அவர்கள் எல்லோரும் வந்தும் உடனே மேடை ஏறிய காவியா, ஹரிணி இருவருமே, “இந்த விழாவுக்கு வந்திருக்கும் எல்லோரையும் பணிவன்புடன் வரவேற்பது நான் உங்களின் காவ்யா.. இவள் உங்களின் ஹரிணி..” என்று சொல்ல, “அட வாலுகளா...” என்றபடி சிரித்தபடியே மேடையைக் கவனித்தார் பானுமா
அவரின் அருகில் வந்து அமர்ந்த சஷிமா, “இவங்க இருவருமே போதுமே விழா களைகட்டும்..” என்று சொல்ல, “நீங்க எப்படி இருக்கீங்க பிரியங்கா டியர்..” என்று கேட்டார் பானுமா.. “நான் நல்ல இருக்கேன் பானுமா..” என்று சொல்லியவரிடம், “இங்கே என்ன நடக்குது...?” என்று கேட்டதும், “அதை அவங்க சொல்லுவாங்க..” என்று மேடையைக் காட்டினார்..
“இந்த விழாவுக்கு வந்திருக்கும் எஸ். எம். சைட் சஷிமா, மற்றும் பானுமா, நம்ம சைட்டில் இருக்கும் அனைத்து எழுத்தாளர்களையும் மற்றும் மேம்பர்களையும் அன்புடன் வரவேற்கிறேன்..” என்று இருவரும் கூறினார்.. எல்லோரின் பார்வையும் மேடையின் மீதே இருக்க, “பானுமா நாங்க எல்லோரும் எதுக்கு இங்கே வந்திருக்கோம் என்று உங்களுக்கு தெரியாது இல்ல.. உங்களோட பிறந்தநாளைக் கொண்டாட சஷிமா செய்த ஏற்பாடுதான்..” என்று சொல்ல பானுமாவின் கண்கள் ஆனந்தகண்ணீரில் நனைய அவரின் இடதுபுறம் ஜெயராமன் அப்பாவும் அவர்களின் மகன்கள் இருவரும் அமர்ந்திருந்தனர்..
‘எனக்காக இத்தனை ஏற்பாடுகளா..?’ என்று யோசித்தார் பானுமா.. அவரின் மகன்கள் இருவருக்கும் இந்த ஏற்பாடு பெரிய வியப்பில் ஆழ்த்தியது.. அவர்களின் மனம், ‘எங்க அம்மா இத்தனை பேரின் அன்பை சம்பாரித்திருக்கிறாரா..?’ என்று நினைத்தனர்..
இருவரும் மேடையில் இருந்தபடியே தென்றல் அக்காவை நோக்கி சைகை செய்ய பானுமாவை அழைத்து சென்றார் சஷி அக்கா.. இருவரும் சேர்ந்து மேடை ஏறினார்.. அவர்களுடன் அவரின் கணவர், மகன்கள் எல்லோரும் மேடை ஏறினர்.. பானுமாவை கேக் அருகில் கொண்டு நிற்க வைக்க எல்லோரையும் பார்த்தவர், “அம்மா கேக் கட் பண்ணுங்க..” என்று சொல்ல அவரும் சிலைபோல கேக் கட் பண்ணும் பொழுது ஹரிணி, காவ்யா, கனி, ஹரிதா, ஜெய், சந்தியா ஸ்ரீ, பத்மா மோகனா, ஹுஸ்னா எல்லோரும் மேடையேறினர்..
“கட்டழகுத் தங்கமகள் திருநாளோ
அவள் கிட்ட வந்து கட்டி முத்தம் தருவாளோ..
வெட்டிவைத்த செங்கரும்பை எடுப்பாளோ..
அதைவெல்லத் தமிழ் சொல்லாகக் கொடுப்பாளோ..
பட்டுக்கன்னம் செல்லம் கொஞ்ச சிரிப்பாளோ..
அதில் பங்கு கொள்ள தோழியரை அழைப்பாளோ..” என்று பாட பானுமாவின் முகம் புன்னகையில் மலர, சஷிமாவிற்கு ஊட்டிவிட அவரும் அவருக்காக ஊட்டிவிட மண்டபமே அதிர்ந்தது.. பாடல் மீண்டும் தொடர்ந்தது..
“அன்பிருக்கும் நெஞ்சம் ஒரு ஆலையமோ
அதில் ஆசையும் பாசமும் காவியமோ..
அன்னை தெய்வத்தின் நற்சீதனமோ..
என் கண்களில் நீ தரும் தரிசனமோ..” என்று பாடப்பாட மண்டபத்தில் இருந்த எல்லோருமே கண் கலங்கினர்.. அவர்களின் மகிழ்ச்சி பாட்டில் இருந்தது.. அந்த குரலில் மயங்காதவர்கள் யாரும் இல்லை..
“பொங்குகடல் மடிதனில் நிலவாட
அதில் அன்னை முகம் துள்ளி துள்ளி சதிராட..
அங்கம் என்ற மலரில் உயிர் ஆட..
அன்பு எங்கிருந்த போதிலும் புகழ் பாட..” என்று பாட பாட எல்லோரின் மனமும் ஒருங்கே பயணிக்க பானுமாவின் கண்கள் கண்ணீர் மழையில் நனைந்திட அவரிடம் மைக் கொடுக்க,
“இப்படி ஒரு பிறந்தநாளை நான் கொண்டாடியதே இல்ல.. என்னோட பிறந்தநாள் விழாவுக்கு இத்தனை பேரும் வந்திருக்கிறீங்க. எனக்கு பேச வாய் வரல.. தேங்க்ஸ் பிரியங்கா டியர்.. எனக்கு எத்தனை மகள்கள், மகன்கள், எத்தனை பேத்தி பேரங்கள் இத்தனை பெயரையும் என்னோட பிறந்தநாள் அன்று பார்ப்பேன் என்று நான் நினைக்கவே இல்ல..” என்று சொல்ல, “உங்களுக்காக நான் ஒன்று கொண்டுவந்திருக்கிறேன் பானுமா..” என்று சொன்னவர் சஷிமா எழுதிய வீணையடி நீ எனக்கு ஸ்டோரி கிப்ட் கொடுக்க எல்லோரும் அவரவருக்கு பிடித்த பரிசு பொருட்களை கொண்டு வந்து கொடுத்தனர்..
அப்பொழுது மேடைக்கு வந்த சந்தியா பானுமாவின் அருகில் சென்று, “பானுமா நல்ல பாடுவாங்க..” என்று சொல்ல, “என்னை வந்தும் மாட்டிவிட்டுட்டியே..” என்று சொன்னவரின் கையில் மைக் கொடுக்கப்பட எல்லோரையும் ஒரு பார்வைப் பார்த்த பானுமா,
“சந்தனம் குங்குமம் கொண்ட தாமரைபூ
தேனுண்ட போதையில் திண்டடடுது..
தங்க தட்டில் வண்ணப்பட்டு துடிக்கின்றது..
ஜாடையில் நாடகம் நடிக்கின்றது..” என்று பாடினார்..
“ஹாப்பி பர்த்டே டூ யூ பானுமா..” என்று எல்லோரும் கோரஸாக பாடினர்.. இப்படி ஒரு பிறந்தநாள் விழாவை பானுமாவும் பார்த்தது இல்லை.. பானுமாவின் பிறந்தநாள் ஒரு திருவிழாவாக மாறும் என்று மற்றவரும் நினைக்கவில்லை.. பானுமா மறுப்பக்கம் இறங்கி கீழே வர எல்லோரும் பாட ஆரம்பித்தனர்..
டைனிங் ஹாலுக்கு சென்றதும் பானுமாவின் அருகில் வந்த தேவா அண்ணா, “அம்மா இந்தாங்க நீங்க கேட்ட காரசுண்டல்..” என்று சொல்ல, “நீ இன்னும் மறக்கவே இல்லையா தேவா..” என்று சொல்ல சிரித்தார்.. பானுமாவிற்காக எல்லோருமே தனி தனியாக பரிமாற அவர்களின் பாசம் பானுமாவின் மனதை முழுமையாக நிறைத்தது..
அவரவருக்கு விருப்பமான கிப்ட் பொருட்களைக் கொண்டு வந்து கொடுக்க அதை வைக்க இரண்டு அறையே பத்தாமல் போனது.. கடைசியாக வாசல்வரை வந்து வழியனுப்பிய எல்லோரையும் பார்த்த பானுமாவின் மனம் நிறைவாக இருந்தது..
காரின் அருகில் சென்றவர் மீண்டும் வந்து எல்லோருக்கும், “விஷ் யூ ஹாப்பி நியூ இயர்..” சொன்னவரின் கண்களும் மனமும் நிறைந்து நின்றது..
இது ஒரு கற்பனை பதிவு.. சஷிமுரளி அக்கா, எஸ்.எம். சைட் மெம்பர் எல்லோரும் என்னை மன்னித்துவிடுங்கள்.. பதிவு பிடித்திருந்தால் இரண்டு வரிகள் பாராட்டிவிட்டு செல்லுங்கள்.. எல்லோரின் பெயரையும் எழுத நேரம் இல்லை.. அதனால் கோபபடாமல் சின்ன பிள்ளை செய்த சின்ன தவறை மன்னிக்கவும்..
பானுமா என்னோட யூடி இதுதான்.. இது சந்தியாவின் பிறந்தநாள் பரிசு பானுமா..
இது புதுவருடம் மட்டும் அல்ல
எனது அன்பு தாயின் பிறந்தநாளும்
இன்றுதான் என்று அறிவாயோ..
முகம் அறியாமல் உருவான
அன்பான பந்தம் எனது
இந்த அன்னையின் சொந்தம்
தாயினை கண்ணில் காணாமல்
பிறந்தநாள் வாழ்த்து சொல்லும்
செல்லமகளின் இந்த அன்பு
பரிசு ஆனந்தம் மட்டுமே..!
“விஷ் யூ ஹாப்பி பர்த்டே பானுமா..” அண்ட் “விஷ் யூ ஹாப்பி நியூ இயர் பானுமா..” வருடத்தின் முதல் பிறந்தநாள் வாழ்த்தும், இந்த வருடத்தின் தொடக்கமும் சிறந்த ஒன்றாக அமையும் பானுமா..