அத்தியாயம் – 1௦
ஜெயாவும் ருக்மணியும் தேர்வில் நல்ல மதிப்பெண் பெற்று அப்பிளிகேஷன் ஃபார்ம் வாங்க கல்லூரிக்கு சென்றனர்.. அவர்களின் மனதில் ஒரு தெளிவான முடிவுடன்..!
“ருக்மணி நீ என்ன குரூப் எடுக்க போகிறாய்..?” என்று எப்பொழுதும் போலவே எதார்த்தமாகக் கேட்டாள் ஜெயா.. “நானா..?” என்றவள் கேட்டதும், “ஆமா..” என்றாள் ஜெயா அழுத்தத்துடன்..
“நான் பி.காம் எடுக்கலாம் என்று இருக்கிறேன்..” என்றவள் தொடர்ந்து, “நீ என்ன எடுக்க போகிறாய் ஜெயா..?” என்று கேட்டாள் ருக்மணி..
“நான் பி.பி.ஏ. பண்ணலாம் என்று யோசிக்கிறேன்” என்றவள் தன்னுடைய முடிவைக் கூறினாள்..
இருவரும் ஒரு தெளிவான மனநிலையில் இருந்ததால் அவர்கள் எதைப்பற்றி யோசிக்கவில்லை.. அவர்கள் கல்லூரிக்கு சென்று அப்பிளிகேஷன் ஃபார்ம் வாங்கிக்கொண்டு வீடு வந்து சேர்ந்தனர்..
அதைப் பார்த்த அவர்களின் பெற்றோருக்கு கோபம் தான் முதலில் வந்தது.. இருவரும் ஒரே குரூப் சேர்ந்து படிப்பார்கள் என்று நினைத்த பெரியவர்கள் ஏமாந்துதான் போயினர்..
ஜெயாவின் வீட்டில்..
அப்பிளிகேஷன் ஃபார்ம் பார்த்த ஆனந்த் தன்னுடைய மனைவியிடம், “ஜெயா இப்படியெல்லாம் முடிவெடுக்க மாட்டாள் சுகந்தி..” என்றவர் சொல்ல அவரும் ஆமோதிப்பது தலையசைத்தார்..
“ருக்மணி வேறொரு காலேஜில் அப்பிளிகேஷன் வாங்கிட்டு வந்தாக சொல்லிட்டு இருந்தாள்.. என்னவோ எனக்கு இதெல்லாம் சரின்னு தோணல..” என்றவர் கணவனிடம் கூறினார்..
தங்களின் பிள்ளையை தனியாக காலேஜ் அனுப்பிவிட்டு நெஞ்சில் நெருப்பை கட்டியது போலவே இருக்கும் என்பதை சொல்லாமல் சொன்னார் சுகந்தி..
“ஒரு வேலை ருக்மணி வீட்டில் அவங்க அப்பா, அம்மா இருவரும் வேறு முடிவெடுத்திருக்கலாம் இல்லையா..?” என்று சுகந்தி சிந்தனையுடன் கூறினார்..
“சரி சுகந்தி நான் காலையில் ஜீவாகிட்ட பேசிட்டு சொல்றேன்..” என்றவர் சொல்லிவிட்டு படுத்து உறங்கிட, கணவனின் முகம் பார்த்த சுகந்தியும் தூங்க சென்றார்..
ருக்மணியின் வீட்டில்..
ருக்மணி தூங்கிய பிறகு அவளின் அப்ளிகேஷனைக்கொண்டு வந்து கணவனின் கையில் கொடுத்த ரேகா, “இங்கே பாருங்க உங்களோட பொண்ணு என்ன பண்ணி இருக்கிறான்னு..” என்றவர் சொல்ல,
“என்ன பண்ணிட்டு வந்திருக்கிற..” என்றவர் மனையிடம் இருந்து அப்ளிகேஷனை வாங்கி படித்துவிட்டு, “என்ன வேற கோர்ஸ்க்கு அப்ளே பண்ணிருக்கிற..” என்றவர் தொடர்ந்து,
“அமங்க ஜெயா வேறொரு காலேஜில் சேர அப்பிளிகேஷன் வாங்கிட்டு வந்தாக சொல்லிட்டு இருந்தாள்.. நீங்க என்னவென்று கொஞ்சம் விசாரிங்க..” என்றார் ரேகா..
தங்களுக்கு இருப்பதே ஒரு மகள் அவளை தனியாக அனுப்பிவிட்டு தவிப்புடன் அமர்ந்திருக்க என்னால் முடியாது என்பது போலவே இருந்தது ரேகாவின் பேச்சு..
அவரின் கவலை உணர்ந்து, “சரி நீ தூக்கு.. நான் காலையில் ஆனந்திடம் கேட்கிறேன்..” என்றவர் சொல்ல குழப்பத்துடன் படுத்துறங்க ஆரம்பித்தார் ரேகா..
மறுநாள் காலை பொழுது அழகாக விடிந்தது..
மறுநாள் காலையில் டீ கடைக்கு சென்ற ஜீவனைப் பார்த்த ஆனந்த், “ஜீவா உங்களோட கொஞ்சம் பேசணும்..” என்றவர் அவரோடு இணைந்து நடந்தார்..
‘அவர் எப்படி தொடங்குவது..?’ என்ற குழப்பத்தில் அமைதியாக நடந்துவர, “என்ன ஆனந்த் பிள்ளைகள் பற்றிய கவலையா..?” என்று கேட்டார் ஜீவா..
“ஆமா ஜீவா.. என்னோட பொண்ணு வேற கோர்ஸ் அப்ளே பண்ற.. ருக்மணி வேற கோர்ஸ் எடுத்திருப்பதாக சொன்னாள்.. அதுதான் உங்களிடம் பேசலாம் என்று வந்தேன்..” என்றவர் தயக்கத்துடன் கூறினார்..
அவரின் மனதிலோ, ‘இவங்க சொல்லித்தான் ருக்மணி வேற குரூப் எடுக்கிறாளோ..?’ என்ற குழப்பம் இருக்க, “இதே கேள்வியை நான் உங்களிடம் கேட்டால் என்ன பதில் சொல்வீங்க ஆனந்த்..?” என்று புன்னகையுடன் கேட்டார் ஜீவா..
அவரின் கேள்வியில் அதிர்ந்து நிமிர்ந்த ஆனந்த், “என்ன சொல்றீங்க அப்போ நீங்க ருக்மணியை வேற குரூப் எடுக்க சொல்லி சொல்லவில்லையா..?” என்றவர் குழப்பத்துடன் கேட்டார்..
“இல்ல ஆனந்த்.. அவள்தான் காலேஜ் போய் ஃபார்ம் வாங்கிட்டு வந்து வெச்சிருக்கிற.. எதுக்கும் உங்களிடம் கேட்கலாம் என்றுதான் நானும் இப்பொழுது இங்கே வந்தேன்..” என்றவர் சொல்ல ஆனந்த் குழப்பம் அதிகரித்தது..
இருவரின் குழப்பமும் அதிகரிக்க ஜெயாவையும், ருக்மணியும் நிற்க வைத்து கேள்வி கேட்க ஆரம்பித்தனர்.. அவர்கள் முதலில் கேட்ட கேள்வி, “ஏன் நீங்க இருவரும் வேற வேற கோர்ஸ் எடுக்கிறீங்க..?” என்றுதான்..
அவர்களின் கேள்வியில், ‘ஏன் நம்ம கிட்ட இப்படி கேட்கிறாங்க..’ என்று தோழியர் இருவரும் தங்களுக்குள் பார்வையை பரிமாறிக்கொண்டனர்..
அவர்களின் பார்வை தங்களின் மீது கேள்வியாக படிவத்தை உணர்ந்த ஜெயா, “அப்பா என்னோட விருப்பத்தை நான் செய்கிறேன்..” என்றாள்..
“விருப்பம் எல்லாம் சரிம்மா.. அதுக்கு நாங்கள் தடை சொல்லல.. ஆனால் ஏன் இந்த முடிவு சொல்லுங்க..” என்று ஆனந்த் கேட்டதும் இருவரும் அமைதியாக நின்றனர்..
அங்கே நடப்பதை எல்லாம் கண்வைத்து கொண்டே சேரில் அமர்ந்து தன்னுடைய வீட்டு பாடத்தை எழுதிக் கொண்டிருந்தான் கண்ணன்..
“ஜெயா சொல்வது சரிதான்ப்பா எனக்கு இந்த கோர்ஸ் பிடிச்சிருக்கு..” என்றாள் ருக்மணி..
“அதெல்லாம் சரிம்மா.. ஏன் நீங்க இருவரும் ஒரே கோர்ஸ் செலக்ட் பண்ணல..? அதுக்கு முதலில் ரிஸைன் சொல்லுங்க.. சொன்ன பதிலையே திரும்ப திரும்ப சொல்ல கூடாது..” என்றவர் கண்டிப்புடன் கூறினார் ஜீவன்..
மற்ற இருவரும் அமைதியாக இருக்க, “அப்பா இன்னைக்கு நீங்க சொல்றீங்க என்று நானும் இவளும் ஒரே கோர்ஸ் எடுத்தால் நாளைக்கு எங்களோட நட்புதான் பாதிக்கப்படும்..” என்று ஜெயா பெரியவர்களின் முகம் பார்த்தாள்..
“அது எப்படிம்மா பாதிக்கப்படும்..?” என்று புரியாமல் கேட்டார் ஆனந்த்..
அவரின் கேள்வி ருக்மணியின் முகத்தில் புன்னகையை வரவழைக்க, “அப்பா நாங்க இருவரும் சிறு வயதில் இருந்தே தோழிகள்..” என்றவள் நிறுத்துவிட பெரியவர்களின் முகம் பார்த்தாள்..
அவர்களோ, ‘ஆமா.. அதற்கும் இதற்கும் என்ன சம்மந்தம்..’ என்ற ரீதியில் கேள்வியுடன் அவர்களையே பார்த்திட ருக்மணி தொடர்ந்தாள்..
“இப்போ நீங்க சொல்ற மாதிரி நாங்க ஒரே குரூப் எடுத்து படிக்கிறோம் என்றால் என்னோட மார்க் குறைந்தால் ஜெயாவோட சேர்ந்துதான் நீ கெட்டு போய்ட்டு இருக்கிற என்று நீங்க ருக்மணியை திட்டுவீங்க..” என்றவள் சொல்ல,
“என்னோட மார்க் குறைந்தால் ருக்மணியுடன் சேர்ந்துதான் என்னோட மார்க் குறையுது என்று நீங்க சொல்வீங்க.. அப்போ அங்கே பிரச்சனை ஆரம்பிக்கும்.. எங்களோட நட்பும் அதோடு முடிந்துவிடும்..” என்றவள் புன்னகையுடன் பேச்சிற்கு முற்றுபுள்ளி வைத்தாள்..
“இது எல்லாம் ஒரு காரணமா ஜெயா..” என்று சுகந்தி மகளை அதட்டிட, “அது மட்டும் காரணம் இல்லம்மா..” என்றவள் வேகமாக பதில் கொடுக்க பெரியவர்களின் குழப்பம் அதிகரித்தது..
“வேற என்ன காரணம் இருக்கிறது அதையும் சொல்லுங்க..” என்று கோபம் தலைகேற கேட்டார் ஆனந்த்..
“இப்போ இவளோட நட்பிற்காக நான் ஒரே குரூப் எடுத்து பின்னால் அது எனக்கு பிடிக்காமல் போனால் இவளால்தான் எல்லாம் என்ற எண்ணம் வரும்..” என்றவள் சொல்லிகொண்டிருக்க இடையில் புகுந்தாள் ருக்மணி..
“அதே எங்களோட மனசுக்கு பிடித்த குரூப் எடுத்து பின்நாளில் படிக்க முடியாமல் போனால் கூட அது பெரிதாக தெரியாது.. காரணம் நம்ம எடுத்த முடிவு சரியில்ல என்று தோன்றுமே தவிர அவள் மீது எனக்கோ என்மீது அவளுக்கோ வெறுப்பு வராது இல்ல..” என்று புரிதலோடு பதில் கொடுத்தாள்..
அவர்களின் பேச்சில் கடைசியாக தோற்றுப்போனது என்னவோ பெரியவர்கள் தான்.. ‘இந்த அளவிற்கு யோசிக்கிறாங்களே..’ என்று ரேகா வியப்புடன் மகளைப் பார்த்தார்..
‘ஒரு வழியில் இவங்களோட முடிவும் சரியாகத்தான் இருக்கு.. சிறு வயதில் இருந்தே பாகுபாடு பார்க்காமல் இனிமேல் இப்படி பேசினால் நல்ல இருக்குமா.. என்னோட பொண்ணு எப்பவும் சரியான முடிவெடுப்பாள்..’ என்று நினைத்தார் சுகந்தி..
அவர்களின் தெளிவான பேச்சில் இருந்த உண்மையை புரிந்துகொண்ட ஜீவன், “இந்த வழியில் யோசிக்கும் பொழுது பிராக்டிகலாக சரிதான்..” என்றவர் புன்னகைத்தார்.. தங்களின் பிள்ளைகள் எடுத்த முடிவு சரி என்று அவர்கள் உறுதியாக நம்பினார்கள்..
ஜெயாவும் ருக்மணியும் தேர்வில் நல்ல மதிப்பெண் பெற்று அப்பிளிகேஷன் ஃபார்ம் வாங்க கல்லூரிக்கு சென்றனர்.. அவர்களின் மனதில் ஒரு தெளிவான முடிவுடன்..!
“ருக்மணி நீ என்ன குரூப் எடுக்க போகிறாய்..?” என்று எப்பொழுதும் போலவே எதார்த்தமாகக் கேட்டாள் ஜெயா.. “நானா..?” என்றவள் கேட்டதும், “ஆமா..” என்றாள் ஜெயா அழுத்தத்துடன்..
“நான் பி.காம் எடுக்கலாம் என்று இருக்கிறேன்..” என்றவள் தொடர்ந்து, “நீ என்ன எடுக்க போகிறாய் ஜெயா..?” என்று கேட்டாள் ருக்மணி..
“நான் பி.பி.ஏ. பண்ணலாம் என்று யோசிக்கிறேன்” என்றவள் தன்னுடைய முடிவைக் கூறினாள்..
இருவரும் ஒரு தெளிவான மனநிலையில் இருந்ததால் அவர்கள் எதைப்பற்றி யோசிக்கவில்லை.. அவர்கள் கல்லூரிக்கு சென்று அப்பிளிகேஷன் ஃபார்ம் வாங்கிக்கொண்டு வீடு வந்து சேர்ந்தனர்..
அதைப் பார்த்த அவர்களின் பெற்றோருக்கு கோபம் தான் முதலில் வந்தது.. இருவரும் ஒரே குரூப் சேர்ந்து படிப்பார்கள் என்று நினைத்த பெரியவர்கள் ஏமாந்துதான் போயினர்..
ஜெயாவின் வீட்டில்..
அப்பிளிகேஷன் ஃபார்ம் பார்த்த ஆனந்த் தன்னுடைய மனைவியிடம், “ஜெயா இப்படியெல்லாம் முடிவெடுக்க மாட்டாள் சுகந்தி..” என்றவர் சொல்ல அவரும் ஆமோதிப்பது தலையசைத்தார்..
“ருக்மணி வேறொரு காலேஜில் அப்பிளிகேஷன் வாங்கிட்டு வந்தாக சொல்லிட்டு இருந்தாள்.. என்னவோ எனக்கு இதெல்லாம் சரின்னு தோணல..” என்றவர் கணவனிடம் கூறினார்..
தங்களின் பிள்ளையை தனியாக காலேஜ் அனுப்பிவிட்டு நெஞ்சில் நெருப்பை கட்டியது போலவே இருக்கும் என்பதை சொல்லாமல் சொன்னார் சுகந்தி..
“ஒரு வேலை ருக்மணி வீட்டில் அவங்க அப்பா, அம்மா இருவரும் வேறு முடிவெடுத்திருக்கலாம் இல்லையா..?” என்று சுகந்தி சிந்தனையுடன் கூறினார்..
“சரி சுகந்தி நான் காலையில் ஜீவாகிட்ட பேசிட்டு சொல்றேன்..” என்றவர் சொல்லிவிட்டு படுத்து உறங்கிட, கணவனின் முகம் பார்த்த சுகந்தியும் தூங்க சென்றார்..
ருக்மணியின் வீட்டில்..
ருக்மணி தூங்கிய பிறகு அவளின் அப்ளிகேஷனைக்கொண்டு வந்து கணவனின் கையில் கொடுத்த ரேகா, “இங்கே பாருங்க உங்களோட பொண்ணு என்ன பண்ணி இருக்கிறான்னு..” என்றவர் சொல்ல,
“என்ன பண்ணிட்டு வந்திருக்கிற..” என்றவர் மனையிடம் இருந்து அப்ளிகேஷனை வாங்கி படித்துவிட்டு, “என்ன வேற கோர்ஸ்க்கு அப்ளே பண்ணிருக்கிற..” என்றவர் தொடர்ந்து,
“அமங்க ஜெயா வேறொரு காலேஜில் சேர அப்பிளிகேஷன் வாங்கிட்டு வந்தாக சொல்லிட்டு இருந்தாள்.. நீங்க என்னவென்று கொஞ்சம் விசாரிங்க..” என்றார் ரேகா..
தங்களுக்கு இருப்பதே ஒரு மகள் அவளை தனியாக அனுப்பிவிட்டு தவிப்புடன் அமர்ந்திருக்க என்னால் முடியாது என்பது போலவே இருந்தது ரேகாவின் பேச்சு..
அவரின் கவலை உணர்ந்து, “சரி நீ தூக்கு.. நான் காலையில் ஆனந்திடம் கேட்கிறேன்..” என்றவர் சொல்ல குழப்பத்துடன் படுத்துறங்க ஆரம்பித்தார் ரேகா..
மறுநாள் காலை பொழுது அழகாக விடிந்தது..
மறுநாள் காலையில் டீ கடைக்கு சென்ற ஜீவனைப் பார்த்த ஆனந்த், “ஜீவா உங்களோட கொஞ்சம் பேசணும்..” என்றவர் அவரோடு இணைந்து நடந்தார்..
‘அவர் எப்படி தொடங்குவது..?’ என்ற குழப்பத்தில் அமைதியாக நடந்துவர, “என்ன ஆனந்த் பிள்ளைகள் பற்றிய கவலையா..?” என்று கேட்டார் ஜீவா..
“ஆமா ஜீவா.. என்னோட பொண்ணு வேற கோர்ஸ் அப்ளே பண்ற.. ருக்மணி வேற கோர்ஸ் எடுத்திருப்பதாக சொன்னாள்.. அதுதான் உங்களிடம் பேசலாம் என்று வந்தேன்..” என்றவர் தயக்கத்துடன் கூறினார்..
அவரின் மனதிலோ, ‘இவங்க சொல்லித்தான் ருக்மணி வேற குரூப் எடுக்கிறாளோ..?’ என்ற குழப்பம் இருக்க, “இதே கேள்வியை நான் உங்களிடம் கேட்டால் என்ன பதில் சொல்வீங்க ஆனந்த்..?” என்று புன்னகையுடன் கேட்டார் ஜீவா..
அவரின் கேள்வியில் அதிர்ந்து நிமிர்ந்த ஆனந்த், “என்ன சொல்றீங்க அப்போ நீங்க ருக்மணியை வேற குரூப் எடுக்க சொல்லி சொல்லவில்லையா..?” என்றவர் குழப்பத்துடன் கேட்டார்..
“இல்ல ஆனந்த்.. அவள்தான் காலேஜ் போய் ஃபார்ம் வாங்கிட்டு வந்து வெச்சிருக்கிற.. எதுக்கும் உங்களிடம் கேட்கலாம் என்றுதான் நானும் இப்பொழுது இங்கே வந்தேன்..” என்றவர் சொல்ல ஆனந்த் குழப்பம் அதிகரித்தது..
இருவரின் குழப்பமும் அதிகரிக்க ஜெயாவையும், ருக்மணியும் நிற்க வைத்து கேள்வி கேட்க ஆரம்பித்தனர்.. அவர்கள் முதலில் கேட்ட கேள்வி, “ஏன் நீங்க இருவரும் வேற வேற கோர்ஸ் எடுக்கிறீங்க..?” என்றுதான்..
அவர்களின் கேள்வியில், ‘ஏன் நம்ம கிட்ட இப்படி கேட்கிறாங்க..’ என்று தோழியர் இருவரும் தங்களுக்குள் பார்வையை பரிமாறிக்கொண்டனர்..
அவர்களின் பார்வை தங்களின் மீது கேள்வியாக படிவத்தை உணர்ந்த ஜெயா, “அப்பா என்னோட விருப்பத்தை நான் செய்கிறேன்..” என்றாள்..
“விருப்பம் எல்லாம் சரிம்மா.. அதுக்கு நாங்கள் தடை சொல்லல.. ஆனால் ஏன் இந்த முடிவு சொல்லுங்க..” என்று ஆனந்த் கேட்டதும் இருவரும் அமைதியாக நின்றனர்..
அங்கே நடப்பதை எல்லாம் கண்வைத்து கொண்டே சேரில் அமர்ந்து தன்னுடைய வீட்டு பாடத்தை எழுதிக் கொண்டிருந்தான் கண்ணன்..
“ஜெயா சொல்வது சரிதான்ப்பா எனக்கு இந்த கோர்ஸ் பிடிச்சிருக்கு..” என்றாள் ருக்மணி..
“அதெல்லாம் சரிம்மா.. ஏன் நீங்க இருவரும் ஒரே கோர்ஸ் செலக்ட் பண்ணல..? அதுக்கு முதலில் ரிஸைன் சொல்லுங்க.. சொன்ன பதிலையே திரும்ப திரும்ப சொல்ல கூடாது..” என்றவர் கண்டிப்புடன் கூறினார் ஜீவன்..
மற்ற இருவரும் அமைதியாக இருக்க, “அப்பா இன்னைக்கு நீங்க சொல்றீங்க என்று நானும் இவளும் ஒரே கோர்ஸ் எடுத்தால் நாளைக்கு எங்களோட நட்புதான் பாதிக்கப்படும்..” என்று ஜெயா பெரியவர்களின் முகம் பார்த்தாள்..
“அது எப்படிம்மா பாதிக்கப்படும்..?” என்று புரியாமல் கேட்டார் ஆனந்த்..
அவரின் கேள்வி ருக்மணியின் முகத்தில் புன்னகையை வரவழைக்க, “அப்பா நாங்க இருவரும் சிறு வயதில் இருந்தே தோழிகள்..” என்றவள் நிறுத்துவிட பெரியவர்களின் முகம் பார்த்தாள்..
அவர்களோ, ‘ஆமா.. அதற்கும் இதற்கும் என்ன சம்மந்தம்..’ என்ற ரீதியில் கேள்வியுடன் அவர்களையே பார்த்திட ருக்மணி தொடர்ந்தாள்..
“இப்போ நீங்க சொல்ற மாதிரி நாங்க ஒரே குரூப் எடுத்து படிக்கிறோம் என்றால் என்னோட மார்க் குறைந்தால் ஜெயாவோட சேர்ந்துதான் நீ கெட்டு போய்ட்டு இருக்கிற என்று நீங்க ருக்மணியை திட்டுவீங்க..” என்றவள் சொல்ல,
“என்னோட மார்க் குறைந்தால் ருக்மணியுடன் சேர்ந்துதான் என்னோட மார்க் குறையுது என்று நீங்க சொல்வீங்க.. அப்போ அங்கே பிரச்சனை ஆரம்பிக்கும்.. எங்களோட நட்பும் அதோடு முடிந்துவிடும்..” என்றவள் புன்னகையுடன் பேச்சிற்கு முற்றுபுள்ளி வைத்தாள்..
“இது எல்லாம் ஒரு காரணமா ஜெயா..” என்று சுகந்தி மகளை அதட்டிட, “அது மட்டும் காரணம் இல்லம்மா..” என்றவள் வேகமாக பதில் கொடுக்க பெரியவர்களின் குழப்பம் அதிகரித்தது..
“வேற என்ன காரணம் இருக்கிறது அதையும் சொல்லுங்க..” என்று கோபம் தலைகேற கேட்டார் ஆனந்த்..
“இப்போ இவளோட நட்பிற்காக நான் ஒரே குரூப் எடுத்து பின்னால் அது எனக்கு பிடிக்காமல் போனால் இவளால்தான் எல்லாம் என்ற எண்ணம் வரும்..” என்றவள் சொல்லிகொண்டிருக்க இடையில் புகுந்தாள் ருக்மணி..
“அதே எங்களோட மனசுக்கு பிடித்த குரூப் எடுத்து பின்நாளில் படிக்க முடியாமல் போனால் கூட அது பெரிதாக தெரியாது.. காரணம் நம்ம எடுத்த முடிவு சரியில்ல என்று தோன்றுமே தவிர அவள் மீது எனக்கோ என்மீது அவளுக்கோ வெறுப்பு வராது இல்ல..” என்று புரிதலோடு பதில் கொடுத்தாள்..
அவர்களின் பேச்சில் கடைசியாக தோற்றுப்போனது என்னவோ பெரியவர்கள் தான்.. ‘இந்த அளவிற்கு யோசிக்கிறாங்களே..’ என்று ரேகா வியப்புடன் மகளைப் பார்த்தார்..
‘ஒரு வழியில் இவங்களோட முடிவும் சரியாகத்தான் இருக்கு.. சிறு வயதில் இருந்தே பாகுபாடு பார்க்காமல் இனிமேல் இப்படி பேசினால் நல்ல இருக்குமா.. என்னோட பொண்ணு எப்பவும் சரியான முடிவெடுப்பாள்..’ என்று நினைத்தார் சுகந்தி..
அவர்களின் தெளிவான பேச்சில் இருந்த உண்மையை புரிந்துகொண்ட ஜீவன், “இந்த வழியில் யோசிக்கும் பொழுது பிராக்டிகலாக சரிதான்..” என்றவர் புன்னகைத்தார்.. தங்களின் பிள்ளைகள் எடுத்த முடிவு சரி என்று அவர்கள் உறுதியாக நம்பினார்கள்..