ஹாய் டியர்ஸ்...
சென்ற udக்கு லைக்ஸ் அண்ட்
கமெண்ட்ஸ் போட்ட அனைவருக்கும் நன்றி!!!
மேலும் என்னை ஊக்கமளித்து
வழிநடத்த வேண்டுகிறேன்.
அடுத்த பதிவு இதோ...
ஷாலி...
ஷாலினி, தன் முன்னே மைக்கை நீட்டியபடி நிற்கும் நிருபர்களைக் கண்டு ஒரு நிமிடம் நிதானித்தாள்.
காமெராக்கள் படம் பிடித்தபடி இருக்க,நிமிர்வுடன் பேசத் தயாரானாள் அவள்.
"மேடம், நீங்க தான் அந்த ஃபோட்டோல ராகவ் சர் கூட இருக்கற பொண்ணா?"
அறிவுப்பூர்வமான கேள்வியை ஒரு நிருபர் கேட்க ,
"அது தெரியாமத்தான் பேட்டி எடுக்க வந்தீங்களா?" அவளும் அதே தொனியில் பதில் அளித்தாள்.
"சரி அப்ப ராகவ் சர் கூட உங்களுக்கு என்ன மாதிரியான ரிலேஷன்ஷிப் இருக்குன்னு சொல்ல முடியுமா?"
அதே நிருபர் சளைக்காமல் கேட்க
,ஷாலினி ஒரு முறை மூச்சைப் பொறுமையாக உள்ளிழுத்து விட்டாள்.
"நான் சொல்ல வந்ததை சொல்லிடறேன்.அப்பறமா நீங்க உங்கக் கேள்வியைக் கேட்கலாம்.
ஷாலினி கூற , அனைவரும் குறிப்பெடுக்கத் தயாராகினர்.
"நான் ஆக்சுவல்லி ராகவ ஒரு பிசினஸ்மேனா கேள்விப்பட்டிருக்கேன். பட் பார்த்ததில்லை. அவர் எவ்ளோ பெரிய பிசினஸ்மேன்னு இப்ப எனக்கு கிடைக்கற இந்த ரெஸ்பான்ஸ வெச்சே தெரிஞ்சுக்க முடியுது.
ஒன்னுமே இல்லாத விஷயம் பெருசாகறது நேச்சுரல் தான் பிக் ஷாட்ஸ் லைஃப்ல. சில விஷயம் தானா பெருசாகும். சிலது சென்சேஷனல் ஆக்கப்படும்.
ஐ திங்க் இது கண்டிப்பா சென்சேஷனல் ஆக்கப்பட்டிருக்கு. அதுவும் அந்த ராகவ் வேலைதான் .
நேத்து நடந்தது ஜஸ்ட் ஒரு எதிர்பாக்காத நிகழ்வு. நான் கவனிக்காம வந்து மோதுனதுல கீழ விழுந்துட்டோம்.
ஆனா அப்பவே அந்த ராகவ் என்னை பயங்கரமா லுக் விட்டு இம்ப்ரெஸ் பண்ண ட்ரை பண்ணான்.நான் சாரி கேட்டப்பக் கூட ரொமான்டிக்கா தான் பேசுனான்.
எனக்கு அது சுத்தமா பிடிக்கல.நான் அதுனால கொஞ்சம் ஹார்ஷா பிஹேவ் பண்ணிட்டேன். சோ, என்னை டேமேஜ் பண்ண நினைச்சிருக்கான்.
இதெல்லாம் பணக்காரங்களுக்கு சகஜம் தான. இப்ப கண்டிப்பா பிரஸ் மீட் குடுத்து, ஆமா, ஐ அம் இன் ரிலேஷன்ஷிப் வித் ஹெர்
அப்படின்னு ஒரு ஸ்டேட்மெண்ட் குடுத்தா போதுமே !
ஆப்வியஸ்லி என்னோட கிளியர் ஃபோட்டோ வெச்சிருப்பான் .பேப்பர்ல வராத என் ஃபேஸ் , ஃபேஸ்புக்ல வரும். டிவில காட்டாதது , ட்விட்டர்ல வரும்.
சோ , நானே முன்னாடி வந்து நடந்ததை சொல்றேன். பங்களால இருந்து பகட்டா வாழவறவனை நம்பவே கூடாது. பத்தடி வீட்டுல வாழறவனுக்கு இருக்கற பரந்த மனசு அவனுக்கு இருக்குமா!
என்னை மாதிரி நார்மல் பொண்ணு லேட்டா வந்து சொல்றதை யாரு நம்புவா. சமாளிப்புக்குகுத்தான் சொல்றேன்னு பேச்சு வந்திடும். அதான் முன்னாடியே வந்து ஸ்டேமெண்ட் தரேன். இது மாதிரி வேற எந்த பெண்ணுக்கும் நடக்கவே கூடாதுன்னு நினைக்கறேன்."
நீளமாகப் பேசி அவள் முடிக்க , அங்கே பெருத்த அமைதி நிலவியது. இது வரையிலும் ராகவிற்கு இப்படி ஒரு அவப்பெயர் கிடைத்ததில்லை.
யாரோ எடுத்த ஒரு புகைப்படம் அவன் வாழ்வில் விளையாடுகிறது.
அவன் தன்னுடைய முயற்சி , கடின உழைப்பு , நேர்மை ஆகியவற்றிற்கே பெயர் போனவன். பெண்களிடம் கண்ணியம் காப்பவன் என்பது தொழிலுலகம் அறிந்த உண்மை.
ஆகையால் இந்தக் கோணத்தை யாரும் நம்பத் தயாராக இல்லை.
ஆயினும் ஆர்வம் யாரை விட்டது.
"நீங்க சொல்றதைப் பார்த்தா ராகவ் சர் பெண்கள் கிட்ட நல்ல விதமா பழகாத இமேஜ் வருதே ?"
வேண்டுமென்றே ஒரு பெண் நிருபர் கேள்வி எழுப்பினார்.
"எனக்கு என்ன மாதிரியான ஃபீல் வருதுன்னு உங்ககிட்ட சொல்லிட்டேன். ஹீ மே பீ அ பிளேபாய். எல்லாருக்கிட்டயும் எப்படின்னு நீங்களே முடிவு பண்ணிக்கோங்க."
என்று ஷாலினி அலட்சியமாக பதிலுரைத்தாள்.
"நீங்க சொல்றதைப் பார்க்கறப்போ உங்களுக்குள்ள எந்த உறவும் இல்ல அப்படித்தான? அப்போ எந்தப் பிரச்னையும் இல்லைன்னு சொல்லறீங்களா?"
உண்மையில் நல்ல உள்ளம் ஒன்று வினவியது.
"ஆமா. ஆனா அந்த நியூஸ்பேப்பர்ல வந்த நியூஸ் அதை நிரூபிக்கற மாதிரி இல்லையே. அதுனாலதான் இந்த ஒரு பேட்டி தர நினைச்சேன்."
"நீங்க இதைப் போட்டவங்க மேல ஆக்ஷன் எடுப்பீங்களா?"
" ஃபோட்டோ எடுத்ததே ராகவோட பிளான்னு நான் சொல்றேன்"
ஷாலினி அன்று ராகவை ஒரு வழி பண்ண முடிவு கட்டித்தான் வந்திருந்தாள்.
" ஓகே மேடம். அப்போ ராகவ் மேல கேஸ் போடுவீங்களா?"
சுற்றிவளைத்து அங்கேயே நின்றனர் அவர்கள்.
"கண்டிப்பா. எனக்கு எந்த பயமும் யாரைப் பார்த்தும் இல்ல. ஒரு பொண்ணோட வாழ்க்கையைக் கெடுக்க நினைக்கற இந்த மாதிரி ஆளுங்களுக்குத் தண்டனை தந்தே ஆகணும்"
இன்னும் சில கேள்விகளுக்கு அவள் பதிலளிக்கும் விதமாக ராகவை சாட , அவன் அதையெல்லாம் கேட்கும் நிலைமையை எப்பொழுதோ கடந்திருந்தான்.
அவன் கண்கள் மட்டும் ஷாலினியையே பார்த்திருக்க , மனமோ ரணத்தில் சினந்தது.
"எவ்ளோ கொழுப்பு இவளுக்கு? என் மனசுல இருக்கறது இவளுக்குத் தெரியுமா.இவளைக் காப்பாத்த நான் நினைச்சா இவ என்னையே கேவலமா பேசறாளே!! "
"லீவ் இட் ராகவ் . ஏதோ தெரியாம பேசிட்டா. இதைப் பெருசு பண்ணாத. கேஸ் போட்டா பார்த்துக்கலாம். நம்ம பக்கம் தப்பே இல்லடா."
என்ற சூர்யா அவனின் கோப மனநிலையை மட்டுப்பட வைக்க முயன்றான்.
"டேய் கேஸ் பத்தி நான் நினைக்கல . அதுல லாஜிக்கே இல்லை. தெரியாம விழுந்தோம்னு தான சொல்லறா. அப்பறம் எப்படிடா அவளைப் பழி வாங்க ஃபோட்டோ எடுக்க மட்டும் முன்னாடியே பிளான் பண்ணிருப்பேன்! நல்ல காமெடி போ"
"ஆமா ராகவ். இதை நான் யோசிக்கலை. அந்த பார்க்ல சிசிடிவி இருக்குன்னு சொல்லுவாளோ? அதை நம்ம மிரட்டி வாங்கிப் போட்டுட்டோம்னு சொன்னா என்ன பண்ணுவ?"
"என்ன பண்ணுவேன்னா கேட்கற? உன்னை முதல்ல உலகத்தை விட்டு அனுப்புவேன். வந்துட்டான் எனக்குன்னு"
ராகவ் உச்சகட்ட எரிச்சல் அடைய, சூர்யாவோ பாவமாக முகத்தை வைத்துக்கொண்டான்.
"என்ன ராகவ் நீ! எல்லாத்துக்கும் ரெடியா இருக்கணும்னு தான கேட்டேன்"
அவனைக் கண்டதும் சிரிப்பு சின்னதாய் ராகவினுள் எட்டிப் பார்த்தது.
"சரி கேளு. வ.உ.சி பார்க்ல சிசிடிவி இல்லை. இது ஏதோ ரிப்போர்ட்டர் வேலை தான். அவனைப் புடிச்சா போதும்."
" ஹ்ம்ம். அப்போ ஓகே டா. நம்ம நல்ல இமேஜ் தானாவே இம்ப்ரூவ் ஆகுதே."
"எனக்கு அப்படிப்பட்ட இமேஜ் வேணாம் சூர்யா.நானா கிரியேட் பண்ற இமேஜ் போதும்.
அப்படி நினைச்சிருந்தா என்னைப் பெத்தவனையே தொங்கிட்டு அவரோட கம்பெனிலயே ஒரு அட்டெண்டெர் வேலைல இருந்திருப்பேன்."
என்ற ராகவின் முகம் கடுகடுத்தது. மேலும் இதைக் குறித்துப் பேச விரும்பாமல் சூர்யா பேச்சை மாற்றினான்.
" சரிடா நீ ரெஸ்ட் எடு. நான் கீழ போய் அங்க வெயிட் பண்ற பிரஸ்ஸ பார்த்துக்கறேன்"
" அதை விட முக்கியமான வேலை ஒன்னு இருக்கே சூர்யா. "
சென்ற udக்கு லைக்ஸ் அண்ட்
கமெண்ட்ஸ் போட்ட அனைவருக்கும் நன்றி!!!
மேலும் என்னை ஊக்கமளித்து
வழிநடத்த வேண்டுகிறேன்.
அடுத்த பதிவு இதோ...
ஷாலி...
ஷாலினி, தன் முன்னே மைக்கை நீட்டியபடி நிற்கும் நிருபர்களைக் கண்டு ஒரு நிமிடம் நிதானித்தாள்.
காமெராக்கள் படம் பிடித்தபடி இருக்க,நிமிர்வுடன் பேசத் தயாரானாள் அவள்.
"மேடம், நீங்க தான் அந்த ஃபோட்டோல ராகவ் சர் கூட இருக்கற பொண்ணா?"
அறிவுப்பூர்வமான கேள்வியை ஒரு நிருபர் கேட்க ,
"அது தெரியாமத்தான் பேட்டி எடுக்க வந்தீங்களா?" அவளும் அதே தொனியில் பதில் அளித்தாள்.
"சரி அப்ப ராகவ் சர் கூட உங்களுக்கு என்ன மாதிரியான ரிலேஷன்ஷிப் இருக்குன்னு சொல்ல முடியுமா?"
அதே நிருபர் சளைக்காமல் கேட்க
,ஷாலினி ஒரு முறை மூச்சைப் பொறுமையாக உள்ளிழுத்து விட்டாள்.
"நான் சொல்ல வந்ததை சொல்லிடறேன்.அப்பறமா நீங்க உங்கக் கேள்வியைக் கேட்கலாம்.
ஷாலினி கூற , அனைவரும் குறிப்பெடுக்கத் தயாராகினர்.
"நான் ஆக்சுவல்லி ராகவ ஒரு பிசினஸ்மேனா கேள்விப்பட்டிருக்கேன். பட் பார்த்ததில்லை. அவர் எவ்ளோ பெரிய பிசினஸ்மேன்னு இப்ப எனக்கு கிடைக்கற இந்த ரெஸ்பான்ஸ வெச்சே தெரிஞ்சுக்க முடியுது.
ஒன்னுமே இல்லாத விஷயம் பெருசாகறது நேச்சுரல் தான் பிக் ஷாட்ஸ் லைஃப்ல. சில விஷயம் தானா பெருசாகும். சிலது சென்சேஷனல் ஆக்கப்படும்.
ஐ திங்க் இது கண்டிப்பா சென்சேஷனல் ஆக்கப்பட்டிருக்கு. அதுவும் அந்த ராகவ் வேலைதான் .
நேத்து நடந்தது ஜஸ்ட் ஒரு எதிர்பாக்காத நிகழ்வு. நான் கவனிக்காம வந்து மோதுனதுல கீழ விழுந்துட்டோம்.
ஆனா அப்பவே அந்த ராகவ் என்னை பயங்கரமா லுக் விட்டு இம்ப்ரெஸ் பண்ண ட்ரை பண்ணான்.நான் சாரி கேட்டப்பக் கூட ரொமான்டிக்கா தான் பேசுனான்.
எனக்கு அது சுத்தமா பிடிக்கல.நான் அதுனால கொஞ்சம் ஹார்ஷா பிஹேவ் பண்ணிட்டேன். சோ, என்னை டேமேஜ் பண்ண நினைச்சிருக்கான்.
இதெல்லாம் பணக்காரங்களுக்கு சகஜம் தான. இப்ப கண்டிப்பா பிரஸ் மீட் குடுத்து, ஆமா, ஐ அம் இன் ரிலேஷன்ஷிப் வித் ஹெர்
அப்படின்னு ஒரு ஸ்டேட்மெண்ட் குடுத்தா போதுமே !
ஆப்வியஸ்லி என்னோட கிளியர் ஃபோட்டோ வெச்சிருப்பான் .பேப்பர்ல வராத என் ஃபேஸ் , ஃபேஸ்புக்ல வரும். டிவில காட்டாதது , ட்விட்டர்ல வரும்.
சோ , நானே முன்னாடி வந்து நடந்ததை சொல்றேன். பங்களால இருந்து பகட்டா வாழவறவனை நம்பவே கூடாது. பத்தடி வீட்டுல வாழறவனுக்கு இருக்கற பரந்த மனசு அவனுக்கு இருக்குமா!
என்னை மாதிரி நார்மல் பொண்ணு லேட்டா வந்து சொல்றதை யாரு நம்புவா. சமாளிப்புக்குகுத்தான் சொல்றேன்னு பேச்சு வந்திடும். அதான் முன்னாடியே வந்து ஸ்டேமெண்ட் தரேன். இது மாதிரி வேற எந்த பெண்ணுக்கும் நடக்கவே கூடாதுன்னு நினைக்கறேன்."
நீளமாகப் பேசி அவள் முடிக்க , அங்கே பெருத்த அமைதி நிலவியது. இது வரையிலும் ராகவிற்கு இப்படி ஒரு அவப்பெயர் கிடைத்ததில்லை.
யாரோ எடுத்த ஒரு புகைப்படம் அவன் வாழ்வில் விளையாடுகிறது.
அவன் தன்னுடைய முயற்சி , கடின உழைப்பு , நேர்மை ஆகியவற்றிற்கே பெயர் போனவன். பெண்களிடம் கண்ணியம் காப்பவன் என்பது தொழிலுலகம் அறிந்த உண்மை.
ஆகையால் இந்தக் கோணத்தை யாரும் நம்பத் தயாராக இல்லை.
ஆயினும் ஆர்வம் யாரை விட்டது.
"நீங்க சொல்றதைப் பார்த்தா ராகவ் சர் பெண்கள் கிட்ட நல்ல விதமா பழகாத இமேஜ் வருதே ?"
வேண்டுமென்றே ஒரு பெண் நிருபர் கேள்வி எழுப்பினார்.
"எனக்கு என்ன மாதிரியான ஃபீல் வருதுன்னு உங்ககிட்ட சொல்லிட்டேன். ஹீ மே பீ அ பிளேபாய். எல்லாருக்கிட்டயும் எப்படின்னு நீங்களே முடிவு பண்ணிக்கோங்க."
என்று ஷாலினி அலட்சியமாக பதிலுரைத்தாள்.
"நீங்க சொல்றதைப் பார்க்கறப்போ உங்களுக்குள்ள எந்த உறவும் இல்ல அப்படித்தான? அப்போ எந்தப் பிரச்னையும் இல்லைன்னு சொல்லறீங்களா?"
உண்மையில் நல்ல உள்ளம் ஒன்று வினவியது.
"ஆமா. ஆனா அந்த நியூஸ்பேப்பர்ல வந்த நியூஸ் அதை நிரூபிக்கற மாதிரி இல்லையே. அதுனாலதான் இந்த ஒரு பேட்டி தர நினைச்சேன்."
"நீங்க இதைப் போட்டவங்க மேல ஆக்ஷன் எடுப்பீங்களா?"
" ஃபோட்டோ எடுத்ததே ராகவோட பிளான்னு நான் சொல்றேன்"
ஷாலினி அன்று ராகவை ஒரு வழி பண்ண முடிவு கட்டித்தான் வந்திருந்தாள்.
" ஓகே மேடம். அப்போ ராகவ் மேல கேஸ் போடுவீங்களா?"
சுற்றிவளைத்து அங்கேயே நின்றனர் அவர்கள்.
"கண்டிப்பா. எனக்கு எந்த பயமும் யாரைப் பார்த்தும் இல்ல. ஒரு பொண்ணோட வாழ்க்கையைக் கெடுக்க நினைக்கற இந்த மாதிரி ஆளுங்களுக்குத் தண்டனை தந்தே ஆகணும்"
இன்னும் சில கேள்விகளுக்கு அவள் பதிலளிக்கும் விதமாக ராகவை சாட , அவன் அதையெல்லாம் கேட்கும் நிலைமையை எப்பொழுதோ கடந்திருந்தான்.
அவன் கண்கள் மட்டும் ஷாலினியையே பார்த்திருக்க , மனமோ ரணத்தில் சினந்தது.
"எவ்ளோ கொழுப்பு இவளுக்கு? என் மனசுல இருக்கறது இவளுக்குத் தெரியுமா.இவளைக் காப்பாத்த நான் நினைச்சா இவ என்னையே கேவலமா பேசறாளே!! "
"லீவ் இட் ராகவ் . ஏதோ தெரியாம பேசிட்டா. இதைப் பெருசு பண்ணாத. கேஸ் போட்டா பார்த்துக்கலாம். நம்ம பக்கம் தப்பே இல்லடா."
என்ற சூர்யா அவனின் கோப மனநிலையை மட்டுப்பட வைக்க முயன்றான்.
"டேய் கேஸ் பத்தி நான் நினைக்கல . அதுல லாஜிக்கே இல்லை. தெரியாம விழுந்தோம்னு தான சொல்லறா. அப்பறம் எப்படிடா அவளைப் பழி வாங்க ஃபோட்டோ எடுக்க மட்டும் முன்னாடியே பிளான் பண்ணிருப்பேன்! நல்ல காமெடி போ"
"ஆமா ராகவ். இதை நான் யோசிக்கலை. அந்த பார்க்ல சிசிடிவி இருக்குன்னு சொல்லுவாளோ? அதை நம்ம மிரட்டி வாங்கிப் போட்டுட்டோம்னு சொன்னா என்ன பண்ணுவ?"
"என்ன பண்ணுவேன்னா கேட்கற? உன்னை முதல்ல உலகத்தை விட்டு அனுப்புவேன். வந்துட்டான் எனக்குன்னு"
ராகவ் உச்சகட்ட எரிச்சல் அடைய, சூர்யாவோ பாவமாக முகத்தை வைத்துக்கொண்டான்.
"என்ன ராகவ் நீ! எல்லாத்துக்கும் ரெடியா இருக்கணும்னு தான கேட்டேன்"
அவனைக் கண்டதும் சிரிப்பு சின்னதாய் ராகவினுள் எட்டிப் பார்த்தது.
"சரி கேளு. வ.உ.சி பார்க்ல சிசிடிவி இல்லை. இது ஏதோ ரிப்போர்ட்டர் வேலை தான். அவனைப் புடிச்சா போதும்."
" ஹ்ம்ம். அப்போ ஓகே டா. நம்ம நல்ல இமேஜ் தானாவே இம்ப்ரூவ் ஆகுதே."
"எனக்கு அப்படிப்பட்ட இமேஜ் வேணாம் சூர்யா.நானா கிரியேட் பண்ற இமேஜ் போதும்.
அப்படி நினைச்சிருந்தா என்னைப் பெத்தவனையே தொங்கிட்டு அவரோட கம்பெனிலயே ஒரு அட்டெண்டெர் வேலைல இருந்திருப்பேன்."
என்ற ராகவின் முகம் கடுகடுத்தது. மேலும் இதைக் குறித்துப் பேச விரும்பாமல் சூர்யா பேச்சை மாற்றினான்.
" சரிடா நீ ரெஸ்ட் எடு. நான் கீழ போய் அங்க வெயிட் பண்ற பிரஸ்ஸ பார்த்துக்கறேன்"
" அதை விட முக்கியமான வேலை ஒன்னு இருக்கே சூர்யா. "
Last edited: