் மகேந்திரன் வரும்வரை காத்திருக்கும்படியும் சொல்லிவிட்டு சென்றுவிட்டான் கிருஷ் .
அவனும் ஹாலில் அமைதியாக அமர்ந்திருக்க , சரியாக அரை மணி நேரத்தில் சிவசங்கரியுடன் வந்துவிட்டார் மகேந்திரன் . பாதி தூக்கத்தில் எழுந்து வந்திருந்ததால் பிரகாஷ் சோபாவில் நன்றாக உறங்கிக் கொண்டிருந்தான் .
"தம்பி " என லேசாகத் தட்டி அவர் எழுப்ப , பதறிப் போய் எழுந்தான் பிரகாஷ் .
" வைஷாலி எப்படி இருக்கா ? மேல தூங்கிட்டு இருக்காளா ? ஒன்னும் பிரச்சனை
இல்லையே ? "
என்று அடுக்கடுக்காக கேள்வி எழுப்ப , பிரகாஷின் தலை தானாக எல்லா பக்கமும்
ஆடியது .
சிவசங்கரி வேகமாக மேலே செல்ல ,
" ரொம்ப தேங்க்ஸ் பா . இவ்ளோ தூரம் நீங்க வந்து அவளைப் பார்த்துகிட்டதுக்கு "
என்று மகேந்திரன் நெகிழ்ச்சியுடன் கூறினார் .
" அதுனால என்ன சர் . இட்ஸ் மை ப்ளஷர் " என்றவன் நிச்சயம் குட்டையை தான் குழப்பிக் கொண்டிருந்தான் .
" நீங்க மட்டும் சரியான டைம்கு போயிருக்கலன்னா என்னவெல்லாம் நடந்திருக்குமோ . நினைக்கவே முடில பா "
மஹேந்திரன் இவ்வாறு கூறவும் தான் அவரிடம் தான் யாரென்று கூறவில்லை என்று உரைத்தது .
" அதில்லை அங்கிள் , நான்
வந்து .."
என்று தொடங்கியவனுக்கு ஒரு கால் வர ,
"அங்கிள் , எனக்கு முக்கியமான கால் வருது . நான் கிளம்பணும் . அப்பறம் பார்க்கலாம்"
என்றவன் அவர் முழுதாக சரி என்று கூறுவதற்குள் ஓடியே விட்டான்.
மஹேந்திரனும் பிறகு பேசிக்கொள்ளலாம் என்று விட்டுவிட்டார் .
அங்கே லம்போகினியில் தனக்கே உரித்தான மிடுக்குடன் கிருஷ் சென்று கொண்டிருந்தான் .
அவன் மனமெல்லாம் யார் ஷாலுவை இந்தளவு தொல்லை செய்ய முயன்றது என்று கணக்கிட்டுக் கொண்டிருந்தது .
ஷாலுவின் இருப்பிடம் குறித்து ரஞ்சித் அறிந்து கொண்டானா என்ற சந்தேகம் அவனை அரித்துக் கொண்டிருந்தது .
அவளின் இருப்பிடம் ஒன்றும் கன்னித்தீவு ரகசியம் அல்லவே .
தன்னைப் போலவே அவனுக்கும் தெரிந்திருக்கலாம் என்று அனுமானித்தான் . யாருக்கோ அழைப்பு விடுத்தவன் ,
"ஹலோ ஜீவா , நான் ஒருத்தனைப் பத்தி டீடைல்ஸ் அனுப்பறேன் . இன்னும் ஒன் ஹவர்ல அவனோட ஃபுல் மூவ்மெண்ட் பத்தி எனக்கு சொல்லணும் . ஜஸ்ட் ஒன் ஹவர் தான் உனக்கு டைம் . டூ இட் ஃபாஸ்ட் "
என்று முடித்தவன் காரை வேகமாக செலுத்த ஆரம்பித்தான், முந்தைய தினம் நடந்தவற்றை எண்ணியபடியே ...
RR எண்டர்பிரைசெஸ் வளாகத்தின் உள்ளே அவனின் கார் நுழைய , பார்க்கிங் பகுதியில் இருந்த காவலாளி உஷார் ஆனான் .
ஸல்யூட் அடித்து லம்போகினியின் பார்க்கிங் ஏரியாவை தயார் நிலையில் வைத்தவன் , கிருஷ் இறங்கியதும் பார்க்கிங் செய்ய ஏதுவாக சாவியை வாங்கிக் கொண்டான் .
அடுத்த நொடி கிருஷ் அங்கிருந்து சென்றுவிட்டான் . லிஃப்டினுள் அவன் நுழைய , பின்னோடு அழகான இளம் மங்கை நுழைந்தவள் இவனைக் கண்டதும் அப்படியே மயங்கிப் போனாள் .
" எந்த ஃபிளோர் சர் ? "
அவள் நன்றாக சிரித்தபடியே கேட்க , அவளின் புறம் திரும்பாமலே ஐந்தாம் தளத்திற்கான பொத்தானை அழுத்தினான்.
அப்பொழுதும் தளராமல் ,
" நானும் அங்க தான் போகணும் . இன்னிக்கு இன்டர்வியூ தான ? நீங்களும் அதுக்கு தான் வந்தீங்களா ? ''
அந்தப் பெண் கேட்க , எரிச்சல் கொண்டான் கிருஷ் . ஆனால் எதுவும் பேசாமல் , கூலர்ஸ்ஸை கழற்றி விட்டு , ஐந்தாம் தளம் வந்ததும் வேக எட்டுகள் வைத்து அவனின் கேபினுள்
நுழைந்தான் .
அப்பெண் , அவன் கூலர்ஸ் கழற்றியதும் 'பே' என்று முழித்தாள்.
ஆத்தாடி உனக்குத்தான் கண்ணாடி போடணும் இப்ப!
நூற்றுக்கணக்கானோர் மேனேஜ்மெண்ட் நிர்வாகத் துறைக்கான நேர்காணலுக்கு வந்திருந்தனர் .
கிருஷ் வந்ததும் , வேகமாக அவன் பின்னே வந்தவன் சதீஷ் .
"நீங்க தான கோ - ஆர்டினெட்டர்?"
சேரில் அமர்ந்தபடியே அவன் கேட்க ,
" யெஸ் சர் . எல்லாமே ரெடி . இப்ப இன்டெர்வியூ ஸ்டார்ட் பண்ணிடுவோம் . ஃபைனல் செட்ட உங்க கிட்ட கரெக்ட்டா ஒன் ஹவர்ல தந்திடுவோம் சர் "
என்றான் சதீஷ் ,கிருஷ்ஷின் மனமறிந்து .
" குட் , கேரி ஆன் " என்று அவனும் முடித்துக் கொண்டான் .
சதீஷ் வெளியே சென்றுவிட ,
பிரகாஷின் எண்ணிற்கு அழைத்தான் கிருஷ்.
"என்னாச்சு இன்னும் வரல ? "
" சாரி சர் , வந்துட்டே இருக்கேன் "
" ஹ்ம்ம் . கம் சூன் " என்றபடியே தன்னுடைய லேப்டாப்பை ஆன் செய்தான் .
தனக்கு வந்திருக்கும் பிசினஸ் மெயில் அனைத்தையும் செக் செய்தவன் , கடைசி மெயிலைக் கண்டு , யோசனையுடன் நெற்றியை சுருக்கினான் .
பின்னர் , இதழோரம் மெல்லிய புன்னகை உறைய மெல்ல எழுந்து சென்று ஜன்னலோரம் நின்று கொண்டான் கிருஷ் .
" மே ஐ கம் இன் சர் ? " பிரகாஷின் குரலை அடையாளம் கண்டவன் , திரும்பாமலேயே " ம்ம் " என்க , உள்ளே வந்தான் பிரகாஷ் .
"என்ன பிரகாஷ் , மார்னிங் மிஸ் . வைஷாலியோட பேரெண்ட்ஸ் வந்ததும் எனக்கு சொல்லவே இல்லை நீ ? அப்பறமும் இன்டிமேட் பண்ணல ? ஆஃபீஸ் வந்ததும் லேட் . வாட் இஸ் தி மேட்டர் ?"
என்று அவன் கேட்க , மௌனமாகத் தலையைக் குனிந்து கொண்டான் பிரகாஷ் .
அவனைக் கண்டு பொறுமை
இழந்தான் கிருஷ் .
" உன்னை தான கேக்கறேன் . ஆன்ஸர் மீ மேன் " என்று பல்லைக் கடித்தான் .
"அது வந்து , வெரி சாரி சர், அவங்க அப்பா கிட்ட பேச ஸ்டார்ட் பண்ணதும் அர்ஜெண்ட் கால் வந்துச்சு . சோ , எதையும் சொல்லாமலே கிளம்பிட்டேன் . அவசரத்தில உங்களுக்கும் இன்டிமேட் பண்ணல . சாரி சர் "
" ஓஹ் காட் , அப்போ நீ கிருஷ் இல்லைன்னு சொல்லவே இல்லையா ? "
" ஹ்ம்ம் சொல்லப் போனப்போ தான் கால் வந்தது சர் "
தலையில் அடித்துக் கொள்ளலாம் போல் இருந்தது கிருஷிற்கு .
" அப்படி என்ன அவசரமோ ? ஷிட் "
என்றவன் பிரகாஷின் முகத்தில் எதைக் கண்டானோ , " ஓகே, நீ போ "
என்றுவிட்டுத் திரும்பி நின்று கொண்டான். மனம் திரும்பவும் அந்த மெயிலிடம் சென்றது.
முகம் புன்னகையைப் பூசிக் கொண்டது.
சில நொடிகளிலே ஜீவாவின் அழைப்பு அவனைக் கலைக்க , அதை எடுத்தவன் , ரஞ்சித் குறித்து அவன் கூறிய தகவல்களில் தன் சந்தேகத்தை தீர்த்துக் கொண்டான்.
" பெர்ஃபெக்ட் ஜீவா . இன்னும் ஒரு வேலை இருக்கு . "
என்று அவனிடம் சில தகவல்களைக் கூறியபின் தன் வேலையை கவனிக்கத் தொடங்கினான் .