ஹாய் ஹாய் நட்பூஸ்,
தமிழரசியின் கதிரழகி நேற்றைய பதிவின் தொடர்ச்சியுடன் வந்துவிட்டேன்.. சென்ற பதிவிற்கு கமெண்ட்ஸ் கொடுத்த அனைவருக்கும் நன்றிகள்.. மீண்டும் அடுத்த பதிவுடன் சீக்கிரம் வருகிறேன்..
அன்புடன்
சந்தியா ஸ்ரீ
அதேநேரத்தில் ருக்மணியும் ஜெயாவிற்கு போன் செய்து, “ஏய் வாடி இன்னைக்கு வெளியே போய் சாப்பிடலாம்..” என்றாள்..
“அடியே இருக்கிற ஒரு மணி நேரத்தில் எங்கே வெயிலில் அலைய சொல்ற..” என்றவள் சலித்துக்கொள்ள, “இங்கே நம்ம தெருமுனையின் கார்னர்ல நல்ல ஹோட்டல் இருக்கு வாடி..” என்று அடம்பிடித்தாள் ருக்மணி..
அவளிடம் சொல்லி புரியவைக்க முடியாது என்று உணர்ந்த ஜெயாவும், “சரி வருகிறேன் வா..” என்றவள் சொல்லிவிட்டு, அவள் போனைக் கட் பண்ணிவிட, “எருமை..” என்று திட்டிக்கொண்டே வேகமாக படிக்கட்டில் இறங்கிச் சென்றாள்..
கம்பெனி வாசலில் ஜெயா நின்றிருக்க, “வாடி..” என்றவள் அவளை இழுத்துக்கொண்டு பக்கத்தில் இருக்கும் ஹோட்டலுக்கு சென்றனர்..
அவர்கள் இருவரும் ஹோட்டலின் உள்ளே நுழைந்து காலியாக இருக்கும் ஒரு டேபிளில் அமர, “ஒரு காளான் பிரியாணி.. ஒரு சிக்கன் பிரியாணி..” என்று ஆடார் கொடுத்தாள் ருக்மணி..
ஜெயா ஹோட்டலின் கண்ணாடி வழியாக வெளியே வேடிக்கைப் பார்க்க, “இப்போ சொல்லு உன்னோட கதைக்கு என்ன பெயர் வைக்க போற..” என்றவள் மெல்ல ஜெயாவிடம் பேச்சுக் கொடுத்தாள்..
அவளைத் திரும்பிப் பார்த்த ஜெயா, “இதுக்குதான் இவ்வளவு ஆர்ப்பாட்டமா..?” என்று கேட்டவளின் பார்வை வேறு திசை நோக்கிச் சென்றது..
“உன்னிடம் உண்மையை வாங்க வேற வழி.. எப்பொழுதும் உன்னோடு இருந்து பழகிட்டு இப்போ தனியாக இருக்க மண்டை வெடிக்குது.. சாப்பாடு கூட இறங்க மாட்டேங்குது..” என்றவள் ஜெயாவைக் கவனிக்கவில்லை..
அவர்களின் டேபிளிற்கு பக்கத்து டேபிளில் அமர்ந்திருந்த பிரபாவின் முகம் பார்த்தவள், ‘ஐயோ இவனா..?’ என்று அதிர்ந்து தன் பார்வையைத் திருப்பிக்கொண்டாள்..
“என்னடி கேட்ட கேள்விக்கு பதில் சொல்லு..” என்று சொல்ல, “கதிரழகி ஸ்டோரி நேம் போதுமா..?” அவள் மீண்டும் அவனின் முகம் பார்க்க மதனுடன் பேசியபடியே சாப்பிட்டுக்கொண்டிருந்த பிரபா எதற்ச்சியாக திருப்பியவன் ஜெயாவைப் பார்த்துவிட்டான்..
அவளின் முகம் பார்த்த பிரபா, “மதன் போனவாரம் அந்த பொண்ணுக்குதான் ஐ லவ் யூ சொன்னேன்..” என்று ஜெயாவைக் கைகாட்டிட மதன், “என்னடா சொல்ற..” என்று அதிர்ந்தான்..
“நிஜமா அந்த பொண்ணுதான்..” என்றவள் திரும்பிப் பார்க்கும் பொழுது, ‘ வா சாப்பிடலாம்..’ என்றவன் அவளைப் பார்த்து சைகை செய்ய, “ஐயோ இவனோட தொல்லைத் தாங்கல..” என்று வாய்விட்டுக் கூறிவிட்டு நாக்கைக் கடித்துக்கொண்டாள்..
அவள் கவனித்துவிட்டதை அறிந்த பிரபாவின் முகத்தில் புன்னகை அரும்பியது.. மதனுக்கு பிரபாவைப் பார்க்க ஆச்சர்யமாகவும் அதே அளவு அதிர்ச்சியாகவும் இருந்தது.. அவன் இவ்வளவு விளையாட்டாக இருந்து அவன் இதுவரை பார்த்ததில்லை..
ஆனால் இன்றோ எல்லாம் தலைகீழாக நடக்க அவன் காட்டிய பெண்ணைப் பார்த்தான் மதன்.. ஏனோ அவளின் முகத்தைப் பார்த்ததும், ‘இவளை எங்கயோ பார்த்திருக்கிறேனே..’ என்று நினைத்தவன்,
“டேய் பிரபா இந்த பொண்ணை எங்க ஊரில் பார்த்திருக்கிறேன்.. அதுவும் கோவில் திருவிழா நேரத்தில்..” என்றவன் தீவிரமாக மூளையைக் கசக்கி யோசிக்க, “ஓஹோ அப்படியா..? அதன் எனக்கும் எங்கோ பார்த்த மாதிரி பீல் ஆச்சா..?” என்றவன் தொடர்ந்து,
“ஒரு நிமிஷம் இருடா இதோ வருகிறேன்..” என்றவன் எழுந்து அவளின் அருகில் செல்ல, ‘இவன் என்ன இப்படியெல்லாம் செய்கிறான்..?’ என்று சிந்தனையில் ஆழ்ந்தான் மதன்..
“நான் என்ன சொல்லிட்டு இருக்கிறேன்.. நீ என்ன சொல்லிட்டு இருக்கிற.. அப்போ என்னைப் பார்த்த உனக்கு எப்படி தெரியுது..” என்று பொரிந்து தள்ளினாள் ருக்மணி..
“அடியேய் நான் உன்னை சொல்லல..” அவள் பல்லைக் கடிக்க, “வேற யாரை சொன்ன..?” என்று கேட்க, “அதோ அவனைத்தான் சொன்னேன்.. எனக்கு போனவாரம் ஐ லவ் யூ சொன்னது இவன்தான்..” என்றவள் உண்மையை போட்டு உடைக்கவும் பிரபா அவர்களின் அருகில் வரவும் சரியாக இருந்தது..
அவள் திரும்பிப் பார்த்ததும், “ஏய் இவரா உன்னிடம் ஐ லவ் யூ சொன்னது.. ஐயோ இவரு என்னோட முதலாளி பிரபாகரன்..” என்றவள் அதிர்ச்சியுடன் சொல்ல, ஜெயா தூக்கிவாரிப் போட்டது..
தமிழரசியின் கதிரழகி நேற்றைய பதிவின் தொடர்ச்சியுடன் வந்துவிட்டேன்.. சென்ற பதிவிற்கு கமெண்ட்ஸ் கொடுத்த அனைவருக்கும் நன்றிகள்.. மீண்டும் அடுத்த பதிவுடன் சீக்கிரம் வருகிறேன்..
அன்புடன்
சந்தியா ஸ்ரீ
அதேநேரத்தில் ருக்மணியும் ஜெயாவிற்கு போன் செய்து, “ஏய் வாடி இன்னைக்கு வெளியே போய் சாப்பிடலாம்..” என்றாள்..
“அடியே இருக்கிற ஒரு மணி நேரத்தில் எங்கே வெயிலில் அலைய சொல்ற..” என்றவள் சலித்துக்கொள்ள, “இங்கே நம்ம தெருமுனையின் கார்னர்ல நல்ல ஹோட்டல் இருக்கு வாடி..” என்று அடம்பிடித்தாள் ருக்மணி..
அவளிடம் சொல்லி புரியவைக்க முடியாது என்று உணர்ந்த ஜெயாவும், “சரி வருகிறேன் வா..” என்றவள் சொல்லிவிட்டு, அவள் போனைக் கட் பண்ணிவிட, “எருமை..” என்று திட்டிக்கொண்டே வேகமாக படிக்கட்டில் இறங்கிச் சென்றாள்..
கம்பெனி வாசலில் ஜெயா நின்றிருக்க, “வாடி..” என்றவள் அவளை இழுத்துக்கொண்டு பக்கத்தில் இருக்கும் ஹோட்டலுக்கு சென்றனர்..
அவர்கள் இருவரும் ஹோட்டலின் உள்ளே நுழைந்து காலியாக இருக்கும் ஒரு டேபிளில் அமர, “ஒரு காளான் பிரியாணி.. ஒரு சிக்கன் பிரியாணி..” என்று ஆடார் கொடுத்தாள் ருக்மணி..
ஜெயா ஹோட்டலின் கண்ணாடி வழியாக வெளியே வேடிக்கைப் பார்க்க, “இப்போ சொல்லு உன்னோட கதைக்கு என்ன பெயர் வைக்க போற..” என்றவள் மெல்ல ஜெயாவிடம் பேச்சுக் கொடுத்தாள்..
அவளைத் திரும்பிப் பார்த்த ஜெயா, “இதுக்குதான் இவ்வளவு ஆர்ப்பாட்டமா..?” என்று கேட்டவளின் பார்வை வேறு திசை நோக்கிச் சென்றது..
“உன்னிடம் உண்மையை வாங்க வேற வழி.. எப்பொழுதும் உன்னோடு இருந்து பழகிட்டு இப்போ தனியாக இருக்க மண்டை வெடிக்குது.. சாப்பாடு கூட இறங்க மாட்டேங்குது..” என்றவள் ஜெயாவைக் கவனிக்கவில்லை..
அவர்களின் டேபிளிற்கு பக்கத்து டேபிளில் அமர்ந்திருந்த பிரபாவின் முகம் பார்த்தவள், ‘ஐயோ இவனா..?’ என்று அதிர்ந்து தன் பார்வையைத் திருப்பிக்கொண்டாள்..
“என்னடி கேட்ட கேள்விக்கு பதில் சொல்லு..” என்று சொல்ல, “கதிரழகி ஸ்டோரி நேம் போதுமா..?” அவள் மீண்டும் அவனின் முகம் பார்க்க மதனுடன் பேசியபடியே சாப்பிட்டுக்கொண்டிருந்த பிரபா எதற்ச்சியாக திருப்பியவன் ஜெயாவைப் பார்த்துவிட்டான்..
அவளின் முகம் பார்த்த பிரபா, “மதன் போனவாரம் அந்த பொண்ணுக்குதான் ஐ லவ் யூ சொன்னேன்..” என்று ஜெயாவைக் கைகாட்டிட மதன், “என்னடா சொல்ற..” என்று அதிர்ந்தான்..
“நிஜமா அந்த பொண்ணுதான்..” என்றவள் திரும்பிப் பார்க்கும் பொழுது, ‘ வா சாப்பிடலாம்..’ என்றவன் அவளைப் பார்த்து சைகை செய்ய, “ஐயோ இவனோட தொல்லைத் தாங்கல..” என்று வாய்விட்டுக் கூறிவிட்டு நாக்கைக் கடித்துக்கொண்டாள்..
அவள் கவனித்துவிட்டதை அறிந்த பிரபாவின் முகத்தில் புன்னகை அரும்பியது.. மதனுக்கு பிரபாவைப் பார்க்க ஆச்சர்யமாகவும் அதே அளவு அதிர்ச்சியாகவும் இருந்தது.. அவன் இவ்வளவு விளையாட்டாக இருந்து அவன் இதுவரை பார்த்ததில்லை..
ஆனால் இன்றோ எல்லாம் தலைகீழாக நடக்க அவன் காட்டிய பெண்ணைப் பார்த்தான் மதன்.. ஏனோ அவளின் முகத்தைப் பார்த்ததும், ‘இவளை எங்கயோ பார்த்திருக்கிறேனே..’ என்று நினைத்தவன்,
“டேய் பிரபா இந்த பொண்ணை எங்க ஊரில் பார்த்திருக்கிறேன்.. அதுவும் கோவில் திருவிழா நேரத்தில்..” என்றவன் தீவிரமாக மூளையைக் கசக்கி யோசிக்க, “ஓஹோ அப்படியா..? அதன் எனக்கும் எங்கோ பார்த்த மாதிரி பீல் ஆச்சா..?” என்றவன் தொடர்ந்து,
“ஒரு நிமிஷம் இருடா இதோ வருகிறேன்..” என்றவன் எழுந்து அவளின் அருகில் செல்ல, ‘இவன் என்ன இப்படியெல்லாம் செய்கிறான்..?’ என்று சிந்தனையில் ஆழ்ந்தான் மதன்..
“நான் என்ன சொல்லிட்டு இருக்கிறேன்.. நீ என்ன சொல்லிட்டு இருக்கிற.. அப்போ என்னைப் பார்த்த உனக்கு எப்படி தெரியுது..” என்று பொரிந்து தள்ளினாள் ருக்மணி..
“அடியேய் நான் உன்னை சொல்லல..” அவள் பல்லைக் கடிக்க, “வேற யாரை சொன்ன..?” என்று கேட்க, “அதோ அவனைத்தான் சொன்னேன்.. எனக்கு போனவாரம் ஐ லவ் யூ சொன்னது இவன்தான்..” என்றவள் உண்மையை போட்டு உடைக்கவும் பிரபா அவர்களின் அருகில் வரவும் சரியாக இருந்தது..
அவள் திரும்பிப் பார்த்ததும், “ஏய் இவரா உன்னிடம் ஐ லவ் யூ சொன்னது.. ஐயோ இவரு என்னோட முதலாளி பிரபாகரன்..” என்றவள் அதிர்ச்சியுடன் சொல்ல, ஜெயா தூக்கிவாரிப் போட்டது..