sweetsugi123
மண்டலாதிபதி
ஹாய் மை டியர் பிரண்ட்ஸ்,
அத்தியாயம் 13 போஸ்ட் செய்து விட்டேன்.... படித்துவிட்டு மறக்காமல் உங்கள் கருத்துக்களை தெரிவிக்கவும்....அடுத்த அத்தியாயத்தை மண்டே தான் போட முடியும் பிரண்ட்ஸ்.....
என் முந்தைய அத்தியாயத்திற்கு லைக்ஸ் மற்றும் கமெண்ட்ஸ் போட்ட அனைவர்க்கும் நன்றி நன்றி நன்றி ....
அன்புடன்,
சுகி.
அத்தியாயம் 13
View attachment 759
திண்டுக்கல் தாண்டி ஒரு சில கிலோமீட்டர் தொலைவில் இருந்த பண்ணைக்குள் காரை விடச்சொன்னாள்.....அந்த இடமே அவ்வளவு குளுமையாக இருந்தது.....சிறிது தூரம் சென்றபின், மரத்தால் ஆன ஒரு குடில்முன் வண்டியை நிறுத்தினான்....
சுற்றிலும் தென்னை மரங்களும், பசுமையும், யாருமற்ற தனிமையும், குடிலுக்கு கீழே ஓடிக்கொண்டிருந்த வாய்க்காலும் பார்க்கத் தெவிட்டவில்லை....
அந்த ஏகாந்தமான சூழலை ரசித்தபடியே, நீரில் கால்விட்டபடியே வரப்பின்மேல் அமர்ந்துகொண்டாள் பாலா...ஒரு சுற்று சுற்றி வந்த AV, "எப்படி இப்படி ஒரு அமைதியான இடத்தை கண்டுபுடிச்சே... வெரி பியூட்டிபுல்" என்றான் ரசனையாக....
"இது என் பிரண்டோட பண்ணை, அவங்களோட பிரைவேட் ப்ராபர்ட்டி....முன்னாடியே இன்பார்ம் பண்ணிட்டேன் நாம வர்றோம்னு"....
பிரேக்பாஸ்ட் முடிச்சுட்டு, கொஞ்சம் ரெப்பிரெஷ் பண்ணிட்டு கிளம்பலாம்...டிரைவர் அண்ணா கிட்ட சொல்லி, டேபிள் செட் பண்ண சொல்லு...அப்படியே ஹாரி அண்ட் லிண்டாவையும் கீழே வரச்சொல்லு" என்றபடி தன் கேமரா பாக் மற்றும் உணவு பாக்கெட்களையும் எடுத்து வைத்தாள்........
ஹாரியும், லிண்டாவும் வருகையில், டேபிள் செட் பண்ணி இருக்க.....காரவனில் இருந்து ஜூஸ்ஸர் எடுத்து பிரெஷ் ஜூஸ் ஊற்றி வைத்தாள்.....குடிலுக்கு சென்று, அங்குள்ள அவனில் உணவை சூடுபண்ணி வைத்தாள்....மேலும் பிரட், ஜாம், சீஸ், பிளேட்ஸ் என லிண்டாவின் உதவியோடு எடுத்து வைத்தாள் பாலா.......
அனைவரும் அமர்ந்து இயற்கையை ரசித்தபடியே உணவு அருந்தினர்.....டிரைவர் அண்ணன்கள் வரப்பின்மேல் அமர்ந்திருக்க...தனது பிளேட்டுடன் நீரில் காலை நனைந்தபடி அமர்ந்துகொண்டாள்...........பாலா தனியாக இருப்பதை பார்த்த AV, அவளுக்கு ஜூஸ் கொடுக்கும் சாக்கில் அவளருகே அமர்ந்துகொண்டான்....ஹாரிக்கும் லிண்டாவுக்கும் தேவையான தனிமையை கொடுத்து.....
உணவை முடித்து, பாலா தன் கேமராவுடன் சென்றுவிட, ஹாரியும் லிண்டாவும் கைகோர்த்தபடி வாய்க்காலில் இறங்கி நடந்தனர்......... AV டிரைவர்களின் உதவியுடன் அனைத்தையும் பேக் பண்ணிவிட்டு.......பசுமையை ரசித்தபடி மெதுவாக அவ்விடத்தை சுற்றி வந்தான்............
சிறிது நேரத்தில், அனைவரும் கிளம்ப அவரவர் வண்டியில் ஏறினர்.... பாலா வண்டியை எடுக்க, "அடுத்தது எங்க பாலா" என்றான் .... கைத்தறியில் நெய்த பட்டுப்புடவை வாங்க போகிறோம் லிண்டா மிகவும் ஆசையாக கேட்டாள்...."பட்டுபுடவைக்கு பேமஸ் காஞ்சிபுரம் தானே, கோவையில் இல்லாத புடவை திண்டுக்கல்லில் கிடைக்குமா?? என்றான்.....
"கைத்தறி நெசவாளர்கள் படுகின்ற கஷ்டத்தை பற்றி கேள்விப்பட்டேன்..... அடுத்து வாங்கும் போது அவர்களிடம்தான் வாங்க வேண்டும் என்று நினைத்திருந்தேன்.... அதனால் இச்சமயத்தை யூஸ் பண்ணிக்கொண்டேன்" என்றாள் ....
கைத்தறி நெசவாளர்கள் கூட்டுறவு சங்கத்திற்கு புடவை வாங்கச்சென்றனர்....புடவைகளை எடுத்துப்போட, இரு பெண்கள் பாலாவிற்கும், லிண்டாவிற்கும் கட்டி காண்பித்தனர்...........
லிண்டா, ஹாரியிடம் நல்லாயிருக்கிறதா என கேட்டு, செலக்ட் செய்ய ஆரம்பித்தாள்..........பாலாவோ, தனக்குத்தானே செலக்ட் செய்ய ஆரம்பித்தாள்...இவளையே பார்த்துக்கொண்டிருந்த AVக்கு, சிவப்புநிற அகண்ட பார்டர் கொண்ட சேலை மிகவும் பிடித்தது.....பாலாவுக்கு, அச்சேலை பிடித்திருந்த போதும், ரொம்ப கிராண்ட்டாக உள்ளதால், வேறு பிங்க் சேலையை தேர்வு செய்தாள்....
மேலும், சில சேலையையும் தேர்ந்தெடுத்து முடிக்கையில் மணி 11.30 ..... இவள் பில்லிங் செக்க்ஷன்க்கு அனுப்பிவிட்டு லிண்டாவுக்கு ஹெல்ப் பண்ணச்சென்றாள்...
அவள் சென்றதும், AV அந்த சிகப்பு நிற சேலையை தனியாக பில் போட அனுப்பினான்...ஆண்கள் இருவருக்கும், வேஷ்டி, ரெடிமேட் ஷர்ட் எடுத்துமுடித்து... பில்லிங் பகுதிக்கு வருகையில் மணி 12....AV
அனைத்து சேலைகளுக்கும் பணம் செலுத்துவதாகக்கூற, அதனை மறுத்துவிட்டு, ஹாரியும், பாலாவும் தாங்கள் எடுத்ததற்கு பணத்தைச்செலுத்தி பெற்றுக்கொண்டனர்.....வேறுவழியில்லாமல், தன் பில்லை செலுத்திவிட்டு காருக்கு வந்தான்....
காரில் ஏறியதும், பாலா இரு புடவைகளை கொடுத்து, ஒன்றை ஜெஸி ஆண்ட்டிக்கும், மற்றதை பெரியம்மாவுக்கும் (பிரஜினின் அம்மா) கொடுக்க சொன்னாள்...
"ச்சே, நமக்கு இது தோன்றவில்லையே என சலித்துக்கொண்டு, " அங்கேயே சொல்லியிருக்கலாம்ல, எனக்கு நினைப்பே இல்லை, பில்லாவது நான் பே பண்ணியிருப்பேன் " என்றான் வருத்தமாக...
"அதனால என்ன, நீ வாங்குனாலும் நான் வாங்கினாலும் ஒரே சேலை தானே வாங்கப்போறோம்....... பணத்தை பார்க்காதேடா....அம்மா, அத்தை, பியா, பாட்டி என எல்லாருக்கும் வாங்கும் போது அவங்களுக்கு வாங்காம எப்படி விடமுடியும்.....என்கிட்டே இல்லைனா உன்கிட்ட வாங்கிக்கறேன்" என்றாள் பாலா சமாதானமாக.....
AV தான் வாங்கிய சிகப்பு புடவையை எடுத்துக்கொடுத்து, இதை நீ மீனாட்சி அம்மன் கோவிலுக்கு போகும் போது கட்டிக்கொள்...என்றான் ஆசையாக....
வேண்டாம் என பாலா தயங்க, "இப்பதானே சொன்னே, பணத்தை பார்க்காதே மனதை பாருனு...அப்பறம் என்ன தயக்கம்....நீ இதைத்தான் கட்டுறே" என்றான் முடிவாக அழுத்தத்துடன்.........
"சரி சரி மலை ஏறாதே, இதையே கட்டறேன்" ..... தன்னை கவனித்து ஆசையாக வாங்கி வைத்து தருகிறானே என மனதில் மகிழ்ச்சி வெள்ளத்தில் குளித்தாலும் வெளியே காட்டி கொள்ளவில்லை...
பாலா, லிண்டாவை அழைத்துக்கொண்டு, அருகில் இருந்த பெரிய துணிக்கடைக்கு சென்று, மேட்சிங் ரெடிமேட் ப்ளவுஸ் வாங்கி வந்தனர்...
தொடர்ந்து பயணம் செய்து, மதுரைக்கு அருகில் பசுமலையில் உள்ள தி கேட்வே ஹோட்டலை அடையும் போது மணி 1...ஹோட்டல் ஒரு சிறுமலையின் மேல் குட்டி ஜங்கிள்லுள் அமைந்திருந்தது....சுற்றிலும் ஓங்கி வளர்ந்த மரங்களும், அழகாக பராமரிக்கப்பட்ட புல்வெளியும், கூட்டமாக ஓடித்திரிந்த மயிலும், வான்கோழியும் , முயலும் .... இதனிடையே இருந்த கம்பீரமான பழங்காலக்கட்டிடமும்.....வாவ் சொல்லவைத்தது.... கூடவே தாஜ் ஹோட்டலின் விருந்தினர் கவனிப்பு என அசத்தலாக இருந்தது......
சிவா ஹாரிக்கும், லிண்டாவுக்கும் சேர்த்து சூட் ரூம் ஒன்றும், பாலாவுக்கும், ஆரனுக்கும் 2 ஸ்டாண்டர்ட் ரூமும் புக் பண்ணி இருந்தான்....
ரூம்பாயிடம் அவர்களது லக்கேஜ் கொடுத்து அனுப்பிவிட்டு, ரெப்பிரெஷ் பண்ணி நேராக ரெஸ்ட்ராரென்ட் வரும்படி சொல்லி.... இவர்கள் இருவரும் தனது ரூம் நோக்கிச்சென்றனர்... அருகருகே இருந்தது இவர்களது ரூம்........ரொம்ப இடவசதியுடன், கலைநயமான மரவேலைப்பாடுகளுடன், பளிச்சிடும் தூய்மையுடன் அழகாக இருந்தது........
அனைவரும், லஞ்ச் முடித்து வெளிவரும்போது மணி 2...சரியாக ஒரு மணி நேரம் கழித்து ரெடி ஆகி கோவிலுக்கு, கிளம்பலாம் என முடிவெடுக்கப்பட்டது......அனைவரும் ரெஸ்ட் எடுக்க சென்று விட...பாலா தன் கேமெராவோடு வெளியே வந்தாள்..........
அம்மலையின் மேலிருந்து பார்க்க, மதுரை சிட்டியின் வியூ அழகாக இருந்தது......பல கிளிக்குகளை பண்ணியவள், அறைக்குத் திரும்பி குளித்து முடித்து இன்டர்காமில் அழைத்து மற்றவர்களை ரெடியாகும் படி கூறினாள்..
இவள் ஸாரி கட்டி முடித்து, லையிட்டாக மேக்கப் செய்து....லிண்டாவிற்கும் அலங்காரம் செய்து விட்டாள்.....பெண்கள் இருவரும், பிரெஞ்சு பிளாட் ஜடை போட்டு தகுந்த மேட்சிங் ஆபரணங்கள் போட்டு ஜொலித்தனர்...... ஹாரிக்கு AV உதவி செய்ய, பட்டு வேஷ்டி சட்டை போட்டு கலக்கினான்.........,...
அத்தியாயம் 13 போஸ்ட் செய்து விட்டேன்.... படித்துவிட்டு மறக்காமல் உங்கள் கருத்துக்களை தெரிவிக்கவும்....அடுத்த அத்தியாயத்தை மண்டே தான் போட முடியும் பிரண்ட்ஸ்.....
என் முந்தைய அத்தியாயத்திற்கு லைக்ஸ் மற்றும் கமெண்ட்ஸ் போட்ட அனைவர்க்கும் நன்றி நன்றி நன்றி ....
அன்புடன்,
சுகி.
அத்தியாயம் 13
View attachment 759
திண்டுக்கல் தாண்டி ஒரு சில கிலோமீட்டர் தொலைவில் இருந்த பண்ணைக்குள் காரை விடச்சொன்னாள்.....அந்த இடமே அவ்வளவு குளுமையாக இருந்தது.....சிறிது தூரம் சென்றபின், மரத்தால் ஆன ஒரு குடில்முன் வண்டியை நிறுத்தினான்....
சுற்றிலும் தென்னை மரங்களும், பசுமையும், யாருமற்ற தனிமையும், குடிலுக்கு கீழே ஓடிக்கொண்டிருந்த வாய்க்காலும் பார்க்கத் தெவிட்டவில்லை....
அந்த ஏகாந்தமான சூழலை ரசித்தபடியே, நீரில் கால்விட்டபடியே வரப்பின்மேல் அமர்ந்துகொண்டாள் பாலா...ஒரு சுற்று சுற்றி வந்த AV, "எப்படி இப்படி ஒரு அமைதியான இடத்தை கண்டுபுடிச்சே... வெரி பியூட்டிபுல்" என்றான் ரசனையாக....
"இது என் பிரண்டோட பண்ணை, அவங்களோட பிரைவேட் ப்ராபர்ட்டி....முன்னாடியே இன்பார்ம் பண்ணிட்டேன் நாம வர்றோம்னு"....
பிரேக்பாஸ்ட் முடிச்சுட்டு, கொஞ்சம் ரெப்பிரெஷ் பண்ணிட்டு கிளம்பலாம்...டிரைவர் அண்ணா கிட்ட சொல்லி, டேபிள் செட் பண்ண சொல்லு...அப்படியே ஹாரி அண்ட் லிண்டாவையும் கீழே வரச்சொல்லு" என்றபடி தன் கேமரா பாக் மற்றும் உணவு பாக்கெட்களையும் எடுத்து வைத்தாள்........
ஹாரியும், லிண்டாவும் வருகையில், டேபிள் செட் பண்ணி இருக்க.....காரவனில் இருந்து ஜூஸ்ஸர் எடுத்து பிரெஷ் ஜூஸ் ஊற்றி வைத்தாள்.....குடிலுக்கு சென்று, அங்குள்ள அவனில் உணவை சூடுபண்ணி வைத்தாள்....மேலும் பிரட், ஜாம், சீஸ், பிளேட்ஸ் என லிண்டாவின் உதவியோடு எடுத்து வைத்தாள் பாலா.......
அனைவரும் அமர்ந்து இயற்கையை ரசித்தபடியே உணவு அருந்தினர்.....டிரைவர் அண்ணன்கள் வரப்பின்மேல் அமர்ந்திருக்க...தனது பிளேட்டுடன் நீரில் காலை நனைந்தபடி அமர்ந்துகொண்டாள்...........பாலா தனியாக இருப்பதை பார்த்த AV, அவளுக்கு ஜூஸ் கொடுக்கும் சாக்கில் அவளருகே அமர்ந்துகொண்டான்....ஹாரிக்கும் லிண்டாவுக்கும் தேவையான தனிமையை கொடுத்து.....
உணவை முடித்து, பாலா தன் கேமராவுடன் சென்றுவிட, ஹாரியும் லிண்டாவும் கைகோர்த்தபடி வாய்க்காலில் இறங்கி நடந்தனர்......... AV டிரைவர்களின் உதவியுடன் அனைத்தையும் பேக் பண்ணிவிட்டு.......பசுமையை ரசித்தபடி மெதுவாக அவ்விடத்தை சுற்றி வந்தான்............
சிறிது நேரத்தில், அனைவரும் கிளம்ப அவரவர் வண்டியில் ஏறினர்.... பாலா வண்டியை எடுக்க, "அடுத்தது எங்க பாலா" என்றான் .... கைத்தறியில் நெய்த பட்டுப்புடவை வாங்க போகிறோம் லிண்டா மிகவும் ஆசையாக கேட்டாள்...."பட்டுபுடவைக்கு பேமஸ் காஞ்சிபுரம் தானே, கோவையில் இல்லாத புடவை திண்டுக்கல்லில் கிடைக்குமா?? என்றான்.....
"கைத்தறி நெசவாளர்கள் படுகின்ற கஷ்டத்தை பற்றி கேள்விப்பட்டேன்..... அடுத்து வாங்கும் போது அவர்களிடம்தான் வாங்க வேண்டும் என்று நினைத்திருந்தேன்.... அதனால் இச்சமயத்தை யூஸ் பண்ணிக்கொண்டேன்" என்றாள் ....
கைத்தறி நெசவாளர்கள் கூட்டுறவு சங்கத்திற்கு புடவை வாங்கச்சென்றனர்....புடவைகளை எடுத்துப்போட, இரு பெண்கள் பாலாவிற்கும், லிண்டாவிற்கும் கட்டி காண்பித்தனர்...........
லிண்டா, ஹாரியிடம் நல்லாயிருக்கிறதா என கேட்டு, செலக்ட் செய்ய ஆரம்பித்தாள்..........பாலாவோ, தனக்குத்தானே செலக்ட் செய்ய ஆரம்பித்தாள்...இவளையே பார்த்துக்கொண்டிருந்த AVக்கு, சிவப்புநிற அகண்ட பார்டர் கொண்ட சேலை மிகவும் பிடித்தது.....பாலாவுக்கு, அச்சேலை பிடித்திருந்த போதும், ரொம்ப கிராண்ட்டாக உள்ளதால், வேறு பிங்க் சேலையை தேர்வு செய்தாள்....
மேலும், சில சேலையையும் தேர்ந்தெடுத்து முடிக்கையில் மணி 11.30 ..... இவள் பில்லிங் செக்க்ஷன்க்கு அனுப்பிவிட்டு லிண்டாவுக்கு ஹெல்ப் பண்ணச்சென்றாள்...
அவள் சென்றதும், AV அந்த சிகப்பு நிற சேலையை தனியாக பில் போட அனுப்பினான்...ஆண்கள் இருவருக்கும், வேஷ்டி, ரெடிமேட் ஷர்ட் எடுத்துமுடித்து... பில்லிங் பகுதிக்கு வருகையில் மணி 12....AV
அனைத்து சேலைகளுக்கும் பணம் செலுத்துவதாகக்கூற, அதனை மறுத்துவிட்டு, ஹாரியும், பாலாவும் தாங்கள் எடுத்ததற்கு பணத்தைச்செலுத்தி பெற்றுக்கொண்டனர்.....வேறுவழியில்லாமல், தன் பில்லை செலுத்திவிட்டு காருக்கு வந்தான்....
காரில் ஏறியதும், பாலா இரு புடவைகளை கொடுத்து, ஒன்றை ஜெஸி ஆண்ட்டிக்கும், மற்றதை பெரியம்மாவுக்கும் (பிரஜினின் அம்மா) கொடுக்க சொன்னாள்...
"ச்சே, நமக்கு இது தோன்றவில்லையே என சலித்துக்கொண்டு, " அங்கேயே சொல்லியிருக்கலாம்ல, எனக்கு நினைப்பே இல்லை, பில்லாவது நான் பே பண்ணியிருப்பேன் " என்றான் வருத்தமாக...
"அதனால என்ன, நீ வாங்குனாலும் நான் வாங்கினாலும் ஒரே சேலை தானே வாங்கப்போறோம்....... பணத்தை பார்க்காதேடா....அம்மா, அத்தை, பியா, பாட்டி என எல்லாருக்கும் வாங்கும் போது அவங்களுக்கு வாங்காம எப்படி விடமுடியும்.....என்கிட்டே இல்லைனா உன்கிட்ட வாங்கிக்கறேன்" என்றாள் பாலா சமாதானமாக.....
AV தான் வாங்கிய சிகப்பு புடவையை எடுத்துக்கொடுத்து, இதை நீ மீனாட்சி அம்மன் கோவிலுக்கு போகும் போது கட்டிக்கொள்...என்றான் ஆசையாக....
வேண்டாம் என பாலா தயங்க, "இப்பதானே சொன்னே, பணத்தை பார்க்காதே மனதை பாருனு...அப்பறம் என்ன தயக்கம்....நீ இதைத்தான் கட்டுறே" என்றான் முடிவாக அழுத்தத்துடன்.........
"சரி சரி மலை ஏறாதே, இதையே கட்டறேன்" ..... தன்னை கவனித்து ஆசையாக வாங்கி வைத்து தருகிறானே என மனதில் மகிழ்ச்சி வெள்ளத்தில் குளித்தாலும் வெளியே காட்டி கொள்ளவில்லை...
பாலா, லிண்டாவை அழைத்துக்கொண்டு, அருகில் இருந்த பெரிய துணிக்கடைக்கு சென்று, மேட்சிங் ரெடிமேட் ப்ளவுஸ் வாங்கி வந்தனர்...
தொடர்ந்து பயணம் செய்து, மதுரைக்கு அருகில் பசுமலையில் உள்ள தி கேட்வே ஹோட்டலை அடையும் போது மணி 1...ஹோட்டல் ஒரு சிறுமலையின் மேல் குட்டி ஜங்கிள்லுள் அமைந்திருந்தது....சுற்றிலும் ஓங்கி வளர்ந்த மரங்களும், அழகாக பராமரிக்கப்பட்ட புல்வெளியும், கூட்டமாக ஓடித்திரிந்த மயிலும், வான்கோழியும் , முயலும் .... இதனிடையே இருந்த கம்பீரமான பழங்காலக்கட்டிடமும்.....வாவ் சொல்லவைத்தது.... கூடவே தாஜ் ஹோட்டலின் விருந்தினர் கவனிப்பு என அசத்தலாக இருந்தது......
சிவா ஹாரிக்கும், லிண்டாவுக்கும் சேர்த்து சூட் ரூம் ஒன்றும், பாலாவுக்கும், ஆரனுக்கும் 2 ஸ்டாண்டர்ட் ரூமும் புக் பண்ணி இருந்தான்....
ரூம்பாயிடம் அவர்களது லக்கேஜ் கொடுத்து அனுப்பிவிட்டு, ரெப்பிரெஷ் பண்ணி நேராக ரெஸ்ட்ராரென்ட் வரும்படி சொல்லி.... இவர்கள் இருவரும் தனது ரூம் நோக்கிச்சென்றனர்... அருகருகே இருந்தது இவர்களது ரூம்........ரொம்ப இடவசதியுடன், கலைநயமான மரவேலைப்பாடுகளுடன், பளிச்சிடும் தூய்மையுடன் அழகாக இருந்தது........
அனைவரும், லஞ்ச் முடித்து வெளிவரும்போது மணி 2...சரியாக ஒரு மணி நேரம் கழித்து ரெடி ஆகி கோவிலுக்கு, கிளம்பலாம் என முடிவெடுக்கப்பட்டது......அனைவரும் ரெஸ்ட் எடுக்க சென்று விட...பாலா தன் கேமெராவோடு வெளியே வந்தாள்..........
அம்மலையின் மேலிருந்து பார்க்க, மதுரை சிட்டியின் வியூ அழகாக இருந்தது......பல கிளிக்குகளை பண்ணியவள், அறைக்குத் திரும்பி குளித்து முடித்து இன்டர்காமில் அழைத்து மற்றவர்களை ரெடியாகும் படி கூறினாள்..
இவள் ஸாரி கட்டி முடித்து, லையிட்டாக மேக்கப் செய்து....லிண்டாவிற்கும் அலங்காரம் செய்து விட்டாள்.....பெண்கள் இருவரும், பிரெஞ்சு பிளாட் ஜடை போட்டு தகுந்த மேட்சிங் ஆபரணங்கள் போட்டு ஜொலித்தனர்...... ஹாரிக்கு AV உதவி செய்ய, பட்டு வேஷ்டி சட்டை போட்டு கலக்கினான்.........,...
Last edited: