sweetsugi123
மண்டலாதிபதி
இனிய நட்புக்களே,
தாமதத்திற்கு மன்னிக்கவும், சொந்த வேலை காரணமாக என்னால் தொடர்ந்து அப்டேட் கொடுக்க முடியவில்லை.....
எனக்கு ஆதரவு அளித்த அனைவருக்கும் என் மனமார்ந்த நன்றி....
தொடர்ந்து உங்கள் ஆதரவை எதிர்நோக்கும்,
சுகி.
அத்தியாயம் 14
அடுத்த நாள் காலை மெதுவாக எழுந்து காம்ப்ளிமென்டரி பிரேக் பாஸ்ட் முடித்து தமிழ்நாட்டில், ஊட்டிக்கு அடுத்ததாக சுற்றுலாப் பிரியர்களைக் கவர்ந்து இழுக்கும் மலைகளின் அரசியான கொடைக்கானலுக்கு பயணித்தனர்....லிண்டாவும், ஹாரியும் இவர்களுடன் காரியிலேயே மலைப்பாதையை ரசித்தபடியும், புகைப்படம் எடுத்தபடியும் தங்கள் பயணத்தை அனுபவித்தனர்.....
மிதமான வெயிலும், இதமான சாரலுமாய் கூடவே மெல்லிசையை ஒலிக்கவிட்டு காரை ஓட்டி வந்த பாலா, பாதிதூரம் வந்ததும், தனது கேமராவை எடுத்துக்கொண்டு டிரைவர் சீட்டை AV யிடம் ஒப்படைத்தாள்........
தன் இடப்புறமும் திரும்பி, பல போட்டோக்களை கிளிக்கியவள், தங்கள் பயணத்தை வீடியோவும் எடுத்தாள்.....
சிறிது ஓய்வு எடுக்க வண்டியை நிறுத்தியவர்கள், கீழே இறங்கி மலைகளின் அழகை ரசிக்க.... AV காரிலேயே அமர்ந்துகொண்டான் இவர்களை பார்த்தபடியே...எதேச்சையாக AV புறம் திரும்பியவள், ஒரு கையில் கூலர்ஸும், மறுகையை நெற்றியில் வைத்தபடி AV அமர்த்திருத்தவிதம் பார்க்க மிகவும் ஸ்டைலாக, அழகாக, ஹாட்டாக இருந்தது...தன் கேமரா கண்ணால் ரசித்த பாலா, தடுமாற்றத்தை மறைத்தபடி அவனுக்கே தெரியாமல் அத்தோற்றத்தை பதிவு செய்தாள்....
View attachment 896
கொடைக்கானல், மேற்குத் தொடர்ச்சி மலைகளில் அமைந்துள்ளது. இதனால் இங்கு ஆண்டு முழுவதும் குளுமையான தட்ப வெட்பம் நிலவுகிறது. சங்ககாலத்தில் இதன் பெயர் கோடைமலை, இது கொங்குநாட்டின் ஒரு பகுதி ஆகும். பன்னிரெண்டு ஆண்டுகளுக்கு ஒரு முறை பூக்கும் குறிஞ்சி மலர் செடிகள் இங்கே பரவலாக வளர்கின்றன. அதனால் இம்மலையில் உள்ள முருகன் கோவிலுக்கு குறிஞ்சி ஆண்டவர் கோயில் என்றே பெயருண்டு... பாலா, இதுபோன்ற தகவல்களை பகிர்ந்தபடியும், தேவையான இடத்தில் நிறுத்தி கிளிக் செய்தபடியும் பயணத்தை தொடந்தனர்....
தாங்கள் பதிவு செய்த ஹோட்டலை அடைந்து, மதிய உணவை முடித்துக்கொண்டு, பெரிஜம் எரியை நோக்கி தங்கள் பயணத்தை தொடர்ந்தனர்.... கொடைக்கானல் வனத்துறையின் கட்டுப்பாட்டில் உள்ள பேரிஜம் ஏரி, பரப்பளவில் பெரியது. வனத்துறையின் அனுமதி பெற்று, இரவு தங்குவதற்கான அனுமதியும் பெற்று கொடைக்கானலில் இருந்து 27 கி.மீ.தொலைவில் உள்ள ஸ்டார் வடிவ ஏரியை அடைந்தனர்.....
பசும்புல்வெளியாக பரந்து காட்சியளிக்கும் ஏரியின் சுற்றுப் பகுதியில், ரோமத்திற்காக வளர்க்கப்படும் ஆடுகள் மேய்வதை காண கண்கொள்ளா காட்சியாக இருந்தது.....
இயற்கை அன்னையின் கொடையை ரசித்தபடியே, போட்டிங் பகுதிக்கு வந்தனர்...நிறைய புதுமணத்தம்பதியினரை காண நேர்ந்தது....லிண்டா - ஹாரி ஒரு போட்டிலும், AV - பாலா மற்றொரு போட்டிலும் சென்றனர்....
பசுமையான மலைகளுக்கு நடுவில் போட்டிங் செய்வது பரவசமாக இருந்தது. போட் செல்லும் வழியின் இருபுறமும் அடர்ந்த மரங்கள் அமேசான் காடுகளைப் போல மிரட்டலாக இருந்தன. வனத்தில் தாகத்திற்காக இளைப்பாறிய வனவிலங்குகளையும் காண முடிந்தது....பாலா, நிறைய முறை வந்திருந்தாலும், பார்க்க பார்க்க தெவிட்டாத இடம்தான் இந்த ஏரி....
View attachment 898
AV க்கு, ஏரியின் அழகை சொல்ல வார்த்தைகளே இல்லை என தோன்றியது....பாலா தன் முந்தைய ட்ரிப்பில் நடந்த, சுவாரஸ்யமான நிகழ்வையும், சிவாவை தான் படுத்திய பாட்டையும்....மேலும் அவ்விடத்தை பற்றி, தெரிந்த விசயங்களை பகிர்ந்தபடியும்.....புகைப்படங்களை எடுத்தபடியும், பசுமையான சூழலை ரசித்தபடியும் போட்டிங் பயணத்தை நிறைவு செய்தனர்....
தாமதத்திற்கு மன்னிக்கவும், சொந்த வேலை காரணமாக என்னால் தொடர்ந்து அப்டேட் கொடுக்க முடியவில்லை.....
எனக்கு ஆதரவு அளித்த அனைவருக்கும் என் மனமார்ந்த நன்றி....
தொடர்ந்து உங்கள் ஆதரவை எதிர்நோக்கும்,
சுகி.
அத்தியாயம் 14
அடுத்த நாள் காலை மெதுவாக எழுந்து காம்ப்ளிமென்டரி பிரேக் பாஸ்ட் முடித்து தமிழ்நாட்டில், ஊட்டிக்கு அடுத்ததாக சுற்றுலாப் பிரியர்களைக் கவர்ந்து இழுக்கும் மலைகளின் அரசியான கொடைக்கானலுக்கு பயணித்தனர்....லிண்டாவும், ஹாரியும் இவர்களுடன் காரியிலேயே மலைப்பாதையை ரசித்தபடியும், புகைப்படம் எடுத்தபடியும் தங்கள் பயணத்தை அனுபவித்தனர்.....
மிதமான வெயிலும், இதமான சாரலுமாய் கூடவே மெல்லிசையை ஒலிக்கவிட்டு காரை ஓட்டி வந்த பாலா, பாதிதூரம் வந்ததும், தனது கேமராவை எடுத்துக்கொண்டு டிரைவர் சீட்டை AV யிடம் ஒப்படைத்தாள்........
தன் இடப்புறமும் திரும்பி, பல போட்டோக்களை கிளிக்கியவள், தங்கள் பயணத்தை வீடியோவும் எடுத்தாள்.....
சிறிது ஓய்வு எடுக்க வண்டியை நிறுத்தியவர்கள், கீழே இறங்கி மலைகளின் அழகை ரசிக்க.... AV காரிலேயே அமர்ந்துகொண்டான் இவர்களை பார்த்தபடியே...எதேச்சையாக AV புறம் திரும்பியவள், ஒரு கையில் கூலர்ஸும், மறுகையை நெற்றியில் வைத்தபடி AV அமர்த்திருத்தவிதம் பார்க்க மிகவும் ஸ்டைலாக, அழகாக, ஹாட்டாக இருந்தது...தன் கேமரா கண்ணால் ரசித்த பாலா, தடுமாற்றத்தை மறைத்தபடி அவனுக்கே தெரியாமல் அத்தோற்றத்தை பதிவு செய்தாள்....
View attachment 896
கொடைக்கானல், மேற்குத் தொடர்ச்சி மலைகளில் அமைந்துள்ளது. இதனால் இங்கு ஆண்டு முழுவதும் குளுமையான தட்ப வெட்பம் நிலவுகிறது. சங்ககாலத்தில் இதன் பெயர் கோடைமலை, இது கொங்குநாட்டின் ஒரு பகுதி ஆகும். பன்னிரெண்டு ஆண்டுகளுக்கு ஒரு முறை பூக்கும் குறிஞ்சி மலர் செடிகள் இங்கே பரவலாக வளர்கின்றன. அதனால் இம்மலையில் உள்ள முருகன் கோவிலுக்கு குறிஞ்சி ஆண்டவர் கோயில் என்றே பெயருண்டு... பாலா, இதுபோன்ற தகவல்களை பகிர்ந்தபடியும், தேவையான இடத்தில் நிறுத்தி கிளிக் செய்தபடியும் பயணத்தை தொடந்தனர்....
தாங்கள் பதிவு செய்த ஹோட்டலை அடைந்து, மதிய உணவை முடித்துக்கொண்டு, பெரிஜம் எரியை நோக்கி தங்கள் பயணத்தை தொடர்ந்தனர்.... கொடைக்கானல் வனத்துறையின் கட்டுப்பாட்டில் உள்ள பேரிஜம் ஏரி, பரப்பளவில் பெரியது. வனத்துறையின் அனுமதி பெற்று, இரவு தங்குவதற்கான அனுமதியும் பெற்று கொடைக்கானலில் இருந்து 27 கி.மீ.தொலைவில் உள்ள ஸ்டார் வடிவ ஏரியை அடைந்தனர்.....
பசும்புல்வெளியாக பரந்து காட்சியளிக்கும் ஏரியின் சுற்றுப் பகுதியில், ரோமத்திற்காக வளர்க்கப்படும் ஆடுகள் மேய்வதை காண கண்கொள்ளா காட்சியாக இருந்தது.....
இயற்கை அன்னையின் கொடையை ரசித்தபடியே, போட்டிங் பகுதிக்கு வந்தனர்...நிறைய புதுமணத்தம்பதியினரை காண நேர்ந்தது....லிண்டா - ஹாரி ஒரு போட்டிலும், AV - பாலா மற்றொரு போட்டிலும் சென்றனர்....
பசுமையான மலைகளுக்கு நடுவில் போட்டிங் செய்வது பரவசமாக இருந்தது. போட் செல்லும் வழியின் இருபுறமும் அடர்ந்த மரங்கள் அமேசான் காடுகளைப் போல மிரட்டலாக இருந்தன. வனத்தில் தாகத்திற்காக இளைப்பாறிய வனவிலங்குகளையும் காண முடிந்தது....பாலா, நிறைய முறை வந்திருந்தாலும், பார்க்க பார்க்க தெவிட்டாத இடம்தான் இந்த ஏரி....
View attachment 898
AV க்கு, ஏரியின் அழகை சொல்ல வார்த்தைகளே இல்லை என தோன்றியது....பாலா தன் முந்தைய ட்ரிப்பில் நடந்த, சுவாரஸ்யமான நிகழ்வையும், சிவாவை தான் படுத்திய பாட்டையும்....மேலும் அவ்விடத்தை பற்றி, தெரிந்த விசயங்களை பகிர்ந்தபடியும்.....புகைப்படங்களை எடுத்தபடியும், பசுமையான சூழலை ரசித்தபடியும் போட்டிங் பயணத்தை நிறைவு செய்தனர்....
Last edited: