அத்தியாயம் – 26
இவர்கள் இருவரும் பார்க்கில் இருந்த அதே நேரத்தில் ஆபீசில் என்ன நடக்கிறது என்று பார்க்கலாம் வாங்க...
மின்மினி விடையாட்டை தொடங்கும் சமையத்தில் அங்கே வந்து சேர்ந்தான் மதன்.. அவனின் பார்வை முழுவதும் அவளின் மீது இருந்தது.. அவளின் குறும்புத்தனம் மிகுந்த முகம் கண்டவனுக்கு பிரபாவின் நினைவுதான் வந்தது..
இவள் அலுவலகத்தில் செய்யும் சேட்டைக்கும் சேர்த்து பிரபாவிடம் மதன்தான் வாங்கிக் கட்டிகொள்வான்..
அன்று ஒருநாள் பிரபா வெளியே சென்ற நேரத்தில் மின்மினி எல்லோரையும் உட்காரவைத்து பாட்டுப்போட்டியை நடத்திக்கொண்டிருந்தாள்..
ஜி.எம். என்று ஒருவன் அங்கிருப்பதை அவள் கருத்தில் கொள்ளவில்லை.. அன்றும் அப்படித்தான் பிரபா வெளியே கிளம்பிச் சென்றபொழுது மினி தன்னுடைய செட்டியைத் தொடங்கினாள்..
இவள் விளையாட்டை கொஞ்சநேரத்தில் பிரபா அலுவலகத்தின் உள்ளே நுழைந்தான்.. அங்கே யாரும் வேலை செய்யாமல் விளையாடிக்கொண்டு இருக்கவும் அவனின் கோபம் தலைக்கேறியது..
யாரை என்ன பேசுகிறோம் என்று தெரியாத அளவிற்கு எல்லோரையும் திட்டிதீர்த்துவிட்டான்.. இதையெல்லாம் மதன் கவனிக்கவில்லை என்று அவனுக்கு சேர்ந்து திட்டு விழுந்தது..
பிரபாவிடம் திட்டுவாங்கிக் கொண்டே மின்மினியை முறைத்த மதன், “ஆமா எல்லாம் நான்தான் செய்ய சொன்னேன்..” என்று ஒருவார்த்தையில் பிரச்சனைக்கு முற்றுபுள்ளி வைத்தான்..
அன்று மின்மினி அவனை நிமிர்ந்து பார்க்க, “நீ என்ன திட்டுவதாக இருந்தாலும் என்னைத் திட்டு.. அவங்க யாரும் இதற்கு காரணம் இல்ல..” என்றவன் ‘அவங்க’ என்ற வார்த்தையில் அழுத்தம் கொடுத்தான்..
அவனின் பேச்சில் மாற்றத்தை உணர்ந்த பிரபாவின் பார்வை மினியின் மீது படிந்தது.. தவறு தன்மேல் என்ற குற்ற உணர்ச்சியில் மின்மினி தலையைக்குனிந்து நின்றிருந்தாள்.. மதனின் பார்வையை வைத்தே மினிதான் இதற்கு எல்லாம் காரணம் என்று கணித்தான் பிரபா....
அன்று இரவு வீடு திரும்பும் பொழுது அவனிடம் நேரடியாகவே கேட்டான்..
“டேய் மின்மினி என்னோட பி.ஏ. அவளுக்காக நீ எதற்கு சப்போர்ட் பண்ற..” என்றவன் கோபத்தில் கேட்க மதன் அமைதியாக காரை வீடு நோக்கி செலுத்தினான்..
அவனின் மௌனம் பிரபாவைப் பாதிக்க, “மதன் அவங்க எல்லோரையும் நம்ம கண்ட்ரோல் பண்ணாமல் விட்ட நாளைக்கு கம்பெனி வளர்ச்சி பாதிக்கும்.. எனக்கு மட்டும் கோபத்தைக் காட்ட வேண்டும் என்று ஆசையா..? சிலநேரங்களில் நம்மை நாமே மாற்றிக்கொள்ள வேண்டும்..” என்றவன் நிறுத்திவிட்டு மதனின் முகம் பார்த்தான்..
அவனுடன் பழகிய இத்தனை நாட்களில் அவனைப்பற்றி தெளிவாக புரிந்து வைத்திருந்தான்.. அவன் எப்பொழுதும் அவனின் வேலையில் கண்ணும், கருத்துமாக இருப்பான்.. அது பிரபாவிற்கு தான் தெரியும்..
மதன் காரை சீரான வேகத்தில் செலுத்திக்கொண்டே பிரபாவைத் திரும்பிப் பார்த்து, “எனக்கும் புரியுது பிரபா..” என்றான்..
“அனைத்தும் புரிந்தும் ஏண்டா இப்படி பண்ற..” என்று ஆற்றாமையுடன் அவன் கேட்க, “அவளால் நானே சில விஷயத்தில் இருந்து வெளியே வந்திருக்கேன்..” என்றான்..
“இப்போ என்னை பழைய மதனாக உணர வெச்சிருக்கா..” என்று அவனின் மனமாற்றத்தை பிரபாவிற்கு புரியவைக்க முயற்சித்தான்..
“வாட்..” அவன் திகைத்தவண்ணம் மதனைப் பார்த்தான் பிரபா..
“இதுக்கு பெயர் லவ் என்று என்னோட மனசு சொல்லல.. பட் அவளிடம் இருக்கும் குறும்புத்தனம் எனக்குள் இருக்கும் பழைய மதனின் வெளிகொண்டுவரா.. என்னால என்னோட மாற்றத்தை உணர முடியுது பிரபா..” என்றவன் தெளிவாகக் கூறினான்..
மதனின் வாழ்க்கையில் நடந்த அனைத்தும் அவனுக்கு தெரியும்.. அதிலிருந்து அவனை வெளிகொண்டுவர பிரபா நினைத்தான்.. ஆனால் இன்று அவனே தன்னுடைய மனமாற்றத்தை சொல்ல பிரபாவின் மனதில் நிம்மதி பரவியது...
அவனின் உணர்வுகளுக்கு அவன் என்ன பெயர் வைத்தானோ அது பிரபாவிற்கு தெரியாது.. ஆனால் அதன் மூலமாக தன்னுடைய பழைய நண்பனை பார்க்க விரும்பியவன், மதனின் தோள்களை தட்டிவிட்டு மெளனமாக புன்னகைத்தான்..
அவனின் மௌனம் மதனுக்கு புதிராக அமைய அந்த புதிருக்கான விடையை மறுநாளே மதனிடம் கூறினான்.. அன்று காலையில் ஆ[ஆபீஸ் சென்றதும் மதன் காரைவிட்டு இறங்க சொல்லிவிட்டு,
“மதன் ஆபீசை ஒருமணிநேரம் பார்த்துக்கோ.. எனக்கு ஒரு சின்ன வேலை இருக்கு முடித்துவிட்டு வருகிறேன்..” என்றவன் வெளியே கிளம்பிச் சென்றான்..
அவன் ஆபீஸ் உள்ளே நுழைந்து தன்னுடைய வேலையைக் கவனிக்க பிரபா வராததைக் கவனித்த மின்மினி தன்னுடைய பழைய குறும்புத்தனத்தை காட்ட ஆரம்பித்தாள்..
ஆனால் நேற்று மதன் தனக்காக பிரபாவிடம் திட்டுவாங்கியத்தை உணர்ந்தவள் வேலைகளை சீக்கிரம் முடித்துவிட்டு குறும்புடன் தன்னுடைய விளையாட்டைத் தொடர்ந்தாள்.. ‘ஒரு மணிநேரத்தில் வருகிறேன்..’ என்று சொல்லிவிட்டுச் சென்ற பிரபா அன்று மாலைதான் அலுவலகத்தின் உள்ளே நுழைந்தான்..
அவன் உள்ளே நுழையும் நேரத்தில் எல்லோரும் அவர்களின் வேலையை சரியாக முடித்து வைத்திருந்தனர்.. ‘அவனுக்கு வேலை சரியாக நடந்தால் போதுமே..’ தன்னுடைய பேக்டரியில் இருந்தவண்ணம் நிறுவனத்தில் என்ன நடக்கிறது என்பதை கவனித்தான் பிரபா..
அனைவரும் பம்பரமாக சுழன்று வேலைகளை முடித்துவிட்டு விளையாட்டைத் தொடங்கினர்.. சரியாக ஒருமணிநேரம் விளையாடிவர்கள் மீண்டும் தங்கள் வேலைகளைக் கவனித்தனர்.. இதையெல்லாம் கவனித்த பிரபாவின் உதட்டில் புன்னகை அரும்பியது..
அவனுக்கு அவனின் நிறுவனமும் முக்கியம்.. அதே அளவு அவனின் நண்பனின் நலனும் முக்கியம்.. தன்னுடைய நண்பனின் மாற்றத்தைக் காணவே பிரபா தன்னுடைய நிலையில் இருந்து இறங்கி வந்தான்..
அதன்பிறகு வந்த நாட்களில் இதுவே தொடர்கதையானது.. பிரபா அறியாமல் ஆபீசில் ஒரு துரும்பும் அசையாது என்று உணராமல் இருந்தாள் மின்மினி.. மதன் பிரபாவிடம் எதுவும் சொல்லாமல் இருப்பது மின்மினிக்கு நிம்மதியைக் கொடுத்தது..
மதன்தான் அனைத்திற்கும் காரணம் என்று அறியாமல் அவனிடமே என்று சண்டை போடுவாள்.. ருக்மணி இதையெல்லாம் பார்த்துவிட்டு சிரித்துக்கொண்டே இருப்பாள்.. ஹாஸ்டல் சென்றால் அலுவலகத்தில் நடப்பதை ஜெயாவிடம் சொல்லாமல் அவளுக்கு தூக்கமே வராது..
இப்படியே நாட்கள் நகர அந்த நினைவுகளில் இருந்து வெளியே வந்தான் மதன்.. அவனின் மனநிலை அறியாத மின்மினி தன்னுடைய ரூல்ஸ் கூறினாள்..
அதன்பிறகு, “எனக்கு ரொம்ப பிடித்த சாங் இது.. நான் பாட போறேன்.. அந்த பாடல் வரிகளை சரியாக கண்டுபிடித்து அடுத்த வரியை சரியாக பாடனும்..” என்றாள்..
பிளாக் கலர் சுடிதாரில் பச்சை வண்ணத்தில் டிசைன் இருக்க அந்த கலர் அவளுக்கு மிகவும் பொருத்தமாக அமர்ந்திருப்பதை தூரத்தில் நின்றவண்ணம் ரசித்தான் மதன்..
அவளுக்கு பக்கத்தில் இருந்த பெண்ணொருத்தி செல்லை எடுத்து நோண்ட, “இது கேம்.. உங்க மூளைக்கு சின்ன ரிலாக்ஸ்.. சோ மொபைல் யூஸ் பண்ணக்கூடாது..” என்றவள் திட்டவட்டமாக கூறினாள்..
எல்லோரும் செல்லை எடுத்து அவளின் கண் படும்படி வைத்துவிட, “சரி நான் பாடட்டுமா..” என்றவள் பாடலின் இடைப்பட்ட வரிகளைப் பாடி அவர்களைக் குழப்பத்தில் தள்ளிவிட்டாள்..
“வானம் எந்தன் மாளிகை.. வையம் எந்தன் மேடையே.. வண்ணங்கள் நான் என்னும் எண்ணங்கள்..” என்றவள் பாடலின் இரண்டே வரியை மட்டும் பாடினாள்..
அவளின் பாடலில் சுருதி தப்பாமல் ஒலித்திட அதில் தன்னை தொலைத்தான் மதன்.. மினியை கண்டநாள் முதலாக அவனின் மனதில் சின்ன சின்ன சலனங்கள் ஏற்படவே செய்தன..
அம்மாவே உலகம் என்று இருந்தவன் முதல் முறையாக மினியை மனதார விரும்பத் தொடங்கினான்.. அவனின் வாழ்க்கையில் அவன் அம்மா எடுத்த முடிவில் அவனின் வாழ்க்கையில் ஒரு புயல் வீசி ஓய்ந்துவிட்டது..
இப்பொழுது அவனின் மனம் பாலைவனமாக மாறியிருக்க, அதில் சோலையாக வந்தாள் மின்மினி.. மொத்தத்தில் அவளின் செட்டையில் மதன் தன்னை மறந்து அவளின் குறும்பில் பழைய மதனாக கொஞ்சம் கொஞ்சமாக மாறினான்..
அவனின் வாழ்க்கையில் மீண்டும் வசந்தம் வருமா..? அவன் இழந்த சந்தோசம் மினியால் அவனுக்கு கிடைக்குமா..?
இவர்கள் இருவரும் பார்க்கில் இருந்த அதே நேரத்தில் ஆபீசில் என்ன நடக்கிறது என்று பார்க்கலாம் வாங்க...
மின்மினி விடையாட்டை தொடங்கும் சமையத்தில் அங்கே வந்து சேர்ந்தான் மதன்.. அவனின் பார்வை முழுவதும் அவளின் மீது இருந்தது.. அவளின் குறும்புத்தனம் மிகுந்த முகம் கண்டவனுக்கு பிரபாவின் நினைவுதான் வந்தது..
இவள் அலுவலகத்தில் செய்யும் சேட்டைக்கும் சேர்த்து பிரபாவிடம் மதன்தான் வாங்கிக் கட்டிகொள்வான்..
அன்று ஒருநாள் பிரபா வெளியே சென்ற நேரத்தில் மின்மினி எல்லோரையும் உட்காரவைத்து பாட்டுப்போட்டியை நடத்திக்கொண்டிருந்தாள்..
ஜி.எம். என்று ஒருவன் அங்கிருப்பதை அவள் கருத்தில் கொள்ளவில்லை.. அன்றும் அப்படித்தான் பிரபா வெளியே கிளம்பிச் சென்றபொழுது மினி தன்னுடைய செட்டியைத் தொடங்கினாள்..
இவள் விளையாட்டை கொஞ்சநேரத்தில் பிரபா அலுவலகத்தின் உள்ளே நுழைந்தான்.. அங்கே யாரும் வேலை செய்யாமல் விளையாடிக்கொண்டு இருக்கவும் அவனின் கோபம் தலைக்கேறியது..
யாரை என்ன பேசுகிறோம் என்று தெரியாத அளவிற்கு எல்லோரையும் திட்டிதீர்த்துவிட்டான்.. இதையெல்லாம் மதன் கவனிக்கவில்லை என்று அவனுக்கு சேர்ந்து திட்டு விழுந்தது..
பிரபாவிடம் திட்டுவாங்கிக் கொண்டே மின்மினியை முறைத்த மதன், “ஆமா எல்லாம் நான்தான் செய்ய சொன்னேன்..” என்று ஒருவார்த்தையில் பிரச்சனைக்கு முற்றுபுள்ளி வைத்தான்..
அன்று மின்மினி அவனை நிமிர்ந்து பார்க்க, “நீ என்ன திட்டுவதாக இருந்தாலும் என்னைத் திட்டு.. அவங்க யாரும் இதற்கு காரணம் இல்ல..” என்றவன் ‘அவங்க’ என்ற வார்த்தையில் அழுத்தம் கொடுத்தான்..
அவனின் பேச்சில் மாற்றத்தை உணர்ந்த பிரபாவின் பார்வை மினியின் மீது படிந்தது.. தவறு தன்மேல் என்ற குற்ற உணர்ச்சியில் மின்மினி தலையைக்குனிந்து நின்றிருந்தாள்.. மதனின் பார்வையை வைத்தே மினிதான் இதற்கு எல்லாம் காரணம் என்று கணித்தான் பிரபா....
அன்று இரவு வீடு திரும்பும் பொழுது அவனிடம் நேரடியாகவே கேட்டான்..
“டேய் மின்மினி என்னோட பி.ஏ. அவளுக்காக நீ எதற்கு சப்போர்ட் பண்ற..” என்றவன் கோபத்தில் கேட்க மதன் அமைதியாக காரை வீடு நோக்கி செலுத்தினான்..
அவனின் மௌனம் பிரபாவைப் பாதிக்க, “மதன் அவங்க எல்லோரையும் நம்ம கண்ட்ரோல் பண்ணாமல் விட்ட நாளைக்கு கம்பெனி வளர்ச்சி பாதிக்கும்.. எனக்கு மட்டும் கோபத்தைக் காட்ட வேண்டும் என்று ஆசையா..? சிலநேரங்களில் நம்மை நாமே மாற்றிக்கொள்ள வேண்டும்..” என்றவன் நிறுத்திவிட்டு மதனின் முகம் பார்த்தான்..
அவனுடன் பழகிய இத்தனை நாட்களில் அவனைப்பற்றி தெளிவாக புரிந்து வைத்திருந்தான்.. அவன் எப்பொழுதும் அவனின் வேலையில் கண்ணும், கருத்துமாக இருப்பான்.. அது பிரபாவிற்கு தான் தெரியும்..
மதன் காரை சீரான வேகத்தில் செலுத்திக்கொண்டே பிரபாவைத் திரும்பிப் பார்த்து, “எனக்கும் புரியுது பிரபா..” என்றான்..
“அனைத்தும் புரிந்தும் ஏண்டா இப்படி பண்ற..” என்று ஆற்றாமையுடன் அவன் கேட்க, “அவளால் நானே சில விஷயத்தில் இருந்து வெளியே வந்திருக்கேன்..” என்றான்..
“இப்போ என்னை பழைய மதனாக உணர வெச்சிருக்கா..” என்று அவனின் மனமாற்றத்தை பிரபாவிற்கு புரியவைக்க முயற்சித்தான்..
“வாட்..” அவன் திகைத்தவண்ணம் மதனைப் பார்த்தான் பிரபா..
“இதுக்கு பெயர் லவ் என்று என்னோட மனசு சொல்லல.. பட் அவளிடம் இருக்கும் குறும்புத்தனம் எனக்குள் இருக்கும் பழைய மதனின் வெளிகொண்டுவரா.. என்னால என்னோட மாற்றத்தை உணர முடியுது பிரபா..” என்றவன் தெளிவாகக் கூறினான்..
மதனின் வாழ்க்கையில் நடந்த அனைத்தும் அவனுக்கு தெரியும்.. அதிலிருந்து அவனை வெளிகொண்டுவர பிரபா நினைத்தான்.. ஆனால் இன்று அவனே தன்னுடைய மனமாற்றத்தை சொல்ல பிரபாவின் மனதில் நிம்மதி பரவியது...
அவனின் உணர்வுகளுக்கு அவன் என்ன பெயர் வைத்தானோ அது பிரபாவிற்கு தெரியாது.. ஆனால் அதன் மூலமாக தன்னுடைய பழைய நண்பனை பார்க்க விரும்பியவன், மதனின் தோள்களை தட்டிவிட்டு மெளனமாக புன்னகைத்தான்..
அவனின் மௌனம் மதனுக்கு புதிராக அமைய அந்த புதிருக்கான விடையை மறுநாளே மதனிடம் கூறினான்.. அன்று காலையில் ஆ[ஆபீஸ் சென்றதும் மதன் காரைவிட்டு இறங்க சொல்லிவிட்டு,
“மதன் ஆபீசை ஒருமணிநேரம் பார்த்துக்கோ.. எனக்கு ஒரு சின்ன வேலை இருக்கு முடித்துவிட்டு வருகிறேன்..” என்றவன் வெளியே கிளம்பிச் சென்றான்..
அவன் ஆபீஸ் உள்ளே நுழைந்து தன்னுடைய வேலையைக் கவனிக்க பிரபா வராததைக் கவனித்த மின்மினி தன்னுடைய பழைய குறும்புத்தனத்தை காட்ட ஆரம்பித்தாள்..
ஆனால் நேற்று மதன் தனக்காக பிரபாவிடம் திட்டுவாங்கியத்தை உணர்ந்தவள் வேலைகளை சீக்கிரம் முடித்துவிட்டு குறும்புடன் தன்னுடைய விளையாட்டைத் தொடர்ந்தாள்.. ‘ஒரு மணிநேரத்தில் வருகிறேன்..’ என்று சொல்லிவிட்டுச் சென்ற பிரபா அன்று மாலைதான் அலுவலகத்தின் உள்ளே நுழைந்தான்..
அவன் உள்ளே நுழையும் நேரத்தில் எல்லோரும் அவர்களின் வேலையை சரியாக முடித்து வைத்திருந்தனர்.. ‘அவனுக்கு வேலை சரியாக நடந்தால் போதுமே..’ தன்னுடைய பேக்டரியில் இருந்தவண்ணம் நிறுவனத்தில் என்ன நடக்கிறது என்பதை கவனித்தான் பிரபா..
அனைவரும் பம்பரமாக சுழன்று வேலைகளை முடித்துவிட்டு விளையாட்டைத் தொடங்கினர்.. சரியாக ஒருமணிநேரம் விளையாடிவர்கள் மீண்டும் தங்கள் வேலைகளைக் கவனித்தனர்.. இதையெல்லாம் கவனித்த பிரபாவின் உதட்டில் புன்னகை அரும்பியது..
அவனுக்கு அவனின் நிறுவனமும் முக்கியம்.. அதே அளவு அவனின் நண்பனின் நலனும் முக்கியம்.. தன்னுடைய நண்பனின் மாற்றத்தைக் காணவே பிரபா தன்னுடைய நிலையில் இருந்து இறங்கி வந்தான்..
அதன்பிறகு வந்த நாட்களில் இதுவே தொடர்கதையானது.. பிரபா அறியாமல் ஆபீசில் ஒரு துரும்பும் அசையாது என்று உணராமல் இருந்தாள் மின்மினி.. மதன் பிரபாவிடம் எதுவும் சொல்லாமல் இருப்பது மின்மினிக்கு நிம்மதியைக் கொடுத்தது..
மதன்தான் அனைத்திற்கும் காரணம் என்று அறியாமல் அவனிடமே என்று சண்டை போடுவாள்.. ருக்மணி இதையெல்லாம் பார்த்துவிட்டு சிரித்துக்கொண்டே இருப்பாள்.. ஹாஸ்டல் சென்றால் அலுவலகத்தில் நடப்பதை ஜெயாவிடம் சொல்லாமல் அவளுக்கு தூக்கமே வராது..
இப்படியே நாட்கள் நகர அந்த நினைவுகளில் இருந்து வெளியே வந்தான் மதன்.. அவனின் மனநிலை அறியாத மின்மினி தன்னுடைய ரூல்ஸ் கூறினாள்..
அதன்பிறகு, “எனக்கு ரொம்ப பிடித்த சாங் இது.. நான் பாட போறேன்.. அந்த பாடல் வரிகளை சரியாக கண்டுபிடித்து அடுத்த வரியை சரியாக பாடனும்..” என்றாள்..
பிளாக் கலர் சுடிதாரில் பச்சை வண்ணத்தில் டிசைன் இருக்க அந்த கலர் அவளுக்கு மிகவும் பொருத்தமாக அமர்ந்திருப்பதை தூரத்தில் நின்றவண்ணம் ரசித்தான் மதன்..
அவளுக்கு பக்கத்தில் இருந்த பெண்ணொருத்தி செல்லை எடுத்து நோண்ட, “இது கேம்.. உங்க மூளைக்கு சின்ன ரிலாக்ஸ்.. சோ மொபைல் யூஸ் பண்ணக்கூடாது..” என்றவள் திட்டவட்டமாக கூறினாள்..
எல்லோரும் செல்லை எடுத்து அவளின் கண் படும்படி வைத்துவிட, “சரி நான் பாடட்டுமா..” என்றவள் பாடலின் இடைப்பட்ட வரிகளைப் பாடி அவர்களைக் குழப்பத்தில் தள்ளிவிட்டாள்..
“வானம் எந்தன் மாளிகை.. வையம் எந்தன் மேடையே.. வண்ணங்கள் நான் என்னும் எண்ணங்கள்..” என்றவள் பாடலின் இரண்டே வரியை மட்டும் பாடினாள்..
அவளின் பாடலில் சுருதி தப்பாமல் ஒலித்திட அதில் தன்னை தொலைத்தான் மதன்.. மினியை கண்டநாள் முதலாக அவனின் மனதில் சின்ன சின்ன சலனங்கள் ஏற்படவே செய்தன..
அம்மாவே உலகம் என்று இருந்தவன் முதல் முறையாக மினியை மனதார விரும்பத் தொடங்கினான்.. அவனின் வாழ்க்கையில் அவன் அம்மா எடுத்த முடிவில் அவனின் வாழ்க்கையில் ஒரு புயல் வீசி ஓய்ந்துவிட்டது..
இப்பொழுது அவனின் மனம் பாலைவனமாக மாறியிருக்க, அதில் சோலையாக வந்தாள் மின்மினி.. மொத்தத்தில் அவளின் செட்டையில் மதன் தன்னை மறந்து அவளின் குறும்பில் பழைய மதனாக கொஞ்சம் கொஞ்சமாக மாறினான்..
அவனின் வாழ்க்கையில் மீண்டும் வசந்தம் வருமா..? அவன் இழந்த சந்தோசம் மினியால் அவனுக்கு கிடைக்குமா..?