• The opinions expressed within the content are solely the author’s and do not reflect the opinions and beliefs of the website or its affiliates.

Tamilarasiyin Kathirazhaki! - 10

Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள், mspublications1@gmail.com என்ற மின்னஞ்சலிலோ சைட் அட்மினின் (smteam) தனி செய்தியிலோ தொடர்பு கொள்ளவும்.தளத்தில் கதைகளை பதிவது எப்படி- விளக்கம்

sandhiya sri

முதலமைச்சர்
SM Exclusive
Joined
Jan 22, 2018
Messages
11,370
Reaction score
33,071
Location
Tirupur
அத்தியாயம் – 1௦

ஜெயாவும் ருக்மணியும் தேர்வில் நல்ல மதிப்பெண் பெற்று அப்பிளிகேஷன் ஃபார்ம் வாங்க கல்லூரிக்கு சென்றனர்.. அவர்களின் மனதில் ஒரு தெளிவான முடிவுடன்..!

“ருக்மணி நீ என்ன குரூப் எடுக்க போகிறாய்..?” என்று எப்பொழுதும் போலவே எதார்த்தமாகக் கேட்டாள் ஜெயா.. “நானா..?” என்றவள் கேட்டதும், “ஆமா..” என்றாள் ஜெயா அழுத்தத்துடன்..

“நான் பி.காம் எடுக்கலாம் என்று இருக்கிறேன்..” என்றவள் தொடர்ந்து, “நீ என்ன எடுக்க போகிறாய் ஜெயா..?” என்று கேட்டாள் ருக்மணி..

“நான் பி.பி.ஏ. பண்ணலாம் என்று யோசிக்கிறேன்” என்றவள் தன்னுடைய முடிவைக் கூறினாள்..

இருவரும் ஒரு தெளிவான மனநிலையில் இருந்ததால் அவர்கள் எதைப்பற்றி யோசிக்கவில்லை.. அவர்கள் கல்லூரிக்கு சென்று அப்பிளிகேஷன் ஃபார்ம் வாங்கிக்கொண்டு வீடு வந்து சேர்ந்தனர்..

அதைப் பார்த்த அவர்களின் பெற்றோருக்கு கோபம் தான் முதலில் வந்தது.. இருவரும் ஒரே குரூப் சேர்ந்து படிப்பார்கள் என்று நினைத்த பெரியவர்கள் ஏமாந்துதான் போயினர்..

ஜெயாவின் வீட்டில்..

அப்பிளிகேஷன் ஃபார்ம் பார்த்த ஆனந்த் தன்னுடைய மனைவியிடம், “ஜெயா இப்படியெல்லாம் முடிவெடுக்க மாட்டாள் சுகந்தி..” என்றவர் சொல்ல அவரும் ஆமோதிப்பது தலையசைத்தார்..

“ருக்மணி வேறொரு காலேஜில் அப்பிளிகேஷன் வாங்கிட்டு வந்தாக சொல்லிட்டு இருந்தாள்.. என்னவோ எனக்கு இதெல்லாம் சரின்னு தோணல..” என்றவர் கணவனிடம் கூறினார்..

தங்களின் பிள்ளையை தனியாக காலேஜ் அனுப்பிவிட்டு நெஞ்சில் நெருப்பை கட்டியது போலவே இருக்கும் என்பதை சொல்லாமல் சொன்னார் சுகந்தி..

“ஒரு வேலை ருக்மணி வீட்டில் அவங்க அப்பா, அம்மா இருவரும் வேறு முடிவெடுத்திருக்கலாம் இல்லையா..?” என்று சுகந்தி சிந்தனையுடன் கூறினார்..

“சரி சுகந்தி நான் காலையில் ஜீவாகிட்ட பேசிட்டு சொல்றேன்..” என்றவர் சொல்லிவிட்டு படுத்து உறங்கிட, கணவனின் முகம் பார்த்த சுகந்தியும் தூங்க சென்றார்..

ருக்மணியின் வீட்டில்..

ருக்மணி தூங்கிய பிறகு அவளின் அப்ளிகேஷனைக்கொண்டு வந்து கணவனின் கையில் கொடுத்த ரேகா, “இங்கே பாருங்க உங்களோட பொண்ணு என்ன பண்ணி இருக்கிறான்னு..” என்றவர் சொல்ல,

“என்ன பண்ணிட்டு வந்திருக்கிற..” என்றவர் மனையிடம் இருந்து அப்ளிகேஷனை வாங்கி படித்துவிட்டு, “என்ன வேற கோர்ஸ்க்கு அப்ளே பண்ணிருக்கிற..” என்றவர் தொடர்ந்து,

“அமங்க ஜெயா வேறொரு காலேஜில் சேர அப்பிளிகேஷன் வாங்கிட்டு வந்தாக சொல்லிட்டு இருந்தாள்.. நீங்க என்னவென்று கொஞ்சம் விசாரிங்க..” என்றார் ரேகா..

தங்களுக்கு இருப்பதே ஒரு மகள் அவளை தனியாக அனுப்பிவிட்டு தவிப்புடன் அமர்ந்திருக்க என்னால் முடியாது என்பது போலவே இருந்தது ரேகாவின் பேச்சு..

அவரின் கவலை உணர்ந்து, “சரி நீ தூக்கு.. நான் காலையில் ஆனந்திடம் கேட்கிறேன்..” என்றவர் சொல்ல குழப்பத்துடன் படுத்துறங்க ஆரம்பித்தார் ரேகா..

மறுநாள் காலை பொழுது அழகாக விடிந்தது..

மறுநாள் காலையில் டீ கடைக்கு சென்ற ஜீவனைப் பார்த்த ஆனந்த், “ஜீவா உங்களோட கொஞ்சம் பேசணும்..” என்றவர் அவரோடு இணைந்து நடந்தார்..

‘அவர் எப்படி தொடங்குவது..?’ என்ற குழப்பத்தில் அமைதியாக நடந்துவர, “என்ன ஆனந்த் பிள்ளைகள் பற்றிய கவலையா..?” என்று கேட்டார் ஜீவா..

“ஆமா ஜீவா.. என்னோட பொண்ணு வேற கோர்ஸ் அப்ளே பண்ற.. ருக்மணி வேற கோர்ஸ் எடுத்திருப்பதாக சொன்னாள்.. அதுதான் உங்களிடம் பேசலாம் என்று வந்தேன்..” என்றவர் தயக்கத்துடன் கூறினார்..

அவரின் மனதிலோ, ‘இவங்க சொல்லித்தான் ருக்மணி வேற குரூப் எடுக்கிறாளோ..?’ என்ற குழப்பம் இருக்க, “இதே கேள்வியை நான் உங்களிடம் கேட்டால் என்ன பதில் சொல்வீங்க ஆனந்த்..?” என்று புன்னகையுடன் கேட்டார் ஜீவா..

அவரின் கேள்வியில் அதிர்ந்து நிமிர்ந்த ஆனந்த், “என்ன சொல்றீங்க அப்போ நீங்க ருக்மணியை வேற குரூப் எடுக்க சொல்லி சொல்லவில்லையா..?” என்றவர் குழப்பத்துடன் கேட்டார்..

“இல்ல ஆனந்த்.. அவள்தான் காலேஜ் போய் ஃபார்ம் வாங்கிட்டு வந்து வெச்சிருக்கிற.. எதுக்கும் உங்களிடம் கேட்கலாம் என்றுதான் நானும் இப்பொழுது இங்கே வந்தேன்..” என்றவர் சொல்ல ஆனந்த் குழப்பம் அதிகரித்தது..

இருவரின் குழப்பமும் அதிகரிக்க ஜெயாவையும், ருக்மணியும் நிற்க வைத்து கேள்வி கேட்க ஆரம்பித்தனர்.. அவர்கள் முதலில் கேட்ட கேள்வி, “ஏன் நீங்க இருவரும் வேற வேற கோர்ஸ் எடுக்கிறீங்க..?” என்றுதான்..

அவர்களின் கேள்வியில், ‘ஏன் நம்ம கிட்ட இப்படி கேட்கிறாங்க..’ என்று தோழியர் இருவரும் தங்களுக்குள் பார்வையை பரிமாறிக்கொண்டனர்..

அவர்களின் பார்வை தங்களின் மீது கேள்வியாக படிவத்தை உணர்ந்த ஜெயா, “அப்பா என்னோட விருப்பத்தை நான் செய்கிறேன்..” என்றாள்..

“விருப்பம் எல்லாம் சரிம்மா.. அதுக்கு நாங்கள் தடை சொல்லல.. ஆனால் ஏன் இந்த முடிவு சொல்லுங்க..” என்று ஆனந்த் கேட்டதும் இருவரும் அமைதியாக நின்றனர்..

அங்கே நடப்பதை எல்லாம் கண்வைத்து கொண்டே சேரில் அமர்ந்து தன்னுடைய வீட்டு பாடத்தை எழுதிக் கொண்டிருந்தான் கண்ணன்..

“ஜெயா சொல்வது சரிதான்ப்பா எனக்கு இந்த கோர்ஸ் பிடிச்சிருக்கு..” என்றாள் ருக்மணி..

“அதெல்லாம் சரிம்மா.. ஏன் நீங்க இருவரும் ஒரே கோர்ஸ் செலக்ட் பண்ணல..? அதுக்கு முதலில் ரிஸைன் சொல்லுங்க.. சொன்ன பதிலையே திரும்ப திரும்ப சொல்ல கூடாது..” என்றவர் கண்டிப்புடன் கூறினார் ஜீவன்..

மற்ற இருவரும் அமைதியாக இருக்க, “அப்பா இன்னைக்கு நீங்க சொல்றீங்க என்று நானும் இவளும் ஒரே கோர்ஸ் எடுத்தால் நாளைக்கு எங்களோட நட்புதான் பாதிக்கப்படும்..” என்று ஜெயா பெரியவர்களின் முகம் பார்த்தாள்..

“அது எப்படிம்மா பாதிக்கப்படும்..?” என்று புரியாமல் கேட்டார் ஆனந்த்..

அவரின் கேள்வி ருக்மணியின் முகத்தில் புன்னகையை வரவழைக்க, “அப்பா நாங்க இருவரும் சிறு வயதில் இருந்தே தோழிகள்..” என்றவள் நிறுத்துவிட பெரியவர்களின் முகம் பார்த்தாள்..

அவர்களோ, ‘ஆமா.. அதற்கும் இதற்கும் என்ன சம்மந்தம்..’ என்ற ரீதியில் கேள்வியுடன் அவர்களையே பார்த்திட ருக்மணி தொடர்ந்தாள்..

“இப்போ நீங்க சொல்ற மாதிரி நாங்க ஒரே குரூப் எடுத்து படிக்கிறோம் என்றால் என்னோட மார்க் குறைந்தால் ஜெயாவோட சேர்ந்துதான் நீ கெட்டு போய்ட்டு இருக்கிற என்று நீங்க ருக்மணியை திட்டுவீங்க..” என்றவள் சொல்ல,

“என்னோட மார்க் குறைந்தால் ருக்மணியுடன் சேர்ந்துதான் என்னோட மார்க் குறையுது என்று நீங்க சொல்வீங்க.. அப்போ அங்கே பிரச்சனை ஆரம்பிக்கும்.. எங்களோட நட்பும் அதோடு முடிந்துவிடும்..” என்றவள் புன்னகையுடன் பேச்சிற்கு முற்றுபுள்ளி வைத்தாள்..

“இது எல்லாம் ஒரு காரணமா ஜெயா..” என்று சுகந்தி மகளை அதட்டிட, “அது மட்டும் காரணம் இல்லம்மா..” என்றவள் வேகமாக பதில் கொடுக்க பெரியவர்களின் குழப்பம் அதிகரித்தது..

“வேற என்ன காரணம் இருக்கிறது அதையும் சொல்லுங்க..” என்று கோபம் தலைகேற கேட்டார் ஆனந்த்..

“இப்போ இவளோட நட்பிற்காக நான் ஒரே குரூப் எடுத்து பின்னால் அது எனக்கு பிடிக்காமல் போனால் இவளால்தான் எல்லாம் என்ற எண்ணம் வரும்..” என்றவள் சொல்லிகொண்டிருக்க இடையில் புகுந்தாள் ருக்மணி..

“அதே எங்களோட மனசுக்கு பிடித்த குரூப் எடுத்து பின்நாளில் படிக்க முடியாமல் போனால் கூட அது பெரிதாக தெரியாது.. காரணம் நம்ம எடுத்த முடிவு சரியில்ல என்று தோன்றுமே தவிர அவள் மீது எனக்கோ என்மீது அவளுக்கோ வெறுப்பு வராது இல்ல..” என்று புரிதலோடு பதில் கொடுத்தாள்..

அவர்களின் பேச்சில் கடைசியாக தோற்றுப்போனது என்னவோ பெரியவர்கள் தான்.. ‘இந்த அளவிற்கு யோசிக்கிறாங்களே..’ என்று ரேகா வியப்புடன் மகளைப் பார்த்தார்..

‘ஒரு வழியில் இவங்களோட முடிவும் சரியாகத்தான் இருக்கு.. சிறு வயதில் இருந்தே பாகுபாடு பார்க்காமல் இனிமேல் இப்படி பேசினால் நல்ல இருக்குமா.. என்னோட பொண்ணு எப்பவும் சரியான முடிவெடுப்பாள்..’ என்று நினைத்தார் சுகந்தி..

அவர்களின் தெளிவான பேச்சில் இருந்த உண்மையை புரிந்துகொண்ட ஜீவன், “இந்த வழியில் யோசிக்கும் பொழுது பிராக்டிகலாக சரிதான்..” என்றவர் புன்னகைத்தார்.. தங்களின் பிள்ளைகள் எடுத்த முடிவு சரி என்று அவர்கள் உறுதியாக நம்பினார்கள்..
 




sandhiya sri

முதலமைச்சர்
SM Exclusive
Joined
Jan 22, 2018
Messages
11,370
Reaction score
33,071
Location
Tirupur
“அப்பா எங்களை எங்களோட வழியில் போக விடுங்க.. நாங்க எங்களோட வாழ்க்கையை சரியான வழியில் கொண்டு செல்வோம்..” என்று ருக்மணி கூறினாள்..

“மற்றப்பெண்களை போல நாங்க இல்லாப்பா.. நாங்க எங்களுக்கு என்று ஒரு குறிக்கோளை வைத்து பயணிக்கிறோம்.. ஒவ்வொரு முடிவெடுக்கும் பொழுதும் இது சரியா என்று ஆயிரம் முறை யோசிக்கிறோம்..” என்றவள் ஏதோ சொல்ல வரும் முன்னே இடையில் புகுந்தார் ரேகா..

“அதனால் தான் உங்களைப்பற்றிய கவலை இல்லாமல் நாங்க இங்கே நிம்மதியாக இருக்கிறோம் ஜெயா..” என்றவர் இருவரையும் புரிதலோடு பார்த்தார்..

ஆனந்த் கடைசியாக, “இதெல்லாமே சரிதான்.. ஆனால் இதேமாதிரி உங்களோட நட்பு எவ்வளவு வருடம் தொடரும் என்று நினைக்கிறீங்க..?” என்று சந்தேகத்துடன் கேட்டார்..

“எங்களோட நட்பு..” என்று இருவரும் சிறிதுநேரம் யோசித்துவிட்டு, “எங்களோட நட்பு பயணம் எதுவரை சொல்லுமோ அதுவரை நாங்களும் இணைந்தே பயணிப்போம்..” என்றவர்கள் கைகோர்த்து புன்னகையுடன் பிராக்டிகலாக பதில் கூறினார்..

அவர்களைப் பார்த்து பெரியவர் புன்னகைக்க, “பிரிய வேண்டிய சூழல் வந்தால்..?” என்று கிராஸ் கேள்வி கேட்டது வேற யாரும் இல்லங்க நம்ம கண்ணன்தான்..

அவனின் கேள்வியில் பெரியவர்கள் திகைத்து நிற்க, “அதன்பிறகும் நாங்க இணைந்தே பயணிப்போம் கண்ணா..” என்றாள் ருக்மணி..

“ஏன்னா நாங்க இன்னும் எண்டு இதுதான் என்று யோசிக்கவே இல்ல.. எண்டு யோசித்தால் தான் டர்னிங் பாயின்ட் பற்றி யோசிக்கணும்..” என்று புன்னகையுடன் பதில் கொடுத்தாள் ஜெயா..

அவர்களின் பதிலில் பெரியவர்களின் முகம் புன்னகையால் மலர்ந்துவிட, “நல்ல நட்பு..” என்றனர்..

“என்னோட அக்காங்க இருவரும் தெளிவாக முடிவெடுப்பாங்க.. அவங்களைப் பற்றி இப்போ மட்டும் இல்ல எப்பொழுது நீங்க கவலைப்பட வேண்டாம்..” என்றான் கண்ணன் புன்னகையுடன்..

அதன்பிறகு இருவரும் ஒரே கல்லூரி வேற வேற வகுப்பு எடுத்து படிக்க ஆரம்பித்தனர்.. நாட்கள் வேகம் எடுத்தது..

தன்னுடைய கல்லூரி படிப்பை முடித்துவிட்டு மும்பை கிளம்பிக் கொண்டிருந்தான் பிரபாகரன்.. தங்களின் கல்லூரி நாட்களின் நினைவுகளை மனதில் சுமந்தவண்ணம் மதனும் ஊருக்கு செல்ல தயாராகிக் கொண்டிருந்தான்..

பிரபா ஏதோ நினைவுகளில் மூழ்கியவண்ணம் புத்தகத்தை எல்லாம் எடுத்துவைக்க, “பிரபா நம்ம கல்லூரி வாழ்க்கை இவ்வளவு சீக்கிரம் முடிந்துவிட்டது இல்ல..” என்று ஆச்சர்யத்துடன் கேட்டான்..

“ம்ம் ஆமா மதன்.. படிப்பு படிப்பு என்று அதன் பின்னாடி ஓடிய ஓட்டம் இன்றோடு முடிகிறது..” என்றவனின் பார்வை அந்த ஹாஸ்டல் ரூமை சுற்றி வந்தது..

அவனின் பார்வையைத் தொடர்ந்து மதனின் பார்வையும் அந்த ஹாஸ்டல் ரூமை வலம்வந்தது.. “நம்மோட கேலி, கிண்டல் கலாட்டா, சந்தோசம், துக்கம் இதெல்லாம் இந்த நான்கு சுவருக்கு மட்டும்தான் தெரியும் இல்ல மதன்..” என்றவன் சொல்ல,

“நிஜமா பிரபா இந்த ஹாஸ்டல் ரூம் விட்டு போகவே மனசு இல்ல..” என்றவனும் ஆமோதித்தான்..

“காக்கை கட்டிய கூட்டில் குயில்கள் முட்டையிட்டலும் குஞ்சு பறித்தாலும் அந்தக்கூடு குயில்களுக்கு சொந்தமில்லை.. அதுபோலதான் நம்மளோட கல்லூரி நாட்களும்....” என்று பிரபா ஏதோ நினைவுகளில் மூழ்கினான்..

அவர்கள் ஹாஸ்டல் ரூமை காலிபண்ணிவிட்டு வெளியே வந்தனர்.. பிரபா ரயில்நிலையம் செல்ல அவனை வழியனுப்ப உடன் வந்தான் மதன்..

“அடுத்து என்ன செய்ய போகிறாய் பிரபா..” என்று மதன் அவனிடம் கேட்டதும், “மாமா வெளிநாடு போய் படிக்க ஏற்பாடு பண்ணியிருக்கிறார் மதன்..” என்றான் பிரபாகரன்..

சாலையில் கார் சீரான வேகத்தில் செல்ல,“வெளிநாடு போய் படித்துவிட்டு வந்தும் தொழிலை ஒப்படைப்பார் என்று நினைக்கிறேன்..” என்றவன் தொடர்ந்து, “நீ என்னடா பண்ண போகிறாய்..” என்று மதனிடம் கேட்டான்..

“எனக்கு கேம்பஸில் வேலை கிடைச்சிருக்கு பிரபா.. அப்புறம் வாழ்க்கை அதன் போக்கில் போகும்.. அம்மா ஒரு நல்ல பொண்ணு பார்த்து கல்யாணம் பண்ணி வைப்பாங்க..” என்றவன் சொல்லிகொண்டிருந்தான்..

பிரபாவின் மனதில் பனிமலரின் முகம் வந்து சென்றிட அவனின் நினைவுகள் வேறெங்கோ சென்றது.. ரயில் நிலையம் வந்தும் காரில் இருந்து இறங்கிய பிரபா சென்னை செல்லும் ரயிலில் ஏறினான்..

அவனோடு வந்து அமர்ந்த மதன், “டேய் பிரபா வெளிநாடு போய் நல்ல படிடா.. என்னை மறந்துவிடாதே.. அப்புறம் அடிக்கடி போன் பண்ணுடா.. சென்னை வந்தால் எங்களோட வீட்டு வாடா..” என்று சொல்லிக்கொண்டே சென்றான்..

“சரி மதன்.. நீயும் அம்மாவை நான் கேட்டேன் என்று சொல்லுடா.. நான் ஊருக்கு போனதும் மாமாவிடம் உன்னைபற்றி சொல்லி போறேன்.. மேரேஜ் என்றால் எனக்கு மெயில் பண்ணுடா..” என்றவன் தொடர்ந்து,

“என்னிடம் எந்த உதவி வேண்டும் என்றாலும் தயங்காமல் கேளுடா.. நான் உனக்கு எல்லாம் செய்கிறேன்.. நானும் மாமாவும் உனக்காக இருக்கிறோம்..” என்றவன் சொல்லிகொண்டிருக்க ரயில் கிளம்புவதற்கான அறிவிப்பு வந்தது..

“சரிடா ரயில் கிளம்புது.. நானும் கிளம்பறேன்..” என்றவன் ரயிலைவிட்டு கீழிறங்கினான் மதன்..

“மதன் சொன்னது எல்லாம் ஞாபகம் இருக்குது இல்ல.. மறந்தே மகனே உன்னை ததேடி வந்து உதைப்பேன்..” என்றவன் புன்னகையுடன் சொல்ல மதனின் முகத்திலும் புன்னகை அரும்பியது..

“சரிடா நீ பார்த்து பத்திரமாக போ.. வெளிநாடு போயிட்டு வரும் பொழுது ஒரு பொண்ணோட வரதே அப்புறம் நான் உன்னை கட்டிவைத்து உதைப்பேன் ஞாபகம் இருக்கட்டும்..” என்று பிரபாவை மிரட்டினான்..

அவன் யாரை சொல்கிறான் என்று உணர்ந்து கொண்ட பிரபா, “டேய் நான் எல்லாம் அப்படிபட்ட பையன் கிடையாது..” என்றவன் சொல்ல, “ஆமா ஆமா நிறையப்பேர் சொன்னாங்க..” என்றவன் சொல்ல ரயில் மெல்ல கிளம்பியது..

“பாய்டா..” என்று பிரபா சொல்ல, “ஓகே மச்சி டேகேர்..” என்று அவனை அனுப்பி வைத்துவிட்டு மதன் துறையூர் கிளம்பினான்..

பிரபாகரன் சென்னை சென்று, அங்கிருந்து பிளைட்டில் மும்பை சென்றான்.. அங்கே அவனை அழைத்துச் செல்ல வந்திருந்தார் கோபிநாத்..

அவன் தன்னுடைய செக்கிங் எல்லாம் முடித்துவிட்டு வெளியே வர, “வா பிரபா..” என்றவர் அவனின் அருகில் செல்ல, “மாமா எப்படி இருக்கிறீங்க..?” என்று புன்னகையுடன் விசாரித்தான் பிரபாகரன்..

“நான் நல்ல இருக்கிறேன் பிரபா.. நீ எப்படிடா இருக்கிற.. ஹாஸ்டல் சாப்பாடு சாப்பிட்டு சாப்பிட்டு இளைத்துவிட்டாய்..” என்றவர் அவனை பார்வையால் அளந்த வண்ணம் கூறினார்..

அவனின் முகத்தில் இருந்த பிரகாசம் பார்த்தவர், “இப்பொழுதுதான் என்னோட பழைய பிரபாவைப் பார்ப்பது போல இருக்கிறது..” என்றவர் அவனை அழைத்துச் சென்றார்..

“மாமா நீங்க நகருங்க.. நான் டிரைவ் பண்றேன்..” என்றவன் டிரைவர் சீட்டில் ஏறியமர அவனின் மறுபக்கம் அமர்ந்தார் கோபிநாத்..

அவரின் முகத்தைப் பார்த்தவன், “என்ன மாமா வேலை ரொம்ப அதிகமா..” என்றவன் தொழில் பற்றி விசாரிக்க, “அது எப்பொழுதும் பிஸிதான் பிரபா..” என்றவர் தொடர்ந்து,

“மதன் எப்படிப்பா இருக்கிறான்.. அவன் இப்பொழுது ஊருக்கு போயிட்டானா..?” என்றவர் கேட்டதும், “ஆமா மாமா அவன் ஊருக்கு போயிட்டான்.. ரொம்ப நல்ல இருக்கிறான்.. உங்களை கேட்டதாக சொல்ல சொன்னான்..” என்றவன் காரை சீரான வேகத்தில் செலுத்தினான்..

அவன் வீட்டிற்கு செல்லும் வழியில் சரியாக செல்வதைப் பார்த்தவர், “உனக்கு நல்ல ஞாபகசக்திடா..” என்றவர் புன்னகைத்தார்..

“இந்த ஊர் நான் பிறந்தஊர் மாமா.. அவ்வளவு சீக்கிரம் வழியெல்லாம் மறந்துவிடுவேனா..?” என்றவன் வீட்டின் முன்னே காரை நிறுத்தினான்..

அவனின் வீடு பெரிய பங்களா என்று சொல்வதைவிட அரண்மனை என்று தாரளமாக சொல்லலாம்.. அந்தந்த வேலைக்கு என்று தனித்தனியாக ஆட்களை நியமித்திருந்தனர்..

அவன் காரில் இருந்து வீட்டின் உள்ளே நுழைய, “வா கண்ணா.. எப்படி இருக்கிற ராசா..” என்று அன்புடன் கேட்டார் அந்த வீட்டின் வேலை செய்யும் சொல்லம்மா..

“எனக்கு என்ன செல்லம்மா நான் ராஜா மாதிரி இருக்கிறேன்..” என்றவன் புன்னகையுடன் பதில் கொடுக்க, “ஆமாண்டா கண்ணா நீ ராஜா மாதிரிதான் இருக்கிற..” என்றவர் அவனுக்கு ஆரத்தி எடுத்தார்..

அவன் வீட்டிற்குள் நுழைந்திட, “இன்னும் ஒரு துரும்பு கோடா மாறவே இல்ல..” என்றவன் தன்னுடைய அறைக்கு சென்றான்.. அவன் வேகமாக செல்வதைப் பார்த்து பெரியவர்கள் இருவரும் புன்னகையுடன் நின்றிருந்தனர்..

அவன் தன்னுடைய அறைக்குள் நுழைந்து குளித்துவிட்டு வந்து படுக்கையில் விழுந்தான்.. அதன்பிறகு நாட்கள் வேகமெடுத்து சென்றது.. அடுத்த ஒரு வாரத்தில் மேல் படிப்பிற்கு வெளிநாடு சென்றான் பிரபாகரன்..

அடுத்த நான்குவருடம் புயல் வேகத்தில் சென்றது.. மதனின் வாழ்க்கையில் பெரிய புயல் வீசி முடியும் தருணத்தில் வெளிநாட்டில் இருந்து தன்னுடைய படிப்பை முடித்துவிட்டு திரும்பி வந்தான் பிரபாகரன்..

இந்த நான்கு ஆண்டுகளில் மதனின் வாழ்க்கையில் அப்படியென்ன நடந்தது..?
 




Advertisements

Latest updates

Latest Episodes

Advertisements

Top