lakshmiperumal
அமைச்சர்
- Joined
- Jan 17, 2018
- Messages
- 4,840
- Reaction score
- 3,628
அ
அருமையான விமர்சனம்,ரிஷபன் சொல்ல வார்த்தைகளே இல்லை,ஒரு சில இடங்களில் பொம்மி யின் மேல் பொறாமையே வந்தது.சாலா பொம்மி யின் கல்யாண விஷயத்தில் சராசரி அம்மாவாக கவலைப் படுவது சூப்பர்,விஷ்வா அவனுடைய பொம்மியை சீண்டும் இடங்கள் அருமையோ அருமை, இந்த கதையில் நான் ரசித்து படித்த இடங்கள் நிறைய உண்டு.பொன்னூஞ்சல் :
விதியின் சதியா? கடவுளின் திருவிளையாடல் டா? அழகான கூடு கலைந்து தாயும் சேயும் தனித்திருக்க, மேலும் இவர்களின் நிம்மதியைக் குலைக்க வந்தவனால் வந்த ஏச்சு பேச்சுக்களைச் சமாளிக்க பெரியவர்களின் துணையோடு அடைக்கலமானார்கள் அந்த கிராமத்தில்.
காவல்காரனாய் இருக்கும் அவனை ஈர்த்தது அந்த சின்ன சிட்டின் பயந்த விழிகளா? இல்லை அதன் தாயின் நிலையா? இல்லை இருவருமோ? மனைவியை இழந்து தன் பிள்ளையை பெற்றோரிடம் விட்டுவிட்டு கிராமத்தைக் காக்கும் தலைவன் இவனுக்கு, இந்த தாய், சேயைக் காக்கும் கடமையும் சேர்ந்தது.
கடமையைச் செய்தானா? தன் காதலையும் அந்த பெண்ணவளுக்குள் கடத்தினனா? தன் அழகிய உரைநடையில் அங்கங்கே கண்களை நனைத்து, மனதை நிறைத்திருக்கிறார் ஆத்தர்ஜி.
காவல்காரனாய் ஊருக்கே இருந்தாலும்(ரிஷபன்) தன் மனைவியிடத்தில்(சாலா) நானும் குழந்தையென மடி சாய்ந்த நேரம், ஒரு முறையேனும் தன்னை "நாணா" என்று அழைக்கமாட்டாளா (பொம்மி) என்று ஏங்கும் போதும், தன் மகனை (சின்னா) சரியாக கவனிக்கவில்லையோ என்று தவிக்கும் நேரம் என் ஒவ்வொன்றிலும் ஆத்தர்ஜியின் வார்த்தைகள் மாயாஜாலம் செய்துவிடுக்கின்றன.
சாலா கணவனிடம் நெருங்கவும் முடியாமல், விலகவும் முடியாமல் அவனின் தோள் சாய்ந்து கதறும் இடத்திலும், தனக்கு நடந்த கொடுமையைப் சொல்லி தன்னையும், தன் மகளையும் ஒதுக்கி வைத்துவிடுவானோ என்று அஞ்சி தவிக்கும் நேரத்திலும் நம் மனதைக் கணக்க செய்துவிடுகிறார் ஆத்தர்ஜி.
பொம்மி! இவள் சின்ன ராணி அனைவருக்கும். ஆரம்பத்தில் தள்ளி நின்று, பின் அனைவரையும் தன் சுட்டி வார்த்தைகளால் கட்டி இழுக்கும் விந்தை ஆத்தர்ஜியின் கைவண்ணத்தில் ஜொலிக்கிறது. சின்னா! தந்தையிடம் தள்ளி நிற்பவன், யசோதாவின் கண்ணனாய், சாலாவிடம் ஒட்டிக் கொள்ளும் இளவரசன். பொம்மிக்கு வம்பன். இந்த ஊஞ்சலில் ஆட வந்த இன்னொரு தேவதை சின்னாவுக்கு ரோஸ் குட்டி!
இனிமையாய் செல்லும் இந்த ஊஞ்சலாட்டத்தில் மஹதி மற்றும் விஸ்வாவின் வரவுகள் ஆட்டத்தை தடை செய்யுமா? இல்லை இன்னும் வேகம் எடுக்குமா?
ஆங்காங்கே ஆத்தர்ஜி தெளித்த கலர் வண்ணங்களில் பொன்னூஞ்சல் மின்னி மிளிர்கிறது. பாசத்தால் கட்டப்பட்ட இந்த பொன்னூஞ்சல் அழகாய் வேகமெடுத்து இனிமையாய் ஆடுவிக்கிறது!!
வாழ்த்துக்கள் ஆத்தர்ஜி ??, இது போல் இன்னும் பல கதைகள் தங்களின் கை வண்ணத்தில் மிளிர!