sweetsugi123
மண்டலாதிபதி
என்னடா Monday next அப்டேட்னு சொல்லிவிட்டு ஆடி அசைந்து Tuesday வரேன்னு கோபப்படாதீங்க பிரண்ட்ஸ்.......கமிட் பண்ணுன பிறகு தான் அதிகப்படியான வேலை எல்லாம் வரும்.....சத்தமில்லாமல் சாதிக்கணும்னு இதைத்தான் சொல்லறாங்களோ??
இந்த அப்டேட் கொஞ்சம் சென்ஸிட்டிவ்வான தகவல்களை கொண்டது....இதன் மூலமாக சாதியை பற்றிய விழிப்புணர்வை கொடுக்கணும் என நினைத்தேன்....
ஒருமுறை நீயா? நானா? நிகழ்ச்சியில், ஒருபுறம் பெற்றோர்களும் மறுபுறம் குழந்தைகளும் அமர்ந்து தங்கள் சந்தேகங்களை தொடுத்தனர்...அப்பொழுது ஒரு குழந்தை சாதி (Caste) என்றால் என்ன எனக் கேட்டது....ஒரே ஒருவரைத் தவிர, யாராலுமே அக்குழந்தைக்கு சரியான பதிலை தர முடியவில்லை....சாதி தோன்றிய வரலாறு பற்றி நாம் தெரிந்திருக்கவில்லை என்பதே உண்மை...அதைப் பற்றிய புரிதல் இல்லாமல், தன் சமூகமே உயர்ந்தது மற்றவர்கள் எல்லாம் கீழே என ஒவ்வொரு சமூகத்தினரும் மற்றவர்களை அடக்கி ஒடுக்கி தன் வலிமையை பொருளாதர நிலையை உயர்த்தினர்... அதிகாரமுள்ள, வலிமையுள்ள, பொருளாதார மற்றும் அரசியல் செல்வாக்கு உள்ள மனிதனின் சமூகமே உயர்ந்தது எனக் காட்டுகின்றனர் ........
நிறைய தகவலை சேகரிக்க வேண்டி இருந்தது.....அதுதான் தாமதத்திற்கான காரணம் மக்களே......
அத்தியாயம் 24:-
பிரியாவின் மூலம் மேரேஜ் தற்போதைக்கு நிறுத்தப்பட்டுள்ளது என்பதை அறிந்த அரவிந்த், தாம் தூம் எனக் குதித்தான்....
"ஏய், விளையாடுறியா, மேரேஜ் என்ன நீ போட்டிருக்கிற டிரஸ் போலவா, உனக்கு fit ஆகலைனா, நீ fit ஆனதும் போட்டுக்கலாம்னு வார்ட்ரோப் மூலைல தூக்கி போட....சொந்தபந்தம் எல்லாருக்கும் என்னனு பதில் சொல்ல....ஏன் நிறுத்துனீங்கன்னு கேட்டா என்ன சொல்லி சமாளிக்க.......உங்க தாத்தா எப்ப ஓகே சொல்லி நம்ம மேரேஜ் எப்ப நடக்கும்னே தெரியாது.......இந்த சூனியக்காரி ஜக்கம்மா என் தலைல பெரிய பாறாங்கல்லா தூக்கி போட்டுட்டாளே ...பாவி...பாவி...அவ விருந்து சாப்பிட நான் ஊறுகாயா....அப்பவே யோசிச்சு இருக்கணும்.... நீ அந்த குட்டிச்சாத்தான், சதிகாரி அராத்து கூடவே சுத்தறியே... ஓகே சொல்லலாமானு....நம்ம ஆளு தங்கமாச்சேனு நினைச்சது தப்பா போச்சு..." என கோபமாக பொறியத் தொடங்கி புலம்பலில் முடித்தான்....
"ஸ்டாப் இட் அர்வி, தேவையில்லாமல் பாலாவை பத்தி பேசாதே....உனக்கு எந்த உரிமையும் இல்ல அவளைப்பற்றி பேசுறதுக்கு........அவ நிம்மதியில்லாமல் இருக்கும்போது நான் மட்டும் எப்படி சந்தோஷமாக இருக்க முடியும்..........அவளைப்பத்தி உனக்கு ஒண்ணும் தெரியாது, எனக்கு எல்லாமே அவதான்....எங்க எல்லாருடைய சந்தோஷமும் அவதான்... சோ, நீ இப்பவே மேரேஜ் பண்ணி ஆகணும்னா வேற நல்ல பொண்ணா பார்த்துக்கோ....அராத்து கூட சுத்தற நான் உனக்கு வேண்டாம்..." என கோபத்துடன் அழுதுகொண்டே போனை கட் பண்ணினாள்............
பிரீ மற்றும் பாலாவின் பெற்றோர்கள் நிலைமையை எடுத்துச்சொல்லி அரவிந்தின் குடும்பத்தை சமாதானப்படுத்தியிருந்தனர்.............
அரவிந்தோ, படாத பாடு பட்டு கெஞ்சி, கொஞ்சி...கடைசியில் பாலாவிடமே சென்று பிரீயை சமாதானப்படுத்த உதவுமாறு பஞ்சாயத்து வைத்து பத்தாவது நாள் வெற்றிகரமாக பிரீயை பேசவைத்தான்....
இப்படியே சில வாரங்கள் சென்றிருக்க, தோழிகள் இருவரும் வெற்றிகரமாக பைனல் இயர் ப்ராஜெக்ட்டை முடித்து தங்கள் கல்லூரிப்பயணத்தை இனிதே நிறைவு செய்தனர்..........இருவரும் மேலும் 2 வருடம் ஆரனிடம் இருந்து தொழில்நுட்பத்தை நன்கு கற்றபின் தங்கள் குடும்ப தொழிலான காமாட்சி டெக்ஸ்டைல் நிறுவனத்தை பொறுப்பேற்க முடிவு செய்தனர்.......
காலம் எதற்காகவும் யாருக்காகவும் நிற்காமல் நகர, செல்லாண்டியம்மன் கோவில் திருவிழாவிற்காக மொத்த குடும்பமும் திருப்பூருக்கு சென்றனர்.....
இதற்கிடையில், அனைவருமே மாற்றி மாற்றி தாத்தாவிடம் தூது போய் பேசியும், சிறிதும் அசையவில்லை அக்கிழவர்....(ரொம்பத்தான் பண்ணறாரு தாத்தா...எனக்கும் கோபம் வருதுல)
ஆரனின் குடும்பத்தினரும், திருப்பூர் வீட்டிற்கே சென்று தாத்தாவிடம் பேசி பார்த்தனர்.....தாத்தா ஒரே முடிவாக ஒத்து வராது என சொல்லி அனுப்பிவிட்டார்....ஆரனின் குடும்பத்தினரும், இதற்குமேல் நாமாக கீழே இறங்கி போகமுடியாது...அவர்களே வரட்டும் என விட்டு விட்டனர்.....ஆரனின் அழகுக்கும், தொழில் திறமைக்கும், வெளிநாட்டு படிப்பிற்கும், கணக்கேயில்லாத சொத்துக்கும்....ஏகப்பட்ட வரன்கள் போட்டி போட...ஆரனின் விருப்பத்தை அறிந்து ஏதும் பேசாமல் இருந்தனர்...........
வீடே உறவினர்களால் களை கட்டியிருக்க, தாத்தா அனைவரிடமும் நன்றாக பேசினாலும் பாலாவிடம் அவர் காட்டும் ஒதுக்கம் வெளிப்படையாகவே தெரிந்தது......
காலையில் பூஜைக்கு அதிகாலையில் செல்ல வேண்டும் என்பதால் அனைவரும் உறங்க சென்றிருக்க....பாலா AV யுடன் பேசி முடித்து, தூக்கம் வராமல் தோட்டத்தில் உள்ள சேரில் அமர்ந்து பலதையும் யோசித்து கொண்டிருந்தாள்........
நினைவு தெரிந்த நாள் முதலாய், தாத்தா அவளை ஒதுக்கியதில்லை.....பாலாவின் மேல் அலாதியான பிரியம் கொண்டவர்....அப்படிப்பட்டவர், இன்று நடந்து கொண்டதை பாலாவால் சிறிதும் ஏற்றுக்கொள்ளமுடியவில்லை......
என்ன காரணம் நான் வேறு மதத்தை சேர்ந்தவனை நேசித்ததா.....இதே தாத்தா தானே அன்பே சிவம் என்றும் சொல்லி கொடுத்தவர்....எதனால் இப்படி தன் சாதியே/ குலமே உயர்ந்தது போல் நடந்து கொள்கிறார்.....இவ்வுலகில் பிறந்த அனைவருக்குமே பஞ்ச பூதம் என சொல்லப்படும் நீர், நெருப்பு, காற்று, ஆகாயம், மற்றும் பூமி சொந்தமானது....நாம் சுவாசிக்கும் காற்றைத்தான் அனைவரும் சுவாசிக்கின்றனர்...எந்த விதத்தில் தாத்தா, நீங்கள் உயர்ந்தவர்கள் என மனதுள் வாதிட்டு கொண்டிருந்தாள்......
ஆன்மீக கதைகளை பேசும் நீங்கள், அவ்வைப் பாட்டி சொன்னதை மறந்து விட்டீர்களா?
''சாதி இரண்டொழிய வேறில்லை
சாற்றுங்கால்
நீதிவழுவா நெறிமுறையின் -
மேதினியில்
இட்டார் பெரியோர் இடாதார்
இழி குலத்தோர்
பட்டாங்கில் உள்ளபடி'
பிறருக்கு கொடுத்து உதவுபவர் உயர்ந்த சாதியாவார், பிறருக்கு கொடாதார் தாழ்ந்த சாதியாவார். இவை இரண்டன்றி வேறு சாதிகள் இல்லை.
தன் குலம் / இனம் / மதம் / சமூகமே பெரிதென பேசும் தாத்தாவிற்கு இந்த சாதி எப்படி தோன்றியது என்ற வரலாறாவது தெரியுமா என சிந்தித்தவள்..........
தன் இளம்பிரயாயத்தில் ஸ்கூலில் சாதி சாற்றிதழ் வாங்கிவர சொன்னபொழுது, தன் தந்தையிடம் சாதி என்றால் என்ன என்று கேட்ட கேள்வியும் அதற்கு கிருஷ்(தந்தை) அளித்த பதிலையும் நினைவு கூர்ந்தாள் பாலா....
"கிருஷ், சாதி என்றால் என்ன?...நாம் இந்த சாதிதான் என எதை வைத்து தீர்மானிக்கிறோம்"
"அடடே, என் பொண்ணு வளர்ந்துட்டாங்களே அவங்க பெரிய பெரிய கேள்வி எல்லாம் கேட்குறாங்களே...." என்றவர் தனக்கு தெரிந்த தகவல்களை கூற ஆரம்பித்தார்....
"வேதகாலத்தில் வர்ணம் முறையில் பிரிக்கப்பட்டது....வர்ணப்பகுப்பு இயற்கையின் இயல்பு, மனித இயல்பு பற்றிய ஒரு கொள்கையின் விரிவாக்கம். இயற்கையானது நேர்சக்தி, எதிர்சக்தி, சமநிலைசக்தி என்ற மூன்று விசைகளால் ஆனது என புரிந்துகொண்டதிலிருந்து உருவானது அந்தக்கொள்கை. நேர்சக்தி என்பது மனிதர்களின் இயற்கையில் வெளிப்படுவதை ரஜோகுணம் என்றார்கள். எதிர்சக்தி தமோகுணம். சமநிலைசக்தி சத்வகுணம். இப்படி மனிதர்களில் வெளிப்படும் மூன்றுகுணங்களின் அடிப்படையில் நால்வர்ணம் வகுக்கப்பட்டது. தமோகுணம் கொண்டவர்கள் சூத்திரர்கள். ரஜோகுணம் கொண்டவர்கள் சத்ரியர்கள். தமோகுணமும் ரஜோகுணமும் கலந்தவர்கள் வைசியர். சத்வகுணம் கொண்டவர்கள் பிராமணர்கள் என்று பிரிக்கப்பட்டது.
ஆனால் இந்தக் காலத்தில் நடிகர் மகள் நடிகையாவது போலும், அரசியல்வாதி மகன் அரசியல் தலைவர் ஆவது போலவும் அந்தக் காலத்திலும் இயற்கையாக, இயல்பாக அவரவர் குடும்பத் தொழில்களைப் பின்பற்றினர்.
பிற்காலத்தில் செய்யும் தொழில் அடிப்படையில் சாதிகள் பிரிக்கப்பட்டன....உதாரணமாக
இந்த அப்டேட் கொஞ்சம் சென்ஸிட்டிவ்வான தகவல்களை கொண்டது....இதன் மூலமாக சாதியை பற்றிய விழிப்புணர்வை கொடுக்கணும் என நினைத்தேன்....
ஒருமுறை நீயா? நானா? நிகழ்ச்சியில், ஒருபுறம் பெற்றோர்களும் மறுபுறம் குழந்தைகளும் அமர்ந்து தங்கள் சந்தேகங்களை தொடுத்தனர்...அப்பொழுது ஒரு குழந்தை சாதி (Caste) என்றால் என்ன எனக் கேட்டது....ஒரே ஒருவரைத் தவிர, யாராலுமே அக்குழந்தைக்கு சரியான பதிலை தர முடியவில்லை....சாதி தோன்றிய வரலாறு பற்றி நாம் தெரிந்திருக்கவில்லை என்பதே உண்மை...அதைப் பற்றிய புரிதல் இல்லாமல், தன் சமூகமே உயர்ந்தது மற்றவர்கள் எல்லாம் கீழே என ஒவ்வொரு சமூகத்தினரும் மற்றவர்களை அடக்கி ஒடுக்கி தன் வலிமையை பொருளாதர நிலையை உயர்த்தினர்... அதிகாரமுள்ள, வலிமையுள்ள, பொருளாதார மற்றும் அரசியல் செல்வாக்கு உள்ள மனிதனின் சமூகமே உயர்ந்தது எனக் காட்டுகின்றனர் ........
நிறைய தகவலை சேகரிக்க வேண்டி இருந்தது.....அதுதான் தாமதத்திற்கான காரணம் மக்களே......
அத்தியாயம் 24:-
பிரியாவின் மூலம் மேரேஜ் தற்போதைக்கு நிறுத்தப்பட்டுள்ளது என்பதை அறிந்த அரவிந்த், தாம் தூம் எனக் குதித்தான்....
"ஏய், விளையாடுறியா, மேரேஜ் என்ன நீ போட்டிருக்கிற டிரஸ் போலவா, உனக்கு fit ஆகலைனா, நீ fit ஆனதும் போட்டுக்கலாம்னு வார்ட்ரோப் மூலைல தூக்கி போட....சொந்தபந்தம் எல்லாருக்கும் என்னனு பதில் சொல்ல....ஏன் நிறுத்துனீங்கன்னு கேட்டா என்ன சொல்லி சமாளிக்க.......உங்க தாத்தா எப்ப ஓகே சொல்லி நம்ம மேரேஜ் எப்ப நடக்கும்னே தெரியாது.......இந்த சூனியக்காரி ஜக்கம்மா என் தலைல பெரிய பாறாங்கல்லா தூக்கி போட்டுட்டாளே ...பாவி...பாவி...அவ விருந்து சாப்பிட நான் ஊறுகாயா....அப்பவே யோசிச்சு இருக்கணும்.... நீ அந்த குட்டிச்சாத்தான், சதிகாரி அராத்து கூடவே சுத்தறியே... ஓகே சொல்லலாமானு....நம்ம ஆளு தங்கமாச்சேனு நினைச்சது தப்பா போச்சு..." என கோபமாக பொறியத் தொடங்கி புலம்பலில் முடித்தான்....
"ஸ்டாப் இட் அர்வி, தேவையில்லாமல் பாலாவை பத்தி பேசாதே....உனக்கு எந்த உரிமையும் இல்ல அவளைப்பற்றி பேசுறதுக்கு........அவ நிம்மதியில்லாமல் இருக்கும்போது நான் மட்டும் எப்படி சந்தோஷமாக இருக்க முடியும்..........அவளைப்பத்தி உனக்கு ஒண்ணும் தெரியாது, எனக்கு எல்லாமே அவதான்....எங்க எல்லாருடைய சந்தோஷமும் அவதான்... சோ, நீ இப்பவே மேரேஜ் பண்ணி ஆகணும்னா வேற நல்ல பொண்ணா பார்த்துக்கோ....அராத்து கூட சுத்தற நான் உனக்கு வேண்டாம்..." என கோபத்துடன் அழுதுகொண்டே போனை கட் பண்ணினாள்............
பிரீ மற்றும் பாலாவின் பெற்றோர்கள் நிலைமையை எடுத்துச்சொல்லி அரவிந்தின் குடும்பத்தை சமாதானப்படுத்தியிருந்தனர்.............
அரவிந்தோ, படாத பாடு பட்டு கெஞ்சி, கொஞ்சி...கடைசியில் பாலாவிடமே சென்று பிரீயை சமாதானப்படுத்த உதவுமாறு பஞ்சாயத்து வைத்து பத்தாவது நாள் வெற்றிகரமாக பிரீயை பேசவைத்தான்....
இப்படியே சில வாரங்கள் சென்றிருக்க, தோழிகள் இருவரும் வெற்றிகரமாக பைனல் இயர் ப்ராஜெக்ட்டை முடித்து தங்கள் கல்லூரிப்பயணத்தை இனிதே நிறைவு செய்தனர்..........இருவரும் மேலும் 2 வருடம் ஆரனிடம் இருந்து தொழில்நுட்பத்தை நன்கு கற்றபின் தங்கள் குடும்ப தொழிலான காமாட்சி டெக்ஸ்டைல் நிறுவனத்தை பொறுப்பேற்க முடிவு செய்தனர்.......
காலம் எதற்காகவும் யாருக்காகவும் நிற்காமல் நகர, செல்லாண்டியம்மன் கோவில் திருவிழாவிற்காக மொத்த குடும்பமும் திருப்பூருக்கு சென்றனர்.....
இதற்கிடையில், அனைவருமே மாற்றி மாற்றி தாத்தாவிடம் தூது போய் பேசியும், சிறிதும் அசையவில்லை அக்கிழவர்....(ரொம்பத்தான் பண்ணறாரு தாத்தா...எனக்கும் கோபம் வருதுல)
ஆரனின் குடும்பத்தினரும், திருப்பூர் வீட்டிற்கே சென்று தாத்தாவிடம் பேசி பார்த்தனர்.....தாத்தா ஒரே முடிவாக ஒத்து வராது என சொல்லி அனுப்பிவிட்டார்....ஆரனின் குடும்பத்தினரும், இதற்குமேல் நாமாக கீழே இறங்கி போகமுடியாது...அவர்களே வரட்டும் என விட்டு விட்டனர்.....ஆரனின் அழகுக்கும், தொழில் திறமைக்கும், வெளிநாட்டு படிப்பிற்கும், கணக்கேயில்லாத சொத்துக்கும்....ஏகப்பட்ட வரன்கள் போட்டி போட...ஆரனின் விருப்பத்தை அறிந்து ஏதும் பேசாமல் இருந்தனர்...........
வீடே உறவினர்களால் களை கட்டியிருக்க, தாத்தா அனைவரிடமும் நன்றாக பேசினாலும் பாலாவிடம் அவர் காட்டும் ஒதுக்கம் வெளிப்படையாகவே தெரிந்தது......
காலையில் பூஜைக்கு அதிகாலையில் செல்ல வேண்டும் என்பதால் அனைவரும் உறங்க சென்றிருக்க....பாலா AV யுடன் பேசி முடித்து, தூக்கம் வராமல் தோட்டத்தில் உள்ள சேரில் அமர்ந்து பலதையும் யோசித்து கொண்டிருந்தாள்........
நினைவு தெரிந்த நாள் முதலாய், தாத்தா அவளை ஒதுக்கியதில்லை.....பாலாவின் மேல் அலாதியான பிரியம் கொண்டவர்....அப்படிப்பட்டவர், இன்று நடந்து கொண்டதை பாலாவால் சிறிதும் ஏற்றுக்கொள்ளமுடியவில்லை......
என்ன காரணம் நான் வேறு மதத்தை சேர்ந்தவனை நேசித்ததா.....இதே தாத்தா தானே அன்பே சிவம் என்றும் சொல்லி கொடுத்தவர்....எதனால் இப்படி தன் சாதியே/ குலமே உயர்ந்தது போல் நடந்து கொள்கிறார்.....இவ்வுலகில் பிறந்த அனைவருக்குமே பஞ்ச பூதம் என சொல்லப்படும் நீர், நெருப்பு, காற்று, ஆகாயம், மற்றும் பூமி சொந்தமானது....நாம் சுவாசிக்கும் காற்றைத்தான் அனைவரும் சுவாசிக்கின்றனர்...எந்த விதத்தில் தாத்தா, நீங்கள் உயர்ந்தவர்கள் என மனதுள் வாதிட்டு கொண்டிருந்தாள்......
ஆன்மீக கதைகளை பேசும் நீங்கள், அவ்வைப் பாட்டி சொன்னதை மறந்து விட்டீர்களா?
''சாதி இரண்டொழிய வேறில்லை
சாற்றுங்கால்
நீதிவழுவா நெறிமுறையின் -
மேதினியில்
இட்டார் பெரியோர் இடாதார்
இழி குலத்தோர்
பட்டாங்கில் உள்ளபடி'
பிறருக்கு கொடுத்து உதவுபவர் உயர்ந்த சாதியாவார், பிறருக்கு கொடாதார் தாழ்ந்த சாதியாவார். இவை இரண்டன்றி வேறு சாதிகள் இல்லை.
தன் குலம் / இனம் / மதம் / சமூகமே பெரிதென பேசும் தாத்தாவிற்கு இந்த சாதி எப்படி தோன்றியது என்ற வரலாறாவது தெரியுமா என சிந்தித்தவள்..........
தன் இளம்பிரயாயத்தில் ஸ்கூலில் சாதி சாற்றிதழ் வாங்கிவர சொன்னபொழுது, தன் தந்தையிடம் சாதி என்றால் என்ன என்று கேட்ட கேள்வியும் அதற்கு கிருஷ்(தந்தை) அளித்த பதிலையும் நினைவு கூர்ந்தாள் பாலா....
"கிருஷ், சாதி என்றால் என்ன?...நாம் இந்த சாதிதான் என எதை வைத்து தீர்மானிக்கிறோம்"
"அடடே, என் பொண்ணு வளர்ந்துட்டாங்களே அவங்க பெரிய பெரிய கேள்வி எல்லாம் கேட்குறாங்களே...." என்றவர் தனக்கு தெரிந்த தகவல்களை கூற ஆரம்பித்தார்....
"வேதகாலத்தில் வர்ணம் முறையில் பிரிக்கப்பட்டது....வர்ணப்பகுப்பு இயற்கையின் இயல்பு, மனித இயல்பு பற்றிய ஒரு கொள்கையின் விரிவாக்கம். இயற்கையானது நேர்சக்தி, எதிர்சக்தி, சமநிலைசக்தி என்ற மூன்று விசைகளால் ஆனது என புரிந்துகொண்டதிலிருந்து உருவானது அந்தக்கொள்கை. நேர்சக்தி என்பது மனிதர்களின் இயற்கையில் வெளிப்படுவதை ரஜோகுணம் என்றார்கள். எதிர்சக்தி தமோகுணம். சமநிலைசக்தி சத்வகுணம். இப்படி மனிதர்களில் வெளிப்படும் மூன்றுகுணங்களின் அடிப்படையில் நால்வர்ணம் வகுக்கப்பட்டது. தமோகுணம் கொண்டவர்கள் சூத்திரர்கள். ரஜோகுணம் கொண்டவர்கள் சத்ரியர்கள். தமோகுணமும் ரஜோகுணமும் கலந்தவர்கள் வைசியர். சத்வகுணம் கொண்டவர்கள் பிராமணர்கள் என்று பிரிக்கப்பட்டது.
- பிராமணர்-புலமை வாயந்த சமூகத்தவர்- அர்ச்சகர், புலவர், சட்ட ஆலோசர், அமைச்சர்கள், இராஜதந்திரிகள் இவர்களை உள்ளடக்கியது. சத்வ குணம் மிக்கவர்கள்.
- சத்ரியர்- உயர்வான குறை பண்புடையோர்-அரசர், மரியாதைக்குரியவர், வீரர்கள் மற்றும் ஆளுமையுடையோர்களை உள்ளடக்கியது. ரஜோகுணம் மிக்கவர்கள்.
- வைசியர்- வணிகர் மற்றும் தொழில் முனைவோர் சமூகத்தார்-வணிகர், சிறு வியாபாரிகள், தொழிலதிபர் மற்றும் பண்ணையார் இவர்களை உள்ளடக்கியது. ரஜோகுணம் மற்றும் தமோகுணம் மிக்கவர்கள்.
- சூத்திரர்- சேவகப் புரியும் சமூகத்தார்-கடின உழைப்பாளர், கூலித் தொழிலாளர்களை உள்ளடக்கியது. தமோகுணம் குணம் உடையவர்கள்.
ஆனால் இந்தக் காலத்தில் நடிகர் மகள் நடிகையாவது போலும், அரசியல்வாதி மகன் அரசியல் தலைவர் ஆவது போலவும் அந்தக் காலத்திலும் இயற்கையாக, இயல்பாக அவரவர் குடும்பத் தொழில்களைப் பின்பற்றினர்.
பிற்காலத்தில் செய்யும் தொழில் அடிப்படையில் சாதிகள் பிரிக்கப்பட்டன....உதாரணமாக
Last edited: