malarindira
நாட்டாமை
மனம்-3
சுத்ணா ஆபீஸ்க்கு கிளம்பி வெளிய வர மொத்த குடும்பமும் வெளியில் தான் கூடிருந்தது..
சின்னவர்கள் அனைவரும் அவளுக்கு வா்த்துச் சொல்ல,அதை புன்னகை முகமாக ஏற்று நன்றி கூறியவள் முகம், அப்பா,அம்மா,சித்தப்பாக்கள்,சித்திக்கள்,மாமன்கள் மற்றும் அத்தைகளை கண்டவுடன் இறுகியது...
ஆண்கள் பணிகளுக்குச் செல்லவும்,பெண்கள் அவர்களை அனுப்பவும் வெளியில் இருந்தனர்..
சுதர்ணா, தங்களிடம் சொல்லாமல், தங்களை மதிக்காமல்,வேலைக்கு செல்வதை அவர்கள் விரும்பவில்லை, அதுவும் தன் கணவனை மதிக்காமல் செல்வது சுதரின் அம்மாவுக்கு அப்படி ஒரு கோவம் மற்றும் அகங்காரத்தை உண்டு பண்ணியது ...
ராதிகாவுக்கு அவள் கணவர் மாணிக்கவாசகம் சொல்வது தான் வேதவாக்கு,மாணிக்கவாசகம் தான் அவருக்கு முக்கியம், சொந்த பிள்ளைகள் கூட அவருக்கு பிறகு தான்...கணவனுக்கு பிடிப்பவரை இவருக்கு பிடிக்கும், அவருக்கு பிடிக்காதவரை இவருக்கும் பிடிக்காது.. மொத்தத்தில் கணவன் எது செஞ்சாலும் அது காரணமில்லால் இருக்காது என்று நம்பும் குணம்..
ராதிகாவின் வளர்ப்பு கூட அதற்க்கு ஒரு காரணமாக இருக்கலாம்... ராதிகாவுக்கு அவள் கணவர் படித்து பெரிய பதவியில் இருப்பது, எப்பவும் ஒரு பெருமை தான் ..
ஏனென்றால் அவர் குடும்பத்தில் எல்லோரும் எட்டாம் வகுப்பு வரை மட்டுமே படித்துருந்தனர், அதனால் மாணிக்கவாசகத்தை கண்டு ஒரு பிரமிப்பு எப்பவும் அவர்களள் மனதில்
உண்டு .. இப்பவும் பிள்ளைகள் கல்யாண வயது வந்த பிறகும் அதே கதை தான்...
கணவர்செய்யும் நல்லவைகளுக்கு துணை போவது எப்படி மனைவியின் கடமையோ, அதேப்போல்,அவர் தவறான முடிவு எடுக்கும்போதும், தவறை சுட்டிக்காட்டி திருத்துவதும் மனைவி கடமையே ..
ஆனால் ராதிகா அதை செய்ய தவறி விட்டார்..
மனைவி தான் இப்படியென்றால், மாணிக்கவாசகத்தின் தம்பி தங்கைகள் இதற்கும் மேல்.. அவர்களது பெற்றோரை விட அண்ணன்முக்கியம், அவர் சொல் தான் முக்கியம்.. அவரது பகைவர் இவர்களுக்கும் பகைவரே!!!
\\\நல்லா சேந்தாங்கடா, நல்லா வருவீங்க///..
தங்களிடம் ஒரு வார்த்தை கூட சொல்லாமல் கிளம்பும் மகளை கண்டு ராதிகாவிற்கு, ஆத்திரம், கோவம் எல்லாம் சேர்த்து அவள் அறிவை மங்க செய்தது ..
தன்மகளை பார்த்து,"ஏய் நில்லுடி, என்னடி வேலை கிடைச்சுருக்கனு திமுருல,சுத்துறியா ..பாக்கறேன்டி இன்னும் எத்தனை நாளைக்கு என் வீட்டுக்காரரை மதிக்காம சுத்தரேனு பாக்கறேன், வேலைக்கு போற இடத்திலியாவது ஒழுக்கமா இரு , அங்கேயும் போய் குடும்ப மானத்த வாங்கின நான் மனுஷியாவே இருக்க மாட்டேன்". \\\இப்போ மட்டும் இருக்க மனுஷியாவா இருக்கறதா உங்களுக்கு நினைப்பா?////
இவரது பேச்சை கேட்டு சிறியவர்கள் முகம் சுருங்க, ஐஸ் பாட்டியோ இது என்ன பேச்சு போல் மருமகளைப் பார்த்தார்..பாட்டியும் மகன்,மருமகளுடன் பேசமாட்டார், ாத்தா தேவைக்கு மட்டும் பேசுவார்...
ராதிகா பேசின வார்த்தைகளின் வீரியம், சுதரின் அடி மனம் வரை சென்று தாக்கினாலும், வெளிில் மெளனமாக ஒரு உணர்வற்ற பார்வையை அவரை நோக்கி வீசினாள்.. அந்த பார்வை நீ என்ன சொன்னாலும் என்னை பாதிக்காது,
நீ எனக்கு யாருமே இல்லை என்பதை சொல்வதை போல் இருந்தது.. அவள் பார்வையை அர்த்தம் புரிந்து வெகுகொர், மறுபடியும் அவளை திட்ட வாய் எடுக்க,..
ஐஸின் விழி அசைவில், மற்ற இரு மருமகளும் ராதாகிவின் பேச்சை திசைத் திருப்பினர்..
"அக்கா, மாமா கிளம்பறாங்க பாருங்க. ரொம்ப நேரமா நிக்கறாக " என கோகிலாவும்,
"ஆமாம் அக்கா பெரிய மாமா ஆபீஸ் கிளம்பற நேரத்துல இந்த திமிறு பிடிச்சவ கிட்ட என்ன வீண் பேச்சு"
என மேனகாவும், ராதிகாவை திசை திருப்பினாள்..
கோகிலாக்கும், மேனகாவுக்கும் "சுதர்" தான் முதல் பிள்ளை போல்..அவர்கள் பெற்ற பசங்களை விட இவள் முக்கியம்..
பாஜி - ஐஸ் மற்றும் பிள்ளைகளுக்கு மட்டும் இவர்கள் இருவரும் "சுதரை செல்லம் கொஞ்சுவது தெரியும்"..
இப்பவும் "சுதர்" முதல்முதலாக வேலை செல்லும் போது, ராதிகா திட்டுவதை கண்டு இவர்களுக்கு கடுங்கோபம் தான்", ஆனால், அவர்களால் நேரடியாக ராதிகாவை எதிர்க்க முடியாதக் காரணத்தால் மாமியாரின் விழி மொழியை சரியாக கேட்ச் செய்து,
"சுதரை நோக்கி வந்த ராதிகா என்னும் சூறாவளி காற்றை தடுத்து, அதனை, அவர் கணவரை நோக்கி தென்றல் காற்றாய் இடம் மாற்றி விட்டனர் ..
" மாமா நேரமாகிடுச்சா மன்னிச்சுருங்க , எல்லாம் இந்த ஏடுபட்டவளால வந்ததுயென்று" முதல இருந்து ஆரம்பித்தார்..
"எல்லாம் நம்ம நேரம் ராதிகா, நம்ப வாங்கி வந்த வரம், மூத்தது தறுதலையா போய்டுச்சு, என்ன பண்ண, எல்லாம் திமிரு, நம்ம பேச்சை கேக்காதப்பவே கைக்காலை உடைத்திருந்தால் இன்னிக்கி வேலைக்கு போகமாட்டா..
கொஞ்சமாச்சும் நம்பள மதிக்கறாளா, நம்ப பேச்ச கேக்காம இருக்கா இல்லை, இதுக்கு எங்கயாவது அடிப்படணும்.. அப்போ தான் நம்ம அருமைத் தெரியும்..இப்போ வேலைக்கு போகணும்னு என்ன அவசியம் பொம்பளை அடக்க ஒடுக்கமா வீட்ல இருக்கலாம் இல்ல..தறுதலை எங்க உருப்படப்போரா, நம்ப மானத்த தான் வாங்கப்போறா" என்றார்..
அன்னை தன்னை பேசும்போது ஏற்படாத ஆழமான வலி,இப்பொழுது தந்தை பேச்சில் ஏற்பட்டது, அது தப்பு செய்யமால் தண்டனை மற்றும் பழி ஏற்ப்பவர்களின் வலி .. இரண்டு வருடம் சுதர் அனுபவித்த வலி வேதனை இப்பொழுது வார்த்தைகளாக வெளிப்பட்டது...
"நான் என்ன பண்ணினேன், வேலைக்கு போறது ஒரு தப்பா, அதற்க்கு எத்தனை பேச்சு, நீங்க பெற்றவங்க மாதிரியா என்கிட்டஇருக்கீங்க, எந்த அன்னை தந்தையாவது பெற்றப் பெண்ணுக்கு சாபம் குடுப்பாங்களா, நீங்க குடுக்கறீங்களே, உங்க பேச்சை என்ன நான் கேட்க்கலை"..
"படிச்ச படிப்பிலிருந்து போடும் டிரஸ் வரை, உங்க விருப்பப்படிதான் நடந்தேன்..அதனால் என்னாச்சு உங்க பேட்ச்சை கேட்டு என் வாழ்க்கை தான் போச்சு..இப்போ இருக்கறது என் உயிர் மட்டும் தான்..அதுவும் போன தான் உங்களுக்கு நிம்மதினா சொல்லுங்க, உயிரையும் விட்டுடறேன்" என்று முகம் சிவக்க மித மிஞ்சிய ஆத்திரத்தில் கத்தினாள் ..
அவள்"உயிரை விடுவேன் " சொன்னதில் எல்லோரும் சிறிது நேரம் உறைந்துப் போனார்கள்!!!
சுத்ணா ஆபீஸ்க்கு கிளம்பி வெளிய வர மொத்த குடும்பமும் வெளியில் தான் கூடிருந்தது..
சின்னவர்கள் அனைவரும் அவளுக்கு வா்த்துச் சொல்ல,அதை புன்னகை முகமாக ஏற்று நன்றி கூறியவள் முகம், அப்பா,அம்மா,சித்தப்பாக்கள்,சித்திக்கள்,மாமன்கள் மற்றும் அத்தைகளை கண்டவுடன் இறுகியது...
ஆண்கள் பணிகளுக்குச் செல்லவும்,பெண்கள் அவர்களை அனுப்பவும் வெளியில் இருந்தனர்..
சுதர்ணா, தங்களிடம் சொல்லாமல், தங்களை மதிக்காமல்,வேலைக்கு செல்வதை அவர்கள் விரும்பவில்லை, அதுவும் தன் கணவனை மதிக்காமல் செல்வது சுதரின் அம்மாவுக்கு அப்படி ஒரு கோவம் மற்றும் அகங்காரத்தை உண்டு பண்ணியது ...
ராதிகாவுக்கு அவள் கணவர் மாணிக்கவாசகம் சொல்வது தான் வேதவாக்கு,மாணிக்கவாசகம் தான் அவருக்கு முக்கியம், சொந்த பிள்ளைகள் கூட அவருக்கு பிறகு தான்...கணவனுக்கு பிடிப்பவரை இவருக்கு பிடிக்கும், அவருக்கு பிடிக்காதவரை இவருக்கும் பிடிக்காது.. மொத்தத்தில் கணவன் எது செஞ்சாலும் அது காரணமில்லால் இருக்காது என்று நம்பும் குணம்..
ராதிகாவின் வளர்ப்பு கூட அதற்க்கு ஒரு காரணமாக இருக்கலாம்... ராதிகாவுக்கு அவள் கணவர் படித்து பெரிய பதவியில் இருப்பது, எப்பவும் ஒரு பெருமை தான் ..
ஏனென்றால் அவர் குடும்பத்தில் எல்லோரும் எட்டாம் வகுப்பு வரை மட்டுமே படித்துருந்தனர், அதனால் மாணிக்கவாசகத்தை கண்டு ஒரு பிரமிப்பு எப்பவும் அவர்களள் மனதில்
உண்டு .. இப்பவும் பிள்ளைகள் கல்யாண வயது வந்த பிறகும் அதே கதை தான்...
கணவர்செய்யும் நல்லவைகளுக்கு துணை போவது எப்படி மனைவியின் கடமையோ, அதேப்போல்,அவர் தவறான முடிவு எடுக்கும்போதும், தவறை சுட்டிக்காட்டி திருத்துவதும் மனைவி கடமையே ..
ஆனால் ராதிகா அதை செய்ய தவறி விட்டார்..
மனைவி தான் இப்படியென்றால், மாணிக்கவாசகத்தின் தம்பி தங்கைகள் இதற்கும் மேல்.. அவர்களது பெற்றோரை விட அண்ணன்முக்கியம், அவர் சொல் தான் முக்கியம்.. அவரது பகைவர் இவர்களுக்கும் பகைவரே!!!
\\\நல்லா சேந்தாங்கடா, நல்லா வருவீங்க///..
தங்களிடம் ஒரு வார்த்தை கூட சொல்லாமல் கிளம்பும் மகளை கண்டு ராதிகாவிற்கு, ஆத்திரம், கோவம் எல்லாம் சேர்த்து அவள் அறிவை மங்க செய்தது ..
தன்மகளை பார்த்து,"ஏய் நில்லுடி, என்னடி வேலை கிடைச்சுருக்கனு திமுருல,சுத்துறியா ..பாக்கறேன்டி இன்னும் எத்தனை நாளைக்கு என் வீட்டுக்காரரை மதிக்காம சுத்தரேனு பாக்கறேன், வேலைக்கு போற இடத்திலியாவது ஒழுக்கமா இரு , அங்கேயும் போய் குடும்ப மானத்த வாங்கின நான் மனுஷியாவே இருக்க மாட்டேன்". \\\இப்போ மட்டும் இருக்க மனுஷியாவா இருக்கறதா உங்களுக்கு நினைப்பா?////
இவரது பேச்சை கேட்டு சிறியவர்கள் முகம் சுருங்க, ஐஸ் பாட்டியோ இது என்ன பேச்சு போல் மருமகளைப் பார்த்தார்..பாட்டியும் மகன்,மருமகளுடன் பேசமாட்டார், ாத்தா தேவைக்கு மட்டும் பேசுவார்...
ராதிகா பேசின வார்த்தைகளின் வீரியம், சுதரின் அடி மனம் வரை சென்று தாக்கினாலும், வெளிில் மெளனமாக ஒரு உணர்வற்ற பார்வையை அவரை நோக்கி வீசினாள்.. அந்த பார்வை நீ என்ன சொன்னாலும் என்னை பாதிக்காது,
நீ எனக்கு யாருமே இல்லை என்பதை சொல்வதை போல் இருந்தது.. அவள் பார்வையை அர்த்தம் புரிந்து வெகுகொர், மறுபடியும் அவளை திட்ட வாய் எடுக்க,..
ஐஸின் விழி அசைவில், மற்ற இரு மருமகளும் ராதாகிவின் பேச்சை திசைத் திருப்பினர்..
"அக்கா, மாமா கிளம்பறாங்க பாருங்க. ரொம்ப நேரமா நிக்கறாக " என கோகிலாவும்,
"ஆமாம் அக்கா பெரிய மாமா ஆபீஸ் கிளம்பற நேரத்துல இந்த திமிறு பிடிச்சவ கிட்ட என்ன வீண் பேச்சு"
என மேனகாவும், ராதிகாவை திசை திருப்பினாள்..
கோகிலாக்கும், மேனகாவுக்கும் "சுதர்" தான் முதல் பிள்ளை போல்..அவர்கள் பெற்ற பசங்களை விட இவள் முக்கியம்..
பாஜி - ஐஸ் மற்றும் பிள்ளைகளுக்கு மட்டும் இவர்கள் இருவரும் "சுதரை செல்லம் கொஞ்சுவது தெரியும்"..
இப்பவும் "சுதர்" முதல்முதலாக வேலை செல்லும் போது, ராதிகா திட்டுவதை கண்டு இவர்களுக்கு கடுங்கோபம் தான்", ஆனால், அவர்களால் நேரடியாக ராதிகாவை எதிர்க்க முடியாதக் காரணத்தால் மாமியாரின் விழி மொழியை சரியாக கேட்ச் செய்து,
"சுதரை நோக்கி வந்த ராதிகா என்னும் சூறாவளி காற்றை தடுத்து, அதனை, அவர் கணவரை நோக்கி தென்றல் காற்றாய் இடம் மாற்றி விட்டனர் ..
" மாமா நேரமாகிடுச்சா மன்னிச்சுருங்க , எல்லாம் இந்த ஏடுபட்டவளால வந்ததுயென்று" முதல இருந்து ஆரம்பித்தார்..
"எல்லாம் நம்ம நேரம் ராதிகா, நம்ப வாங்கி வந்த வரம், மூத்தது தறுதலையா போய்டுச்சு, என்ன பண்ண, எல்லாம் திமிரு, நம்ம பேச்சை கேக்காதப்பவே கைக்காலை உடைத்திருந்தால் இன்னிக்கி வேலைக்கு போகமாட்டா..
கொஞ்சமாச்சும் நம்பள மதிக்கறாளா, நம்ப பேச்ச கேக்காம இருக்கா இல்லை, இதுக்கு எங்கயாவது அடிப்படணும்.. அப்போ தான் நம்ம அருமைத் தெரியும்..இப்போ வேலைக்கு போகணும்னு என்ன அவசியம் பொம்பளை அடக்க ஒடுக்கமா வீட்ல இருக்கலாம் இல்ல..தறுதலை எங்க உருப்படப்போரா, நம்ப மானத்த தான் வாங்கப்போறா" என்றார்..
அன்னை தன்னை பேசும்போது ஏற்படாத ஆழமான வலி,இப்பொழுது தந்தை பேச்சில் ஏற்பட்டது, அது தப்பு செய்யமால் தண்டனை மற்றும் பழி ஏற்ப்பவர்களின் வலி .. இரண்டு வருடம் சுதர் அனுபவித்த வலி வேதனை இப்பொழுது வார்த்தைகளாக வெளிப்பட்டது...
"நான் என்ன பண்ணினேன், வேலைக்கு போறது ஒரு தப்பா, அதற்க்கு எத்தனை பேச்சு, நீங்க பெற்றவங்க மாதிரியா என்கிட்டஇருக்கீங்க, எந்த அன்னை தந்தையாவது பெற்றப் பெண்ணுக்கு சாபம் குடுப்பாங்களா, நீங்க குடுக்கறீங்களே, உங்க பேச்சை என்ன நான் கேட்க்கலை"..
"படிச்ச படிப்பிலிருந்து போடும் டிரஸ் வரை, உங்க விருப்பப்படிதான் நடந்தேன்..அதனால் என்னாச்சு உங்க பேட்ச்சை கேட்டு என் வாழ்க்கை தான் போச்சு..இப்போ இருக்கறது என் உயிர் மட்டும் தான்..அதுவும் போன தான் உங்களுக்கு நிம்மதினா சொல்லுங்க, உயிரையும் விட்டுடறேன்" என்று முகம் சிவக்க மித மிஞ்சிய ஆத்திரத்தில் கத்தினாள் ..
அவள்"உயிரை விடுவேன் " சொன்னதில் எல்லோரும் சிறிது நேரம் உறைந்துப் போனார்கள்!!!
Last edited: